Wednesday, August 31, 2011

இப்னு அல் ஹைதம்-FATHER OF MODERN OPTICS

அருட் கொடையாளர்கள் – 2

இம்சை அரசன் 23ம் புலிகேசியை எல்லோருக்கும் தெரியும். கற்பனையாக இருந்தாலும் அறிவீனமும், அசட்டுத்தனமும், துன்பம் விளைவித்து அதில் இன்பம் காணும் பாத்திரம். இந்த மாதிரி அரசர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல உலக வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். 10-ம் நூற்றாண்டின் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவர் இப்படித்தான் இருந்தார் ஆனால் அவரிடமும் சில நல்ல குணங்களும் இருந்ததின் விளைவாக நல்ல விஞ்ஞானிகள் கிடைத்துள்ளனர். எனவே அவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வது அவசியம்.

ஆம், அபு அலி அல் மன்சூர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அறியப்படுவது ‘அல் ஹாகிம் பி அம்ரல்லாஹ்’ (Ruler by God’s Command). ஷியா வகுப்பின் இஸ்மாயிலி பிரிவான ஃபாத்திமியா வகுப்பை சேர்ந்தவர். இவரிடமிருந்த சில குணங்களை ஆதாரமாக வைத்து சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவது ‘The Mad Caliph’. இவருடைய ஆட்சியில் மக்களை மட்டுமல்ல சில விலங்கினங்களையும் பிரத்தியேகமாக கவனித்தார். உதாரணமாக அவரைப் பார்த்து எந்த நாயும் குரைக்கக்கூடாது. தெரியாத்தனமாக குரைத்தால் அதன் ஆயுள் முடிந்தது என்று அர்த்தம். எனவே குரைக்கும் நாய்கள் அனைத்தையும் கொன்று குவித்தார். சில வகையான காய்கனி வர்கங்களையும் சிப்பி, நண்டு போன்ற(shellfish) இனங்களையும் உண்ணக்கூடாது என கட்டளை இட்டார், (அதாவது அவருக்கு எவை பிடிக்கவில்லையோ அவற்றை வேறு யாரும் உண்ணக்கூடாது போலும்.) ஸுன்னி முஸ்லிம்கள் கிருஸ்துவர்கள், யூதர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என encylopedia of britanica கூறுகிறது. Al-Hakim was highly eccentric, for example he ordered the sacking of the city of Al-Fustat என்கிறார் J.J.O’Connor and E.F.Roberston. அதே நேரம் சில நல்ல குணங்களும் இருந்தன. பஞ்சம் வந்தபோது உணவு தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொண்டார். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் ’கண்டுக்காமல்’ இருப்பார்களே அதுபோல் இல்லாமல் நுகர்பொருள் விலை ஏறாமலும் பார்த்துக்கொண்டார். தவிர பள்ளிவாசல்கள் கட்டினார், அறிஞர்களையும் கவிஞர்களையும் ஆதரித்தார், இஸ்மாயிலி வகுப்பு வளருவதற்கு ஆதரவளித்தார். இதுவே Druze மதம் வளர்வதற்கு காரணமாக அமைந்தது என பிரிட்டானிகா கூறுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த சூரிய கடிகாரத்தையும் பெண்டுலத்தையும் கண்டுபிடித்த அலி பின் யூனுஸ் என்ற கணிதமேதைக்கு வானவியல் ஆராய்ச்சிக்காக ‘ஜபல் அல் முகாத்தம்’ என்ற பகுதியில் வான் ஆய்வு நிலையம்(observatory) ஒன்றை அமைத்துக்கொடுத்தார். தனது இல்லத்தில் கெய்ரோவை ஆராய்வதற்காக வானவியல் கருவிகள் சிலவற்றை வைத்திருந்தார், நூலகமும் அமைத்தார். இவரைப் பற்றி தவறான கருத்துக்களை ஒருசில வரலாற்றாசிரியர்கள் பரப்பியுள்ளனர் என ismaili.net இணைய தளம் கூறுகிறது. Al-Ḥākim mysteriously vanished while taking a walk on the night of Feb. 13, 1021. என்று பிரிட்டானிகா கூறுகிறது. எப்படியோ, இவர் காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்றைய நவீன கேமராக்களின் முன்னோடி இப்னு அல் ஹைதம்.

தொடருங்கள்....


Friday, August 26, 2011

அல் பைரூனி

அருட் கொடையாளர்கள் - 1

வித்தியாசமான தலைப்பு என்று நினைக்க வேண்டாம் சில வருடங்களுக்கு முன் ‘சில மனிதர்கள்’ என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெரியவர்கள் செய்த சாதனைகள், கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஆரம்பமும் செய்துவிட்டேன். போதுமான குறிப்புகள் கிடைக்காததினாலும், அவைகளை தேடி எடுக்க பொறுமை இல்லாததினாலும், சோம்பேறித்தனத்தினாலும் எழுதிய நோட்டை கிடப்பில் போட்டுவிட்டேன். உறங்கிக்கொண்டிருந்த நோட்டைத் தூசித் தட்டி உசிப்பியதன் பெருமை ஆபிதீனை சாரும்.

எப்போதுமே அவரிடமிருந்து திடீர் கேள்விதான் வரும். அதுபோல்தான் இதையும் கேட்டார். “நானா காம்பாஸைக் கண்டுபிடிச்சவர் யார்? இதில் அரபிகளுடைய பங்கு நிறைய இருக்கிதாம், கொஞ்சம் பாருங்க” என்றார். விளைவு நோக்குவார்கு நோக்கும் பொருள் தருபவள் அல்லவா கூகுல். திசைக் காட்டும் கருவியை கி.மு. 247 ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாள். இதில் அரபிகள் பங்கு என்ன? விடவில்லை ஏற்கனவே எடுத்து, குப்பையில் போட்டிருந்த குறிப்பைத் தேடினேன். பலன் கிடைத்தது. ‘Bayrooni discovered seven distinct methods of finding the direction of the North and South, and constructed mathematical techinques to determine the exact time of the commencement of the seasons’ என்ற குறிப்பு அதில் இருந்தது. ஆபிதீனின் கேள்வியால் ஆர்வம் உந்த இன்னும் தேடினேன். அள்ள அள்ள கிடைத்தன. அள்ளுவதற்குதான் பாத்திரம் இல்லை. அவரைப் பற்றி அவ்வளவு செய்திகள். அதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய ஆராய்ச்சியாளனுமல்ல, சரித்திர ஆசிரியனுமல்ல. ஒன்றும் தெரியாத சதாரண குப்பை நான். எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இதுவே முழு செய்தி அல்ல. இன்னும், இன்னும் ஆழமான செய்திகள் இருக்கின்றன, விரிவான செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை தேடிக்கொள்வது ஆர்வமுள்ளவர்களின் பொருப்பு.

சரித்திரம் படைத்தவர்கள் அனேகர் இருக்கலாம் ஆனால் மனித சமுதாயத்துக்கு காலங்காலமாக பயனுள்ள வகையில் தங்கள் சாதனைகளைத் தந்தவர்கள் ஒரு சிலரே. அந்த சிலர் யார் என்று தெரியாத வகையில் காலம் மறைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் மறந்திருக்கிறோம். சாதனைகள் படைத்த மேற்கத்தியவர்களையே பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருக்கும் நாம் மத்திய கிழக்கில் உள்ளவர்களையோ அல்லது கிழக்கில் உள்ளவர்களையோ கண்டுகொள்வதில்லை. அறிவியல், கணிதம், மருத்துவம், வானவியல், உளவியல் இவைகளின் தந்தைகளை இஸ்லாம் தந்திருக்கிறது என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை நினைவுகூறத்தான் இது. எனவே அவர்களைப் பற்றிய நான் அறிந்த செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன். மேலும் படிக்க

Monday, August 8, 2011

கலப்படமும் கஞ்சத்தனமும்

இரண்டு தினங்களுக்குமுன் ஆபிதீன் பக்கத்தில் ஜஃபருல்லாஹ் நானாவின் 'எல்லாமே' என்ற தலைப்பில் வந்த கவிதை கலப்படத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். 'கலப்படம் உணவில் மட்டும் அல்ல, தொழுபவர்கள் வட்டி வாங்கினால், அதுவும் கலப்படம்தான்'

அதை படித்ததிலிருந்து என் சிந்தனை சுழன்றுகொண்டே இருந்தது. தொழுகையில் கலப்படம் மட்டுமா செய்கிறார்கள் அபகரிப்புமல்லவா செய்கிறார்கள். "அனாதைகளின் பொருள்களை எடுத்துக்காதீங்கப்பா, அவங்கள்ட சொத்தைப் பாதுகாத்து உரிய சமயத்தில் அளவில்
குறைவில்லாமல் கொடுத்துடங்க" ன்னு கால்நடைகள்(அல் அன்ஆம்) அத்தியாயத்தில் 152 வது வசனத்தில் சொல்கிறான்.

அனாதைகள்னா யாரு? தாய் தகப்பன் இல்லாதவங்க; அதரவு இல்லாதவங்க. அவங்களுக்கு ஞாயமா நடந்துக்குங்கன்னு நமக்கு சொல்றான். அப்பொ அல்லா யாரு? அவனும் அனாதிதானே! 'ஆதியும் அந்தியும் இல்லாத அனாதியானவன்' என்று சூஃபியாக்கள் சொல்றாங்களே! அப்படி இருக்கும்போது அவனுக்குள்ள தொழுகையிட அளவை குறைக்கலாமா? இது அனாதி சொத்தை அபகரிக்கற மாதிரியல்லவா?

பர்ளு தொழுகை பதினேழு ரக் அத்தை பிரிச்சுப் பிரிச்சு பெருமானார் கொடுத்துட்டாஹ, அதுலெ கையெ வைக்கமுடியலெ நம்மாலெ. ஆனால் ஷியாக்கள் கையெ வச்சுட்டாங்க. அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை விட்டுத்தள்ளுங்க. ஆனா திராவிஹ்? ரமலானில் நோன்பிருந்து கொஞ்சம் அதிகப்படியா இறைவணக்கம் செய்தா ஈமான் பலப்படும், அந்த மனப்பான்மை அடுத்த ரமலான் வரை தொடரணும் என்பதற்காக திராவிஹைவைக் கொண்டுவந்தாஹ, மூணு நாள் தொழுதாஹ கூட்டம் அளவுக்கு மீறி வருவதைப் பார்த்து, தொடர்ந்து தொழுவித்தால் இது கடமயாகிவிடும் என்ற அச்சத்தால் பள்ளிவாசலுக்கு வராமல் தொழுதுகொள்ளுங்கள் என்று சஹாபாக்களிடம் சொல்லிவிட்டு வீட்டில் தொழுது கொண்டார்கள். ஆனால் எத்தனை ரக்அத் தொழுவித்தார்கள் என்ற ஹதீஸ் கிடையாது. நானும் தேடிப்பார்த்தேன் கெடைக்கலை.

திராவிஹ்வைப் பத்தி புகாரி ஷரீஃபில் பதிமூனு ஹதீஸ் இருக்கு அதே பதிமூனு முஸ்லிம் ஷரீஃபில் இருக்கு. அந்த பதிமூணுலெ ஒரு ஹதீஸ் மட்டும் தெளிவானதா இருக்கு. அதாவது அபு சலாமா இப்னு அப்துற்ரஹ்மான் என்கிற ஒரு நபி தோழர் அன்னை ஆயிஷ (ரலி) அவர்களிடம் 'கைஃப கான சலாத்துன் நபியி ஃபில் ரமலான' - ரமலானில் நபியுடைய தொழுகை எப்படி இருந்தது? என்று கேட்கிறார்கள். அன்னை ஆயிஷா (ரலி) பதில் அளிக்கிறார்கள்: 'லா ஃபில் ரமலான வஅலா ஃபில் கைரிஹி' - ரமலானில் மட்டுமல்ல மற்ற மாதங்களிலும் சரி அவர்கள் நான்கு ரக்அத் தொழுவார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதீர்! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதீர்! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று.

'லா ஃபில் ரமலான வஅலா ஃபில் கைரிஹி' என்ற ஒரே ஒரு வார்த்தையிலிருந்து நல்லா தெரியிது பெருமானார் அவர்கள் தொழுதது திராவிஹ் அல்ல தஹஜ்ஜத்(நடுநிசி தொழுகை) என்று. திராவிஹ் ரமலானில் மட்டும்தான், மற்ற மாதங்களில் கிடையாது. ஆனால் நம்ம ஆளுங்க எல்லாத்தையும் விட்டுட்டாங்க எட்டை மட்டும் எடுத்துக்கிட்டு திராவிஹ் 'எட்டு' தான் என்று அடம் பிடிக்கிறாங்க. வஹாபிஸம் உருவான நாட்டிலேயே இருபது ரக்அத் தொழுறாங்க, இந்த வஹாபி குஞ்சுகள் எட்டைவிட்டு எகிற மாட்டேன்கிறது. பெருமானார் அவர்கள் தொழுதது நாலு நாலா, இவங்க ரெண்டு ரெண்டா, அதுலேயும் கொழப்பம்.

சஹாபா பெருமக்களிடையே சரியா ஆதாரம் கிடைக்காததால் பள்ளிவாசல்லெ குழு குழுவா தொழுதுகிட்டு இருந்தாங்க. ஹஜ்ரத ஒமர் கத்தாப்(ரலி) அவர்கள்தான் அதை மாற்றி இருபது ரக்அத்து தொழுகையாக அமைத்தார்கள். அதை நாம் ஏற்று கொள்ளக்கூடாதா? பயான்
பண்ணும்போது உமர்(ரலி) அவர்களை முன்னுதாரணம் வைத்து பேசுகிறோம், தொழுகையில் அவர்கள் வழிமுறையை எடுத்துக்கொண்டால் என்ன? அல்லது புனிதமிகு ரமலான் மாதத்தில் அதிகமாகத் தொழுதால் என்ன குறைவு வரும்? இதில் ஏன் கஞ்சத்தனம்? குதிரைக்கு பட்டைக்
கட்டியதுபோல் இருக்காமல் ஹதீஸை சற்று அலசிப்பாருங்கள். 'சிந்தியுங்கள், சிந்தியுங்கள்' என்று அல்லாஹ் குர்ஆனில் அனேக இடத்தில் சொல்கிறான். சிந்தித்துப்பாருங்கள்...