Sunday, August 25, 2013



அருட்கொடையாளர் - 7   
 (இது ஓர் மீள்பதிவு )

பகுத்தறிவு எப்போது தோன்றியது...? இந்த கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு சுலபமல்ல, என்னைப் பொருத்தவரை மனிதன் எப்போது தன்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தானோ அப்போது பகுத்தறிவு தோன்றியது என்பதே என் கருத்து. அவன் நிலை தடுமாறியபோது வழி காட்டியது மதம் என்பதும் என் கருத்து. இதைப் பற்றி அதிகமாக சிந்திக்க எனக்குத் திராணி இல்லை. ஆனால் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமிய அறிஞர், தத்துவவாதி, மருத்துவர், இரசவாதி இப்படி பலவகையில் பரிணமித்தவர் சிந்தையினாலோ அல்லது வேறு எதுவினாலோ பகுத்தறிவாளராக இருந்தாரென்றால் சற்று வினோதம்தான்; தான் கொண்டிருந்த கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தாரென்றால் அது அதைவிட வினோதம்; வெறும் கொள்கையுடன் இருந்திடாமல் நூல்கள் எழுதியிருக்கிறாரென்றால்...!
கொள்கை அவரை பொருத்தது, அது எப்படி இருந்தாலும் அவரது ஆய்வுகள், சாதனைகள், கண்டுபிடிப்புக்கள், அவற்றின் பலன்களை இன்று வரை மதித்துப் பாரட்டப்படக்கூடியவரை பற்றி இதோ.....




Mohammed ibn Zakariya Al-Razi (864-930 A.D)

முழு பெயர்: அபு பக்கர் முஹம்மது பின் ஜக்கரியா ராஜி,  இன்றைய ஈரானின் தலைநகரான டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே சில கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ரேய்(RAYY) எனும் சிறிய நகரத்தில் கி.பி 864 ல் பிறந்து, லூட் கலைஞராக இருந்து பின் மருத்துவத்தில் தன்னை அர்பணித்துக்கொண்டார். இசை, மருத்துவம், கணிதம், இரசாயனம், தத்துவம் என பல்கலை அறிஞரான இவர் ஹுனைன் பின் இஸ்ஹாக்கிடமும் அலி பின் ரப்பான் அல் தப்ரியிடமும்  கல்வி பயின்றதாகத் தெரிகிறது. பல்வேறு தலைப்புக்களில்  184 நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ள இவர் கிரேக்க மருத்துவத்திலும்(யுனானி), பாரசீக, இந்திய மருத்துவத்திலும் புலமைப் பெற்றிருந்தார். இன்றைய இரசாயனத்துக்கும் பொறியியல் வேதியலுக்கும் உறுதுணையாக இருக்கும் sulfuric acid யும் மருத்துவத்துறைக்கு பயன்படும் ethanol யும் அதனை தூய்மைப் படுத்தும் முறையையும், கெரோசின் உட்பட பல வேதிக்கூட்டுப் பொருள்களைக் கண்டுபிடித்தார். இஸ்லாமிய உலகின் சிறந்த சிந்தனையாளரான இவரது கீர்த்தி ஐரோப்பிய உலகின் மருத்துவத்திலும் அறிவியலிலும் பரவி நிற்கிறது.
பிறந்த ஊரிலேயே கி.பி.930ல் மரணம் அடைந்தார். (இப்போது அது டெஹ்ரானின் ஒரு பகுதி) இளமைக் காலத்தில் இசையின் மீது காதல்கொண்டு

பாரசீகத்தில் பிறந்ததால் இவரைப் பெருமைப் படுத்தும் வகையில் டெஹ்ரானில் Raji Institute ம் கெர்மன்ஷாஹ் என்ற இடத்தில் ராஜி பல்கலைக் கழகமும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 27ம் நாள் 'ராஜி தினம்'('Pharmacy Day') ஈரானில் அணுசரிக்கப்படுகிறது.

வாழ்க்கைச் சுருக்கம்

பகுத்தறிவு வாதியான ராஜி தான் கொண்ட கருத்தினை வெளிப்படுத்துவதில் தடுமாற்றமோ, தயக்கமோ, அச்சமோ கொள்வதில்லை. அதே நேரம் சம காலத்து மற்ற அறிஞர் பெருமக்களையும் மதிக்கத் தவறுவதில்லை.

இளமைக் காலத்தில் ஆபரணங்கள் வியாபாரியாகவும், நாணய மாற்றுபவராகவும் இருக்கவேண்டியவர் இசையில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவராக இருந்தார்.  இரசவாதத்தில்(alchemy) ஈடுபாடுக்கொண்டார். அவரது முப்பதாவது வயதில் இரசவாதப் பரிசோதனையினால் கண் நோய் ஏற்பட்டு, அந்நோயைக் குணப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார். அதுவே அவர் மருத்துவராகக் காரணம் என பைஹாக்கியும், பைரூனியும் கூறுகின்றனர்.  ராஜி தன் முப்பதாவது வயதில் பாக்தாது சென்று அலி பின் சஹல் ரப்பான் அல்-தபரி(a Jewish converted to Islam, belonging to the famous medical school of Tabaristan or Hyrcania). என்பவரிடம் மருத்துவம் பயின்றதாகவும், அதி விரைவிலேயே மருத்துவம் பயின்று நூறுக்கும் குறையாமல் மருத்துவ நூல் எழுதியதாகவும் தவிர இரசவாதம் அல்லாது இயற்கை அறிவியல், கணிதம், வானவியல் பற்றிய 33 ஆய்வுகளைத் திரட்டியதாகவும் பேராசிரியர் ஹமீது அப்துல் ரஹீம் இயாத்(Prof of Chemistry at the Faculty of  Science, University of Cairo) கூறுகிறார். (ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கிடம் மருத்துவம் பயின்றதாக சில தளங்கள் கூறுகின்றன). மருத்துவம் இப்னு ரப்பான் அல் தபரியிடம் பயின்றாலும் தத்துவம் அல்-பல்கியிடம் கற்றதாகவும் பின் பல இடங்கள் பயணம் செய்த தருவாயில் தத்துவத்திலும் பண்டைய அறிவியலிலும் போதிய அறிவைப் பெற்றதாக இப்னு அல்-நதீம் கூறுகிறார்.

மருத்துவம் பயின்ற பின் அல் முக்ததரி மருத்துவமனையில் தன் பயிற்சியைத் தொடங்கினார். அது மருத்துவத்துறையிலும் மட்டுமல்ல இரவாதத்திலும் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருந்தது. பயிற்சி காலத்திற்குப் பின் தனது சொந்த ஊரிலேயே ராயல் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கலிஃபா முக்தஃபி (901-907) ஆட்சி காலத்தில் மீண்டும் தான் பயிற்சிப் பெற்ற பாக்தாதின் புகழ் பெற்ற அல் முக்ததரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். ஒரே நேரத்தில் இரு மருத்தவமனைகளின் பொறுப்பும் இவரிடம் இருந்ததால் பக்தாதுக்கும் ரேயிக்கும் இடையிலுள்ள பல மருத்துவ மனைகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இது இறுதியாக ரேயில் தங்கும் வரை நீடித்தது. அவரது பயிற்சி அணுகுமுறை இவைகளினால் கவரப்பட்டு என்நேரமும் நோயாளிகளும், மாணவர்கள் கூட்டமும் அவரைச் சுற்றியே இருந்துவந்தது. ஆசியாவின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் அவரிடம் பயில வந்தனர்.

அவரிடம் பல குழுக்களாக மாணவர்கள் இருந்தனர்(surrounded by several circles of students). அறிவியல் கேள்வி யாராவது கேட்டால் அதற்கான பதிலை முதல் குழு மாணவர்களிடம் எதிர்பார்ப்பார், கிடைக்கவில்லையானால் இரண்டாம் குழு மாணவர்கள் இப்படியே எல்லா மாணவர்களிடமும் கேள்வி வைக்கப்படும், யாரும் சொல்லவில்லையானால் இறுதியாக அவரே விளக்கம் சொல்வார். இப்படி மாணவர்களை ஊக்குவிப்பது போல தன்னிடம் வரும் நோயாளிகளிடமும் அன்பாக நடந்துக்கொள்வார். ஏழை நோயாளிகளிடம் பணமோ பொருளோ வாங்கமாட்டார். ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே மாதிரி வைத்தியம் செய்தார்; தன் மாணவர்களையும் செய்யச் சொன்னார்.

ரேயில் இருந்த காலத்தில் ”கித்தாப் அல் மன்சூரி” என்ற மருத்துவ நூலை எழுதி, அப்போது கவர்னராக இருந்த மன்சூர் பின் இஸ்ஹாக்கிற்கு அர்பணித்தார். அது 12ம் நூற்றாண்டில் Gerard of Cremona's ஆல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது என Encyclopedia of Britannica வும் 15ம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டது என வேறு சில இணையங்களும் கூறுகின்றன.

அறுவை சிகிச்சைக்காக மயக்கநிலை ஏற்படுத்த முதன்முதலில் அஃபினை உபயோகித்த ராஜி, அந்திம காலத்தில்  கண் நோயுடன் பூ  விழுந்து(cataract) முடிவில் பார்வையை முற்றிலுமாக இழந்தார். நோயுடன் போராடிக்கொண்டிருக்கும்போது ஒரு மருத்துவர் அவரைக் காண வந்தவர் தான் கொண்டுவந்துள்ள களிம்பை(ointment) இட்டால் குணமாகும் என சொல்லவே கண்ணில் எத்தனை அடுக்குகள்(layers) இருக்கின்றன என கேட்க, வந்தவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. "கண்ணைப் பற்றி அடிப்படை ஞானமே தெரியாத உன்னிடம் நான் மருத்துவம் பார்ப்பதா?" என மறுத்துவிட்டார். பின்  தப்ரிஸ்தானிலிருந்து வந்த அவருடைய பழைய மாணவர் ஒருவர் பார்த்துவிட்டு தான் குணப்படுத்துவதாக முன் வந்தார். மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது இனி வைத்தியம் பயன் தறாது என சொல்லி அதையும் மறுத்துவிட்டார். இது நடந்து சில நாட்களுக்குப் பின் 27, அக்டோபர் 925 (ஹி. 313, ஷஃபான் 5) அன்று இறையடி சேர்ந்தார் என அல்-பைரூனி  யின் குறிப்புக் கூறுகிறது.

பெரியம்மையும் தட்டம்மையும்(Smallpox vs measles


"Smallpox appears when blood 'boils' and is infected, resulting in vapors being expelled. Thus
juvenile blood (which looks like wet extracts appearing on the skin) is being transformed into richer blood, having the color of mature wine. At this stage, smallpox shows up essentially as 'bubbles found in wine' - (as blisters) - ... this disease can also occur at other times - (meaning: not only during childhood) -. The best thing to do during this first stage is to keep away from it, otherwise this disease might turn into an epidemic."





This diagnosis is acknowledged by the Encyclopaedia Britannica (1911), which states: "The most
trustworthy statements as to the early existence of the disease are found in an account by the 9th-century Persian physician Rhazes, by whom its symptoms were clearly described, its pathology explained by a humoral or fermentation theory, and directions given for its treatment."

ஏறக்குறைய ஒரு டஜன் முறைக்குமேல் லத்தீனிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட “அல்-ஜுதரி வல்-ஹஸ்பாஹ்” என்ற நூலில் பின் வருமாறு விளக்குகிறார். இது அம்மை நோய் பற்றி அக்காலத்தில் முதன் முதலில் எழுதப்பட்ட நூலாகும். இவர்தான் முதன் முதலில் பெரியம்மைக்கும் தட்டம்மைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிந்து விளக்கம் கொடுத்த முதல் மருத்துவராவார்.

தொடர்ச்சியான காய்ச்சல், முதுகு வலி, மூக்கில் அரிப்பு, இரவில் கெட்டக் கனவுகள் இவைகள் பெரியம்மை நோய் உடன் தோன்றுவதற்கான அறிகுறிகள். இதை தொடர்ந்து உடல் முழுவதும் வலியும் காய்ச்சலும், முகத்தில் வீக்கம் தோன்றும் அது சில சமயம் தோன்றி மறையும், கன்னமும் கண்களைச் சுற்றி அழற்சியான நிறம் உண்டாகி நன்றாக சிவக்கும். மேலும் உடல் கனமும், அமைதி இன்மையும், முறுக்கலும், அடிக்கடி கொட்டாவியும் அனுபவப்படும். தவிர தொண்டை வலியும், நெஞ்சில் வலியும், இருமலும், மூச்சுவிட சிரமமும் உண்டாகும். மேலும் தொண்டை கரகரப்பு, கடின உமிழ்நீர்(thick spittle), வாந்தி வருவது போன்ற உணர்வு, மன உளைச்சல் ஆகியவையும் உண்டாகும். 

தட்டம்மைக்கு(measles) வாந்தி வருவதுபோல் குமட்டல், மன உளைச்சல், அமைதியற்ற நிலை, முதுகுவலி இவைகள், பெரியம்மைக்கு ஏற்படுவதைவிட அடிக்கடி தோன்றும். இரண்டுக்குமே உடம்பு முழுவதும் சூடும், குடல் அழற்சியும், உடல் சிவந்து மினுமினுப்பும், பல் எயிறில்(gum) சிவப்பும் அனுபவப்படும்.

****1980 ல் அம்மை நோயை உலகம் முழுவதும் முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக உலக சுகாதார மையம் பிரகடனப் படுத்தியுள்ளது****

ஒவ்வாமையும் ஜுரமும்(Allargies and fever)

வசந்த காலத்தில் ரோஜாப்பூவை நுகருவதால் சிலருக்கு மூக்கழற்சி ஏற்படுகிறது, அபு ஜயித் பல்கி என்பவருக்கும் ஏற்பட்டது அது தொடர்பான அவரது ஆய்வு கட்டுரையில், இது கால மாற்றத்தில் ஏற்படும் அழற்சியாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது ஏற்படும் ஒவ்வாமை அல்லது சளி பிடித்தல் போன்றது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுவதாகும், இது நமக்கு இயற்கையாகவே அளிக்கப்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் தன்மைக்கு(natural defense mechanism) உகந்ததாகும் என விளக்குகிறார்.

மருந்துக்களின் நெறிமுறை

மருந்துக்கள் தயாரிப்புப் பற்றிய இவரது தொகுப்பும் mercurical ointments ன் பயனை அறிமுகப்படுத்தியதும் பல வகைகளில் பயிற்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. Also he developed  apparatus such as mortars, flasks,  spatulas and phials which were used in pharmacies until the early twentieth century.

தொழில்முறை ரீதியாக பயிற்சி முறைகளையும், மருத்துவ மேன்பாட்டினையும் மனோதத்துவ ரீதியான யோசனைகளை அறிமுகப்படுத்தியவர், போலி மருத்துவர்களையும், கிராமப் புறங்களில் கடை விரிப்பவர்களையும் கடுமையாகச் சாடுகிறார். அனைத்து மருத்துவப் பிரச்சனைகளுக்கும், அனைத்து நோய்களுக்கும் விடை காண்பது இயலாத காறியம் என  தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்களுக்கு எச்சரிக்கிறார். இதில் முடிவு என்பது கிடையாது மேலும் மேலும் படித்து தனது அறிவை வளர்ப்பதால் மட்டுமே புதிய அறிவு கிடைக்கும், அதை மக்கள் பயனுறும்படி செய்யவேண்டும் என்கிறார். குணமாகும் வியாதியையும் குணப்படுத்த முடியாத வியாதையையும் வகைப்படுத்தும் ராஜி புற்று நோய், குஷ்டம் போன்ற குணப்படுத்தமுடியாத நோய்களுக்காக மருத்துவரைக் குறைகூற முடியாது என்று கூறும் அதேசமயம் பெண்கள், பதவியில் இருப்பவர்கள், இளவரசர்கள் போன்றோர் தங்களது மருத்துவர்களுக்கு செவி சாய்க்காமல் முறையாக வைத்தியம் செய்துக்கொள்ளாமல் இருப்பதைப் பற்றி பரிதாபப்படுகிறார்; அதே நேரம் நோய்வரும்போது உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்கவேண்டும் என அனைவருக்கும் அறிவுரைக் கூறுகிறார்.

மருத்துவம் பற்றி நூல்களும் கட்டுரைகளும்

"கித்தாப் அல்-ஹாவி ஃபில் திப்" என்ற பெயரில் எழுதிய ஒன்பது தொகுப்புக்களைக் கொண்ட மருத்துவப் பேரகராதியில் ஒவ்வொரு பகுதியிலும் கிரேக்க, அரேபிய மருத்துவ முறைகளைப் பற்றிய முக்கியத் தகவல்களைத் தருவதோடு அரிஸ்டாட்டில், பிளாட்டோவின் கொள்கைகளைக் கண்டனம் செய்கிறார்.  தன் மருத்துவ அனுபவத்தில் கண்ட வியாதிகளையும் அதன் சிகிச்சை முறையையும் அடிப்படையாக வைத்து பல நூல்களில் கிடைத்த ஆதாரங்களையும் அதில் வடித்துள்ளார். His innovative views on many subjects in this book alone, many scholars consider Razi the great medical doctor of the Middle Ages. இந்நூல் ஃபரஜ் பென் சாலிம் என்ற யூத மருத்துவரால் 1279 ல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டபின்னறே ஐரோப்பாவில் பிரபல்யமானது.

”மன் லா யஹ்ளுருஹு அல்-தபீப்”(من لا يحضره الطبيب) பொது மக்களின் நலனைக்

கருதி மருத்துவக் கையேடு ஒன்றை எழுதிய முதல் பாரசீக மருத்துவராவார் ராஜி.  இது பாமர ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும், பயணிகளுக்கும் வரப்பிரசாதமாகும். 36 அத்தியாயங்கள் கொண்ட இந்த கையேடட்டில் சாதாரணமாக சமையலறையிலும், கடைத்தெருவில் கிடைக்கும் சில பொருட்களும், சாதாரணமாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் பொருட்களையும், உணவு முறைகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார். தலைவலி, ஜுரம், இருமல், வயிற்று வலி, கண் காது வலி போன்ற நோய்களுக்கு பாட்டி வைத்தியம் போல் மருத்துவம் கூறியுள்ளார். உதாரணமாக தலைவலியும் ஜுரமும் வந்தால் இரண்டு பங்கு ரோஜாப்பூ எண்ணெயுடன் ஒரு பங்கு வினிகரையும் சேர்த்த கலவையில் துணியை முக்கி எடுத்து நெற்றியில் இருக்கமாக வைத்திருந்தால் நோய் போகும் என்பது போன்ற வைத்திய முறைகளை அதில் குறிப்பிட்டுள்ளார்.

Doubts About Galen (Shukuk 'ala alinusor)

சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், கேலன் உட்பட பல கிரேக்க அறிஞர்களின் கொள்கைகளிலிருந்து ராஜி மாறுபடுகிறார்.  மனம், உடல் இவ்விரண்டையும் பிரிவுறச் செய்தால் மாத்திரமே உன்னத மனமும் தன்னைப் பற்றிய உயர்வான கருத்தும் ஏற்படும் இது ஒரு நோயாளியின் மேன்மைக்கு உகந்ததாகும் என்பது கிரேக்க அறிஞர்களின் கருத்தை மறுக்கும் அவர், ஒரு நோயாளியிடம் நட்புடன் பழகி ஆதரவும் அன்பும், அளித்து மனவலிமை ஏற்படுத்துவதன் மூலமே விரைவாக குணமடைய வழிவகுக்கும் என்கிறார்.
உடம்பில் நான்கு தனித்தனி திரவப் பொருள்கள் இருக்கின்றன, அவை உடலின் இயற்கையான உஷ்ண நிலையை சீராக வைத்திருப்பதின் மூலம் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது என்கிறார் கேலன். உஷ்ணமான பானத்தை கொடுப்பதன் மூலம் உடம்பின் உஷ்ணத்தைக் கூட்டமுடியும் அதேபோல் குளிர்ச்சியான பொருளினால் குறைக்கவும் முடியும் என்கிறார் ராஜி. இதேபோல் பல கேலனின் பல கொள்கைகளுக்கு மாறுபடுகிறார் ஜக்கரியா ராஜி. 

இரசாயனமும் இரசவாதமும்

ராஜி வடிவமைத்த பல ரசாயன உபகரணங்களில் சில இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இரசாயனங்களை பிரித்தெடுத்தல், வடித்தெடுத்தல் முறைகளில் இவர் பயன்படுத்தியமுறையால் (dry distillation)  கந்தக திரவம் மற்றும் ஆல்கஹால்(ethanol) இருந்து சல்ஃபூரிக் ஆசிடை கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பும் ஜாபிர் இப்னு ஹய்யானின் கண்டுபிடிப்பும் பின்பு பாரசீக
ரசவாதிகளுக்கு பயனளித்ததாக அறியப்படுகிறது.

இரசவாதத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்ததாகவும்  இரசவாதத்தில் உலோகங்களின் தன்மைகளையும் குணங்களையும் அறிய முடிகிறது கடந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்  தாழ்ந்த உலோகத்திலிருந்து தங்கம் தயாரித்தார்கள், தயாரிக்கமுடியும் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தாலும் அதன் சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் என்னால் உறுதியாக சொல்லமுடியாது என்றாலும் அதைப் பற்றி இன்னும் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்று ராஜி சொல்வதாக இப்னு அல் நதீம் அல் பக்தாதி   குறிப்பிடுகிறார்.

Razi divides his subject matter into three categories as he did in  his book "al-Asrar"-The Secret.(அவரது பழைய மாணவரும், உற்ற நண்பரும், உடனிருந்தவருமான அபு முஹம்மது இப்னு யூனுஸுக்காக எழுதியது)
 
1. Knowledge and identification of drugs from plant, animal, and mineral origins and the choicest type of each for utilization in treatment.
  2. Knowledge of equipment and tools used, which are of interest to both  the alchemist and the apothecary.
  3. Knowledge of the seven alchemical procedures and techniques such as sublimation and condensation of mercury, precipitation of sulphur and arsenic calcination of minerals (gold, silver,copper, lead, and iron), salts, glass, talc, shells, and waxing.

இன்றைய நவீன இரசாயனத்தில் உட்பொருளாகப் பேசப்படும் கணிமத்தை ஆறு வகைகளாகப் பின்வருமாறு பிரிக்கிறார்.

 1. Four SPRITS: mercury, sal ammoniac, sulphur, and arsenic.
  2. Seven BODIES; silver, gold, copper, iron, black lead (plumbago), zinc, and tin.
  3. Thirteen STONES including marcasite, magnesia, malachite, tutty, talcum, lapis lazuli, gypsum, and glass (then identified as as made of  sand  and alkali of which the transparent crystal Damascene is  considered the best).
  4. Seven VITRIOLS including alum, and white, black, red, and yellow  vitriols (the impure sulphates of iron, copper, etc.).
  5. Seven BORATES including the tinkar, natron, and impure sodium borate.
  6. Eleven SALTS including brine, common (table) salt, ashes, naphtha, live  lime, and urine, rock, and sea salts. Then he separately defines and describes each of these substances and their choicest kinds and colors and possible adulterations.

இதை தொடர்ந்து எழுதிய சிர்றல் அஸ்ரார் என்ற "ரகசியத்தின் ரகசியம்"(secret of secret) என்ற புகழ்வாய்ந்த நூல் அடிப்படை இரசாயன வினைகளை மருந்தகத் துறைக்கு முக்கியத்துவமாக அமைந்தது ஐரோப்பிய உலக்கு பெரும் பயனை அளித்தது. இவர் இரசவாதம் பற்றிய நூல்கள் பெரும்பாலும் ஃபார்ஸி மொழியில் எழுதியுள்ளார்.

On Religion

Razi wrote three books dealing with religion; they were: The Prophets' Fraudulent Tricks (Arabic مخارق الانبياء), The Stratagems of Those Who Claim to Be Prophets (Arabic حيل المتنبيين), and On the Refutation of Revealed Religions (Arabic نقض الادیان). He offered harsh criticism concerning religions, in particular those religions that claim to have been revealed by prophetic experiences. Razi asserted that "[God] should not set some individuals over others, and there should be between them neither rivalry nor disagreement which would bring them to perdition." He argued, On what ground do you deem it necessary that God should single out certain individuals [by giving them prophecy], that he should set them up above other people, that he should appoint them to be the people's guides, and make people dependent upon them?
Concerning the link between violence and religion, Razi expressed that God must have known, considering the many disagreements between different religions, that "there would be a universal disaster and they would perish in the mutual hostilities and fighting. Indeed, many people have perished in this way, as we can see."
He was also critical of the lack of interest among religious adherents in the rational analysis of their beliefs, and the violent reaction which takes its place:
If the people of this religion are asked about the proof for the soundness of their religion, they flare up, get angry and spill the blood of whoever confronts them with this question. They forbid rational speculation, and strive to kill their adversaries. This is why truth became thoroughly silenced and concealed.
Al-Razi believed that common people had originally been duped into belief by religious authority figures and by the status quo. He believed that these authority figures were able to continually deceive the common people "as a result of [religious people] being long accustomed to their religious denomination, as days passed and it became a habit. Because they were deluded by the beards of the goats, who sit in ranks in their councils, straining their throats in recounting lies, senseless myths and "so-and-so told us in the name of so-and-so..."
He believed that the existence of a large variety of religions was, in itself, evidence that they were all man made, saying, "Jesus claimed that he is the son of God, while Moses claimed that He had no son, and Muhammad claimed that he [Jesus] was created like the rest of humanity." and "Mani and Zoroaster contradicted Moses, Jesus and Muhammad regarding the Eternal One, the coming into being of the world, and the reasons for the [existence] of good and evil." In relation to the Hebrew's God asking of sacrifices, he said that "This sounds like the words of the needy rather than of the Laudable Self-sufficient One."

Criticism

ராஜியின் தத்துவங்களையும் மதக்கோட்பாட்டினையும் அபு ரைஹான் பைரூனி இப்னு சினா உட்பட பல அறிஞர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். The Hermetical writings and religious views of al-Razi were criticized by al-Biruni, and during a debate between Avicenna and al-Biruni, Avicenna wrote the following criticism on al-Razi: “Or from Muhammad ibn Zakariyya al-Razi, who meddles in metaphysics and exceeds his competence. He should have remained confined to surgery and to urine and stool testing—indeed he exposed himself and showed his ignorance in these matters”.

ராஜி எழுதிய அனேக நூல்களை, குறிப்பாக “இல்ம் அல்-இலாஹி” என்ற புத்தகத்தயும் சம காலத்தில் வாழ்ந்த அபு அல்-ரப்பான் அல்-பல்கி (chief of the Mu'tazilah of Baghdad) மறுக்கிறார், அவற்றில் தவறுகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் ராஜியின் “தஃப்தில் லத்தத் அல்-நஃப்ஸ்” என்ற புத்தகத்தை ஷுஹைத் இப்னு அல்-ஹுசைன் அல்-பல்கி என்பவர் மறுக்கிறார். அதேபோல் ராஜியின் “ஆலம் அல்-நுபுவ்வாஹ்” வை அஹ்மது இப்னு ஹம்தான், இப்னு அல்-தம்மர் ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோல் பல அறிஞர்கள் ராஜியின் மதரீதியான கொள்கையில் மாறுபட்டு நிற்கின்றனர். சிலரின் மறுப்புக்கு எதிர் மறுப்பும் ராஜி தெரிவித்துள்ளார். அவரது கொள்கை எப்படி இருந்தாலும் தொண்டை(work) அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

Quotes on Rhazes

"Rhazes was the greatest physician of Islam and the Medieval Ages." – George Sarton

"Rhazes remained up to the 17th century the indisputable authority of medicine." – The Encyclopaedia of Islam

"His writings on smallpox and measles show originality and accuracy, and his essay on infectious diseases was the first scientific treatise on the subject." – The Bulletin of the World Health Organization (May 1970)

"In today's world we tend to see scientific advance as the product of great movements, massive grant-funded projects, and larger-than-life socio-economic forces. It is easy to forget, therefore, that many contributions stemmed from the individual efforts of scholars like Rhazes. Indeed, pharmacy can trace much of its historical foundations to the singular achievements of this ninth-century Persian scholar." — Michael E. Flannery

Sources:
http://wzzz.tripod.com/RAZI.html
http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/Razi.html
http://www.nlm.nih.gov/exhibition/islamic_medical/islamic_06.html
http://www.muslimphilosophy.com/ip/rep/H043.htm
http://www.pre-renaissance.com/scholars/al-razi.html   
http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Zakariya_al-Razi  
http://geniusworld.8m.com/Razi.html
http://www.farhangsara.com/razi.htm
http://www.encyclopedia.com/topic/Abu_Bakr_Muhammad_Ibn_Zakariyya_Al-Razi.aspx
http://www.learn-persian.com/english/Razi_Zakariya.php
http://www.alchemywebsite.com/islam14.html  Razi
http://193.62.111.58/broughttolife/people/~/link.aspx?_id=F36DB07EC689475B88C8A399905F10BD&_z=z
http://www.thelivingmoon.com/44cosmic_wisdom/02files/Muhammad_ibn_Zakariya_al-Razi.html#Criticism