Thursday, December 23, 2010

சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்

சற்றேரக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் செல்லி நகரம் என்று அழைக்கப்பட்ட அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த பெரும் புலவரும் சூஃபி ஞானியுமாகிய செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள் தம் நண்பர் கதிர்வேல் உபாத்தியாயருக்கா பழனி முருகனை அதிராம்பட்டினத்திலேயே காட்சித்தரச் செய்தார்.

முருகப்பெருமானைத் தோன்ற செய்வதற்காக எழுதிய பதிநான்குப் பாடல்கள் தொகுப்பை அவரின் வழிதோன்றல்களால் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு கடந்த 2003ல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. என்றாலும் அண்ணாவியாரின் கொள்ளு கொள்ளு கொள்ளுப் பேரன் அதிரை அஷ்ரஃப் அவர்களின் அனுமதியுடன் இதனை ஈங்கு வெளியிடுகிறேன்.