Sunday, August 25, 2013



அருட்கொடையாளர் - 7   
 (இது ஓர் மீள்பதிவு )

பகுத்தறிவு எப்போது தோன்றியது...? இந்த கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு சுலபமல்ல, என்னைப் பொருத்தவரை மனிதன் எப்போது தன்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தானோ அப்போது பகுத்தறிவு தோன்றியது என்பதே என் கருத்து. அவன் நிலை தடுமாறியபோது வழி காட்டியது மதம் என்பதும் என் கருத்து. இதைப் பற்றி அதிகமாக சிந்திக்க எனக்குத் திராணி இல்லை. ஆனால் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமிய அறிஞர், தத்துவவாதி, மருத்துவர், இரசவாதி இப்படி பலவகையில் பரிணமித்தவர் சிந்தையினாலோ அல்லது வேறு எதுவினாலோ பகுத்தறிவாளராக இருந்தாரென்றால் சற்று வினோதம்தான்; தான் கொண்டிருந்த கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தாரென்றால் அது அதைவிட வினோதம்; வெறும் கொள்கையுடன் இருந்திடாமல் நூல்கள் எழுதியிருக்கிறாரென்றால்...!
கொள்கை அவரை பொருத்தது, அது எப்படி இருந்தாலும் அவரது ஆய்வுகள், சாதனைகள், கண்டுபிடிப்புக்கள், அவற்றின் பலன்களை இன்று வரை மதித்துப் பாரட்டப்படக்கூடியவரை பற்றி இதோ.....




Mohammed ibn Zakariya Al-Razi (864-930 A.D)

முழு பெயர்: அபு பக்கர் முஹம்மது பின் ஜக்கரியா ராஜி,  இன்றைய ஈரானின் தலைநகரான டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே சில கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ரேய்(RAYY) எனும் சிறிய நகரத்தில் கி.பி 864 ல் பிறந்து, லூட் கலைஞராக இருந்து பின் மருத்துவத்தில் தன்னை அர்பணித்துக்கொண்டார். இசை, மருத்துவம், கணிதம், இரசாயனம், தத்துவம் என பல்கலை அறிஞரான இவர் ஹுனைன் பின் இஸ்ஹாக்கிடமும் அலி பின் ரப்பான் அல் தப்ரியிடமும்  கல்வி பயின்றதாகத் தெரிகிறது. பல்வேறு தலைப்புக்களில்  184 நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ள இவர் கிரேக்க மருத்துவத்திலும்(யுனானி), பாரசீக, இந்திய மருத்துவத்திலும் புலமைப் பெற்றிருந்தார். இன்றைய இரசாயனத்துக்கும் பொறியியல் வேதியலுக்கும் உறுதுணையாக இருக்கும் sulfuric acid யும் மருத்துவத்துறைக்கு பயன்படும் ethanol யும் அதனை தூய்மைப் படுத்தும் முறையையும், கெரோசின் உட்பட பல வேதிக்கூட்டுப் பொருள்களைக் கண்டுபிடித்தார். இஸ்லாமிய உலகின் சிறந்த சிந்தனையாளரான இவரது கீர்த்தி ஐரோப்பிய உலகின் மருத்துவத்திலும் அறிவியலிலும் பரவி நிற்கிறது.
பிறந்த ஊரிலேயே கி.பி.930ல் மரணம் அடைந்தார். (இப்போது அது டெஹ்ரானின் ஒரு பகுதி) இளமைக் காலத்தில் இசையின் மீது காதல்கொண்டு

பாரசீகத்தில் பிறந்ததால் இவரைப் பெருமைப் படுத்தும் வகையில் டெஹ்ரானில் Raji Institute ம் கெர்மன்ஷாஹ் என்ற இடத்தில் ராஜி பல்கலைக் கழகமும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 27ம் நாள் 'ராஜி தினம்'('Pharmacy Day') ஈரானில் அணுசரிக்கப்படுகிறது.

வாழ்க்கைச் சுருக்கம்

பகுத்தறிவு வாதியான ராஜி தான் கொண்ட கருத்தினை வெளிப்படுத்துவதில் தடுமாற்றமோ, தயக்கமோ, அச்சமோ கொள்வதில்லை. அதே நேரம் சம காலத்து மற்ற அறிஞர் பெருமக்களையும் மதிக்கத் தவறுவதில்லை.

இளமைக் காலத்தில் ஆபரணங்கள் வியாபாரியாகவும், நாணய மாற்றுபவராகவும் இருக்கவேண்டியவர் இசையில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவராக இருந்தார்.  இரசவாதத்தில்(alchemy) ஈடுபாடுக்கொண்டார். அவரது முப்பதாவது வயதில் இரசவாதப் பரிசோதனையினால் கண் நோய் ஏற்பட்டு, அந்நோயைக் குணப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார். அதுவே அவர் மருத்துவராகக் காரணம் என பைஹாக்கியும், பைரூனியும் கூறுகின்றனர்.  ராஜி தன் முப்பதாவது வயதில் பாக்தாது சென்று அலி பின் சஹல் ரப்பான் அல்-தபரி(a Jewish converted to Islam, belonging to the famous medical school of Tabaristan or Hyrcania). என்பவரிடம் மருத்துவம் பயின்றதாகவும், அதி விரைவிலேயே மருத்துவம் பயின்று நூறுக்கும் குறையாமல் மருத்துவ நூல் எழுதியதாகவும் தவிர இரசவாதம் அல்லாது இயற்கை அறிவியல், கணிதம், வானவியல் பற்றிய 33 ஆய்வுகளைத் திரட்டியதாகவும் பேராசிரியர் ஹமீது அப்துல் ரஹீம் இயாத்(Prof of Chemistry at the Faculty of  Science, University of Cairo) கூறுகிறார். (ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கிடம் மருத்துவம் பயின்றதாக சில தளங்கள் கூறுகின்றன). மருத்துவம் இப்னு ரப்பான் அல் தபரியிடம் பயின்றாலும் தத்துவம் அல்-பல்கியிடம் கற்றதாகவும் பின் பல இடங்கள் பயணம் செய்த தருவாயில் தத்துவத்திலும் பண்டைய அறிவியலிலும் போதிய அறிவைப் பெற்றதாக இப்னு அல்-நதீம் கூறுகிறார்.

மருத்துவம் பயின்ற பின் அல் முக்ததரி மருத்துவமனையில் தன் பயிற்சியைத் தொடங்கினார். அது மருத்துவத்துறையிலும் மட்டுமல்ல இரவாதத்திலும் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருந்தது. பயிற்சி காலத்திற்குப் பின் தனது சொந்த ஊரிலேயே ராயல் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கலிஃபா முக்தஃபி (901-907) ஆட்சி காலத்தில் மீண்டும் தான் பயிற்சிப் பெற்ற பாக்தாதின் புகழ் பெற்ற அல் முக்ததரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். ஒரே நேரத்தில் இரு மருத்தவமனைகளின் பொறுப்பும் இவரிடம் இருந்ததால் பக்தாதுக்கும் ரேயிக்கும் இடையிலுள்ள பல மருத்துவ மனைகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இது இறுதியாக ரேயில் தங்கும் வரை நீடித்தது. அவரது பயிற்சி அணுகுமுறை இவைகளினால் கவரப்பட்டு என்நேரமும் நோயாளிகளும், மாணவர்கள் கூட்டமும் அவரைச் சுற்றியே இருந்துவந்தது. ஆசியாவின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் அவரிடம் பயில வந்தனர்.

அவரிடம் பல குழுக்களாக மாணவர்கள் இருந்தனர்(surrounded by several circles of students). அறிவியல் கேள்வி யாராவது கேட்டால் அதற்கான பதிலை முதல் குழு மாணவர்களிடம் எதிர்பார்ப்பார், கிடைக்கவில்லையானால் இரண்டாம் குழு மாணவர்கள் இப்படியே எல்லா மாணவர்களிடமும் கேள்வி வைக்கப்படும், யாரும் சொல்லவில்லையானால் இறுதியாக அவரே விளக்கம் சொல்வார். இப்படி மாணவர்களை ஊக்குவிப்பது போல தன்னிடம் வரும் நோயாளிகளிடமும் அன்பாக நடந்துக்கொள்வார். ஏழை நோயாளிகளிடம் பணமோ பொருளோ வாங்கமாட்டார். ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே மாதிரி வைத்தியம் செய்தார்; தன் மாணவர்களையும் செய்யச் சொன்னார்.

ரேயில் இருந்த காலத்தில் ”கித்தாப் அல் மன்சூரி” என்ற மருத்துவ நூலை எழுதி, அப்போது கவர்னராக இருந்த மன்சூர் பின் இஸ்ஹாக்கிற்கு அர்பணித்தார். அது 12ம் நூற்றாண்டில் Gerard of Cremona's ஆல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது என Encyclopedia of Britannica வும் 15ம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டது என வேறு சில இணையங்களும் கூறுகின்றன.

அறுவை சிகிச்சைக்காக மயக்கநிலை ஏற்படுத்த முதன்முதலில் அஃபினை உபயோகித்த ராஜி, அந்திம காலத்தில்  கண் நோயுடன் பூ  விழுந்து(cataract) முடிவில் பார்வையை முற்றிலுமாக இழந்தார். நோயுடன் போராடிக்கொண்டிருக்கும்போது ஒரு மருத்துவர் அவரைக் காண வந்தவர் தான் கொண்டுவந்துள்ள களிம்பை(ointment) இட்டால் குணமாகும் என சொல்லவே கண்ணில் எத்தனை அடுக்குகள்(layers) இருக்கின்றன என கேட்க, வந்தவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. "கண்ணைப் பற்றி அடிப்படை ஞானமே தெரியாத உன்னிடம் நான் மருத்துவம் பார்ப்பதா?" என மறுத்துவிட்டார். பின்  தப்ரிஸ்தானிலிருந்து வந்த அவருடைய பழைய மாணவர் ஒருவர் பார்த்துவிட்டு தான் குணப்படுத்துவதாக முன் வந்தார். மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது இனி வைத்தியம் பயன் தறாது என சொல்லி அதையும் மறுத்துவிட்டார். இது நடந்து சில நாட்களுக்குப் பின் 27, அக்டோபர் 925 (ஹி. 313, ஷஃபான் 5) அன்று இறையடி சேர்ந்தார் என அல்-பைரூனி  யின் குறிப்புக் கூறுகிறது.

பெரியம்மையும் தட்டம்மையும்(Smallpox vs measles


"Smallpox appears when blood 'boils' and is infected, resulting in vapors being expelled. Thus
juvenile blood (which looks like wet extracts appearing on the skin) is being transformed into richer blood, having the color of mature wine. At this stage, smallpox shows up essentially as 'bubbles found in wine' - (as blisters) - ... this disease can also occur at other times - (meaning: not only during childhood) -. The best thing to do during this first stage is to keep away from it, otherwise this disease might turn into an epidemic."





This diagnosis is acknowledged by the Encyclopaedia Britannica (1911), which states: "The most
trustworthy statements as to the early existence of the disease are found in an account by the 9th-century Persian physician Rhazes, by whom its symptoms were clearly described, its pathology explained by a humoral or fermentation theory, and directions given for its treatment."

ஏறக்குறைய ஒரு டஜன் முறைக்குமேல் லத்தீனிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட “அல்-ஜுதரி வல்-ஹஸ்பாஹ்” என்ற நூலில் பின் வருமாறு விளக்குகிறார். இது அம்மை நோய் பற்றி அக்காலத்தில் முதன் முதலில் எழுதப்பட்ட நூலாகும். இவர்தான் முதன் முதலில் பெரியம்மைக்கும் தட்டம்மைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிந்து விளக்கம் கொடுத்த முதல் மருத்துவராவார்.

தொடர்ச்சியான காய்ச்சல், முதுகு வலி, மூக்கில் அரிப்பு, இரவில் கெட்டக் கனவுகள் இவைகள் பெரியம்மை நோய் உடன் தோன்றுவதற்கான அறிகுறிகள். இதை தொடர்ந்து உடல் முழுவதும் வலியும் காய்ச்சலும், முகத்தில் வீக்கம் தோன்றும் அது சில சமயம் தோன்றி மறையும், கன்னமும் கண்களைச் சுற்றி அழற்சியான நிறம் உண்டாகி நன்றாக சிவக்கும். மேலும் உடல் கனமும், அமைதி இன்மையும், முறுக்கலும், அடிக்கடி கொட்டாவியும் அனுபவப்படும். தவிர தொண்டை வலியும், நெஞ்சில் வலியும், இருமலும், மூச்சுவிட சிரமமும் உண்டாகும். மேலும் தொண்டை கரகரப்பு, கடின உமிழ்நீர்(thick spittle), வாந்தி வருவது போன்ற உணர்வு, மன உளைச்சல் ஆகியவையும் உண்டாகும். 

தட்டம்மைக்கு(measles) வாந்தி வருவதுபோல் குமட்டல், மன உளைச்சல், அமைதியற்ற நிலை, முதுகுவலி இவைகள், பெரியம்மைக்கு ஏற்படுவதைவிட அடிக்கடி தோன்றும். இரண்டுக்குமே உடம்பு முழுவதும் சூடும், குடல் அழற்சியும், உடல் சிவந்து மினுமினுப்பும், பல் எயிறில்(gum) சிவப்பும் அனுபவப்படும்.

****1980 ல் அம்மை நோயை உலகம் முழுவதும் முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக உலக சுகாதார மையம் பிரகடனப் படுத்தியுள்ளது****

ஒவ்வாமையும் ஜுரமும்(Allargies and fever)

வசந்த காலத்தில் ரோஜாப்பூவை நுகருவதால் சிலருக்கு மூக்கழற்சி ஏற்படுகிறது, அபு ஜயித் பல்கி என்பவருக்கும் ஏற்பட்டது அது தொடர்பான அவரது ஆய்வு கட்டுரையில், இது கால மாற்றத்தில் ஏற்படும் அழற்சியாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது ஏற்படும் ஒவ்வாமை அல்லது சளி பிடித்தல் போன்றது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுவதாகும், இது நமக்கு இயற்கையாகவே அளிக்கப்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் தன்மைக்கு(natural defense mechanism) உகந்ததாகும் என விளக்குகிறார்.

மருந்துக்களின் நெறிமுறை

மருந்துக்கள் தயாரிப்புப் பற்றிய இவரது தொகுப்பும் mercurical ointments ன் பயனை அறிமுகப்படுத்தியதும் பல வகைகளில் பயிற்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. Also he developed  apparatus such as mortars, flasks,  spatulas and phials which were used in pharmacies until the early twentieth century.

தொழில்முறை ரீதியாக பயிற்சி முறைகளையும், மருத்துவ மேன்பாட்டினையும் மனோதத்துவ ரீதியான யோசனைகளை அறிமுகப்படுத்தியவர், போலி மருத்துவர்களையும், கிராமப் புறங்களில் கடை விரிப்பவர்களையும் கடுமையாகச் சாடுகிறார். அனைத்து மருத்துவப் பிரச்சனைகளுக்கும், அனைத்து நோய்களுக்கும் விடை காண்பது இயலாத காறியம் என  தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்களுக்கு எச்சரிக்கிறார். இதில் முடிவு என்பது கிடையாது மேலும் மேலும் படித்து தனது அறிவை வளர்ப்பதால் மட்டுமே புதிய அறிவு கிடைக்கும், அதை மக்கள் பயனுறும்படி செய்யவேண்டும் என்கிறார். குணமாகும் வியாதியையும் குணப்படுத்த முடியாத வியாதையையும் வகைப்படுத்தும் ராஜி புற்று நோய், குஷ்டம் போன்ற குணப்படுத்தமுடியாத நோய்களுக்காக மருத்துவரைக் குறைகூற முடியாது என்று கூறும் அதேசமயம் பெண்கள், பதவியில் இருப்பவர்கள், இளவரசர்கள் போன்றோர் தங்களது மருத்துவர்களுக்கு செவி சாய்க்காமல் முறையாக வைத்தியம் செய்துக்கொள்ளாமல் இருப்பதைப் பற்றி பரிதாபப்படுகிறார்; அதே நேரம் நோய்வரும்போது உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்கவேண்டும் என அனைவருக்கும் அறிவுரைக் கூறுகிறார்.

மருத்துவம் பற்றி நூல்களும் கட்டுரைகளும்

"கித்தாப் அல்-ஹாவி ஃபில் திப்" என்ற பெயரில் எழுதிய ஒன்பது தொகுப்புக்களைக் கொண்ட மருத்துவப் பேரகராதியில் ஒவ்வொரு பகுதியிலும் கிரேக்க, அரேபிய மருத்துவ முறைகளைப் பற்றிய முக்கியத் தகவல்களைத் தருவதோடு அரிஸ்டாட்டில், பிளாட்டோவின் கொள்கைகளைக் கண்டனம் செய்கிறார்.  தன் மருத்துவ அனுபவத்தில் கண்ட வியாதிகளையும் அதன் சிகிச்சை முறையையும் அடிப்படையாக வைத்து பல நூல்களில் கிடைத்த ஆதாரங்களையும் அதில் வடித்துள்ளார். His innovative views on many subjects in this book alone, many scholars consider Razi the great medical doctor of the Middle Ages. இந்நூல் ஃபரஜ் பென் சாலிம் என்ற யூத மருத்துவரால் 1279 ல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டபின்னறே ஐரோப்பாவில் பிரபல்யமானது.

”மன் லா யஹ்ளுருஹு அல்-தபீப்”(من لا يحضره الطبيب) பொது மக்களின் நலனைக்

கருதி மருத்துவக் கையேடு ஒன்றை எழுதிய முதல் பாரசீக மருத்துவராவார் ராஜி.  இது பாமர ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும், பயணிகளுக்கும் வரப்பிரசாதமாகும். 36 அத்தியாயங்கள் கொண்ட இந்த கையேடட்டில் சாதாரணமாக சமையலறையிலும், கடைத்தெருவில் கிடைக்கும் சில பொருட்களும், சாதாரணமாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் பொருட்களையும், உணவு முறைகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார். தலைவலி, ஜுரம், இருமல், வயிற்று வலி, கண் காது வலி போன்ற நோய்களுக்கு பாட்டி வைத்தியம் போல் மருத்துவம் கூறியுள்ளார். உதாரணமாக தலைவலியும் ஜுரமும் வந்தால் இரண்டு பங்கு ரோஜாப்பூ எண்ணெயுடன் ஒரு பங்கு வினிகரையும் சேர்த்த கலவையில் துணியை முக்கி எடுத்து நெற்றியில் இருக்கமாக வைத்திருந்தால் நோய் போகும் என்பது போன்ற வைத்திய முறைகளை அதில் குறிப்பிட்டுள்ளார்.

Doubts About Galen (Shukuk 'ala alinusor)

சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், கேலன் உட்பட பல கிரேக்க அறிஞர்களின் கொள்கைகளிலிருந்து ராஜி மாறுபடுகிறார்.  மனம், உடல் இவ்விரண்டையும் பிரிவுறச் செய்தால் மாத்திரமே உன்னத மனமும் தன்னைப் பற்றிய உயர்வான கருத்தும் ஏற்படும் இது ஒரு நோயாளியின் மேன்மைக்கு உகந்ததாகும் என்பது கிரேக்க அறிஞர்களின் கருத்தை மறுக்கும் அவர், ஒரு நோயாளியிடம் நட்புடன் பழகி ஆதரவும் அன்பும், அளித்து மனவலிமை ஏற்படுத்துவதன் மூலமே விரைவாக குணமடைய வழிவகுக்கும் என்கிறார்.
உடம்பில் நான்கு தனித்தனி திரவப் பொருள்கள் இருக்கின்றன, அவை உடலின் இயற்கையான உஷ்ண நிலையை சீராக வைத்திருப்பதின் மூலம் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது என்கிறார் கேலன். உஷ்ணமான பானத்தை கொடுப்பதன் மூலம் உடம்பின் உஷ்ணத்தைக் கூட்டமுடியும் அதேபோல் குளிர்ச்சியான பொருளினால் குறைக்கவும் முடியும் என்கிறார் ராஜி. இதேபோல் பல கேலனின் பல கொள்கைகளுக்கு மாறுபடுகிறார் ஜக்கரியா ராஜி. 

இரசாயனமும் இரசவாதமும்

ராஜி வடிவமைத்த பல ரசாயன உபகரணங்களில் சில இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இரசாயனங்களை பிரித்தெடுத்தல், வடித்தெடுத்தல் முறைகளில் இவர் பயன்படுத்தியமுறையால் (dry distillation)  கந்தக திரவம் மற்றும் ஆல்கஹால்(ethanol) இருந்து சல்ஃபூரிக் ஆசிடை கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பும் ஜாபிர் இப்னு ஹய்யானின் கண்டுபிடிப்பும் பின்பு பாரசீக
ரசவாதிகளுக்கு பயனளித்ததாக அறியப்படுகிறது.

இரசவாதத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்ததாகவும்  இரசவாதத்தில் உலோகங்களின் தன்மைகளையும் குணங்களையும் அறிய முடிகிறது கடந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்  தாழ்ந்த உலோகத்திலிருந்து தங்கம் தயாரித்தார்கள், தயாரிக்கமுடியும் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தாலும் அதன் சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் என்னால் உறுதியாக சொல்லமுடியாது என்றாலும் அதைப் பற்றி இன்னும் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்று ராஜி சொல்வதாக இப்னு அல் நதீம் அல் பக்தாதி   குறிப்பிடுகிறார்.

Razi divides his subject matter into three categories as he did in  his book "al-Asrar"-The Secret.(அவரது பழைய மாணவரும், உற்ற நண்பரும், உடனிருந்தவருமான அபு முஹம்மது இப்னு யூனுஸுக்காக எழுதியது)
 
1. Knowledge and identification of drugs from plant, animal, and mineral origins and the choicest type of each for utilization in treatment.
  2. Knowledge of equipment and tools used, which are of interest to both  the alchemist and the apothecary.
  3. Knowledge of the seven alchemical procedures and techniques such as sublimation and condensation of mercury, precipitation of sulphur and arsenic calcination of minerals (gold, silver,copper, lead, and iron), salts, glass, talc, shells, and waxing.

இன்றைய நவீன இரசாயனத்தில் உட்பொருளாகப் பேசப்படும் கணிமத்தை ஆறு வகைகளாகப் பின்வருமாறு பிரிக்கிறார்.

 1. Four SPRITS: mercury, sal ammoniac, sulphur, and arsenic.
  2. Seven BODIES; silver, gold, copper, iron, black lead (plumbago), zinc, and tin.
  3. Thirteen STONES including marcasite, magnesia, malachite, tutty, talcum, lapis lazuli, gypsum, and glass (then identified as as made of  sand  and alkali of which the transparent crystal Damascene is  considered the best).
  4. Seven VITRIOLS including alum, and white, black, red, and yellow  vitriols (the impure sulphates of iron, copper, etc.).
  5. Seven BORATES including the tinkar, natron, and impure sodium borate.
  6. Eleven SALTS including brine, common (table) salt, ashes, naphtha, live  lime, and urine, rock, and sea salts. Then he separately defines and describes each of these substances and their choicest kinds and colors and possible adulterations.

இதை தொடர்ந்து எழுதிய சிர்றல் அஸ்ரார் என்ற "ரகசியத்தின் ரகசியம்"(secret of secret) என்ற புகழ்வாய்ந்த நூல் அடிப்படை இரசாயன வினைகளை மருந்தகத் துறைக்கு முக்கியத்துவமாக அமைந்தது ஐரோப்பிய உலக்கு பெரும் பயனை அளித்தது. இவர் இரசவாதம் பற்றிய நூல்கள் பெரும்பாலும் ஃபார்ஸி மொழியில் எழுதியுள்ளார்.

On Religion

Razi wrote three books dealing with religion; they were: The Prophets' Fraudulent Tricks (Arabic مخارق الانبياء), The Stratagems of Those Who Claim to Be Prophets (Arabic حيل المتنبيين), and On the Refutation of Revealed Religions (Arabic نقض الادیان). He offered harsh criticism concerning religions, in particular those religions that claim to have been revealed by prophetic experiences. Razi asserted that "[God] should not set some individuals over others, and there should be between them neither rivalry nor disagreement which would bring them to perdition." He argued, On what ground do you deem it necessary that God should single out certain individuals [by giving them prophecy], that he should set them up above other people, that he should appoint them to be the people's guides, and make people dependent upon them?
Concerning the link between violence and religion, Razi expressed that God must have known, considering the many disagreements between different religions, that "there would be a universal disaster and they would perish in the mutual hostilities and fighting. Indeed, many people have perished in this way, as we can see."
He was also critical of the lack of interest among religious adherents in the rational analysis of their beliefs, and the violent reaction which takes its place:
If the people of this religion are asked about the proof for the soundness of their religion, they flare up, get angry and spill the blood of whoever confronts them with this question. They forbid rational speculation, and strive to kill their adversaries. This is why truth became thoroughly silenced and concealed.
Al-Razi believed that common people had originally been duped into belief by religious authority figures and by the status quo. He believed that these authority figures were able to continually deceive the common people "as a result of [religious people] being long accustomed to their religious denomination, as days passed and it became a habit. Because they were deluded by the beards of the goats, who sit in ranks in their councils, straining their throats in recounting lies, senseless myths and "so-and-so told us in the name of so-and-so..."
He believed that the existence of a large variety of religions was, in itself, evidence that they were all man made, saying, "Jesus claimed that he is the son of God, while Moses claimed that He had no son, and Muhammad claimed that he [Jesus] was created like the rest of humanity." and "Mani and Zoroaster contradicted Moses, Jesus and Muhammad regarding the Eternal One, the coming into being of the world, and the reasons for the [existence] of good and evil." In relation to the Hebrew's God asking of sacrifices, he said that "This sounds like the words of the needy rather than of the Laudable Self-sufficient One."

Criticism

ராஜியின் தத்துவங்களையும் மதக்கோட்பாட்டினையும் அபு ரைஹான் பைரூனி இப்னு சினா உட்பட பல அறிஞர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். The Hermetical writings and religious views of al-Razi were criticized by al-Biruni, and during a debate between Avicenna and al-Biruni, Avicenna wrote the following criticism on al-Razi: “Or from Muhammad ibn Zakariyya al-Razi, who meddles in metaphysics and exceeds his competence. He should have remained confined to surgery and to urine and stool testing—indeed he exposed himself and showed his ignorance in these matters”.

ராஜி எழுதிய அனேக நூல்களை, குறிப்பாக “இல்ம் அல்-இலாஹி” என்ற புத்தகத்தயும் சம காலத்தில் வாழ்ந்த அபு அல்-ரப்பான் அல்-பல்கி (chief of the Mu'tazilah of Baghdad) மறுக்கிறார், அவற்றில் தவறுகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் ராஜியின் “தஃப்தில் லத்தத் அல்-நஃப்ஸ்” என்ற புத்தகத்தை ஷுஹைத் இப்னு அல்-ஹுசைன் அல்-பல்கி என்பவர் மறுக்கிறார். அதேபோல் ராஜியின் “ஆலம் அல்-நுபுவ்வாஹ்” வை அஹ்மது இப்னு ஹம்தான், இப்னு அல்-தம்மர் ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோல் பல அறிஞர்கள் ராஜியின் மதரீதியான கொள்கையில் மாறுபட்டு நிற்கின்றனர். சிலரின் மறுப்புக்கு எதிர் மறுப்பும் ராஜி தெரிவித்துள்ளார். அவரது கொள்கை எப்படி இருந்தாலும் தொண்டை(work) அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

Quotes on Rhazes

"Rhazes was the greatest physician of Islam and the Medieval Ages." – George Sarton

"Rhazes remained up to the 17th century the indisputable authority of medicine." – The Encyclopaedia of Islam

"His writings on smallpox and measles show originality and accuracy, and his essay on infectious diseases was the first scientific treatise on the subject." – The Bulletin of the World Health Organization (May 1970)

"In today's world we tend to see scientific advance as the product of great movements, massive grant-funded projects, and larger-than-life socio-economic forces. It is easy to forget, therefore, that many contributions stemmed from the individual efforts of scholars like Rhazes. Indeed, pharmacy can trace much of its historical foundations to the singular achievements of this ninth-century Persian scholar." — Michael E. Flannery

Sources:
http://wzzz.tripod.com/RAZI.html
http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/Razi.html
http://www.nlm.nih.gov/exhibition/islamic_medical/islamic_06.html
http://www.muslimphilosophy.com/ip/rep/H043.htm
http://www.pre-renaissance.com/scholars/al-razi.html   
http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Zakariya_al-Razi  
http://geniusworld.8m.com/Razi.html
http://www.farhangsara.com/razi.htm
http://www.encyclopedia.com/topic/Abu_Bakr_Muhammad_Ibn_Zakariyya_Al-Razi.aspx
http://www.learn-persian.com/english/Razi_Zakariya.php
http://www.alchemywebsite.com/islam14.html  Razi
http://193.62.111.58/broughttolife/people/~/link.aspx?_id=F36DB07EC689475B88C8A399905F10BD&_z=z
http://www.thelivingmoon.com/44cosmic_wisdom/02files/Muhammad_ibn_Zakariya_al-Razi.html#Criticism
     


 

Friday, July 19, 2013

 
 
 
 
Jabir Ibn Hayyaan


அருட்கொடையாளர் - 6

28-10-2011 ல் ஆபிதீன் பக்கத்தில் வெளியீட்டின் மீள் பதிவு

மனித இனம் எப்போது தோன்றியதோ அப்போதே அவன்கூட ஆசையும் தோன்றியது. ஆசை என்ற ஒன்று இல்லாவிட்டால் நிச்சயமாக அவன் நடமாடும் மரமாகத்தான் இருப்பான். உந்து சக்தியே ஆசைதானே! அவனிடமிருக்கும் ஆசைகளில் மிகைத்து நிற்பது இரண்டு மட்டுமே ஒன்று பெண், அடுத்தது பொன் (இதில் பொருளும் அடங்கும்). பெண்ணை அடையவேண்டுமானால் பொருள் வேண்டும். அப்பொருள் பொன்னாக இருந்தால்...  ஏன் இன்றுகூட பொன்னை வைத்துதானே ஒரு நாட்டின் நாணயம் மதிப்பீடப்படுகிறது.

குறுக்குவழி என்பது அவன் கூடப்பிறந்தது; சுலபமாக அடையவேண்டும் அது பெண்ணாக இருந்தாலும், பொன்னாக இருந்தாலும். பெண்ணை அடைய பொன் ஒரு ஆயுதம், ஆனால் பொன்னை அடைய.... அதில் பிறந்ததுதான் ‘ரசவாதம்’-الكيمياء(Alchamy) ;  செம்பை பொன்னாக்கும் வித்தை. இது, பண்டை காலத்தில் வஞ்சகமில்லாமல் எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. இதை யாரும் அல்லது எந்த நாடும் சொந்தம் கொண்டாடமுடியாது. ரசவாதத்தால் செம்பு பொன்னானதோ இல்லையோ இரசாயனம் பிறந்தது, பல்வேறு அமிலங்கள் கிடைத்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இரசவாதத்தை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

பாரசீகத்தின் ரசவாதியாக இருந்து பின் இரசாயனத்தில் புரட்சி செய்த இரசாயனத்தின் தந்தை என பொதுவாக அழைக்கப்பட்டவர் ஒருவர் என்றால், அவர் “ஜாபிர் இப்னு ஹைய்யான்” ஆவார்.

JABIR IBN HAIYAN  (721 - 803/815 B.C)
Father of Chemstry
      

அபு மூசா ஜாபிர் இப்னு ஹைய்யான் என்ற முழு பெயரைக் கொண்ட இவரை லத்தின் மொழியில் அறியப்படுவது Gaber. பாரசீகத்தின் தூஸ்(Tus) பகுதியில் 'அத்தர்' தயாரிப்பவரின் மகனாக கி.பி. 721ல் பிறந்தார். கூஃபா(kufa-Iraq)வில் இமாம் ஜாஃபர் சாதிக்   அவர்களிடமும் யஜிதுடைய மகன் இளவரசர் காலிதிடமும் கல்வி பயின்றதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன, எனவே இளமைக் காலத்திலேயே தூஸிலிருந்து கூஃபா வந்திருக்கவேண்டும். இவரது பிறப்பைப் பற்றி தீர்மனமான முடிவு இல்லை. இவரை ‘அல் ஹரானி', 'சூஃபி’ எனவும் சிலரால் அழைக்கப்பட்டார். இளமைப் பருவத்தில் பர்மகி விஜிர்(Barmaki Vizir) என்று சொல்லப்படும் கலிஃபாவின் முதலமைச்சர்/மிக உயர் நிலை அதிகாரியுடைய அரவணைப்பில் மருந்துகள் தயாரிப்பில் பயிற்சி செய்துக்கொண்டிருந்தார். ஆனால் பர்மிகியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் இவரும் இருந்ததால்  மரணம் (கி.பி 803)வரை கூஃபாவில் வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டார். (He shared some of the effects of the downfall of the Barmakis and was placed under house arrest in Kufa, where he died in 803).

####Barmaki priestly family of Iranian origin, from the city of Balkh in Khorāsān, who achieved prominence in the 8th century as scribes and viziers to the early ʿAbbāsid caliphs. - Encyclopædia Britannica.####

அல்-கீமியா(الكيمياء) என்ற அரபு மொழியில் வழங்கப்படும் இரசாயனம் பற்றிய சோதனைகள் பண்டைய அரபு மக்களிடையே வெகுவாக இருந்ததாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்னு ஹைய்யானின் தந்தை அத்தர் தயாரிப்பவராக இருந்ததால் இரசாயனத்தின் மீது ஆர்வம் இயற்கையாக ஏற்பட்டது என்று ஏற்றுக்கொண்டாலும் தன்னுடைய ஆசிரியர் இமாம் ஜஃபர் சாதிக் அவர்களிடமிருந்து இரசவாதத்தையும் இரசாயனத்தில் calcium, evaporation, distillation and crystallization முதல் அனைத்து இராசயன முறைகளையும் கற்றுக்கொண்டதாக அவரே குறிப்பிடுகிறார்.(When he used to talk about Chemistry, he would say "my master Ja'far as-Sadiq taught me about calcium, evaporation, distillation and crystallization and everything I learned in Chemistry was from my master Ja'far as-Sadiq." Ibn Hayyan was deeply religious, and repeatedly emphasizes in his works that alchemy is possible only by subjugating oneself completely to the will of Allah and becoming a literal instrument of Allah on Earth, since the manipulation of reality is possible only for Allah.)  எப்படியானாலும் இவருடைய பரிசோதனையில் கிடைத்த வெற்றி இன்றைய இரசாயனத்துக்கு அடிகோலியது. இவர் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட விரிவான ஆராய்ச்சி நூல்களில் 22 நூல்கள் இரசாயனத்தையும் இரசவாதத்தையும் பற்றியது. 

(குறிப்பு: நாம் பூரியான் ஃபாத்திஹா ஓத மட்டும் இமாம் ஜஃபர் சாதிக் அவர்களை வைத்துள்ளோம், அதில் விறகுவெட்டியார் கதை வேறு..!)

படிகமாக்கல்(Crystallization), காய்ச்சி வடித்தல்(Distillation), நீற்றுதல்(Calcination), தூய்மைப் படுத்தல்(Sublimation) பற்றிய இவரது தெளிவான விளக்கம் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டது.  இதன் ஆராய்ச்சிக்காக பல்வேறு உபகரணங்களை உருவாக்கினார். இவரது சோதனைக்கூடம் பல நூற்றாண்டுகள்வரை அழிந்த நிலையில் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெள்ளீயம், காரீயம், இரும்பு(Tin, Lead, Iron) இவைகளுடன் சில இரசாயனங்களையும் சேர்த்து தங்கமாக மாற்றும் முறை நடைபெற்றதாகவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கூஃபா நகரம் புனரமைப்பின் போது அவருடை சோதனைச் சாலைப் பகுதியில் ஏராளமான தங்கமும் வேறு சில நூதனமானப் பொருள்களும் (mystetious substances) கண்டெடுக்கப்பட்டதாக சில ஆய்வுகள் கூறுகின்றது.

முதன் முதலில் வடிகலன்(alembic) ஒன்றை உருவாக்கி தாதுக்கள் மற்றும் அமிலங்கள் ஆய்வில் சாதனைப் புரிந்தார். இரசவாதத்தில் நடத்திய சோதனைகள் அல்லது சாதனைகளுக்கப்பால் பெருமளவில் புதிய இரசாயனக் கலவைகளை உருவாக்கி, செயல்முறை இராசயனத்தை (applied chemistry) மேம்படுத்தினார். இது பயன்முறை அறிவியலுக்கு(applied science) வித்திட்டது. ஏறக்குறைய 19 வகையான மூலகங்களின் spcific weight கண்டறிந்து அதன் ரசாயன நிகழ்வுகளையும் விளக்கியுள்ளார்.  chemical processes such as distillation, crystillazation and sublimation.

முதன் முதலில் வினிகரை காய்ச்சி வடித்து அசிட்டிக் திரவம்(acetic acid) ஐ
தயாரித்தார். காய்ச்சி வடித்து தூய்மைப் படுத்தும் முறையில் மூலிகையிலிருந்து அறுவை சிகிச்சைக்கான ஆல்கஹாலை உருவாக்கினார். மேலும் ஆல்கஹால் கொதிக்கும்போது வெளிவரும் ஆவி எரியும் தன்மையுடையது என்றறிந்தது, பின்னால் ஜக்கரியா ராஜி  ethanol கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. கண்ணாடியால் செய்யப்பட்ட  உபகரணங்களை அதிக அளவில் 
பரிசோதனைகளுக்காக பயன்படுத்தியுள்ளவரும் இவரே.

பல்வேறு உலோகங்கள், அலோகங்களை உருவாக்குதல், எஃகுவின் தன்மையை மேன்படுத்துதல்(alloying  of steel), துணிகளுக்கு சாயமேற்றுதல், தோல் பதனிடுதல், நீர் புகாத் துணி உருவாக்குதல்(varnishing of water-proof cloth),  கண்ணாடி தயாரித்தலில் மேங்கனீஸ் டைஆக்ஸைடை உபயோகித்தல், துரு ஏறாமல் தடுத்தல், தங்கத்தில் எழுத்துப் பதித்தல், வர்ணம் மற்றும் கிரீஸ்(paints and greases) தரம் கண்டறிதல் முதலானவைகள் இவரது சாதனைகள் வரிசையில் இடம்பெறுகின்றன. தவிர தங்கத்தை கரையச் செய்ய aqua regia என சொல்லப்படும் சொர்ணத்திரவம் ஒன்றை உருவாக்கினார். இவர் உருவாக்கிய வடிகலன்(alembic) காய்ச்சி வடித்தல்(distillation) முறையை சுலபப்படுத்தியது. மேலும் இவரது பரிசோதனைகள் தவறுகள் இல்லாத துல்லியமாக(accuracy) இருந்ததாகக் கூறப்படுகிறது.

இயல்புகளை அடிப்படையாக(Based on properties) வைத்து பொருளின் உருவகை(substance) ஐ மூன்று வகைகளாக விவரிக்கிறார். முதலாவதாக ஸ்பிரிட் / சூடுபடுத்துவதால் ஆவியாகும் வகை; இதில் கற்பூரம்(camphor), பாஷாணம்(arsenic), அமோனியம் குளோரைடு ஆகிய உள்ளிட்டவை. இரண்டாவதாக உலோகவகை: இதில் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவைகள் அடங்கும். மூன்றாவதாக பொடி(Powder)யாக மாற்றக்கூடிய எல்லாவகைக் கூட்டுப் பொருள்களும். தவிர அலோகம்(non metal) மற்றும் விரைவாக ஆவியாக்கூடிய பொருட்களையும்(volatile substances) பின்பு விவரிக்கிறார்.

இரசவாதி என அறியப்பட்டாலும் அவர் அதில் ஆர்வம் காட்டியதைக் காட்டிலும் அடிப்படை இரசாயன முறைகளையும், இரசாயனக் கலவையினால் ஏற்படும் பிரதிபலன்களையும் அறிவதில் தன்னை அர்பணித்ததால் இரசாயனத்துறையில் பரிணாமம் ஏற்பட இரசவாதம் ஆக்கமாக இருந்தது. இது வேறுபட்டப் பொருட்களின் தன்மை அதன் மாறாத விகிதாச்சாரம் இவைகளை கண்டறியும் தளமாக அமைந்தது.

இப்னு ஹய்யானின் பங்களிப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது nitric acid, hydrochloric acid, citric acid, tartaric acid இவைகளை தயாரிக்கும் முறையாகும், எனவே இவரை இரசாயனத்தின் தந்தை என அழைப்பது தகும் என்கிறார் Max Mayerhaff. ஜாபிர் இப்னு ஹைய்யானின் இரசாயன முறைகளை நேரடியாக ஐரோப்பிய ராஜ்யங்கள் எடுத்துக்கொண்டு வளர்ச்சியடைய செய்தன.

இப்னு ஹய்யான் இரசாயனமல்லாது, மருந்துக்கள்(medicines) பற்றியும்,
 அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கையில் சில மாற்றங்கள் செய்து “மீஜான்” (Book of Balance) என்ற நூலில் உஷ்ணம், குளிர்ச்சி, வறட்சி, ஈரம்(hotness, coldness, dryness, moistness) என இயற்கைத் தன்மையை நான்காகப் பிரித்து விளக்குகிறார். ஒவ்வொன்றும் அகம் புறம்(interior, exterior) என உள்ளது. அகம் 1:3:5:8 என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது. இது எப்போதும் 17 ஆல் கூட்டவோ அல்லது பெருக்கவோ முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார். நான்கு பூதங்களான நெருப்பு, உஷ்ணமும் வறட்சியும் கொண்டது; நிலம், குளிர்ச்சியும் வறட்சியும் கொண்டது; நீர், குளிர்ச்சியும் ஈரமும் கொண்டது; காற்று, உஷ்ணமும் ஈரமும் கொண்டது என்கிறது அரிஸ்டாட்டிலின் பௌதீகம். இந்த நான்கு தன்மைகளில் இரண்டு அகமாகவும் மீதி இரண்டு புறமாகவும் உள்ளது என்கிறார் இப்னு ஜாபிர். உதாரணமாக காரீயம்(lead) குளிர்ச்சியும் உலர்வும் கொண்டது; பொன், உஷ்ணமும் ஈரமும் கொண்டது. (Aristotelian element was characterized by these qualities: fire was both hot and dry, earth cold and dry, water cold and moist, and air hot and moist. In metals two of these qualities were interior and two were exterior. For example, lead was cold and dry and gold was hot and moist.) இவ்வாறு, ஜாபிரின் கொள்கைப்படி வேறுபட்ட உலோகங்களின் தரத்தை மாற்றியமைக்கமுடிகிறது.

வானவியல் பற்றியும் ஆய்வுகள் நடத்தி நூற்கள் எழுதியுள்ளார். இவருடைய ''கித்தாப் அல் கீமியா''(Book of the Composition of Alchemy)வை ராபர்ட் செஸ்டர்(Robert of Chester) என்பவர் 1144 ம், 'கித்தாப் அல் சபயீன்'(Book of Seventy) ஐ Gerard of Cremona 1187 க்கு முன்பும் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டு பின் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் வரை இரசாயன வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தது.

இப்னு ஜாபிரின் இரசவாத செய்முறை விளக்கம் இதோ:

In his treatise on the silvering of copper and iron, and in what has become known as “The Discovery of secrets”, Jabir wrote: “You must value and not contradict what is written; remember well how to manage without diminishing or augmenting, take as much as you wish of the stone mixed with its mixture and grind it with some water, mixed with copperas and Sal ammoniac(ammonium chloride) until it becomes black. Then put it very near a very slight heat until it smells like semen. When it has that smell take it away and wash it slowly with some clear water, and then roast it gently until you notice a visible vapour. In this way its water will be driven off, and the stone itself will become light, without losing its essence. Take it off and dip it again into water, powdering it under water, and roast it as before. Its blackness begins to diminish. Take off the stone when it is dry and its water absorbed. Grind it well in some clear water and roast it again. It begins to be green, and then this blackness will disappear. When you see the stone beginning to turn green, be sure you are in the right path. Move it then when it becomes quite green and has the appearance of verdigris. This will show that the process is right, and the stone has lost its Sal ammoniac which would have corrupted it. After powdering it in some water, put it into a vessel well luted with plaster, place it on a gentle fire, and distil off all its water. Be patient and do not be in a hurry to increase the fire which will corrupt it; for you will repent, and your Itallic repentance will never be of avail. When you distil off all its water, take it off, and powder it in the same distilled water. Then return it to the vessel, and renew the distillation.

I recommend you to distil it 700 times like the rods of myrtle, and Indian cane. I have not explained this hint in any one of my books, but in this only. I have told you the opinion of philosophers without diminishing or increase, and have not concealed anything from you. When the stone becomes green we call it myrtle, and when it returns to yellow, we give it the name of Indian cane. You must know that it becomes gradually black from the first to the last. It remains quite black from five to ten roastings; then it slowly becomes green, and has the colour completely in 50 or 70 roastings. This is the end. If the stone acquires these qualities, there will be no doubt of its goodness. Its yellow colour begins bye-and-bye to disappear and the stone will completely lose its clearness in 70 roastings. Then the stone will have the same degree as the sun, and similar coloured rays. It will burn, and become ashes. They are the same ashes mentioned in the books of philosophers. If you continue the same process, the ashes will become quite white. This is the fourth sign, which is the sign of perfection. Therefore you must continue to proceed as before without diminishing or increase. Then it is necessary to augment the fire just a little, and do not fear the corruption. If you continue to distil it you must return the distilled water on it, and in every distillation the water diminishes; therefore it is necessary, every ten distillations, to add some clear water to the distilled water with which you pulverize it. If the stone begins to turn white, you must continue the same process until it turns very white. This will be from 500 distillations. If the fire diminish, and the operator be clever, knowing well the quantity of fire, from 450 distillations (the total is 900 distillations), the stone, you may be sure, will have a complete and real whiteness. In this state you may operate for giving copper and iron a coating of silver. You can also operate on melted crystal, and pearls, and many other minerals.”

source:

http://alshindagah.com/septoct2004/jabir.html
 http://www.webgaza.net/scientists-scholars/Hayyan.htm
http://www.britannica.com/EBchecked/topic/298619/Abu-Musa-Jabir-ibn-Hayyan
http://www.islamic-study.org/chemistry.htm
http://islam.wikia.com/wiki/Alchemy_and_chemistry_in_medieval_Islam
http://www.amaana.org/ISWEB/contents.htm
http://www.findbiography.org/famous-scientists/jabir-ibn-haiyan
http://profiles.incredible-people.com/jabir-ibn-haiyan/
http://en.wikipedia.org/wiki/Jābir_ibn_Hayyān

 

Tuesday, July 16, 2013

அருட்கொடையாளர் - 5

13-10-2011 ல் ஆபிதீன் பக்கங்களில் வெளியிட்டதின் மீள் வெளியீடு

TIPS
இஸ்லாமிய வட்டத்துக்குள் நிற்காமல் சகோதர அருட்கொடையாளர்களைப் பற்றியும், ஏன் இட்லி, தோசை, வடை கண்டுபிடித்தவர்களையும் எழுதுங்கள் என்று ஆபிதீன் தன்னுடைய ஆதங்கத்தை இல்லை ஆசையை சென்ற வரிசையில் தெரிவித்திருந்தார். என்ன செய்யிறது தமிழ் நாட்டு இட்லி வடை+சாம்பார், காலத்தைக் கடந்து நிக்கிதுண்டு மட்டும் தெரியுமே தவிர எந்த காலத்தை சேர்ந்ததுண்டு தெரியாது, சங்க காலத்துக்கு முந்தியதா இருக்கலாம்.  ஒன்னு மட்டும் தெரியும், நாம விரும்பி சாப்பிடுற புறாட்டா  மலாயாவுலெ பொறந்து நம்ம பக்கம் வாழுது; பிரியாணி, புலாவு,  குருமா, ஜாங்கிரி, ஃபிர்ணி இத்தியாதி, இத்தியாதி எல்லாம் மொகலாய வம்சம்;  சாம்பார்லெ கொஞ்சம் மட்டன் சேர்த்தா என்ன அப்டீன்னு எதோ ஒரு துலுக்கனுக்குத் தோனிய ஐடியா “தாலிச்சா” வா மாறிடுச்சு. அது, மொத நாளைவிட மறுநாள் தான் டேஸ்டா இக்கிது. அதனால்தான் ஓல்டு ஈஸ் கோல்டுன்னு சொல்றாங்களோ? ரசம் சாப்பிட்டா சீக்கிரமா செரிச்சுடுது, இது சரிப்பட்டு வராது எல்லாம் ”மஸ்தா” இருக்கணும், நம்ம ஆள் யோசிச்சான், விளைவு தேங்காப் பால் மஸ்தான சாமான். அதுலெ கொஞ்சம் மசாலாவோடு மீனை பெறட்டினால் “பாங்கான்” ; அதையே மசாலா இல்லாம லேசா சீரகம் மஞ்சள் சேர்த்து ரசம் மாதிரி காய்ச்சினால் சொறியாணம்னு சொல்லப்படும் “சொதி ஆணம்” கிடைச்சது, செம டேஸ்ட். இது சிலோன் இறக்குமதி, இப்பவும் தோப்புத்துறையில் கல்யாணாக் காச்சிகளில் ஃபேமஸ். பிரியாணி செரிக்க ஃபிர்ணி, புலவுக்கு..? சீனித்தோவை. வாழைப்பழத்தையும் தக்காளிப் பச்சடியையும் சேர்த்து  சோத்தை மசியப் பெசஞ்சு சீனித்தோவையை விட்டால் பாயாசம் மாதிரி ஆயிடும் அதுலெ ரெண்டு சொட்டு எலுமிச்சை சாறை ஊத்தி அடிச்சா.... ஏற்கனவே ஃபுல்லா ஏத்தின புலவு பஸ்பமா செரிச்சுடும்கிற ஐடியா நம்மாளுக்குத்தானே வந்துச்சு. ஆக இந்த வகையிலே நம்ம ஆளுக்கு வர்ற ஐடியாக்களை மிஞ்ச யாராலும் முடியாது. திண்டுக்கெட்டவன்... நாமத்தானே...!

 ## தண்ணீரில் சீனியைக் கரைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு காய்ச்சி ஆறிய பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் விடணும், லேசா கலரும்(பிரியாணிப் பவுடர்) சேர்த்தால் அது சீனித்தோவை செறிமானத்துக்கு பெஸ்ட்.##

அருட்கொடையாளர் - 5

தெரியாத அறிஞர்களில் இவரும் ஒருவர், தமிழ் இஸ்லாமிய உலகில் தமிழ் அறிஞர்களைப் பற்றி தெரிந்திருக்க முடியாத நிலையில் இவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரைப் பற்றி சொல்வதற்கு முன் வரலாற்றை சற்று பார்க்கவேண்டும். மகா அலெக்ஸாண்டர் தன்னுடைய ராஜ்யத்தை ரோமிலிருந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதியான சிந்து நதி வரை படைபலத்தால் மூலம் விரிவுபடுத்திய பின் கிரேக்க கலாச்சாரம் எல்லாப் பகுதிகளிலும் பரவிநின்றது. அலெக்ஸாண்டருக்குப் பிறகு பல படைஎடுப்புகளால் நாகரீகம் கலாச்சாரம் மாறினாலும் கிரேக்க அறிவு நிலைத்துக்கொண்டது.

ரோம ராஜ்யத்தில் கிறுஸ்துவம் பரவிய பின்னர் கிறுஸ்துவத்தை ஏற்றுக்கொண்ட கிரேக்கர்களுக்கிடையே நாளடைவில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றி ஒரு பிரிவினர் கிரேக்க ஞானத்துடன் கிறுஸ்துவத்தை இணைத்துக்கொண்டனர். இப்பிரிவினரே நெஸ்தோரிய கிறுஸ்துவர்கள்  ஆவர். அவர்களுடைய போதனைகள் சிரியாக் மொழியில் இருந்தன. அவர்கள் சிரியாவிலிருந்து ஈரான் வரை  பரவி இருந்தனர். கேரளாவில் இருக்கும் சிரியன் கேத்தோலிக் இப்பிரிவினரே என நம்பப்படுகிறது. ஏராளமான கிரேக்க நூல்களை சிரியாக் மொழியில் இவர்களே எழுதினர்.

அரபு பழங்குடியினரில் ஒரு பிரிவினர் கிருஸ்துவத்தில் இணைந்து இஸ்லாம் தோன்றிய பின்னரும் அல்லது அப்பகுதியில் பரவி வலுபெற்ற பின்னரும் தங்கள் நிலைபாட்டிலிருந்து மாறாமல் நெஸ்தோரிய கிருஸ்துவத்திலேயே இருந்தவர்களை ‘இபாதி’ என்றழைக்கப்பட்டனர்.

Hunayn ibn Ishaq (808-873)           
 Sheikh of the Translators

அபு ஜைத் ஹுனைன் இப்னு இஸ்ஹாக் அல் இபாதி- أبو زيد حنين بن إسحاق العبادي‎ என்ற முழுப் பெயரையுடைய இவர் லத்தீன் மொழியில் அறியப்படுவது Johannitious. சிரியா நெஸ்தோரிய கத்தோலிக் கிருஸ்துவரான இவர் கி.பி 808/809 ல் ஈராக்-ஹிராவில் பிறந்தார். அரபியும் சிரியாக் மொழியும் இலக்கண இலக்கியத்துடன் பஸராவில் கற்றார். இவரது தந்தை மருந்தாளராக(pharmacist) இருந்ததால் மருத்துவக் கல்வியை பாக்தாதில் புகழ் பெற்ற அரசு மருத்துவரான யுஹன்னா பின் மஸவாஹ்  விடம் கற்றார். மருத்துவக் கல்வி கற்கும்கால் கேள்விக்கணைகளால் தன் ஆசிரியர் யுஹன்னாவை துளைத்தெடுத்தார், மாணவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் திணறிய ஆசிரியர் பள்ளியிலிருந்து வெளியேற்றினார். விளைவு, தான் ஒரு சிறந்த மருத்துவராகத் திரும்ப வருகிறேன் என்ற சவாலுடன் வெளியேறியவர் எங்கு சென்றார் என இரண்டுமூன்று ஆண்டுகள் தெரியாமலிருந்தது. சிலர் அவர்  அலக்ஸாண்டிரியா சென்றதாகவும் சிலர் ரோம் சென்றதாகவும் சொல்கிறார்கள். மருத்துவத்துடன் கிரேக்க மொழியும் பயின்று சிறந்த மருத்துவராக, சிறந்த கிரேக்க மொழி வல்லுனராக  பாக்தாத் வந்து தன் ஆசிரியர் முன் நின்றார். மாணவனின் திறமையைக் கண்ட யுஹன்னா மகிழ்வுடன் அரவணைத்து பின் இருவரும் இணைந்து பல்லாண்டுகள் மருத்துவப் பணியாற்றினர்.

அறிவாலயம் (தாருல் ஹிக்மா-House of Wisdom)

அப்பாஸிய கலிஃபா மன்சூர் (714  – 775 AD)  முதல் கலிஃபா ஹாரூன் அல்-ரஷீது(769 - 809 AD)  கால கட்டம் வரை சமஸ்கிருதம், கிரேக்க மொழியிலிருந்து அனேக நூல்கள் அரபிக்கு மொழி பெயர்க்கப்பட்டன.  14 செப்டம்பர் 786 ல் ஹாரூன் அல்-ரஷீது பதவி ஏற்றபின் அனேக அறிஞர்களை ஒன்றுகூட்டி 'தாருல் ஹிக்மா' என்ற அறிவாலயத்தை நிறுவி கல்விக்கண் திறந்தார். அவரது மகன் கலிஃபா மஃமூன் அல்-ரஷீது  அதை விரிவுபடுத்தி தந்தையின் பணியைத் தொடர்ந்தார். இவருடைய காலத்தில் யுஹன்னா, கஸ்தா இப்னு லூகா, அப்துல் மஸீஹ் இப்னு நயீமா, பனு மூஸா சகோதரர்கள், அல்-குவாரிஸ்மி, தாபித் பின் குர்றா, அல்-கிந்தி  இன்னும் பலர் மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் இருந்தனர்.


ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கின் திறமையை அறிந்த கலிஃபா மாஃமூன்
அவரை அறிவாலயத்தின் பொறுப்பை ஒப்படைத்து மொழிபெயர்ப்பு துறைக்குத் தலைமை ஏற்கச் செய்தார். அச்சமயம் இஸ்லாத்திற்கு கிரேக்க மருத்துவம் மற்றும் அறிவியல் மிகவும் தேவைப்பட்டது. எனவே அவரை மொழிபெயர்ப்புப் பணியில் தீவிரப்படுத்தினார். போதிய கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை, எனவே அரிஸ்டாட்டில் முதல் கேலன் வரை பல கிரேக்க அறிஞர்களின் இன்னும் அதிகமான நூல்களை தேடிப்பிடித்து மொழி மாற்றம் செய்ய பைசாந்தியம்  வரை ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கை கலிஃபா மஃமூன் அனுப்பி வைத்தார். இருந்தாலும் கிரேக்க நூல்களைத் தேடி சிரியா, பாலஸ்தீனம், எகிப்து போன்ற நாடுகளுக்கு சென்று அவைகளைப் பெற்றிருக்கிறார்.

மொழிபெயர்ப்பு

ஹுனைனின் மொழிபெயர்ப்புப் பணி மகத்தானது. தன் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை மொழி பெயர்த்துள்ளார்.  வெறும் தத்துவங்களோடு நின்றுவிடாமல் மருத்துவம், வானவியல், கணிதம், மாயவித்தை(Magic), அளவீடுகலை(oneiromancy) போன்றவைகளும் பைபிள் பழைய ஏற்பாட்டை-Old Testament(தவ்றாத்) கிரேக்க வடிவத்திற்கு பின் அரபியில் மொழி பெயர்த்தார். அரிஸ்டாட்டிலின் மூலதத்துவம்(Metaphysics), ப்ளாட்டோவின் Timaeus, Eucalid's Optic போன்ற குறிப்பிடத்தக்க நூல்களல்லாது  பண்டைய கிரேக்க நூல்களை சிரியாக் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்தார். குறிப்பாக கேலனின் தத்துவ நூல்களல்லாது பெரும்பாளான மருத்துவ  நூல்களை மொழிபெயர்ப்புச் செய்தார்.  மொழிபெயர்ப்புப் பணியில் தன் மகன் இஸ்ஹாக் பின் ஹுனைன் மற்றும் சகோதரர் மகன்(nephew) ஹுபைஷ் பின் அல்-ஹஸன் அல்-ஆஸம் ஆகியோரை இணைத்துக்கொண்டார். கேலனின் நூல்களில் 129 பிரிவுகள் இருந்தன, அவைகளில் இருபது மூலப் பிரதி (Greek original ) கிடைக்கவில்லை அல்லது காணவில்லை; இரண்டு நம்பத் தகுந்ததல்ல(spurious); கிடைத்த 107 ல் பதினொன்றை சிரியாக்கில் மொழிபெயர்க்கப்பட்டது 96 ஐ சிரியாக் மற்றும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன, 93 நூல்களை ஹுனைன் தனித்து மொழி பெயர்ப்பு செய்தார். கேலனின் நூல்களை மொழிமாற்றம் செய்யும்போது ஈசா பின் யஹ்யா என்ற அறிஞரையும் அவ்விருவருடன் சேர்த்துக்கொண்டார். (129 நூல்களையும் மொழிபெயர்ப்புச் செய்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன.)

உண்மையிலேயே இக்கூட்டு முயற்சியால் செய்த மொழிபெயர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மகன் இஸ்ஹாக் கிரேக்க நூல்களை சிரியாக் மொழியி மாற்றவும் மருமகன் ஹுபைஷி சிரியாக்கிலிருந்து அரபியில் மாற்றவும் செய்தனர். ஹுனைன் பின் இஸ்ஹாக் அவர்களின் மொழிபெயர்ப்பின்போது ஏற்படும் தவறுகளை திருத்தம் செய்தார். மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றம் செய்யக்கூடாது. மூலத்தின் பொருள் மாறாமல் படிப்போர்க்கு விளங்கும் வகையில் வார்த்தைகள் அமையவேண்டும் என்பது அவரின் கொள்கை, அதில் கவனமாகவும் இருந்தார். இவரது மொழி பெயர்ப்பில் எந்த தவறையும் காணமுடியாது, வார்த்தைகளின் லாவகமும் அவருடைய தனி பாணியும் மொழிபெயர்ப்பின் முறையையும் பின்னுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பலர் பல காலம்வரை பின்பற்றினர்.  சிரியாக் மொழிபெயர்ப்பு தனது கிறுஸ்துவ நண்பர்கள், மாணவர்களுக்காகவும் அரபி மொழிபெயர்ப்பு அரபு மக்களுக்காகவும் செய்வதாகக் கூறுகிறார்.  சுருங்கச் சொன்னால் இஸ்லாமிய வைத்தியத்துக்கு அடிக்கல் நாட்டிய பெருமை இவரையே சாரும்

ஹுனைனின் நூல்கள்

கலிஃபா மஃமூனின் மகத்தான ஆதரவினால் மொழிபெயர்ப்பு பணிகளுடன் நிறுத்திக்கொள்ளவில்லை, சொந்தமாக அனேக நூல்கள் எழுதியுள்ளார். மருத்துவம், தத்துவம், புவி இயற்பியல்(geophysical), வானிலை இயல்(meterology), உயிரியல்(zoology), மொழியியல்(linguistic), மதவியல் போன்றவைகளாகும். முதல் மனிதர் ஆதம் முதல் அப்பாஸிய கலிஃபா முத்தவக்கில் வரையிலான சரித்திரம் ஒன்றையும் எழுதியுள்ளது இவரது தனிச் சிறப்பாகும். இவர் மருத்துவம் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். மருத்துவம் பற்றி நவீன விளக்கமும் போதிக்கும் முறையும் பற்றி எழுதியுள்ளது கலப்படமற்ற மகத்தான சாதனையாகும். இவரது “அல்-மசாயில் ஃபி அல்-திப்(Intoduction to the Healing Arts)” என்ற நூல் மருத்துவர் பட்டம் பெறும் மாணவர்களை சோதனை செய்யும் ஆசிரியர்களுக்கு முக்கிய கையேடாக(principle manual) பயன் பட்டது, இது பின்னர் ஹீப்ருவிலும் லத்தீனிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ”அல் மஸ்தில்” என்ற நூல் பத்து முதல் பதிநான்காம் நூற்றாண்டுகளில் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய மறுமலர்ச்சி ஏற்படும்வரை மேற்கத்திய மருத்துவர்களால் மருத்துவத் தகவல் குறிப்பாகப் பயன்பட்டது. குழந்தை வலிப்பு நோய்(pediatric epilepsy), தசை மற்றும் நரம்புகளைப் பற்றி இவர் எழுதிய நரம்பியல் நூல் பேசுகிறது. அதில் சிறப்பு வாய்ந்த நூலான “அல் அஷர் மகலத் ஃபில் அய்ன்”(Ten Treatises on Ophthalmology) ஆகும். இது கண் மருத்துவ பாடநூலாக விளங்கியது மட்டுமல்ல பதினைந்தாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய உலகுக்கு மட்டுமல்லாது ஐரோப்பிய உலகிற்கும் கண் மருத்துவ வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.

இந்நூல் முழுவதும் கண்ணைப் பற்றி நுணுக்கத்துடன் விரிவாக
எழுதியுள்ளார். Anatomy of Eye, அதன் நோய், நோயின் அறிகுறி, வைத்தியமுறை இவை அனைத்தையும் விரிவாக எழுதியுள்ளது நீண்ட ஆய்வுக்குப் பின்னரே இவ்வாறு எழுதமுடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக கண் வீக்கத்துக்கு காரணம் cysts and tumer என்கிறார். பல்வேறு கருவிழிப்புண்(corneal ulcers)களுக்கும், பூவிழும் நோய்க்கும் (Catatacts) அறுவை சிகிச்சை மற்றும் மாற்று வைத்திய முறைகளையும் அந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

அக்காலத்தில் நெஸ்தோரிய தேவாலயங்களில் விவிலிய விளக்கங்கள் கேள்வி பதில் வடிவத்தில் இருந்தது போலவே இவரது மருத்துவ நூல்கள் பெரும்பாலும் கேள்வி பதில் வடிவத்தில் அமைந்திருந்தது. அது மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக சொல்லப்படுகிறது. Questions on Medicine” was extremely beneficial to medical students. because it was a good guide for beginners to become familiar with the fundamental aspects of medicine in order to understand the more difficult materials.  The questions were taken from Galen’s “Art of Physic,” and the answers were based on “Summaria Alexandrinorum.” For instance, Hunayn answers what the four elements and four humors are and also explains that medicine is divided into therapy and practice. He goes on later to define health, disease, neutrality, and also natural and contranatural, which associates with the six necessary causes to live healthy.

இதன் இரு கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று கிரீஸ் தேவாலயத்திலிருந்து அருள்மிகு கிரிகோரி-I  அவர்களால் ரஷ்யாவின் ஜார்(Tsar) மன்னருக்கு 1911 ல் பரிசளிக்கப்பட்டு இப்போது லெனின்கிராடு நூலகத்திலும், மற்றொன்று கெய்ரோவில் தைமூர் பாஷா நூலகத்திலும் பாதுக்கப்பட்டுள்ளது. அவை இரண்டையும் M.Meyerhoff  என்பவர் "The Earliest Systematic Textbook on Ophthalmology"  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதல்லாமல் வேறு சில நூல்கள் St Sophia Istanbul ம் இருக்கின்றன.

Kitab ila Aglooqan fi Shifa al Amraz - கேலனின் மருத்துவ முறையைச் சார்ந்து இவரது விளக்கங்கள் அடங்கிய இந்நூல் அலிகார் Ibn Sina Academy of Medieval Medicine and Science  ல் இன்றும் காணக்கிடைக்கிறது. இது கேலனின் நூல்களில் தலைசிறந்ததாகும்(master piece). இரு தொகுப்புக்களைக் கொண்ட இந்நூலில் பல்வேறு காய்ச்சல்கள்(fevers), உடம்பில் ஏற்படக்கூடிய வெவ்வேறு வகையான அழற்சிகள்(different inflammatory) பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 150 க்கும் மேற்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை வகைப்படுத்தியுள்ளார். வழிமுறையாக செய்து வந்த ரோமானிய காலத்தின் மருத்துவ முறைகளையும்  யுனானி மருத்துவ முறைகளையும் இதன் மூலம் அறியமுடிகிறது.

அற்புத மருத்துவர்

பாக்தாதில் மருத்துவம் படிக்கச் சென்றபோது ஆசிரியர் யுஹன்னாவினால் மறுக்கப்பட்டு மற்ற மாணவர்களிடம், “அவன் மருத்துவம் படிக்க லாயக்கில்லை, அவன் தன் தந்தையுடன் மருந்துக்கடையில் வேலை செய்யவோ இல்லை நாணயம் மாற்றும்(money exchange) தொழில் செய்யவோ பொருத்தமானவன்”  என்று காரணம் காட்டி விரட்டப்பட்டானோ அவன் அலக்ஸாண்டிரியா சென்று யுனானி மருத்துவம் பயின்று ஆசிரியரையும் விஞ்சும் அளவுக்கு முன்னேறினார். இவரது வைத்தியமுறை மற்றுள்ளோரைக் காட்டிலும் வித்தியாசமானது. ஒரு கொல்லன் இரும்பைக் காய்ச்சி உருவாக்குவதுபோல் தன்னுடைய நோயாளியை வைத்தியம் செய்து குணமாக்குவார், எனவே இவருக்கு மந்திரவாதி வைத்தியர் (Wicked Physician) என்ற ஒரு பெயரும் உண்டு.

கி.பி. 833 ல் கலிஃபா மஃமூன் இறந்தபிறகு அவரது மற்றொரு சகோதரர் முஃதாசிம் பதவிக்கு வந்தார். அவருடைய காலத்தும் அறிவாலயம்(house of wisdom) சிறப்பாகவே நடைபெற்றது. கி.பி. 842 ல் முஃதாசிமின் மறைவுக்குப் பிறகு அல்-வாத்திக் பதவி ஏற்றார். இவரது காலத்தில் ஹுனைன் தனது வைத்தியத் தொழிலில் அதிக கவனம் செலுத்தினார். அரசு வைத்தியர்கள் குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். அப்போது ஏறக்குறைய 56 மருத்துவர்கள் இருந்தனர், மற்ற வைத்தியர்களுடனும் தத்துவவாதிகளுடனும் கலிஃபா அல்-வாத்திக் முன்னிலையில் வாதப் பிரதிவாதங்கள் செய்து தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கிபி. 847ல் கலிஃபா முத்தவக்கில் பதவிக்கு வந்தபின் கலிஃபாவுடன் ஹுனைன் மிக நெருக்கமாக இருந்தார், அரசு தலைமை மருத்துவராகவும் நியமிக்கப்பட்டார். ஒன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலும் ஒரு பீதி நிலவி வந்தது, அரசியலில் சூழ்ச்சிகளும் அரசர்களை நஞ்சு கொடுத்துக் கொல்வதும் நடைபெற்றன, எனவே அரசர்களை சுற்றி எப்போதும் வைத்தியர்கள் கூட்டம் இருந்தே வந்தது. பரிசோதனைக்குப் பிறகே அரசர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட காலமாக இருந்தது. இந்நிலையில் கலிஃபா முத்தவக்கில், தன்னுடைய எதிரிகளைக் கொல்வதற்கு நஞ்சு தயாரித்துக் கொடுத்தால் பெரும் வெகுமதிகள் தருவதாக ஹுனைனுக்கு ஆசைக் காட்டினார். ஹுனைன் தன் தார்மீகப் பொருப்பை உணர்த்தியபோது இன்னுமொரு பங்கு அதிகமாகத் தருவதாக சொன்னார். தன் நிலையில் உறுதியாக இருக்கவே மூன்று பங்கு அதிகமாக தருவதாகவும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரசரின் சொல்லை மீறியதற்காக சிறையில் அடைத்து மரண தண்டணை வழங்குவேன் என மிரட்டினார். ஆனால் ஹுனைன் எதற்கும் பயம்கொள்ளாமல் தான் இரு நிலைகளில் உறுதியாக இருப்பதாகவும் ஒன்று தனது மதம், இது நல்லது செய்யவே சொல்கிறது அது விரோதியாக இருந்தாலும் சரியே; மற்றொன்று தனது தொழில், மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்தவே ஒழிய நோய் உண்டாக்க அல்ல; மரணத்திலிருந்து காப்பாற்றவே ஒழிய மரணம் ஏற்படுத்த அல்ல, என் வாழ்நாள் முழுவதும் உழைப்பது, ஆராய்வது எல்லாம் ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே அல்லாது உயிரைப் பறிப்பதற்காக அல்ல;  தனது எதிரிக்கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற உறுதிமொழி எடுத்துத்தான் நாங்கள் வைத்தியனாகிறோம் என நீண்ட விளக்கம் கொடுத்தார். இதனைக் கேட்ட கலிஃபா அவரை எதுவும் செய்யாமல், செய்யமுடியாமல், செவதறியாமல் விட்டுவிட்டார். (அவரை ஓராண்டு சிறையில் அடைத்ததாகவும் பின் விடுவித்ததாகவும் சில ஆதாரங்கள் உள்ளன. ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது அனைத்து சொத்துக்கள் முதல் நூலகம் வரை முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்கின்றனர் வேறு சிலர்.)

பண்ணிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பொருளுக்கும் பதவிக்கும் ஆசைப் படாமல், செய்யும் தொழிலுக்கு களங்கம் விளைவிக்காமல், மதங்களைக் கடந்து, மனிதம் என்ற நிலையில் நின்று கலிஃபா/அரசர் என்றுகூட பாராமல் மன உறுதியுடன் நின்ற ஹுனைன் இப்னு இஸ்ஹாக் எங்கே..? இன்று பணத்திற்காகவே..... என்ற நிலையில் இருக்கும் சில டாக்டர்கள் எங்கே...? ஹிப்பொக்ரேட்டிக் உறுதிமொழி  வெறும் சொல்லாடல்தானா...?

இறுதி காலம்

ஹுனைனுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் தாவுத் மற்றொருவர் இஸ்ஹாக். அவர்கள் இருவருமே மருத்துவர்களாக இருந்தனர், பின் தந்தை வழியில்
மொழிபெயர்ப்பும் செய்தனர். பெரும்பாலும் கிரேக்க தத்துவங்களையே செய்தனர் என்கிறார் ரோஜர் பியர்ஸ்.  ”அல் மஸாயில் ஃபில் அய்ன்” என்ற நூலை தன் இரு மகன்களுக்காக எழுதினார் என மேலும் குறிப்பிடுகிறார். ஆனால் இஸ்ஹாக் அறியப்படுவதுபோல் தாவுத் அறியப்படவில்லை. 
இவர் தனது தினசரி வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட நெறியில் அமைத்திருந்தார். தன் வேலைகள் முடிந்ததும் தினமும் குளிக்கச் செல்வார், யார் துணையுமின்றி தனக்குத்தானே அள்ளி ஊத்தி குளிப்பார், பின் இரவு உடுப்பை அணிந்து ஒரு பிஸ்கட்டுடன் ஒரு கப் ஒயின் அருந்திவிட்டு படுக்கைக்குச் செல்வார்; சில வேளைகளில் அப்படியே தூங்கிடுவார், வியர்த்தால் எழுந்து அகில் போன்றவற்றை எரித்து வாசனைப் புகை பரப்புவார், பின் குழம்பு(gravy)டன் கூடிய கொழுப்புள்ள கோழிக்குஞ்சு (pullet) கறியும் ரொட்டியும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வார். எழுந்தவுடன் நான்கு கோப்பை ஒயினும்(old wine) விருப்பமான பழமும் சாப்பிடுவார், அதுவும் சிரியன் ஆப்பிளும் மாதுளையும் விருப்பமாக சாப்பிடுவார். இப்பழக்கம் அவருடைய மரணம் வரை நீடித்தது. 1-12- 873, செவ்வாய் அன்று தன்னுடைய 64ம் வயதில் இறையடி சேர்ந்தார்.

மொழிபெயர்ப்பு என்ற பெயரில் மதிப்பிடமுடியாத பொக்கிஷத்தை மட்டும் நம்மிடம் விட்டுச்செல்லவில்லை நெறிமுறையுள்ள பண்பையும் வாழ்க்கைத் தத்துவத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அப்பாஸியர் காலத்தில் ஏற்பட்ட அறிவுப் புரட்சி ஸ்பெயின், சிரியா மூலமாக மத்தியகால ஐரோப்பிய வளர்ச்சிக்கு வித்திட்டது.

Sources:

http://www.enotes.com/topic/Hunayn_ibn_Ishaq
http://en.wikipedia.org/wiki/Hunayn_ibn_Ishaq
http://www.muslimphilosophy.com/ip/bio-hi.htm
http://www.roger-pearse.com/weblog/?p=6423
http://www.webgaza.net/scientists-scholars/Ishaq.htm
http://www.ishim.net/ishimj/3/09.pdf
http://islamsci.mcgill.ca/RASI/BEA/Ishaq_ibn_Hunayn_BEA.htm
http://books.google.ae/books?pg=PA478&dq=hunain%20ibn%20ishak&ei=xJeATp2lEs3E4gS3rKHSDg&ct=result&id=a69mAAAAMAAJ&hl=en&output=text
http://www.drshukri.net/essays/?ID=53

Friday, March 22, 2013

வேண்டுகோள்........!

உங்கள் விருப்பத்துக்கு ஒரு வேண்டுகோள்............!

இப் பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்ற பீடிகையோடு வேண்டுகோள் ஒன்றை முன் வைக்க விரும்புகிறேன்.

இப்பொதெல்லாம் இஸ்லாமியப் பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகம் வந்துள்ளது என சொல்லலாம். காரணம் அடுப்படியை விட்டு வெளியே வரத் தொடங்கிவிட்டார்கள். இது நல்ல விசயம் என பெருமையாகச் சொல்லலாம்.
நமது இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறவேண்டும் என்ற காரணத்தால் 'ஆங்கிலக் கல்வி ஹராம்' என்று ஃபத்துவா கொடுத்தார்கள். அதன் விளைவு இஸ்லாமிய சமுதாயம் நூறு வருடங்கள் பின் தங்கிவிட்டது என்று கல்வியாளர்களே இன்று உணர்கிறார்கள். இது உணர்வோடு நின்றுவிடவில்லை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில் கல்வியின் அவசியத்தை தெளிவாகப் புரிந்துக்கொண்டார்கள். இதன் விளைவு பெண்கள் பட்டப் படிப்பு வரை செல்லத் தொடங்கிவிட்டார்கள்.

கல்வியில் ஆர்வம் இருப்பதுபோல் இறைவணக்கத்திலும் ஆர்வம் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. அதற்காக முன்பு இல்லாமலிருந்தது என கருதவேண்டாம். முன்பும் இருந்தது, அதில் ஒன்றும் குறைவு ஏற்படவில்லை. முன்பு தங்கள் தங்கள் வீட்டிலேயே தொழுது வந்தார்கள். பள்ளிக்கு வருவதில்லை. காரணம் பெண்கள் தொழுவதற்கென்று பிரத்தியேக வசதிகள் கிடையாது. ஆனால் இன்று அவர்களுக்கென்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அந்தவகையில் எனது ஊரான மஞ்சக்கொல்லையிலும் வசதி செய்துகொடுப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். முன்பு திராவிஹ், மற்றும் இரு பெருநாள் தொழுகைகளுக்கு மட்டும் பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கினோம், இடவசதி குறைவானதால் ஜும்ஆ தொழுகைக்கு இடவசதி ஏற்படுத்த முடியவில்லை. தவிர தொழவரும் பெண்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள். இடம் போதவில்லை வரும் நோன்புக்கு அவர்களுக்கு போதுமான வசதி செய்து கொடுப்பது மிக சிரமமான காரியம்.
எனவே இப்போதிருக்கும் பள்ளியின் மேல்தளம் மொட்டையாக இருப்பதால் அதை கட்டிடமாகக் கட்டி நிரந்திரமாக பெண்கள் தொழுவதற்கு வசதி செய்ய முடிவெடுத்து அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். இன்ஷா அல்லாஹ் வரும் நோன்புக்கு முந்தியே முடித்துவிடவேண்டும் என்ற திட்டத்தில் பணிகள் முடுக்குவிடப்பட்டிருக்கிறது.
திட்ட மதிப்பீடு பத்து முதல் பதினைந்து லட்சம். கையிலிருப்பது 25% பணம் மட்டுமே. மீதம் உங்களைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இதன் கீழே ஜமாஅத்தின் வேண்டுகோளையும் இணைத்துள்ளேன். உங்களின் பொருளாதார உதவிகளை நேரடியாக அனுப்பிவைக்க வேண்டிக்கொள்கிறேன்.
யார் பள்ளிவாசல் கட்ட உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் மாளிகையை கட்டிவைப்பான், கோட்டைக் கொத்தளத்தைக் கொடுப்பான் என பெருமானார் சொல்லியிருக்கிறார்கள், இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் என்றெல்லாம் சொல்லமாட்டேன். எனக்கு என்ன கிடைக்கும் என்று தெரியாமலிருக்கும்போது நான் எப்படி மற்றவர்களுக்கு உத்திரவாதம் கொடுக்கமுடியும்? நான் யார் சொல்வதற்கு? தவிர வெகுமதி கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் அவன் விருப்பம். ஏன் எது என்று யாரும் கேட்கமுடியாது. எங்களிடம் போதிய வசதி இல்லை உங்களிடம் எதிர்பாக்கிறோம், நிச்சயமாக நீங்கள் உதவுவீர்கள் என நம்புகிறோம்//நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் இதனை உங்கள் முன் வைக்கிறேன்.