மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்
திருமதி ஆஸ்ரா நொமானி அவர்கள் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு எழுதியதை தமிழாக்கம் செய்தமைக்கும் நிகழும் மார்ச் திங்கள் 18 நாள் நடக்கவிருக்கும் முஸ்லிம் பெண்கள் தலமையில் நடக்கவுள்ள தொழுகை செய்தியையும் திண்ணையின் மூலம் வெளியிட்ட திரு ஆசாரகீனன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்களை ஓரங்கட்டும் போக்கையும், ஆணாதிக்கத்தன்மையையும், வஹாபியிஸ அடிப்படை வாதத்தின் பாதிப்பையும் எதிர்த்து புரட்சி செய்துக்கொண்டிருக்கும் திருமதி ஆஸரா நொமானி பங்கேற்கும் 16 மற்றும் 18 தேதி நிகழ்ச்சிகளை வரவேற்காமல் இருக்கமுடியாது.
எத்தனை காலத்திற்கு ஆண்கள் பின்னால் தனி இடத்தில் நின்று தொழுவது? நாங்கள் என்ன அடிமைகளா? இல்லை பிள்ளை பெறும் எந்திரங்களா? போதும் பதிநான்கு நூற்றாண்டுகள் பட்ட அவதி. எங்களுக்கு எல்லா தகுதிகளும் இருக்கின்றன. இனி நாங்கள் முன் நின்று தொழுகை நடத்துவோம், எங்களுக்குப் பின்னால் ஆண்கள் நிற்கட்டும் என வீறுகொண்டு வேங்கை என சீறி வரும் மாதர்குல மாணிக்கங்களை வருக! வருக!! வரவேற்போம்.
நடக்கவிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின்மூலம் உலக இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படப்போவதை நினைக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. மகிழ்ச்சியில் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன.
அதற்குமுன் சில வார்த்தைகள்....
எந்த ஒரு காரியத்தையும் சொல்வது சுலபம். அதை செய்யும்போதுதான் அதன் தன்மை, இடர்பாடு, பொருப்பு, சிரமம், பலன்கள் புரியும். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் எல்லோராலும் செய்ய முடியாது. அதற்கென்று சில தகுதியும் வலிமையும் வேண்டும். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணிற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதன் அடிப்படையில் பெண்களுக்கு இஸ்லாத்தில் சில காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 'இமாமத்' என்று அழைக்கப்படும் முன் நின்று தொழ வைப்பதுவும் ஒன்று.
ஆணும் பெண்ணும் ஐந்து நேரம் தொழவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை, ஒரு நேர தொழுகையை விட நேர்ந்தால் அடுத்த நேர தொழுகையின்போது விட்டத்தொழுகையை நிறைவேற்றவேண்டும் என்பது சட்டம். ஆனால் உபாதையுள்ள அந்த ஆறு நாட்களிலும், பிரசவ காலங்களிலும் விடுபடும் தொழுகையை பின்பு நிறைவேற்றவேண்டும் என்ற சட்டம் பெண்களுக்கு இல்லை. இத்தகைய இயற்கை அமைப்பு பெண்களுக்கு அமைந்திருப்பதாலும் இமாமத் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் மட்டும்தானா? மற்ற மதங்களில் இல்லையா....?
இஸ்லாத்தில் மட்டும் இந்த தடையா? மற்ற மதங்களில்... ஏன் இந்து மதத்தில் அர்ச்சகர்களாகவோ பூசாரிகளாகவோ பெண்கள் எந்த கோவிலிலாவது இருக்கிறார்களா? ஏன், கற்பகிரஹத்துக்குள் பெண்கள் செல்ல முடியுமா? அங்கு செல்ல அனுமதி கிடையாதே! பெண் தெய்வமாகிய மீனாட்சி அம்மனாக இருந்தாலும் சரி அல்லது மாரியம்மனாக இருந்தாலும் சரி அபிஷேகம் செய்யவும் அலங்காரம் செய்யவும் ஆண்களுக்கே அனுமதி உண்டு. பெண் தெய்வம், நாங்கள்தான் செய்வோம் என்று எந்த பெண்ணும் குரல் எழுப்ப முடியாது.
இந்து மதத்தில் இப்படி என்றால் கிருஸ்துவ மதத்தில் ஒரு பெண் பாதிரியாரையோ, ஒரு பெண் பிஷப்பையோ காட்டமுடியுமா? அது எவாஞ்சலிக்களாகட்டும் பெந்தகொஸ்தேயாகட்டும் அல்லது மார்த்தோமாவாகட்டும், ஜாக்கோபைட்டாகட்டும் அல்லது ரோமன் கத்தோலிக்காகட்டும் சிரியன் கத்தோலிக்காகட்டும் எந்த பிரிவிலாவது காட்டமுடியுமா?
அப்படியானால் இந்து மதத்திலும் கிருஸ்துவ மதத்திலும் பால் வேற்றுமை காட்டப்படுகிறதா? இல்லை பெண்கள் அடக்கியாளப்பட்டு ஆணாதிக்கம் ஓங்கி நிற்கிறதா? இல்லை பெண்கள் அடிமைப் படுத்தப்படுகிறார்களா? இல்லையில்லை, அங்கேயெல்லாம் கிடையாது இஸ்லாத்தில் மட்டும்தான் பெண்கள் வேற்றுமைப் படுத்தப்படுகிறார்கள்.
அறிவின் ஆணவம் ஆஸ்ரா நொமானியின் கண்ணை மறைத்திருக்கிறது, பட்ட பிறகுதான் ஞானம் பிறக்கும். யாராவது எங்கேயாவது இஸ்லாத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் போதும் திரு. ஆசாரகீனனுக்கு அல்வா தின்பதுபோலாகிவிடும். உடனே வஹாபியையும் இடது சாரியையும் கூடவே மவுண்ட் ரோடு மா(ஒ)வையும் மென்று துப்புவது பழக்கமாகிவிட்டது. இதில் அவருக்கு சந்தோஷம் இருக்குமென்றால் அதை கெடுக்க நான் விரும்பவில்லை. நன்றாகவே மென்று துப்பட்டும். இதிலாவது அவரது மனம் அமைதி பெறட்டும், வாழ்த்துக்கள்!
இவண்,
ஹமீது ஜாஃபர்.
Friday March 11, 2005 திண்ணை
Tuesday, September 1, 2009
அஸ்ரா நொமானி
அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை
ஹமீது ஜாஃபர்
இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார். இது மில்லினியத்தின் புரட்சி என்று சொன்னால் தகும். இந்த செய்தி இங்குள்ள பத்திரிக்கைகளிலும் வந்தன. இதில் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ திரு ஆசாரகீனனுக்கு மெத்த மகிழ்ச்சியை தந்திருக்கும். காரணம் எந்த பலனையும் எதிர்பாராமல் நியுயார்க் நகர சுற்றுவட்டார தமிழர்களை சாதிமத பேதமின்றி வருகை புரிந்து ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்தவராயிற்றே, நல்லவேலை மவுண்ட் ரோடு மா(ஓ) அருகில் இல்லை. இருந்திருந்தால் அவருக்கு ஷ்பெஷல் அழைப்பு விடுத்திருப்பார்.
இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துக்கொண்டுதானிருக்கின்றன. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகள் பழக்கமுள்ளது. தன்னை ஒரு நபியாக பிரகடனப்படுத்திக்கொண்ட மிர்ஜா குலாம் முஸ்தபா காதியானி ஒரு கூட்டத்தையே தன்பக்கம் இழுத்துவைத்திருந்தார். அவர்களுக்காக ரகசியமாக கஃபாவையும் (மக்காவிலுள்ள இறை ஆலையம்), சொர்க்க, நரகத்தையும் உருவாக்கி அதன் திறப்புவிழா தினத்தன்று டாய்லட்டில் விழுந்து மூச்சைவிட்டார். பாவம்! அவர் உருவாக்கியதை திறக்கக்கூடமுடியவில்ல, அத்துடன் அந்த சகாப்தம் முடிந்தது.
தமிழகத்தில், தனது நாவன்மையாலும் எழுத்தாலும் ஒரு பகுதி மக்களை தன்பக்கத்தில் வைத்திருந்து இஸ்லாத்திற்குள் மாயயை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியவர் பா. தாவுத் ஷா. அவருடைய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
மொகலாய மன்னர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றவராக வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்படும் பேரரசர் அக்பர், தான் கொண்டுவந்த 'தீனே இலாஹி' யில் அவருடன் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். அதுவும் அவருடன் அழிந்தது.
இப்படி வரலாற்றில் பலபேர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களைப் போல்தான் அவர்கள் செய்த சாதனைகள். அதனால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யார்யாரோ என்னென்னவோ செய்துக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் என்னவோ தெரியவில்ல அது தனக்குத் தானாக வளர்ந்துகொண்டே போகிறது. 1934 முதல் 1984 வரையிலான ஐம்பாதாண்டு கால கணக்குப்படி இஸ்லாம் 235 விழுக்காடு வளர்ந்திருப்பதாக Keith W. Stump என்பவர் கூறுகிறார்.
இறைவனாலும் இறைதூதராலும் வகுக்கப்பட்ட சட்டத்தை மாற்றவோ மீறவோ எவருக்கும் உரிமை கிடையாது. யுக முடிவு வரை ஒரே சட்டம் தான், அதைதான் பின்பற்றியாகவேண்டும். அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று தனக்குத்தானாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதனை மீறும்போது தட்டி கொடுக்கமாட்டார்கள். உண்மையை உணர்த்த தட்டிக்கேட்பார்கள். இதற்கு அடிப்படை வாதம் என்று சொல்வது அறியாமையின் முத்திரை. இப்படி மீறி நடந்து சாதனைப் படைத்தால் அது அவர்களைப் பொருத்தவரை வெற்றிதான். அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்குமா என்பதுதான் கேள்விகுறி!
இது ஒருபக்கம் இருந்தலும் தாம் நினைத்ததை சாதித்துவிட்டோம், சாதனைப் படைத்துவிட்டோம் என்ற வெற்றி பெருமிதத்தில் நீந்தி திளைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போது மூழ்குவார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியாது. இத்தகைய அறிவிலிகளுக்கு வேதனைகள் வரும்போது காரணம் தெரியாமல் உள்ளுக்குள் ஒப்பாரி வைப்பார்களே தவிர தன்வினைதான் காரணம் என்பது தெரியாது. வரம்பு மீறும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனசாட்சி சமயம் பார்த்து நிதானமாக கொல்ல ஆரம்பிக்கும். இது இயற்கை நியதி. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது.
எனவே அஸ்ரா நொமானியாக இருந்தாலும் சரி, ஆமினா வதூதாக இருந்தாலும் சரி, இர்ஷத் மன்ஜியாக இருந்தாலும் சரி, இல்லை Thank God I am an atheist என்று சொல்பவராக இருந்தாலும் சரி அவர்களின் விதி அவர்கள் கைகளிலேயே உள்ளது., சமுதாயம் அதற்கு பொருப்பல்ல. 'What they are today in the result of what they were yesterday'.
---o0o---
Friday April 8, 2005 திண்ணை
ஹமீது ஜாஃபர்
இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார். இது மில்லினியத்தின் புரட்சி என்று சொன்னால் தகும். இந்த செய்தி இங்குள்ள பத்திரிக்கைகளிலும் வந்தன. இதில் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ திரு ஆசாரகீனனுக்கு மெத்த மகிழ்ச்சியை தந்திருக்கும். காரணம் எந்த பலனையும் எதிர்பாராமல் நியுயார்க் நகர சுற்றுவட்டார தமிழர்களை சாதிமத பேதமின்றி வருகை புரிந்து ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்தவராயிற்றே, நல்லவேலை மவுண்ட் ரோடு மா(ஓ) அருகில் இல்லை. இருந்திருந்தால் அவருக்கு ஷ்பெஷல் அழைப்பு விடுத்திருப்பார்.
இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துக்கொண்டுதானிருக்கின்றன. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகள் பழக்கமுள்ளது. தன்னை ஒரு நபியாக பிரகடனப்படுத்திக்கொண்ட மிர்ஜா குலாம் முஸ்தபா காதியானி ஒரு கூட்டத்தையே தன்பக்கம் இழுத்துவைத்திருந்தார். அவர்களுக்காக ரகசியமாக கஃபாவையும் (மக்காவிலுள்ள இறை ஆலையம்), சொர்க்க, நரகத்தையும் உருவாக்கி அதன் திறப்புவிழா தினத்தன்று டாய்லட்டில் விழுந்து மூச்சைவிட்டார். பாவம்! அவர் உருவாக்கியதை திறக்கக்கூடமுடியவில்ல, அத்துடன் அந்த சகாப்தம் முடிந்தது.
தமிழகத்தில், தனது நாவன்மையாலும் எழுத்தாலும் ஒரு பகுதி மக்களை தன்பக்கத்தில் வைத்திருந்து இஸ்லாத்திற்குள் மாயயை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியவர் பா. தாவுத் ஷா. அவருடைய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
மொகலாய மன்னர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றவராக வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்படும் பேரரசர் அக்பர், தான் கொண்டுவந்த 'தீனே இலாஹி' யில் அவருடன் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். அதுவும் அவருடன் அழிந்தது.
இப்படி வரலாற்றில் பலபேர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களைப் போல்தான் அவர்கள் செய்த சாதனைகள். அதனால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யார்யாரோ என்னென்னவோ செய்துக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் என்னவோ தெரியவில்ல அது தனக்குத் தானாக வளர்ந்துகொண்டே போகிறது. 1934 முதல் 1984 வரையிலான ஐம்பாதாண்டு கால கணக்குப்படி இஸ்லாம் 235 விழுக்காடு வளர்ந்திருப்பதாக Keith W. Stump என்பவர் கூறுகிறார்.
இறைவனாலும் இறைதூதராலும் வகுக்கப்பட்ட சட்டத்தை மாற்றவோ மீறவோ எவருக்கும் உரிமை கிடையாது. யுக முடிவு வரை ஒரே சட்டம் தான், அதைதான் பின்பற்றியாகவேண்டும். அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று தனக்குத்தானாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதனை மீறும்போது தட்டி கொடுக்கமாட்டார்கள். உண்மையை உணர்த்த தட்டிக்கேட்பார்கள். இதற்கு அடிப்படை வாதம் என்று சொல்வது அறியாமையின் முத்திரை. இப்படி மீறி நடந்து சாதனைப் படைத்தால் அது அவர்களைப் பொருத்தவரை வெற்றிதான். அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்குமா என்பதுதான் கேள்விகுறி!
இது ஒருபக்கம் இருந்தலும் தாம் நினைத்ததை சாதித்துவிட்டோம், சாதனைப் படைத்துவிட்டோம் என்ற வெற்றி பெருமிதத்தில் நீந்தி திளைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போது மூழ்குவார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியாது. இத்தகைய அறிவிலிகளுக்கு வேதனைகள் வரும்போது காரணம் தெரியாமல் உள்ளுக்குள் ஒப்பாரி வைப்பார்களே தவிர தன்வினைதான் காரணம் என்பது தெரியாது. வரம்பு மீறும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனசாட்சி சமயம் பார்த்து நிதானமாக கொல்ல ஆரம்பிக்கும். இது இயற்கை நியதி. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது.
எனவே அஸ்ரா நொமானியாக இருந்தாலும் சரி, ஆமினா வதூதாக இருந்தாலும் சரி, இர்ஷத் மன்ஜியாக இருந்தாலும் சரி, இல்லை Thank God I am an atheist என்று சொல்பவராக இருந்தாலும் சரி அவர்களின் விதி அவர்கள் கைகளிலேயே உள்ளது., சமுதாயம் அதற்கு பொருப்பல்ல. 'What they are today in the result of what they were yesterday'.
---o0o---
Friday April 8, 2005 திண்ணை
Subscribe to:
Posts (Atom)