கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.
ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.
ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை)
தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.
அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும்.
அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள்.
அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.
பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)
குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம்.
தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது.
இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.
அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.
மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று.
குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது.
ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும்.
***
நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி
***
சுட்டி :
ஈ.எம். ஹனிபா அவர்களின் 'ஹஜ்ஜுப் பெருநாள்' (MP3)
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
Sunday, November 22, 2009
Tuesday, September 1, 2009
வஹி - ஒரு விளக்கம்
ஹமீது ஜா·பர்
கடந்த அக்டோபர் திங்கள் 12 தேதி திண்ணையில் திரு H.G.ரசூல் எழுதிய “திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரை, மறு வாரம் நண்பர் இபுனு பஷீரின் மறுப்பும் அதை தொடர்ந்து சென்ற வாரத்திற்கு முதல் வாரம் H.G.ரசூலின் ·பத்வா, சென்ற வாரம்(3-11-2006) தன்னுடைய கூற்றை நிலை நாட்ட சில முயற்சிகளை எடுத்துக்கொண்டிருகிறார். கட்டுரை வரம்பு மீறி இருப்பதோடு மட்டுமல்லாமல் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது.
அவரது கட்டுரை இஸ்லாத்தைப் பற்றி ஓரளவு புரிந்துவைத்திருக்கிற முஸ்லிமுக்கும், புரியாமல் இருக்கிற மாற்று மதத்தவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறதே தவிர வேறு ஒரு காரியத்தையும் செய்யவில்லை.
முதலாவதாக, “புனிதம் சார்ந்த கற்பிதம்” என்றாலே குர்ஆன் உண்மையற்றது; கற்பனையானது என்று பொருள் கொள்ளவேண்டியுள்ளது. கற்பிதம் என்றால் கற்பனையானது; that which is fictitious என்று பொருள் (ஆதாரம்: கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி). எனவே குர்ஆன் கற்பனை நிறைந்த நூல் என்பது அவரது முடிவு.
இரண்டாவதாக, அதனை இரண்டுவிதமாகப் புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். ஒன்று, வரலாறு சார்ந்த அறிவு ரீதீயாக அணுகுதல், மற்றொன்று மூடநம்பிக்கையுடன் அணுகுவது.
அறிவு வரலாறு சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பது அவரைப் பொருத்தது என்றாலும் மூடநம்பிக்கை என்று எதை குறிப்பிடுகிறார் என்பதற்கு அவரே விளக்கம் அளிக்கவேண்டும். இஸ்லாத்தில் “ஆமன்துபில்லாஹி வ மலாயிகத்ஹி வ குத்துபிஹி......” -“அல்லாஹ்வையும், அவன் மலக்குகளையும், அவன் வேதங்களையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும், மரணத்திற்குப் பின்னால் எழுப்பப்படுவதையும் நம்புகிறேன்” என்று ஈமான் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் விதிக்கப்பட்டக் கடமை. அப்படி இல்லை என்றாலோ, அதில் சந்தேகம் வந்தாலோ அவன் முஸ்லிம் அல்ல என்பது சட்டம். யாரும் அல்லாஹ்வையும் பார்த்ததில்லை அவனது மலக்குகளையும் பார்த்ததில்லை. அப்படி இருந்தும் ஈமான் கொண்டிருப்பதால் அது மூடநம்பிக்கையா? ரசூல்ஜி, அல்லாஹ்வையும் மலக்குகளையும் பார்த்துதான் ஈமான் கொண்டுள்ளாரோ என்னவோ?
“பி ஃகைர ச்சுவன்ச்சரா, இத்திபா கர்னா,” இத்திபா கர்னா என்றால் பின் பற்றுவது என்று பொருள். ஏன் எவ்விடம் என்று கேட்காமல் பின்பற்றவேண்டும். தகுதியும் அறிவும் இருந்தான் காலம் உனக்கு விளக்கும், இதுதான் இஸ்லாம். ராணுவத்தில், அதிகாரிகளிடமிருந்து வரும் உத்திரவை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும். ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை; YES ஐ தவிர NO என்ற பேச்சுக்கே இடமில்லை. இதே கொள்கைத்தான் இஸ்லாத்தில் ஈமான் கொள்வதிலும்.
மூன்றாவதாக, நபிகள் நாயகத்திற்கு இறக்கப்பட்ட வசனங்கள் ஒலி வடிவானவை, பின்னரே எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது. ஒலிவடிவம் எழுத்துவடிவமாகும்போதே ஒரு மாற்றத்துக்குள்ளாகிறது என்பது முதல் உண்மை?
வஹி மட்டுமல்ல எந்த மொழியும் பேசும்போது ஒலிவடிவமும் படிப்பதற்காகப் பதியப்படும்போது எழுத்துவடிவமும் பெறுகிறது இதையெல்லாம் மாற்றம் என்றால் இதற்கு மேலாக கம்ப்யூட்டரிலும் டேப் ரிக்கார்டரிலும் பதியப்படும்போது மூன்றாவதாக ஒரு வடிவம் பெறுகிறதே அதை எந்த மாற்றத்தில் சேர்ப்பது?
இப்போது ஜபல் அல் நூர் என்று அழக்கப்படும் ஹிரா குகையில் தனிமையில் இறைவணக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முதல் வஹி வருகிறது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் தோன்றி 'இக்ரஉ' - 'ஓதுவீராக' என்று கூறுகிறார்கள். அதற்கு பெருமானார் அவர்கள் 'மா அன காரியீன்' - 'எனக்கு ஓத தெரியாதே' என்கிறார்கள். ஜிப்ரயீல்(அலை) பெருமானாரைக் கட்டி அணைத்து மீண்டும் ஓதுவீராக என்று சொன்னபோது மீண்டும் அதே பதிலையே சொல்கிறார்கள். இவ்வாறாக மூன்று முறை கட்டி அணைத்து ஓதுவீராக என்று சொன்னபோது ஓதினார்கள். 96 ம் அதிகாரத்திலுள்ள முதல் ஐந்து வசனங்கள் முதலாவதாக இறங்குகின்றன.
இங்கே ஒன்றை கவனிக்கவேண்டும். கட்டி அணைத்தார்கள் என்றால் ஜிப்ரயீல்(அலை) மனித உருவில் அல்லது அதற்கும் மேலான ஓர் உருவில் தோன்றி இருக்கவேண்டும். நிச்சயமாக ஒளி வடிவில் இருக்கமுடியாது. அடுத்து “இக்ரஉ” என்று சொல்லும்போது அங்கு எதோ ஒன்றில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் “குல்” (சொல்வீராக, கூறுவீராக) என்று சொல்லியிருந்தால் உள் மனத்திலிருந்து வந்தது என்று சொல்வதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அப்படி இல்லை. (நான் படிப்பறிவற்றவனாயிற்றே எனவே)எனக்கு ஓத தெரியாதே என்று கூறியுள்ளார்கள்.
எல்லோராலும் மதிக்கப்படுகிற “King James Version” ல் இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது: “AND THE BOOK IS DELIVERED TO HIM THAT IS NOT LEARNED, SAYING, READ THIS, I PRAY THEE: AND HE SAITH, I AM NOT LEARNED.” (THE HOLY BIBLE, Isaiah 29:12.)
புனிதக்குர்ஆன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வழியாக நபிகளாருக்கு இறக்கப்பட்டது என்பது முதல் கருத்துமட்டுமல்ல முடிவான கருத்தும்கூட, மாற்றமுடியாத ஒரே கருத்தும் ஆகும். அல்லாஹ்வின் அருளால் நபிகளாரின் உள்மனத்தூண்டல் மூலமாக வெளிப்பட்டது என்பதும், குர்ஆன் நபிகளாரின் வார்த்தை; ஹதீஸ் நபிகளார் பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி தொகுப்பு என்பதெல்லாம் கருத்தல்ல; பேத்தல்கள், பிதற்றல்கள். அது யார் சொன்னாலும் சரி! அவர் கொய்ன்ராட் எல்ஸ்ட்டாக இருந்தாலும் சரி, சர் சையத் அஹமத் கானாக இருந்தாலும் சரி, குலாம் அஹமது பர்வேஸாக இருந்தாலு சரி, H.G.ரசூலாக இருந்தாலும் சரி இல்லை அவரைச் சார்ந்தவர்கள் வேறு யாராக இருந்தாலும் சரி.
இவர்களெல்லாம் யார்? தன் வாழ்நாள் முழுவதையும் குர்ஆனுக்காக அர்பணித்து வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் அளித்த முபஸ்ஸிரீன்களா? அல்லது, இந்த உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லை, இறைஞானமாகிய இர்·பான் என்ற கடலில் மூழ்கி முத்துக் குளித்த இறைநேசர்களா? குர்ஆனுடைய அறிவைக்கொண்டு தங்களின் அறிவை உரசிப் பார்த்திருக்கவேண்டும். மாறாக தங்களுடைய உலகக் கல்வியைக்கொண்டு குர்ஆனை உரசிப் பார்த்திருக்கிறார்கள், நிச்சயமாக தெளிவைத் தராது.
இப்படிப்பட்டவர்கள் இந்த காலத்தில்மட்டுமல்ல பெருமானார் அவர்கள் காலத்திலும் இருந்தார்கள். இது கவிஞனுடைய கூற்று என்று கூறினர்; பேய் பிடித்தவனின் பிதற்றல் என்றனர்; கற்பனை வெளியீடு என்றெல்லாம் கூறினர்.
ஆகவே அல்லாஹ்வே இதற்கு பதில் சொல்கிறான். “மேலும், நம் அடியார் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) மீது நாம் இறக்கிவைத்த (வேதத்)தில் நீங்கள் சந்தேகத்திலிருந்தால், (அவர் தம் புறத்திலிருந்தே இதனைக் கூறுகிறார் என்பதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் நீங்கள் கொண்டுவாருங்கள்;” (அல் குர்ஆன் 2:23)
மேலும் கூறுகிறான், “(எதையும் தம்) மன விருப்பப்படி அவர் பேசுவதுமில்லை, அது (அவருக்கு) அறிவிக்கப்படும் வஹியே தவிர வேறில்லை, வல்லமை மிக்க(ஜிப்ரயீலான)வர் (அவருக்கு) அதனைக் கற்றுக்கொடுத்தார். (அவர்)உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில் நம் ரசூல் முன்)நேராக வந்து நின்றார்.” (அல் குர்ஆன் 53:2-6)
உள்மனத்தூண்டல் - இல்ஹாம்
“மன் அமில பிமா அலிம, அல்லமஹுல்லாஹு மாலம் யஃலம்” ஒருவன் உள்ள அறிவை வைத்துக்கொண்டு செயல்பட்டால் (அது தொடர்பான)புரியாத அறிவுகளையும் அல்லாஹ் சொல்லிக்கொடுப்பான். இது நபிகளாரின் வாக்கு.
ஒருவன் எதைப்பற்றி சிந்திக்கிறானோ, அந்த சிந்தனை அடிமனத்தில் இறங்கி அவனுக்குத் தேவையான செய்தியை தேடிக்கொண்டிருக்கும். எப்போது accurate thought ஏற்படுகிறதோ அப்போது divine force அங்கு கலக்கும், அப்படி கலந்த பிறகு எதற்கான விடையைத் தேடிக்கொண்டிருக்கிறானோ அந்த விடை அவன் உள்ளத்திலிருந்து வெளிவரும். இதற்கு “இல்ஹாம்” - இறை உதிப்பு என்று பெயர். அவன் எந்த மொழியில் சிந்திக்கிறானோ அந்த மொழியிலேயே வரும், மாறுபட்ட மொழியில் வராது. எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதைப் பற்றிய செய்தி வரும். அதற்கு மாறுபட்ட வேறொன்று வராது.
உதாரணமாக ஒருவன் ஒரு பொருளை எங்கோ வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறான், வைத்த இடத்தை மறந்துவிட்டான், பொருள் மிக முக்கியமானது. எங்கெல்லாமோ தேடுகிறான்; தேடாத இடமில்லை, அண்ணன் தம்பி என்று யார் யாரிடமோ கேட்கிறான்; கேட்காத ஆளுமில்லை. களைத்துப்போய் உட்கார்ந்துவிடுகிறான், கவனம் வேறு பக்கம் திரும்பிவிடுகிறது. சற்று நேரத்தில் திடீரென்று “இந்த இடத்தில் வைத்தோம்” என்று தோன்றுகிறது. அந்த ஒரு வினாடி, உலகமே திரண்டுவந்து “இங்கே வைக்கவில்லை” என்று சொன்னால் அவன் நம்பமாட்டான், அங்கேதான் வைத்தேன் என்று ஆணித்தரமாகச் சொல்லி அதை எடுத்துக்கொண்டும் வருவான். அந்த தோன்றலுக்கு; அந்த மன உதிப்புக்கு இல்ஹாம் என்று பெயர். நீங்கள் படித்தவர்களாயிற்றே என்ன சொல்வீர்கள்? STRIKE ஆனது என்பீர்கள்.
பெருமானார் அவர்கள் சிந்திச்சுக் கிந்திச்சுக்கொண்டல்லாம் இருந்ததில்லை. தங்களது தோழர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள், வஹி வரும், அப்போது அவர்களது நிலை மாறும் அதாவது அவர்களது நெற்றி வியர்க்கும், உடம்பு கனக்கும். அது அவர்களுக்கு மணி ஓசைப்போல் கேட்கும்; சில சமயங்களில் ஜிப்ரயீல்(அலை) தன் சுயத்தில் தோன்றுவார்கள்; சில நேரங்களில் மனித உருவில் பெரும்பாலும் திஹியத்துல் கல்பி என்ற நபித் தோழர் உருவத்தில் தோன்றி வஹியை அளிப்பார்கள். அதை அப்படியே மனதில் ஏற்றி தம் தோழர்களிடம் சொல்லி இந்த வசனத்தை இன்ன இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள் என்று வரிசைப் படுத்துவார்கள்.
ஒரு சமயம் பெருமானார் அவர்கள் ஒட்டகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது வஹி வந்தது. அப்போது ஒட்டகம் சுமையின் காரணமாக நடக்கமுடியாமல் அமர்ந்துவிட்டது. வஹி ஒரு பொருள் என்றால் அதன் கனத்தை ஒட்டகத்தினால் சுமக்க முடியவில்லை; வஹி ஒரு நெருப்பு என்றால் அதன் உஷ்ணத்தை பெருமானார் அவர்களால் மட்டுமே தாங்கிக் கொள்ளமுடிந்தது. உள்மனத்தூண்டல் என்றால் தூல உடம்பில் மாற்றங்கள் ஏற்படாது.
ஆரம்பத்தில் ஜிப்ரயீல்(அலை) வஹியைச் சொல்லச் சொல்ல கூடவே பெருமானார் அவர்களும் சொன்னதால் இறைவனிடமிருந்து எச்சரிக்கை வந்தது. “(நபியே! ஜிப்ரயீல் வஹியை ஓதிக்காட்டும்போது நீர் அவசரப்பட்டு, அதனை ஓத நீர் நாவை அசைக்காதீர். ஏனென்றால் அதனை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம் மீதுள்ள கடமையாகும். ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதனை நாம் (உமக்கு) ஓதிக் காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீர் பின் தொடர்ந்து ஓதும்.” (அல் குர்ஆன் 75:16-18)
உள்மனத்தூண்டல் என்றால் இப்படி நாவை சுழற்றவேண்டிய அவசியமில்லை.உள்மனம் வெளிமனத்துக்குச் சொல்கிறது. அதை வார்த்தைகளாக வடிப்பதில் என்ன சிரமம் ஏற்படப் போகிறது? ஒரு கட்டத்தில் சில கிறுஸ்துவர்கள் “அஸ்ஹாபுல் கஹ்ஃப்” - குகை மனிதர்களைப் பற்றி பெருமானார் அவர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் அப்போது அவர்களின் உள்மனம் உறங்கிக்கொண்டிருந்ததா?
நடந்தது இப்படி - பெருமானார் அவர்கள் தம் தோழர்களுடன் இருக்கும்போது சில கிறுஸ்துவர்கள் வந்தார்கள். 'முஹம்மதே! குகை மனிதர்களைப் பற்றி எங்கள் பைபிளிள் முன்னூறு வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறுகிறது. ஆனால் உங்கள் குர்ஆனில் முன்னூறு வருடமும் பின் ஒன்பது வருடமும் ஆக மூன்னூற்றி ஒன்பது வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறுகிறது. எங்களிடமுள்ள பைபிளும் அல்லாஹ் கொடுத்ததுதானே, எங்களிடம் ஒருமாதிரியும் உங்களிடம் ஒருமாதிரியும் அல்லாஹ் சொல்கிறானே! அது எப்படி சொல்லலாம்? அப்பொ நீங்கள் சொல்லும் இஸ்லாம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?' என்று கேட்க ரசூல்(ஸல்) அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை, பதில் தெரியவில்லை; வஹி வந்தால்தானே சொல்வார்கள், வஹி வரவில்லை. பக்கத்திலிருந்த ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிப் பெற்றுகொண்டு சொன்னார்கள்: 'சூரியனைப் படைத்தவனும் அவன்தான், சந்திரனைப் படைத்தவனும் அவன்தான்; உங்களுக்கு சூரியக் கணக்குப்படி சொன்னான், எங்களுக்கு சந்திரக் கணக்குப்படி சொன்னான் ஆண்டவன்' என்றார்கள்.
எந்த வகையில் பார்த்தாலும் குர்ஆன் அல்லாஹ்வின் அருள் நபிகளாருக்கு உள்மனத்தூண்டலால் வெளிப்பட்டது என்பதற்கு குர்ஆனில்கூட ஆதரமில்லை. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மூலமாக இறக்கப்பட்டது என்பதுதான் உறுதியானது; ஆதாரப்பூர்வமானது.
ஹதீஸ்
நான்காவதாக ஹதீஸ்கள் நபிமுகமது பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி வரலாற்று தொகுப்பாகும் என்ற மூன்றாவது கருத்து. இப்போது புத்தகங்களாக கிடைக்கின்றனவே அதற்குப் பொருந்தும்; “சஹி சித்த” என்ற ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் இருக்கின்றனவே அவற்றிற்குப் பொருந்தும். அதல்லாமல் வேறு எதற்கும் பொருந்தாது.
ஹதீஸ் என்றால் என்ன? நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னது; செய்தது; இது இரண்டிலுமில்லாமல் பிற நபித்தோழர்கள் செய்ததை அங்கிகரித்தது. இவை மூன்றும் நபி வழி ஆகும்.
ஏன் அவர்கள் காலத்தில் இவை எழுதப்படவில்லை? எழுதியிருந்தால் குர்ஆனும் ஹதீஸும் இரண்டரக் கலந்து குர்ஆன், தன் தனித்தன்மை இழந்துவிடும் என்பதால் “வஹியை எழுதிக்கொள்ளுங்கள், நான் சொல்வதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.” என்று பெருமானார் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். “லா தக்தூப அன்னி” என்னைத் தொட்டும் எதையும் எழுதாதீர்கள் என்று நவின்றுள்ளார்கள். ஆனால் குர்ஆன் நிறைவுபெற்ற பிறகு கடைசி காலத்தில் தாம் சொல்வதை குறித்துக்கொள்ள அனுமதித்துள்ளார்கள்.
திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதம்........? அடுத்துப் பார்ப்போம்.
அருஞ் சொற்கள்:
மலக்குகள்: வானவர்கள்; தேரர்கள்.
ஈமான்: உறுதியான விசுவாசம்; நம்பிக்கை (Dynamic Belief)
வஹி: இறை அறிவிப்பு
இல்ஹாம்: இறை உதிப்பு
ஜிப்ரயீல்: வானவத் தலைவர்
முபஸ்ஸிரீன்: குர்ஆன் விரிவுரையாளர்கள்
(ஸல்): ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
(சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)
(அலை): அலைஹிஸ்ஸலாம் (சாந்தி உண்டாவதாக)
(ரலி): ரலியல்லாஹு அன்ஹு (இறைவன் பொருத்திக்கொள்வானாக)
---o0o---
Friday November 10, 2006 திண்ணை
ஹமீது ஜா·பர்
கடந்த அக்டோபர் திங்கள் 12 தேதி திண்ணையில் திரு H.G.ரசூல் எழுதிய “திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரை, மறு வாரம் நண்பர் இபுனு பஷீரின் மறுப்பும் அதை தொடர்ந்து சென்ற வாரத்திற்கு முதல் வாரம் H.G.ரசூலின் ·பத்வா, சென்ற வாரம்(3-11-2006) தன்னுடைய கூற்றை நிலை நாட்ட சில முயற்சிகளை எடுத்துக்கொண்டிருகிறார். கட்டுரை வரம்பு மீறி இருப்பதோடு மட்டுமல்லாமல் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது.
அவரது கட்டுரை இஸ்லாத்தைப் பற்றி ஓரளவு புரிந்துவைத்திருக்கிற முஸ்லிமுக்கும், புரியாமல் இருக்கிற மாற்று மதத்தவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறதே தவிர வேறு ஒரு காரியத்தையும் செய்யவில்லை.
முதலாவதாக, “புனிதம் சார்ந்த கற்பிதம்” என்றாலே குர்ஆன் உண்மையற்றது; கற்பனையானது என்று பொருள் கொள்ளவேண்டியுள்ளது. கற்பிதம் என்றால் கற்பனையானது; that which is fictitious என்று பொருள் (ஆதாரம்: கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி). எனவே குர்ஆன் கற்பனை நிறைந்த நூல் என்பது அவரது முடிவு.
இரண்டாவதாக, அதனை இரண்டுவிதமாகப் புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். ஒன்று, வரலாறு சார்ந்த அறிவு ரீதீயாக அணுகுதல், மற்றொன்று மூடநம்பிக்கையுடன் அணுகுவது.
அறிவு வரலாறு சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பது அவரைப் பொருத்தது என்றாலும் மூடநம்பிக்கை என்று எதை குறிப்பிடுகிறார் என்பதற்கு அவரே விளக்கம் அளிக்கவேண்டும். இஸ்லாத்தில் “ஆமன்துபில்லாஹி வ மலாயிகத்ஹி வ குத்துபிஹி......” -“அல்லாஹ்வையும், அவன் மலக்குகளையும், அவன் வேதங்களையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும், மரணத்திற்குப் பின்னால் எழுப்பப்படுவதையும் நம்புகிறேன்” என்று ஈமான் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் விதிக்கப்பட்டக் கடமை. அப்படி இல்லை என்றாலோ, அதில் சந்தேகம் வந்தாலோ அவன் முஸ்லிம் அல்ல என்பது சட்டம். யாரும் அல்லாஹ்வையும் பார்த்ததில்லை அவனது மலக்குகளையும் பார்த்ததில்லை. அப்படி இருந்தும் ஈமான் கொண்டிருப்பதால் அது மூடநம்பிக்கையா? ரசூல்ஜி, அல்லாஹ்வையும் மலக்குகளையும் பார்த்துதான் ஈமான் கொண்டுள்ளாரோ என்னவோ?
“பி ஃகைர ச்சுவன்ச்சரா, இத்திபா கர்னா,” இத்திபா கர்னா என்றால் பின் பற்றுவது என்று பொருள். ஏன் எவ்விடம் என்று கேட்காமல் பின்பற்றவேண்டும். தகுதியும் அறிவும் இருந்தான் காலம் உனக்கு விளக்கும், இதுதான் இஸ்லாம். ராணுவத்தில், அதிகாரிகளிடமிருந்து வரும் உத்திரவை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும். ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை; YES ஐ தவிர NO என்ற பேச்சுக்கே இடமில்லை. இதே கொள்கைத்தான் இஸ்லாத்தில் ஈமான் கொள்வதிலும்.
மூன்றாவதாக, நபிகள் நாயகத்திற்கு இறக்கப்பட்ட வசனங்கள் ஒலி வடிவானவை, பின்னரே எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது. ஒலிவடிவம் எழுத்துவடிவமாகும்போதே ஒரு மாற்றத்துக்குள்ளாகிறது என்பது முதல் உண்மை?
வஹி மட்டுமல்ல எந்த மொழியும் பேசும்போது ஒலிவடிவமும் படிப்பதற்காகப் பதியப்படும்போது எழுத்துவடிவமும் பெறுகிறது இதையெல்லாம் மாற்றம் என்றால் இதற்கு மேலாக கம்ப்யூட்டரிலும் டேப் ரிக்கார்டரிலும் பதியப்படும்போது மூன்றாவதாக ஒரு வடிவம் பெறுகிறதே அதை எந்த மாற்றத்தில் சேர்ப்பது?
இப்போது ஜபல் அல் நூர் என்று அழக்கப்படும் ஹிரா குகையில் தனிமையில் இறைவணக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முதல் வஹி வருகிறது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் தோன்றி 'இக்ரஉ' - 'ஓதுவீராக' என்று கூறுகிறார்கள். அதற்கு பெருமானார் அவர்கள் 'மா அன காரியீன்' - 'எனக்கு ஓத தெரியாதே' என்கிறார்கள். ஜிப்ரயீல்(அலை) பெருமானாரைக் கட்டி அணைத்து மீண்டும் ஓதுவீராக என்று சொன்னபோது மீண்டும் அதே பதிலையே சொல்கிறார்கள். இவ்வாறாக மூன்று முறை கட்டி அணைத்து ஓதுவீராக என்று சொன்னபோது ஓதினார்கள். 96 ம் அதிகாரத்திலுள்ள முதல் ஐந்து வசனங்கள் முதலாவதாக இறங்குகின்றன.
இங்கே ஒன்றை கவனிக்கவேண்டும். கட்டி அணைத்தார்கள் என்றால் ஜிப்ரயீல்(அலை) மனித உருவில் அல்லது அதற்கும் மேலான ஓர் உருவில் தோன்றி இருக்கவேண்டும். நிச்சயமாக ஒளி வடிவில் இருக்கமுடியாது. அடுத்து “இக்ரஉ” என்று சொல்லும்போது அங்கு எதோ ஒன்றில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் “குல்” (சொல்வீராக, கூறுவீராக) என்று சொல்லியிருந்தால் உள் மனத்திலிருந்து வந்தது என்று சொல்வதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அப்படி இல்லை. (நான் படிப்பறிவற்றவனாயிற்றே எனவே)எனக்கு ஓத தெரியாதே என்று கூறியுள்ளார்கள்.
எல்லோராலும் மதிக்கப்படுகிற “King James Version” ல் இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது: “AND THE BOOK IS DELIVERED TO HIM THAT IS NOT LEARNED, SAYING, READ THIS, I PRAY THEE: AND HE SAITH, I AM NOT LEARNED.” (THE HOLY BIBLE, Isaiah 29:12.)
புனிதக்குர்ஆன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வழியாக நபிகளாருக்கு இறக்கப்பட்டது என்பது முதல் கருத்துமட்டுமல்ல முடிவான கருத்தும்கூட, மாற்றமுடியாத ஒரே கருத்தும் ஆகும். அல்லாஹ்வின் அருளால் நபிகளாரின் உள்மனத்தூண்டல் மூலமாக வெளிப்பட்டது என்பதும், குர்ஆன் நபிகளாரின் வார்த்தை; ஹதீஸ் நபிகளார் பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி தொகுப்பு என்பதெல்லாம் கருத்தல்ல; பேத்தல்கள், பிதற்றல்கள். அது யார் சொன்னாலும் சரி! அவர் கொய்ன்ராட் எல்ஸ்ட்டாக இருந்தாலும் சரி, சர் சையத் அஹமத் கானாக இருந்தாலும் சரி, குலாம் அஹமது பர்வேஸாக இருந்தாலு சரி, H.G.ரசூலாக இருந்தாலும் சரி இல்லை அவரைச் சார்ந்தவர்கள் வேறு யாராக இருந்தாலும் சரி.
இவர்களெல்லாம் யார்? தன் வாழ்நாள் முழுவதையும் குர்ஆனுக்காக அர்பணித்து வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் அளித்த முபஸ்ஸிரீன்களா? அல்லது, இந்த உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லை, இறைஞானமாகிய இர்·பான் என்ற கடலில் மூழ்கி முத்துக் குளித்த இறைநேசர்களா? குர்ஆனுடைய அறிவைக்கொண்டு தங்களின் அறிவை உரசிப் பார்த்திருக்கவேண்டும். மாறாக தங்களுடைய உலகக் கல்வியைக்கொண்டு குர்ஆனை உரசிப் பார்த்திருக்கிறார்கள், நிச்சயமாக தெளிவைத் தராது.
இப்படிப்பட்டவர்கள் இந்த காலத்தில்மட்டுமல்ல பெருமானார் அவர்கள் காலத்திலும் இருந்தார்கள். இது கவிஞனுடைய கூற்று என்று கூறினர்; பேய் பிடித்தவனின் பிதற்றல் என்றனர்; கற்பனை வெளியீடு என்றெல்லாம் கூறினர்.
ஆகவே அல்லாஹ்வே இதற்கு பதில் சொல்கிறான். “மேலும், நம் அடியார் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) மீது நாம் இறக்கிவைத்த (வேதத்)தில் நீங்கள் சந்தேகத்திலிருந்தால், (அவர் தம் புறத்திலிருந்தே இதனைக் கூறுகிறார் என்பதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் நீங்கள் கொண்டுவாருங்கள்;” (அல் குர்ஆன் 2:23)
மேலும் கூறுகிறான், “(எதையும் தம்) மன விருப்பப்படி அவர் பேசுவதுமில்லை, அது (அவருக்கு) அறிவிக்கப்படும் வஹியே தவிர வேறில்லை, வல்லமை மிக்க(ஜிப்ரயீலான)வர் (அவருக்கு) அதனைக் கற்றுக்கொடுத்தார். (அவர்)உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில் நம் ரசூல் முன்)நேராக வந்து நின்றார்.” (அல் குர்ஆன் 53:2-6)
உள்மனத்தூண்டல் - இல்ஹாம்
“மன் அமில பிமா அலிம, அல்லமஹுல்லாஹு மாலம் யஃலம்” ஒருவன் உள்ள அறிவை வைத்துக்கொண்டு செயல்பட்டால் (அது தொடர்பான)புரியாத அறிவுகளையும் அல்லாஹ் சொல்லிக்கொடுப்பான். இது நபிகளாரின் வாக்கு.
ஒருவன் எதைப்பற்றி சிந்திக்கிறானோ, அந்த சிந்தனை அடிமனத்தில் இறங்கி அவனுக்குத் தேவையான செய்தியை தேடிக்கொண்டிருக்கும். எப்போது accurate thought ஏற்படுகிறதோ அப்போது divine force அங்கு கலக்கும், அப்படி கலந்த பிறகு எதற்கான விடையைத் தேடிக்கொண்டிருக்கிறானோ அந்த விடை அவன் உள்ளத்திலிருந்து வெளிவரும். இதற்கு “இல்ஹாம்” - இறை உதிப்பு என்று பெயர். அவன் எந்த மொழியில் சிந்திக்கிறானோ அந்த மொழியிலேயே வரும், மாறுபட்ட மொழியில் வராது. எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதைப் பற்றிய செய்தி வரும். அதற்கு மாறுபட்ட வேறொன்று வராது.
உதாரணமாக ஒருவன் ஒரு பொருளை எங்கோ வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறான், வைத்த இடத்தை மறந்துவிட்டான், பொருள் மிக முக்கியமானது. எங்கெல்லாமோ தேடுகிறான்; தேடாத இடமில்லை, அண்ணன் தம்பி என்று யார் யாரிடமோ கேட்கிறான்; கேட்காத ஆளுமில்லை. களைத்துப்போய் உட்கார்ந்துவிடுகிறான், கவனம் வேறு பக்கம் திரும்பிவிடுகிறது. சற்று நேரத்தில் திடீரென்று “இந்த இடத்தில் வைத்தோம்” என்று தோன்றுகிறது. அந்த ஒரு வினாடி, உலகமே திரண்டுவந்து “இங்கே வைக்கவில்லை” என்று சொன்னால் அவன் நம்பமாட்டான், அங்கேதான் வைத்தேன் என்று ஆணித்தரமாகச் சொல்லி அதை எடுத்துக்கொண்டும் வருவான். அந்த தோன்றலுக்கு; அந்த மன உதிப்புக்கு இல்ஹாம் என்று பெயர். நீங்கள் படித்தவர்களாயிற்றே என்ன சொல்வீர்கள்? STRIKE ஆனது என்பீர்கள்.
பெருமானார் அவர்கள் சிந்திச்சுக் கிந்திச்சுக்கொண்டல்லாம் இருந்ததில்லை. தங்களது தோழர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள், வஹி வரும், அப்போது அவர்களது நிலை மாறும் அதாவது அவர்களது நெற்றி வியர்க்கும், உடம்பு கனக்கும். அது அவர்களுக்கு மணி ஓசைப்போல் கேட்கும்; சில சமயங்களில் ஜிப்ரயீல்(அலை) தன் சுயத்தில் தோன்றுவார்கள்; சில நேரங்களில் மனித உருவில் பெரும்பாலும் திஹியத்துல் கல்பி என்ற நபித் தோழர் உருவத்தில் தோன்றி வஹியை அளிப்பார்கள். அதை அப்படியே மனதில் ஏற்றி தம் தோழர்களிடம் சொல்லி இந்த வசனத்தை இன்ன இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள் என்று வரிசைப் படுத்துவார்கள்.
ஒரு சமயம் பெருமானார் அவர்கள் ஒட்டகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது வஹி வந்தது. அப்போது ஒட்டகம் சுமையின் காரணமாக நடக்கமுடியாமல் அமர்ந்துவிட்டது. வஹி ஒரு பொருள் என்றால் அதன் கனத்தை ஒட்டகத்தினால் சுமக்க முடியவில்லை; வஹி ஒரு நெருப்பு என்றால் அதன் உஷ்ணத்தை பெருமானார் அவர்களால் மட்டுமே தாங்கிக் கொள்ளமுடிந்தது. உள்மனத்தூண்டல் என்றால் தூல உடம்பில் மாற்றங்கள் ஏற்படாது.
ஆரம்பத்தில் ஜிப்ரயீல்(அலை) வஹியைச் சொல்லச் சொல்ல கூடவே பெருமானார் அவர்களும் சொன்னதால் இறைவனிடமிருந்து எச்சரிக்கை வந்தது. “(நபியே! ஜிப்ரயீல் வஹியை ஓதிக்காட்டும்போது நீர் அவசரப்பட்டு, அதனை ஓத நீர் நாவை அசைக்காதீர். ஏனென்றால் அதனை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம் மீதுள்ள கடமையாகும். ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதனை நாம் (உமக்கு) ஓதிக் காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீர் பின் தொடர்ந்து ஓதும்.” (அல் குர்ஆன் 75:16-18)
உள்மனத்தூண்டல் என்றால் இப்படி நாவை சுழற்றவேண்டிய அவசியமில்லை.உள்மனம் வெளிமனத்துக்குச் சொல்கிறது. அதை வார்த்தைகளாக வடிப்பதில் என்ன சிரமம் ஏற்படப் போகிறது? ஒரு கட்டத்தில் சில கிறுஸ்துவர்கள் “அஸ்ஹாபுல் கஹ்ஃப்” - குகை மனிதர்களைப் பற்றி பெருமானார் அவர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் அப்போது அவர்களின் உள்மனம் உறங்கிக்கொண்டிருந்ததா?
நடந்தது இப்படி - பெருமானார் அவர்கள் தம் தோழர்களுடன் இருக்கும்போது சில கிறுஸ்துவர்கள் வந்தார்கள். 'முஹம்மதே! குகை மனிதர்களைப் பற்றி எங்கள் பைபிளிள் முன்னூறு வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறுகிறது. ஆனால் உங்கள் குர்ஆனில் முன்னூறு வருடமும் பின் ஒன்பது வருடமும் ஆக மூன்னூற்றி ஒன்பது வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறுகிறது. எங்களிடமுள்ள பைபிளும் அல்லாஹ் கொடுத்ததுதானே, எங்களிடம் ஒருமாதிரியும் உங்களிடம் ஒருமாதிரியும் அல்லாஹ் சொல்கிறானே! அது எப்படி சொல்லலாம்? அப்பொ நீங்கள் சொல்லும் இஸ்லாம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?' என்று கேட்க ரசூல்(ஸல்) அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை, பதில் தெரியவில்லை; வஹி வந்தால்தானே சொல்வார்கள், வஹி வரவில்லை. பக்கத்திலிருந்த ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிப் பெற்றுகொண்டு சொன்னார்கள்: 'சூரியனைப் படைத்தவனும் அவன்தான், சந்திரனைப் படைத்தவனும் அவன்தான்; உங்களுக்கு சூரியக் கணக்குப்படி சொன்னான், எங்களுக்கு சந்திரக் கணக்குப்படி சொன்னான் ஆண்டவன்' என்றார்கள்.
எந்த வகையில் பார்த்தாலும் குர்ஆன் அல்லாஹ்வின் அருள் நபிகளாருக்கு உள்மனத்தூண்டலால் வெளிப்பட்டது என்பதற்கு குர்ஆனில்கூட ஆதரமில்லை. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மூலமாக இறக்கப்பட்டது என்பதுதான் உறுதியானது; ஆதாரப்பூர்வமானது.
ஹதீஸ்
நான்காவதாக ஹதீஸ்கள் நபிமுகமது பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி வரலாற்று தொகுப்பாகும் என்ற மூன்றாவது கருத்து. இப்போது புத்தகங்களாக கிடைக்கின்றனவே அதற்குப் பொருந்தும்; “சஹி சித்த” என்ற ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் இருக்கின்றனவே அவற்றிற்குப் பொருந்தும். அதல்லாமல் வேறு எதற்கும் பொருந்தாது.
ஹதீஸ் என்றால் என்ன? நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னது; செய்தது; இது இரண்டிலுமில்லாமல் பிற நபித்தோழர்கள் செய்ததை அங்கிகரித்தது. இவை மூன்றும் நபி வழி ஆகும்.
ஏன் அவர்கள் காலத்தில் இவை எழுதப்படவில்லை? எழுதியிருந்தால் குர்ஆனும் ஹதீஸும் இரண்டரக் கலந்து குர்ஆன், தன் தனித்தன்மை இழந்துவிடும் என்பதால் “வஹியை எழுதிக்கொள்ளுங்கள், நான் சொல்வதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.” என்று பெருமானார் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். “லா தக்தூப அன்னி” என்னைத் தொட்டும் எதையும் எழுதாதீர்கள் என்று நவின்றுள்ளார்கள். ஆனால் குர்ஆன் நிறைவுபெற்ற பிறகு கடைசி காலத்தில் தாம் சொல்வதை குறித்துக்கொள்ள அனுமதித்துள்ளார்கள்.
திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதம்........? அடுத்துப் பார்ப்போம்.
அருஞ் சொற்கள்:
மலக்குகள்: வானவர்கள்; தேரர்கள்.
ஈமான்: உறுதியான விசுவாசம்; நம்பிக்கை (Dynamic Belief)
வஹி: இறை அறிவிப்பு
இல்ஹாம்: இறை உதிப்பு
ஜிப்ரயீல்: வானவத் தலைவர்
முபஸ்ஸிரீன்: குர்ஆன் விரிவுரையாளர்கள்
(ஸல்): ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
(சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)
(அலை): அலைஹிஸ்ஸலாம் (சாந்தி உண்டாவதாக)
(ரலி): ரலியல்லாஹு அன்ஹு (இறைவன் பொருத்திக்கொள்வானாக)
---o0o---
Friday November 10, 2006 திண்ணை
தெளிவுபெறவேண்டும்
நேச குமார் தெளிவுபெறவேண்டும்
ஹமீத் ஜாஃபர்
'நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்ற அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள்' (அல் குர்ஆன்; 3:103)
யாரையும் மிரட்டவேண்டும் என்ற எண்ணம் நமக்கில்லை, மாறாக நாம் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும், சமத்துவமும் அமைதியும் தழைக்கவேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதுதான் இஸ்லாத்தின் குறிக்கோளுமாகும். நேசத்துடன் வரும் கரத்தை பாசமென்ற கயிற்றால் பிணைத்தால் எவராலும் பிரிக்கமுடியாது என்பதே அதன் பொருள். திரு நேச குமார் தவறாகப் புரிந்துக்கொண்டார்.
'சுனாமி' வந்தபிறகு மனித நேயத்தை முன்வைப்பதின் அவசியத்தை உணர்ந்துள்ள திரு நேச குமாரை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஆனால் அதன் அவசியமே இல்லை. மனிதநேயமும் சகோதரத்துவமும் எங்கும் போய்விடவில்லை முன்னால்தான் நின்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை மறைத்திருக்கும் திரையை கிழித்துவிட்டால் போதும். ஒற்றுமையும் மனிதநேயமும் காலாகாலமாக இருந்து வரும் ஒன்று. கும்பினிகள், தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற் காக செய்த சூழ்ச்சியில் அடிமைப் பட்டு, அதுவே உண்மை, அதுவே வரலாறு என்று நம்பிக்கொண்டு தன் வயிறு வளர்க்கும் ஒரு சில புல்லுருவிகளைக் கொண்ட அமைப்புக்களால் ஒட்டு மொத்த சமுதாயம் பாதிக்கப்பட்டு சகோதரத்துவத்தை சிறுகச்சிறுக இழந்துக்கொண்டிருக்கிறது என்பதை திரு நேச குமார் புரிந்துக்கொள்ளவேண்டும். 'மனிதர்கள் யாவரும் ஏக சகோதரர்களே எனும் தத்துவம் இஸ்லாத்தில் தேசிய, இன எல்லைகளைத் தாண்டி நிற்கும் ஓர் உயரிய கொள்கையாக இயங்குகிறது என்பதை நாம் மறுக்கவியலாது.' என்று நம் நாட்டின் இரண்டாம் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
நான், எனது சொந்த விமரிசனங்களையோ அல்லது குறைகளையோ இந்து மதத்தின்மீது வைக்கவில்லை, உங்களால் எழுதப்பட்ட புராணங்களில் ஒரு சில பகுதிகளை சுட்டிக் காட்டினேன். வள்ளலார் ஐயா குறிப்பிடுவதுபோல்'....பிண்ட லச்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மை அறியாது அப்படியே கண்ணைமூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஒரு வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை, அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை...' ((ஆதாரம்: சித்திவளாகப் பேருபதேசம்))
மெய்நிலை கண்ட ஞானிகள்:
வள்ளலார் ஐயா அவர்களை 'மெய்நிலை கண்ட ஞானி' என நான் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டதன் மூலம், இன்னும் நீங்கள் மதங்களை புரிந்துக் கொள்ளவே இல்லை என்பதை தெளிவாகக்காட்டியுள்ளீர்கள். ஐயா அவர்கள் மட்டுமல்ல ராமகிருஷ்ண பரமஹம்சரும், கருவூராரும், திருவாரூர் தட்சிணா மூர்த்தி சுவாமிகளும் மெய்நிலை கண்ட ஞானிகள்தான். இஸ்லாத்தைப் புரியாமலே இஸ்லாத்தைப் பற்றி அவதூராக எழுதும் அன்பரே! ஏக இறை கொள்கையை எவர் ஏற்றுகொண்டு அதன்படி நடக்கிறாரோ அவர் எங்கிருந்தாலும் விசுவாசிகள்(முஃமின்கள்)தான்.
'A Muslim, in the original meaning of the word, is someone who submits to the ONE AND ONLY GOD, regardless of whether he calls himself
a Jew, a Christian, or a Muslim.' - Religion on the Rise, by: Murad Wilfried Holfmann
'விசுவாசிகளாயினும் யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மையாக விசுவாசித்து, நற்கருமத்தைச் செய்தார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி அவர்கள் இறைவனிடத்தில்
நிச்சயமாக உண்டு. மேலும் அவர்களுக்கு எந்தவித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.' (அல் குர்ஆன் 2:62)
இங்கு முஸ்லிம் என்று கூறவில்லை, விசுவாசிகள் (முஃமின்கள்) என்று இறை ஆவேசம் [நேச குமார் அகராதிபடி] கூறுகிறது. அதாவது எவர் எப்படி தன் இறைவனை பகவான் என்றோ அல்லது கர்த்தர் என்றோ அல்லது அருட்பெரும் ஜோதி என்றோ அல்லது அல்லாஹ் என்றோ நினைத்து அதில் கிஞ்சிற்றும் மாறாமல் ஓர் இறைக் கொள்கையுடன் இருக்கிறாரோ அவருக்கு நற்கூலி உண்டு என்பதே இதன் பொருள். பெயர் மாறினாலும் பெயரிடப்பட்டப் பொருள் மாறாது.
இருண்ட கண்டத்தில் அன்பர் இருந்துக்கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை என்னவென்றே புரியாமல் எதையெதையோ திரித்துக்கொண்டிருக்கிறார். நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாத்திற்கு வெளியே இறைஞானிகள் இருக்க வாய்ப்பில்லை, மெய்நிலை காண வழியே இல்லை என்று இஸ்லாம் எங்கே சொல்லியிருக்கிறது ?
இஸ்லாத்தின் தோற்றம்:
இஸ்லாத்தை நபிகள் நாயகம் தோற்றுவிக்கவில்லை, எப்போது முதல் மனிதர் இவ்வுலகில் தோன்றினாரோ அப்போதே இஸ்லாமும் தோன்றிவிட்டது. மக்கள் பெருகப் பெருக இஸ்லாமியம் மறக்கப்பட்டு தான்தோன்றிதனமாக நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை நேர்வழிப்படுத்தவே அவ்வப்போது இறைதூதர்கள் தோன்றினார்கள்.
நபிகள் நாயகத்தால் தன் பெரிய தந்தையை கடைசி வரை திருத்த முடியவில்லை, தமது சொந்தக் கூட்டத்தாரை மாற்ற முடியவில்லை, மதினாக்காரர்களையே மாற்றமுடிந்தது, கடைசியில் வாளின் துணைகொண்டே குறைஷிகளை மனம் மாறவைக்க முடிந்தது என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள்.
நான், உங்களை நல்ல சிந்தனையாளர் என்று நினைத்திருந்தேன். இப்போது புரிகிறது தங்களுக்கு சிந்திக்கவும் தெரியவில்லை என்று. நோய் உள்ளவனுக்கு நோய் குணமாகவேண்டுமானால் மருத்துவர் கொடுக்கும் மருத்துவத்தையும் மருந்தையும் ஏற்றுகொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை வேண்டும். இதில் எதுவுமே இல்லையென்றால் நோய் குணமாகாது. சுருக்கமாகச் சொன்னால் வாதத்துக்கு மருந்து உண்டு குணப்படுத்திவிடலாம், பிடிவாதத்தை குணப்படுத்தமுடியாது என்று நான் சொல்லி நேசகுமார் தெரிந்துக்கொள்ளவேண்டிய நிலையிலில்லை என்று நினைக்கிறேன். இப்போது புரியும் ஏன் தன் பெரியதந்தையைத் திருத்தமுடியவில்லை என்று.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?:
இறை தூது வருவதற்குமுன்வரை 'அல் அமீன், அல் அமீன்' ('நேர்மையாளர்') என்று சொல்லிக்கொண்டிருந்த மக்கத்து குறைஷியர்கள் நுபுவத்து(இறைதூது) வந்தபின் நபிகளாரை ஏற்கமறுத்தனர் ஒரு சிலரைத்தவிர, ஆனால் மதினாவாசிகள் அவர்களை ஏற்று கொண்டனர். வாளின் துணைகொண்டு குறைஷிகளை மாற்ற முடிந்தது என்று யார் சொன்னார்கள்? ஐயா, நபிகளார் செய்த யுத்தங்கள் தற்காப்பு யுத்தங்களே என்று ஏற்கனவே சலாஹுதீன் அவர்கள் திண்ணையில் எழுதியிருந்தார்கள். இன்னும் மூன்றுகால் என்ற நிலையிலேயே இருக்கிறீர்கள். உங்களை ஒருவர் தாக்க வருகிறார், நீங்கள் என்ன சும்மாவா இருப்பீர்கள்? அவன் கை ஓங்குவதற்குமுன்பே உங்கள் கை ஓங்கிவிடுமில்லையா? அப்படி செய்தால் நீங்கள் செய்வது யுத்தமாகுமா?
நீங்கள் சொல்வதுபோல் யுத்த வசனங்களே குர்ஆனில் பெரும்பாலும் உள்ளன, நபிகள் நாயகம் யுத்த சிந்தனை உள்ளர்களாக இருந்தார், வாளினால்தான் இஸ்லாம் பரவியது என்று சொன்னால், இவர்கள் எதிரிகள் இருந்த இடத்திற்கு சென்று யுத்தம் செய்திருக்கவேண்டும். மாறாக எதிரிகளல்லவா இவர்கள் இடத்திற்கு வந்தனர். இவர்கள் சந்தித்த யுத்தங்களில் பிரசித்திவாய்ந்தது மூன்று யுத்தம். முதல் யுத்தமான பதுரு என்ற இடத்தில் நடந்த பதுருயுத்தம். (1) இது மக்காவுக்கு அருகில் இல்லை, மதினாவுக்கு அருகிலுள்ள இடம். (2) இவர்களின் படைபலம்: 313 வீரர்கள், 6 எஃகு கவசங்கள், 8 வாட்கள், 70 ஒட்டகங்கள், 5 குதிரைகள். (3) எதிரியின் படைபலம்: 1000 வீரர்கள், 700 ஒட்டகங்கள், 100 குதிரைகள், 600 கவசங்கள் மற்றும் ஆயுதங்கள், படையினருக்கு உற்சாகமூட்ட பாட்டுப்பாடும் பெண்கள் ((ஆதாரம்: மறுவிலா முழுமதி - ஜமால்)). இப்போது சொல்லுங்கள் யார் முதலில் வாளேந்தினார்கள், யாருக்கு வெற்றி கிடைத்தது ?
'THE MORE I STUDY THE MORE I DISCOVER THAT THE STRENGTH OF ISLAM DOES NOT LIE IN THE SWORD' - மஹாத்மா காந்தி யங் இந்தியாவில்
உம்ரா செய்ய நபிகள் கோமான் 1400 தோழர்களுடன் மக்கா வந்தபோது, அதை தடுத்த மக்கத்து குறைஷிகளுடன் ஹுதைபியா என்ற இடத்தில் தங்களுக்கு பாதகமான உடன்படிக்கையை செய்துக்கொண்டு உம்ரா செய்யாமல் திரும்பினார்களே! உங்கள் கூற்றுப்படி போர் குணம் கொண்டவராக இருந்தால் சண்டை செய்திருக்கலாமே!
இஸ்லாத்தை அரபு நாட்டிற்கப்பால் பரவச் செய்ய எண்ணிய நபிகளார் பெரும்படையை அனுப்பவில்லை. மாறாக ஐந்து பேர்களை (நபித்தோழர்கள்)தெரிவு செய்து ரோமானியப் பேரரசர் ஹெராக்ளியஸ், பாரசீக மாமன்னர் குஸ்ரு பர்வேஸ், அபிஸினிய மன்னர் நஜ்ஜாஷி, எகிப்திய மன்னர் முகெகிஸ், யெமன் நட்டரசன் ஆகியவர்களுக்கு ஐந்து கடிதங்களை அனுப்பிவைத்தார்கள். அதில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவில்லயானால் பெரும்போரை சந்திக்கவேண்டி வரும் என்று எழுதவில்லை. அவர்கள் எழுதியிருந்தது இதுதான்: 'ஹெராக்ளியஸ் பேரரசருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது எழுதியது, இஸ்லாத்தை ஏற்று ஈடேற்றம் பெறுங்கள் என்று தொடங்கி 'வேதத்தை உடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் (சம்மதமான) ஒரு மத்திய விஷயத்தின்பால் வருவீர்களாக! (அதாவது:) 'நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கோம். நம்மில் எவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் ஆண்டவனாக எடுத்துக்கொள்ளோம்' (விசுவாசிகளே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களை நோக்கி) 'நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்கள் என்று நீங்கள் சாட்சியங் கூறுவீர்களாக!' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.' என்ற அல் குர்ஆனின் 3 ம் அத்தியாத்தின் 64 வது வசனத்தையும் எழுதி அனுப்பியிருந்தார்கள். இந்த கடிதம் இன்றும் இஸ்தான்புல் டப்காபி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
நபிகளார் செய்தது மாற்றமல்ல சீர்திருத்தம்:
நபிகள் நாயகம் தொடர்ந்து தமது மார்க்கத்தில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியே வந்திருக்கிறார். வரலாற்றினூடே நபியவர்களைப் பார்க்கும்போது விஷமிட்டு கொலையுண்டிருக்காவிட்டால் அவர் காட்டிச் சென்ற இஸ்லாத்தில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், அதை அவரே செய்திருப்பார் என்று தோன்றுகிறது என்று உங்கள் அறிவில் தோன்றியதை காட்டியிருந்தீர்கள்.
இதிலிருந்து வரலாறும் தெரியவில்லை என்று தெரிகிறது. கைபரில் நபிகளாருக்கு யூதர்கள் அளித்த விருந்தில் ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால் ஒரு இறைச்சித் துண்டை வாயில் வைத்தவுடன் அருவருப்புடன் உடனே துப்பிவிட்டு, உணவில் விஷம் கலந்திருக்கிறது யாரும் உண்ணவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். ஆனால் பிஷர் இப்னு பராபின் மஃரூர் என்ற தோழர் மட்டும் அவர்கள் தடுக்குமுன்பே சிறிய துண்டை விழுங்கிவிட்டால் நொடிப்பொழுதில் இறந்துவிட்டார் ((ஆதாரம்: மறுவிலா முழுமதி - ஜமால்))
நபிகள் நாயகம் ஒருபோதும் மார்க்கத்தில் மாற்றம் செய்யவில்லை, சீர்திருத்தமே செய்துவந்துள்ளார்கள். ஆரம்ப காலத்தில் இருந்துவந்த மது அருந்துவது போன்ற சில செயல்களை சிறிது சிறிதாக தடை செய்து முற்றிலுமாக ஒழித்தார்கள். தன் மறைவுக்கு பிறகு மார்க்கம் நலிந்துவிடும் என்று தெரிந்துதான் 'ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்க ஒரு சீர்திருத்தவாதி(முஜத்திது-Mujaddid) வருவார். ' [நூல்: அபுதாவுத்] என்று அறிவிப்பு செய்துள்ளார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அரேபியாவில் இப்னு தைமிய்யா, அபு ஹஸன் ஷாதுலி ஈராக்கில் முஹைய்யிதீன் அப்துல் காதர் ஜெய்லானி, அபு ஹாமித் அல் கஜ்ஜாலி, பாரசீகத்தில் மொலானா ரூமி, அபு பயாசித் புஸ்தாமி, மலாயாவில் துவான் பட்ரா கரவான், இந்தியாவில் காஜா முயினுதீன் சிஷ்தி, சாஹுல் ஹமீது பாதுஷா இன்னும் பலர். ((ஆதாரம்: 1.Religion on the rise, by: Murad Wilfried Hofmann. 2.Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu, by: Shu'ayb))
ஏன் இந்து மதத்தில் வரவில்லையா? வந்தார்கள், அவர்களை கண்டுகொள்ளவில்லை. வள்ளலாருக்குத்தான் எத்தனை தொல்லை! வள்ளலார் அருட்பா பாடியபோது அது அருட்பா இல்லை மருட்பா என்று ஆறுமுக நாவலரின் மாணாக்கர்களும், கதிர்வேல் பிள்ளை, திரு. வி. க. போன்றோர்கள் எதிர்ப்பு காட்டியபோது சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்கள் கதிர்வேலருக்கு எதிர்வேல் தொடுத்து அருட்பாவை கண்டனக்கணையிலிருந்து மீட்டு பெருமை காத்தது மறந்துபோன விசயமாக இருக்கலாம். ((ஆதாரம்: இஸ்லாம் - தமிழ் சில பண்பாட்டுக் கூறுகள் என்ற ஆய்வு நூலில், பேராசிரியர் டாக்டர் சே.மு.மு.முஹம்மது அலி)) பட்டினத்தார்கூட (ஆன்மிகம் என்ற) 'கடைவிரித்தேன் வாங்குவாரில்லை, கடை எடுத்தேன் கேட்பாரில்லை' என்று கூறுகிறார்.
ஆக எல்லாமதங்களிலும் அதன் தூய்மை கெடாதிருக்க பாதுகாவலர்கள் தோன்றாமலிருக்கவில்லை. சுய விமரிசனமில்லாத அத்தகைய ஞானிகளை பைத்தியக்காரர்கள் என்று முத்திரை குத்தி ஓரங்கட்டிவிட்டு போலிகளை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவது மக்களின் தலைவிதியாகிவிட்டது. எல்லா மதங்களும் தனக்கென ஒரு கோட்பாட்டை வரையறுத்து வைத்துள்ளது. அவற்றை தெரிந்துகொள்ளாமல் இருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் அவற்றை திரித்து சொல்வதுதான் வேதனைக்குறியது. அதனால்தான் மனிதநேயம் கெட்டுவருகிறது. மனிதநேயத்துக்கு முன்கையெடுத்து விளக்கங்கள் அளித்தால்கூட அது பயங்கரவாதம் என்று இஸ்லாத்தின்மீது முத்திரை குத்துவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
இறைவணக்கம்
(நபியே நீர் கூறும்)'நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரைப் படைத்து போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. ' (அல் குர்ஆன் 6:162)
இறைவணக்கத்தின்போது அனுசரிக்கப்படும் செயல்களுக்கு காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கை பூராவும் தேடுதலில் இருக்கநேரிடும். அதேசமயம் அவற்றுக்கு காரணமில்லாமலில்லை, நமக்கு தெரியவில்லை. தெரிந்தபிறகுதான் செய்வேன் என்றால் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கிடைக்கும் பதில் மிக சாதாரணமானதாக இருக்கும்பட்சத்தில் இதற்கு இத்தனை நாள் கஷ்டப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லயே என்று தோன்றும். 'அல்லாஹ் சொன்னான் செய்கிறோம். பெருமானார் சொன்னார்கள் செய்துகாட்டினார்கள், பின்பற்றுகிறோம்' என்பதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு. இது மூட நம்பிக்கை அல்ல, இது ஈமானின் (நம்பிக்கை) ஒருபகுதி. அறிவும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு காரணம் தனக்குத் தானாகத் தெரியும்.
ஹஜ் செய்வது என்பது நபிகளார் பிறப்பதற்குமுன்பே அரபு மக்களிடையே நடந்துவந்த வணக்கமாகும். கி.பி. 605 ம் ஆண்டு, அப்போது பெருமானாருக்கு 35 வயது, நபித்துவம் வருவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஃபத்துல்லாஹ்வை சீர்படுத்திக்கொண்டிருந்தபோது ஹஜ்ருல் அஸ்வத் என்று சொல்லப்படும் கருப்புக் கல்லை யார் வைப்பது என்று நான்கு கோத்திரக்காரர்களுக்கிடையே சர்ச்சை நடந்தது. அதன் தீர்ப்பை நபிகளாரிடம் விட்டபோது அவர்களின்முடிவுப்படி நான்கு கோத்திரத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்து ஒருமித்து எடுத்துவந்து அதன் உரிய இடத்தில் பெருமானார் பதித்தார்கள். அது கஃபாவின் வெளியே இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் உள்ளே அல்ல. மக்கா வெற்றிக்குப் பிறகு கஃபாவின் உள்ளே இருந்த அனைத்து விக்ரஹங்களையும், ஓவியங்களையும் அழித்தார்கள். அந்த கல் இருக்குமிடத்திலிருந்துதான் தவாஃப் செய்வது தொடங்கப்படுகிறது. அப்படி இல்லையானால் ஒவ்வொருவரும் தனக்கு தோன்றிய இடத்திலிருந்து தொடங்குவார்கள். அதேபோன்றுதான் தொழுகையும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் கஃபாவை நோக்கித்தான் தொழவேண்டும். எதிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும் என்ற கொள்கையே தவிர சிலை வணக்கமல்ல. சிந்திப்பவர்களுக்கு தானாகப் புரியும்.
ஹஜ்ஜின்போது குர்பானி கொடுப்பது, சாத்தானுக்கு கல்லெறிவது போன்ற அனைத்து காரியங்களும் அடையாளமாக (Symbolic) செய்யப்படுபவைகளாகும். குர்பானி கொடுப்பது இறைவனுக்கு சாப்பாடு போடுவதோ அல்லது அபிஷேகம் பண்ணுவதோ அல்ல. நபி இபுறாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வுக்கு மரியாதை செய்வதாகும். இப்போதும் ஹஜ்ஜின்போது குர்பானி கொடுக்கப்படும் மிருகங்களின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு ஏழை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கிப்லா
குறிப்பிட்ட இடத்தில் இருப்பிடத்தை(கிப்லா) உடைய இறைவன் என்று இடைதலைப்பு கொடுத்து, அதில் ....நபிகள் நாயகம் தம்மைப் பின் பற்றியவர்களை ஜெருசலேம் நகரில் உள்ள இந்த இறைவனை நோக்கி தொழச் செய்தார், என்று எழுதி மீண்டும் உங்கள் இந்துத்துவாவை திணிக்கப் பார்க்கிறீர்களே! நேச குமார் ஐயா! சூரியனை மறைக்க முயற்சிக்கிறீர்கள், அது முடியாத காரியம்.
எங்கும் நிறைந்திருக்கும் சர்வசக்தனாகிய இறைவனை நோக்கி எந்த முஸ்லிமும் தொழவில்லை. தொழுவது கஃபாவை முன்நோக்கி. 'கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே(உரியன). - (அல் குர்ஆன் 2:115)
கிப்லாவை ஏன் மாற்றினேன் என்ற காரணத்தையும் அவனே தன் திருமறையில் 2: 144, 148 வசனங்களில் கூறுகிறான். மேலும் உங்களைப் போன்றவர்களின் கேள்விகளுக்கு...'(நபியே! 'முஸ்லிம்கள் முன்னர்) நோக்கிவந்த 'கிப்லா'விலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?' என, மனிதர்களில் அறிவீனர்கள் சிலர் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறும்: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கு உரியனவே! அவன் விரும்பியவர்களை (மேலான) நேரான வழியில் செலுத்துவான்.' (அல் குர்ஆன் 2:142) என்று பதிலையும் அவனே சொல்லிவிட்டான். இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வேண்டுமென்றே கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.
வர்ணாசிரமம்
ஒரு மனிதர் செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர் மருத்துவர், பொறியாளர், விவசாயி என்று அழைக்கப்படுகிறார். அதுபோன்று எந்த சமயத்தைச் சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த சமயத்தின் பெயரால் பிரிக்கப்படுகிறார். இது மனிதன் பிறந்தபிறகு நடப்பவை. அதல்லாமல் மனு சாஸ்திரம் சொல்வதுபோல் படைக்கப்படும்போதே வர்ணம் பூசி ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் மனிதனைப் படைக்கவில்லை. 'மனிதன், (தான்) எதனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றான் என்பதை சிறிது கவனிக்கவும். குதித்து வெளிப்படும் ஒரு துளி நீரைக்கொண்டே சிருஷ்டிக்கப்பட்டான்' (அல் குர்ஆன் 86:5,6) என்று கூறும் இறைவன், 'அவனுடைய துர்நடத்தையின் காரணமாக பின்னர்தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக ஆக்கிவிடுகின்றோம்' (அல் குர்ஆன் 95:5) என்றும் கூறுகின்றான். இறைவன் கருணையாளன், அருள்புரிபவன், கொடையாளன்தான் அதேநேரம் கண்டிப்பவன், தண்டிப்பவன், அடக்கியாள்பவன்கூட. நீங்கள் அன்பு பாராட்டும் உங்கள் பிள்ளை தவறு செய்தால் கண்டிப்பீர்களா? இல்லை கண்டுக் கொள்ளாமலிருப்பீர்களா? நான் எல்லாதவறுகளும் செய்வேன் ஆனால் அவன் தண்டிக்கக்கூடாது, கருணைக்காட்டிக்கொண்டிருக்கவேண்டும். இதுதான் உங்கள் கூற்றா? முடிவில் 'சர்வசித்தியுடைய கடவுள்' கோட்பாடக இது தென்படவில்லை என்று உங்கள் அறியாமையை நன்றாக வெளிப்படுத்திவிட்டார்கள்.
வஹி என்ற இறைதூது
அதை பற்றிய ஒரு பெண்ணிற்கு பிரசவம் இன்பவேதனையா அல்லது துன்பவேதனையா அல்லது அது எப்படிப்பட்டது என்று பிரசவமே ஆகமுடியாத மலடிக்குத் தெரியாது. இது எந்தமாதிரியான வேதனை என்று பெண்களாலும் சொல்லமுடியாது, எழுத்தில் வடிக்கவும் முடியாது. அதுபோன்றுதான் வஹி என்ற இறைதூதும். அதை விளக்கி எழுதமுடியாது, ஆன்மிகத்துடன் தொடர்புகொண்ட அதை, அந்த அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும். மாம்பழத்தின் சுவை மறத்துப்போன நாவிற்கு தெரியாது.
குர்ஆனின் வசனங்கள்
திருகுர்ஆன் வசனங்களுக்கு பொருள் பார்க்கும்போது, அதன் காலகட்டத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் பொருள் விளங்கும். தவிர குர்ஆனின் மொழி பெயர்ப்பை மட்டும் பார்க்கக்கூடாது, விரிஉரையிலும் கவனம் செலுத்தி விளக்கம் பெறவேண்டும். அரபு மொழியிலிருக்கும் குர் ஆனுக்கு அதே மொழியில் இருபதுக்கும்மேற்பட்ட விரிஉரைகள் உள்ளன. எனவே குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகள் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமில்லை,நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் திரு குர்ஆனில் 24-ம் அதிகாரத்தில் மூன்றாவது வசனம். இது விபச்சாரத்தைப் பற்றியது. நான்கு திருமணங்கள் வரை செய்துகொள்ள அனுமதிக்கும் இஸ்லாம் விபச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறது, அதற்கு கடுமையான தண்டனையும் வழங்குகிறது. அதன் பொருள்: '(கேவளமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை, அல்லது இணைவைத்து வணங்குபவளை அன்றி (மற்றெவளையும்) மணந்துகொள்ளமாட்டான். (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவளமான) ஒரு விபசாரனை, அல்லது இணைவைத்து வணங்குபவனை அன்றி (மற்றெவனையும்) மணந்துகொள்ளமாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. '
அப்போது அரபு நாட்டில் விபச்சாரம், குடி, அடிமைத்தனம் போன்றவைகள் மலிந்துகிடந்த காலம், அந்த காலகட்டத்தில் இது அருளப்பட்டது. அதை மறந்துவிட்டு மாற்று மதத்துப் பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பொருள் கொள்வது அபத்தமாகும். அதுபோன்றே இரண்டாம் அதிகாரம் 106 ம் வசனமும்.
'திருகுர்ஆனை அல்லாஹ் அருளும்போது பல சமயங்களில் ஏற்கனவே தாம் தெரிவித்ததை மாற்றிவிடுகிறார்' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கு ஆதாரமாக இரண்டாம் அதிகாரத்தில் 105 ம் வசனத்தை காட்டியுள்ளீர்கள். அது 105 ம் வசனமல்ல 106 ம் வசனமாகும். அதன் பொருள்:
'(நபியே! முந்திய வேதங்களில் இருந்த) யாதொரு வசனத்தை நாம் மாற்றிவிடுவோமாயினும் அல்லது அதை மறக்கடித்து விடுவோமாயினும், அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிட சிறந்ததை (இவ்வேதத்தின் மூலம்) நாம் கொண்டுவருவோம். அல்லாஹ், எல்லாவற்றிற்கும் நிச்சயமாக ஆற்றலுடையோன் என்பதை நீர் அறியவில்லையா?'
முந்திய வேதமென்பது, முந்திய நபிமார்களான மூசா(Moses அலைஹிஸ்ஸலாம்)அவர்களுக்கு தெளறாத்(Torah)வேதத்தையும், தாவுத்(David அலை)அவர்களுக்கு ஜபூர்(Psalms)வேதத்தையும், ஈசா(Jesus அலை) அவர்களுக்கு இன்ஜில்(Gospel)வேதத்தையும் அருளிய இறைவன் அதைவிட சிறந்ததை இவ்வேதத்தின் மூலம் கொண்டுவருவோம் என்று கூறுகிறான். நீங்கள் குற்றம் சாட்டுவதுபோல் குர்ஆனை மாற்றவுமில்லை, தாமருளியதை திரும்பப்பெறவுமில்லை. அந்தந்த காலத்தில் இருந்த சமுதாயங்களின் நிலமைக்கும் அவசியத்திற்கும் ஏற்பவே வேதங்கள் அருளப்பட்டன.
போதிய நேரமில்லாமை காரணமாக உங்களுடைய சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் அளிக்கமுடியவில்லை, என்றாலும் நான் கொடுத்துள்ள இந்த சிறிய விளக்கம் உங்களை திருப்திப்படுத்தாது என்பது நிச்சயமாக தெரியும். உங்களுடைய எழுத்தில் குழப்பங்களும், முன்னுக்குப்பின் முரணான செய்திகளும் மலிந்து கிடக்கின்றன. வேண்டுமென்றே திரித்து கூறப்பட்ட செய்திகளும் இதிலடங்கும். ஏடுகளிலிருந்து பெறப்படும் செய்திகளிலிருந்து புறப்படும் சந்தேகங்களுக்கு கற்றறிந்த சான்றோர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வதுதான் அறிவுடமை, அதல்லாமல் எனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் திண்ணையிலும் இணைய தளத்திலும் எழுதினால் தெளிவு கிடைக்காது. மாறாக குழப்பமும், வேதனையும்தான் மிஞ்சும்.
'ஓம்.. பஹோர் பஹாவ பஸுஹா,
ஒம்.. தஸய்யா விதுர்வானீனம், பஹர்க்கஹோ,
தேவ்ஸத்யா தீமஹய்ய தீமஹவு,
பர்ச்ச வதாயத.'
என்ற பிரணவ மூலமந்திரம் அல்லது காயத்ரி மந்திரத்திற்கு தெளிவான விளக்கம் எப்போது உங்களுக்குத் தெரியவருமோ, அப்போது இந்து மதமும் தெரியும் இஸ்லாமும் புரியும்.
'எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு'
இவண்,
Hameed jaffer,
குறிப்பு:- குர்ஆன் வசனங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு: அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் தர்ஜுமதுல் குர்ஆன்.
Friday Jan 21, 2005 திண்ணை
நேச குமார் தெளிவுபெறவேண்டும்
ஹமீத் ஜாஃபர்
'நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்ற அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள்' (அல் குர்ஆன்; 3:103)
யாரையும் மிரட்டவேண்டும் என்ற எண்ணம் நமக்கில்லை, மாறாக நாம் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும், சமத்துவமும் அமைதியும் தழைக்கவேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதுதான் இஸ்லாத்தின் குறிக்கோளுமாகும். நேசத்துடன் வரும் கரத்தை பாசமென்ற கயிற்றால் பிணைத்தால் எவராலும் பிரிக்கமுடியாது என்பதே அதன் பொருள். திரு நேச குமார் தவறாகப் புரிந்துக்கொண்டார்.
'சுனாமி' வந்தபிறகு மனித நேயத்தை முன்வைப்பதின் அவசியத்தை உணர்ந்துள்ள திரு நேச குமாரை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஆனால் அதன் அவசியமே இல்லை. மனிதநேயமும் சகோதரத்துவமும் எங்கும் போய்விடவில்லை முன்னால்தான் நின்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை மறைத்திருக்கும் திரையை கிழித்துவிட்டால் போதும். ஒற்றுமையும் மனிதநேயமும் காலாகாலமாக இருந்து வரும் ஒன்று. கும்பினிகள், தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற் காக செய்த சூழ்ச்சியில் அடிமைப் பட்டு, அதுவே உண்மை, அதுவே வரலாறு என்று நம்பிக்கொண்டு தன் வயிறு வளர்க்கும் ஒரு சில புல்லுருவிகளைக் கொண்ட அமைப்புக்களால் ஒட்டு மொத்த சமுதாயம் பாதிக்கப்பட்டு சகோதரத்துவத்தை சிறுகச்சிறுக இழந்துக்கொண்டிருக்கிறது என்பதை திரு நேச குமார் புரிந்துக்கொள்ளவேண்டும். 'மனிதர்கள் யாவரும் ஏக சகோதரர்களே எனும் தத்துவம் இஸ்லாத்தில் தேசிய, இன எல்லைகளைத் தாண்டி நிற்கும் ஓர் உயரிய கொள்கையாக இயங்குகிறது என்பதை நாம் மறுக்கவியலாது.' என்று நம் நாட்டின் இரண்டாம் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
நான், எனது சொந்த விமரிசனங்களையோ அல்லது குறைகளையோ இந்து மதத்தின்மீது வைக்கவில்லை, உங்களால் எழுதப்பட்ட புராணங்களில் ஒரு சில பகுதிகளை சுட்டிக் காட்டினேன். வள்ளலார் ஐயா குறிப்பிடுவதுபோல்'....பிண்ட லச்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மை அறியாது அப்படியே கண்ணைமூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஒரு வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை, அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை...' ((ஆதாரம்: சித்திவளாகப் பேருபதேசம்))
மெய்நிலை கண்ட ஞானிகள்:
வள்ளலார் ஐயா அவர்களை 'மெய்நிலை கண்ட ஞானி' என நான் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டதன் மூலம், இன்னும் நீங்கள் மதங்களை புரிந்துக் கொள்ளவே இல்லை என்பதை தெளிவாகக்காட்டியுள்ளீர்கள். ஐயா அவர்கள் மட்டுமல்ல ராமகிருஷ்ண பரமஹம்சரும், கருவூராரும், திருவாரூர் தட்சிணா மூர்த்தி சுவாமிகளும் மெய்நிலை கண்ட ஞானிகள்தான். இஸ்லாத்தைப் புரியாமலே இஸ்லாத்தைப் பற்றி அவதூராக எழுதும் அன்பரே! ஏக இறை கொள்கையை எவர் ஏற்றுகொண்டு அதன்படி நடக்கிறாரோ அவர் எங்கிருந்தாலும் விசுவாசிகள்(முஃமின்கள்)தான்.
'A Muslim, in the original meaning of the word, is someone who submits to the ONE AND ONLY GOD, regardless of whether he calls himself
a Jew, a Christian, or a Muslim.' - Religion on the Rise, by: Murad Wilfried Holfmann
'விசுவாசிகளாயினும் யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மையாக விசுவாசித்து, நற்கருமத்தைச் செய்தார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி அவர்கள் இறைவனிடத்தில்
நிச்சயமாக உண்டு. மேலும் அவர்களுக்கு எந்தவித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.' (அல் குர்ஆன் 2:62)
இங்கு முஸ்லிம் என்று கூறவில்லை, விசுவாசிகள் (முஃமின்கள்) என்று இறை ஆவேசம் [நேச குமார் அகராதிபடி] கூறுகிறது. அதாவது எவர் எப்படி தன் இறைவனை பகவான் என்றோ அல்லது கர்த்தர் என்றோ அல்லது அருட்பெரும் ஜோதி என்றோ அல்லது அல்லாஹ் என்றோ நினைத்து அதில் கிஞ்சிற்றும் மாறாமல் ஓர் இறைக் கொள்கையுடன் இருக்கிறாரோ அவருக்கு நற்கூலி உண்டு என்பதே இதன் பொருள். பெயர் மாறினாலும் பெயரிடப்பட்டப் பொருள் மாறாது.
இருண்ட கண்டத்தில் அன்பர் இருந்துக்கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை என்னவென்றே புரியாமல் எதையெதையோ திரித்துக்கொண்டிருக்கிறார். நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாத்திற்கு வெளியே இறைஞானிகள் இருக்க வாய்ப்பில்லை, மெய்நிலை காண வழியே இல்லை என்று இஸ்லாம் எங்கே சொல்லியிருக்கிறது ?
இஸ்லாத்தின் தோற்றம்:
இஸ்லாத்தை நபிகள் நாயகம் தோற்றுவிக்கவில்லை, எப்போது முதல் மனிதர் இவ்வுலகில் தோன்றினாரோ அப்போதே இஸ்லாமும் தோன்றிவிட்டது. மக்கள் பெருகப் பெருக இஸ்லாமியம் மறக்கப்பட்டு தான்தோன்றிதனமாக நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை நேர்வழிப்படுத்தவே அவ்வப்போது இறைதூதர்கள் தோன்றினார்கள்.
நபிகள் நாயகத்தால் தன் பெரிய தந்தையை கடைசி வரை திருத்த முடியவில்லை, தமது சொந்தக் கூட்டத்தாரை மாற்ற முடியவில்லை, மதினாக்காரர்களையே மாற்றமுடிந்தது, கடைசியில் வாளின் துணைகொண்டே குறைஷிகளை மனம் மாறவைக்க முடிந்தது என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள்.
நான், உங்களை நல்ல சிந்தனையாளர் என்று நினைத்திருந்தேன். இப்போது புரிகிறது தங்களுக்கு சிந்திக்கவும் தெரியவில்லை என்று. நோய் உள்ளவனுக்கு நோய் குணமாகவேண்டுமானால் மருத்துவர் கொடுக்கும் மருத்துவத்தையும் மருந்தையும் ஏற்றுகொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை வேண்டும். இதில் எதுவுமே இல்லையென்றால் நோய் குணமாகாது. சுருக்கமாகச் சொன்னால் வாதத்துக்கு மருந்து உண்டு குணப்படுத்திவிடலாம், பிடிவாதத்தை குணப்படுத்தமுடியாது என்று நான் சொல்லி நேசகுமார் தெரிந்துக்கொள்ளவேண்டிய நிலையிலில்லை என்று நினைக்கிறேன். இப்போது புரியும் ஏன் தன் பெரியதந்தையைத் திருத்தமுடியவில்லை என்று.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?:
இறை தூது வருவதற்குமுன்வரை 'அல் அமீன், அல் அமீன்' ('நேர்மையாளர்') என்று சொல்லிக்கொண்டிருந்த மக்கத்து குறைஷியர்கள் நுபுவத்து(இறைதூது) வந்தபின் நபிகளாரை ஏற்கமறுத்தனர் ஒரு சிலரைத்தவிர, ஆனால் மதினாவாசிகள் அவர்களை ஏற்று கொண்டனர். வாளின் துணைகொண்டு குறைஷிகளை மாற்ற முடிந்தது என்று யார் சொன்னார்கள்? ஐயா, நபிகளார் செய்த யுத்தங்கள் தற்காப்பு யுத்தங்களே என்று ஏற்கனவே சலாஹுதீன் அவர்கள் திண்ணையில் எழுதியிருந்தார்கள். இன்னும் மூன்றுகால் என்ற நிலையிலேயே இருக்கிறீர்கள். உங்களை ஒருவர் தாக்க வருகிறார், நீங்கள் என்ன சும்மாவா இருப்பீர்கள்? அவன் கை ஓங்குவதற்குமுன்பே உங்கள் கை ஓங்கிவிடுமில்லையா? அப்படி செய்தால் நீங்கள் செய்வது யுத்தமாகுமா?
நீங்கள் சொல்வதுபோல் யுத்த வசனங்களே குர்ஆனில் பெரும்பாலும் உள்ளன, நபிகள் நாயகம் யுத்த சிந்தனை உள்ளர்களாக இருந்தார், வாளினால்தான் இஸ்லாம் பரவியது என்று சொன்னால், இவர்கள் எதிரிகள் இருந்த இடத்திற்கு சென்று யுத்தம் செய்திருக்கவேண்டும். மாறாக எதிரிகளல்லவா இவர்கள் இடத்திற்கு வந்தனர். இவர்கள் சந்தித்த யுத்தங்களில் பிரசித்திவாய்ந்தது மூன்று யுத்தம். முதல் யுத்தமான பதுரு என்ற இடத்தில் நடந்த பதுருயுத்தம். (1) இது மக்காவுக்கு அருகில் இல்லை, மதினாவுக்கு அருகிலுள்ள இடம். (2) இவர்களின் படைபலம்: 313 வீரர்கள், 6 எஃகு கவசங்கள், 8 வாட்கள், 70 ஒட்டகங்கள், 5 குதிரைகள். (3) எதிரியின் படைபலம்: 1000 வீரர்கள், 700 ஒட்டகங்கள், 100 குதிரைகள், 600 கவசங்கள் மற்றும் ஆயுதங்கள், படையினருக்கு உற்சாகமூட்ட பாட்டுப்பாடும் பெண்கள் ((ஆதாரம்: மறுவிலா முழுமதி - ஜமால்)). இப்போது சொல்லுங்கள் யார் முதலில் வாளேந்தினார்கள், யாருக்கு வெற்றி கிடைத்தது ?
'THE MORE I STUDY THE MORE I DISCOVER THAT THE STRENGTH OF ISLAM DOES NOT LIE IN THE SWORD' - மஹாத்மா காந்தி யங் இந்தியாவில்
உம்ரா செய்ய நபிகள் கோமான் 1400 தோழர்களுடன் மக்கா வந்தபோது, அதை தடுத்த மக்கத்து குறைஷிகளுடன் ஹுதைபியா என்ற இடத்தில் தங்களுக்கு பாதகமான உடன்படிக்கையை செய்துக்கொண்டு உம்ரா செய்யாமல் திரும்பினார்களே! உங்கள் கூற்றுப்படி போர் குணம் கொண்டவராக இருந்தால் சண்டை செய்திருக்கலாமே!
இஸ்லாத்தை அரபு நாட்டிற்கப்பால் பரவச் செய்ய எண்ணிய நபிகளார் பெரும்படையை அனுப்பவில்லை. மாறாக ஐந்து பேர்களை (நபித்தோழர்கள்)தெரிவு செய்து ரோமானியப் பேரரசர் ஹெராக்ளியஸ், பாரசீக மாமன்னர் குஸ்ரு பர்வேஸ், அபிஸினிய மன்னர் நஜ்ஜாஷி, எகிப்திய மன்னர் முகெகிஸ், யெமன் நட்டரசன் ஆகியவர்களுக்கு ஐந்து கடிதங்களை அனுப்பிவைத்தார்கள். அதில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவில்லயானால் பெரும்போரை சந்திக்கவேண்டி வரும் என்று எழுதவில்லை. அவர்கள் எழுதியிருந்தது இதுதான்: 'ஹெராக்ளியஸ் பேரரசருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது எழுதியது, இஸ்லாத்தை ஏற்று ஈடேற்றம் பெறுங்கள் என்று தொடங்கி 'வேதத்தை உடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் (சம்மதமான) ஒரு மத்திய விஷயத்தின்பால் வருவீர்களாக! (அதாவது:) 'நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கோம். நம்மில் எவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் ஆண்டவனாக எடுத்துக்கொள்ளோம்' (விசுவாசிகளே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களை நோக்கி) 'நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்கள் என்று நீங்கள் சாட்சியங் கூறுவீர்களாக!' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.' என்ற அல் குர்ஆனின் 3 ம் அத்தியாத்தின் 64 வது வசனத்தையும் எழுதி அனுப்பியிருந்தார்கள். இந்த கடிதம் இன்றும் இஸ்தான்புல் டப்காபி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
நபிகளார் செய்தது மாற்றமல்ல சீர்திருத்தம்:
நபிகள் நாயகம் தொடர்ந்து தமது மார்க்கத்தில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியே வந்திருக்கிறார். வரலாற்றினூடே நபியவர்களைப் பார்க்கும்போது விஷமிட்டு கொலையுண்டிருக்காவிட்டால் அவர் காட்டிச் சென்ற இஸ்லாத்தில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், அதை அவரே செய்திருப்பார் என்று தோன்றுகிறது என்று உங்கள் அறிவில் தோன்றியதை காட்டியிருந்தீர்கள்.
இதிலிருந்து வரலாறும் தெரியவில்லை என்று தெரிகிறது. கைபரில் நபிகளாருக்கு யூதர்கள் அளித்த விருந்தில் ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால் ஒரு இறைச்சித் துண்டை வாயில் வைத்தவுடன் அருவருப்புடன் உடனே துப்பிவிட்டு, உணவில் விஷம் கலந்திருக்கிறது யாரும் உண்ணவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். ஆனால் பிஷர் இப்னு பராபின் மஃரூர் என்ற தோழர் மட்டும் அவர்கள் தடுக்குமுன்பே சிறிய துண்டை விழுங்கிவிட்டால் நொடிப்பொழுதில் இறந்துவிட்டார் ((ஆதாரம்: மறுவிலா முழுமதி - ஜமால்))
நபிகள் நாயகம் ஒருபோதும் மார்க்கத்தில் மாற்றம் செய்யவில்லை, சீர்திருத்தமே செய்துவந்துள்ளார்கள். ஆரம்ப காலத்தில் இருந்துவந்த மது அருந்துவது போன்ற சில செயல்களை சிறிது சிறிதாக தடை செய்து முற்றிலுமாக ஒழித்தார்கள். தன் மறைவுக்கு பிறகு மார்க்கம் நலிந்துவிடும் என்று தெரிந்துதான் 'ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்க ஒரு சீர்திருத்தவாதி(முஜத்திது-Mujaddid) வருவார். ' [நூல்: அபுதாவுத்] என்று அறிவிப்பு செய்துள்ளார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அரேபியாவில் இப்னு தைமிய்யா, அபு ஹஸன் ஷாதுலி ஈராக்கில் முஹைய்யிதீன் அப்துல் காதர் ஜெய்லானி, அபு ஹாமித் அல் கஜ்ஜாலி, பாரசீகத்தில் மொலானா ரூமி, அபு பயாசித் புஸ்தாமி, மலாயாவில் துவான் பட்ரா கரவான், இந்தியாவில் காஜா முயினுதீன் சிஷ்தி, சாஹுல் ஹமீது பாதுஷா இன்னும் பலர். ((ஆதாரம்: 1.Religion on the rise, by: Murad Wilfried Hofmann. 2.Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu, by: Shu'ayb))
ஏன் இந்து மதத்தில் வரவில்லையா? வந்தார்கள், அவர்களை கண்டுகொள்ளவில்லை. வள்ளலாருக்குத்தான் எத்தனை தொல்லை! வள்ளலார் அருட்பா பாடியபோது அது அருட்பா இல்லை மருட்பா என்று ஆறுமுக நாவலரின் மாணாக்கர்களும், கதிர்வேல் பிள்ளை, திரு. வி. க. போன்றோர்கள் எதிர்ப்பு காட்டியபோது சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்கள் கதிர்வேலருக்கு எதிர்வேல் தொடுத்து அருட்பாவை கண்டனக்கணையிலிருந்து மீட்டு பெருமை காத்தது மறந்துபோன விசயமாக இருக்கலாம். ((ஆதாரம்: இஸ்லாம் - தமிழ் சில பண்பாட்டுக் கூறுகள் என்ற ஆய்வு நூலில், பேராசிரியர் டாக்டர் சே.மு.மு.முஹம்மது அலி)) பட்டினத்தார்கூட (ஆன்மிகம் என்ற) 'கடைவிரித்தேன் வாங்குவாரில்லை, கடை எடுத்தேன் கேட்பாரில்லை' என்று கூறுகிறார்.
ஆக எல்லாமதங்களிலும் அதன் தூய்மை கெடாதிருக்க பாதுகாவலர்கள் தோன்றாமலிருக்கவில்லை. சுய விமரிசனமில்லாத அத்தகைய ஞானிகளை பைத்தியக்காரர்கள் என்று முத்திரை குத்தி ஓரங்கட்டிவிட்டு போலிகளை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவது மக்களின் தலைவிதியாகிவிட்டது. எல்லா மதங்களும் தனக்கென ஒரு கோட்பாட்டை வரையறுத்து வைத்துள்ளது. அவற்றை தெரிந்துகொள்ளாமல் இருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் அவற்றை திரித்து சொல்வதுதான் வேதனைக்குறியது. அதனால்தான் மனிதநேயம் கெட்டுவருகிறது. மனிதநேயத்துக்கு முன்கையெடுத்து விளக்கங்கள் அளித்தால்கூட அது பயங்கரவாதம் என்று இஸ்லாத்தின்மீது முத்திரை குத்துவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
இறைவணக்கம்
(நபியே நீர் கூறும்)'நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரைப் படைத்து போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. ' (அல் குர்ஆன் 6:162)
இறைவணக்கத்தின்போது அனுசரிக்கப்படும் செயல்களுக்கு காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கை பூராவும் தேடுதலில் இருக்கநேரிடும். அதேசமயம் அவற்றுக்கு காரணமில்லாமலில்லை, நமக்கு தெரியவில்லை. தெரிந்தபிறகுதான் செய்வேன் என்றால் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கிடைக்கும் பதில் மிக சாதாரணமானதாக இருக்கும்பட்சத்தில் இதற்கு இத்தனை நாள் கஷ்டப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லயே என்று தோன்றும். 'அல்லாஹ் சொன்னான் செய்கிறோம். பெருமானார் சொன்னார்கள் செய்துகாட்டினார்கள், பின்பற்றுகிறோம்' என்பதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு. இது மூட நம்பிக்கை அல்ல, இது ஈமானின் (நம்பிக்கை) ஒருபகுதி. அறிவும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு காரணம் தனக்குத் தானாகத் தெரியும்.
ஹஜ் செய்வது என்பது நபிகளார் பிறப்பதற்குமுன்பே அரபு மக்களிடையே நடந்துவந்த வணக்கமாகும். கி.பி. 605 ம் ஆண்டு, அப்போது பெருமானாருக்கு 35 வயது, நபித்துவம் வருவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஃபத்துல்லாஹ்வை சீர்படுத்திக்கொண்டிருந்தபோது ஹஜ்ருல் அஸ்வத் என்று சொல்லப்படும் கருப்புக் கல்லை யார் வைப்பது என்று நான்கு கோத்திரக்காரர்களுக்கிடையே சர்ச்சை நடந்தது. அதன் தீர்ப்பை நபிகளாரிடம் விட்டபோது அவர்களின்முடிவுப்படி நான்கு கோத்திரத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்து ஒருமித்து எடுத்துவந்து அதன் உரிய இடத்தில் பெருமானார் பதித்தார்கள். அது கஃபாவின் வெளியே இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் உள்ளே அல்ல. மக்கா வெற்றிக்குப் பிறகு கஃபாவின் உள்ளே இருந்த அனைத்து விக்ரஹங்களையும், ஓவியங்களையும் அழித்தார்கள். அந்த கல் இருக்குமிடத்திலிருந்துதான் தவாஃப் செய்வது தொடங்கப்படுகிறது. அப்படி இல்லையானால் ஒவ்வொருவரும் தனக்கு தோன்றிய இடத்திலிருந்து தொடங்குவார்கள். அதேபோன்றுதான் தொழுகையும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் கஃபாவை நோக்கித்தான் தொழவேண்டும். எதிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும் என்ற கொள்கையே தவிர சிலை வணக்கமல்ல. சிந்திப்பவர்களுக்கு தானாகப் புரியும்.
ஹஜ்ஜின்போது குர்பானி கொடுப்பது, சாத்தானுக்கு கல்லெறிவது போன்ற அனைத்து காரியங்களும் அடையாளமாக (Symbolic) செய்யப்படுபவைகளாகும். குர்பானி கொடுப்பது இறைவனுக்கு சாப்பாடு போடுவதோ அல்லது அபிஷேகம் பண்ணுவதோ அல்ல. நபி இபுறாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வுக்கு மரியாதை செய்வதாகும். இப்போதும் ஹஜ்ஜின்போது குர்பானி கொடுக்கப்படும் மிருகங்களின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு ஏழை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கிப்லா
குறிப்பிட்ட இடத்தில் இருப்பிடத்தை(கிப்லா) உடைய இறைவன் என்று இடைதலைப்பு கொடுத்து, அதில் ....நபிகள் நாயகம் தம்மைப் பின் பற்றியவர்களை ஜெருசலேம் நகரில் உள்ள இந்த இறைவனை நோக்கி தொழச் செய்தார், என்று எழுதி மீண்டும் உங்கள் இந்துத்துவாவை திணிக்கப் பார்க்கிறீர்களே! நேச குமார் ஐயா! சூரியனை மறைக்க முயற்சிக்கிறீர்கள், அது முடியாத காரியம்.
எங்கும் நிறைந்திருக்கும் சர்வசக்தனாகிய இறைவனை நோக்கி எந்த முஸ்லிமும் தொழவில்லை. தொழுவது கஃபாவை முன்நோக்கி. 'கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே(உரியன). - (அல் குர்ஆன் 2:115)
கிப்லாவை ஏன் மாற்றினேன் என்ற காரணத்தையும் அவனே தன் திருமறையில் 2: 144, 148 வசனங்களில் கூறுகிறான். மேலும் உங்களைப் போன்றவர்களின் கேள்விகளுக்கு...'(நபியே! 'முஸ்லிம்கள் முன்னர்) நோக்கிவந்த 'கிப்லா'விலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?' என, மனிதர்களில் அறிவீனர்கள் சிலர் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறும்: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கு உரியனவே! அவன் விரும்பியவர்களை (மேலான) நேரான வழியில் செலுத்துவான்.' (அல் குர்ஆன் 2:142) என்று பதிலையும் அவனே சொல்லிவிட்டான். இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வேண்டுமென்றே கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.
வர்ணாசிரமம்
ஒரு மனிதர் செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர் மருத்துவர், பொறியாளர், விவசாயி என்று அழைக்கப்படுகிறார். அதுபோன்று எந்த சமயத்தைச் சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த சமயத்தின் பெயரால் பிரிக்கப்படுகிறார். இது மனிதன் பிறந்தபிறகு நடப்பவை. அதல்லாமல் மனு சாஸ்திரம் சொல்வதுபோல் படைக்கப்படும்போதே வர்ணம் பூசி ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் மனிதனைப் படைக்கவில்லை. 'மனிதன், (தான்) எதனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றான் என்பதை சிறிது கவனிக்கவும். குதித்து வெளிப்படும் ஒரு துளி நீரைக்கொண்டே சிருஷ்டிக்கப்பட்டான்' (அல் குர்ஆன் 86:5,6) என்று கூறும் இறைவன், 'அவனுடைய துர்நடத்தையின் காரணமாக பின்னர்தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக ஆக்கிவிடுகின்றோம்' (அல் குர்ஆன் 95:5) என்றும் கூறுகின்றான். இறைவன் கருணையாளன், அருள்புரிபவன், கொடையாளன்தான் அதேநேரம் கண்டிப்பவன், தண்டிப்பவன், அடக்கியாள்பவன்கூட. நீங்கள் அன்பு பாராட்டும் உங்கள் பிள்ளை தவறு செய்தால் கண்டிப்பீர்களா? இல்லை கண்டுக் கொள்ளாமலிருப்பீர்களா? நான் எல்லாதவறுகளும் செய்வேன் ஆனால் அவன் தண்டிக்கக்கூடாது, கருணைக்காட்டிக்கொண்டிருக்கவேண்டும். இதுதான் உங்கள் கூற்றா? முடிவில் 'சர்வசித்தியுடைய கடவுள்' கோட்பாடக இது தென்படவில்லை என்று உங்கள் அறியாமையை நன்றாக வெளிப்படுத்திவிட்டார்கள்.
வஹி என்ற இறைதூது
அதை பற்றிய ஒரு பெண்ணிற்கு பிரசவம் இன்பவேதனையா அல்லது துன்பவேதனையா அல்லது அது எப்படிப்பட்டது என்று பிரசவமே ஆகமுடியாத மலடிக்குத் தெரியாது. இது எந்தமாதிரியான வேதனை என்று பெண்களாலும் சொல்லமுடியாது, எழுத்தில் வடிக்கவும் முடியாது. அதுபோன்றுதான் வஹி என்ற இறைதூதும். அதை விளக்கி எழுதமுடியாது, ஆன்மிகத்துடன் தொடர்புகொண்ட அதை, அந்த அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும். மாம்பழத்தின் சுவை மறத்துப்போன நாவிற்கு தெரியாது.
குர்ஆனின் வசனங்கள்
திருகுர்ஆன் வசனங்களுக்கு பொருள் பார்க்கும்போது, அதன் காலகட்டத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் பொருள் விளங்கும். தவிர குர்ஆனின் மொழி பெயர்ப்பை மட்டும் பார்க்கக்கூடாது, விரிஉரையிலும் கவனம் செலுத்தி விளக்கம் பெறவேண்டும். அரபு மொழியிலிருக்கும் குர் ஆனுக்கு அதே மொழியில் இருபதுக்கும்மேற்பட்ட விரிஉரைகள் உள்ளன. எனவே குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகள் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமில்லை,நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் திரு குர்ஆனில் 24-ம் அதிகாரத்தில் மூன்றாவது வசனம். இது விபச்சாரத்தைப் பற்றியது. நான்கு திருமணங்கள் வரை செய்துகொள்ள அனுமதிக்கும் இஸ்லாம் விபச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறது, அதற்கு கடுமையான தண்டனையும் வழங்குகிறது. அதன் பொருள்: '(கேவளமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை, அல்லது இணைவைத்து வணங்குபவளை அன்றி (மற்றெவளையும்) மணந்துகொள்ளமாட்டான். (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவளமான) ஒரு விபசாரனை, அல்லது இணைவைத்து வணங்குபவனை அன்றி (மற்றெவனையும்) மணந்துகொள்ளமாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. '
அப்போது அரபு நாட்டில் விபச்சாரம், குடி, அடிமைத்தனம் போன்றவைகள் மலிந்துகிடந்த காலம், அந்த காலகட்டத்தில் இது அருளப்பட்டது. அதை மறந்துவிட்டு மாற்று மதத்துப் பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பொருள் கொள்வது அபத்தமாகும். அதுபோன்றே இரண்டாம் அதிகாரம் 106 ம் வசனமும்.
'திருகுர்ஆனை அல்லாஹ் அருளும்போது பல சமயங்களில் ஏற்கனவே தாம் தெரிவித்ததை மாற்றிவிடுகிறார்' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கு ஆதாரமாக இரண்டாம் அதிகாரத்தில் 105 ம் வசனத்தை காட்டியுள்ளீர்கள். அது 105 ம் வசனமல்ல 106 ம் வசனமாகும். அதன் பொருள்:
'(நபியே! முந்திய வேதங்களில் இருந்த) யாதொரு வசனத்தை நாம் மாற்றிவிடுவோமாயினும் அல்லது அதை மறக்கடித்து விடுவோமாயினும், அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிட சிறந்ததை (இவ்வேதத்தின் மூலம்) நாம் கொண்டுவருவோம். அல்லாஹ், எல்லாவற்றிற்கும் நிச்சயமாக ஆற்றலுடையோன் என்பதை நீர் அறியவில்லையா?'
முந்திய வேதமென்பது, முந்திய நபிமார்களான மூசா(Moses அலைஹிஸ்ஸலாம்)அவர்களுக்கு தெளறாத்(Torah)வேதத்தையும், தாவுத்(David அலை)அவர்களுக்கு ஜபூர்(Psalms)வேதத்தையும், ஈசா(Jesus அலை) அவர்களுக்கு இன்ஜில்(Gospel)வேதத்தையும் அருளிய இறைவன் அதைவிட சிறந்ததை இவ்வேதத்தின் மூலம் கொண்டுவருவோம் என்று கூறுகிறான். நீங்கள் குற்றம் சாட்டுவதுபோல் குர்ஆனை மாற்றவுமில்லை, தாமருளியதை திரும்பப்பெறவுமில்லை. அந்தந்த காலத்தில் இருந்த சமுதாயங்களின் நிலமைக்கும் அவசியத்திற்கும் ஏற்பவே வேதங்கள் அருளப்பட்டன.
போதிய நேரமில்லாமை காரணமாக உங்களுடைய சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் அளிக்கமுடியவில்லை, என்றாலும் நான் கொடுத்துள்ள இந்த சிறிய விளக்கம் உங்களை திருப்திப்படுத்தாது என்பது நிச்சயமாக தெரியும். உங்களுடைய எழுத்தில் குழப்பங்களும், முன்னுக்குப்பின் முரணான செய்திகளும் மலிந்து கிடக்கின்றன. வேண்டுமென்றே திரித்து கூறப்பட்ட செய்திகளும் இதிலடங்கும். ஏடுகளிலிருந்து பெறப்படும் செய்திகளிலிருந்து புறப்படும் சந்தேகங்களுக்கு கற்றறிந்த சான்றோர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வதுதான் அறிவுடமை, அதல்லாமல் எனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் திண்ணையிலும் இணைய தளத்திலும் எழுதினால் தெளிவு கிடைக்காது. மாறாக குழப்பமும், வேதனையும்தான் மிஞ்சும்.
'ஓம்.. பஹோர் பஹாவ பஸுஹா,
ஒம்.. தஸய்யா விதுர்வானீனம், பஹர்க்கஹோ,
தேவ்ஸத்யா தீமஹய்ய தீமஹவு,
பர்ச்ச வதாயத.'
என்ற பிரணவ மூலமந்திரம் அல்லது காயத்ரி மந்திரத்திற்கு தெளிவான விளக்கம் எப்போது உங்களுக்குத் தெரியவருமோ, அப்போது இந்து மதமும் தெரியும் இஸ்லாமும் புரியும்.
'எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு'
இவண்,
Hameed jaffer,
குறிப்பு:- குர்ஆன் வசனங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு: அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் தர்ஜுமதுல் குர்ஆன்.
Friday Jan 21, 2005 திண்ணை
மறுமலர்ச்சி
மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்
திருமதி ஆஸ்ரா நொமானி அவர்கள் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு எழுதியதை தமிழாக்கம் செய்தமைக்கும் நிகழும் மார்ச் திங்கள் 18 நாள் நடக்கவிருக்கும் முஸ்லிம் பெண்கள் தலமையில் நடக்கவுள்ள தொழுகை செய்தியையும் திண்ணையின் மூலம் வெளியிட்ட திரு ஆசாரகீனன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்களை ஓரங்கட்டும் போக்கையும், ஆணாதிக்கத்தன்மையையும், வஹாபியிஸ அடிப்படை வாதத்தின் பாதிப்பையும் எதிர்த்து புரட்சி செய்துக்கொண்டிருக்கும் திருமதி ஆஸரா நொமானி பங்கேற்கும் 16 மற்றும் 18 தேதி நிகழ்ச்சிகளை வரவேற்காமல் இருக்கமுடியாது.
எத்தனை காலத்திற்கு ஆண்கள் பின்னால் தனி இடத்தில் நின்று தொழுவது? நாங்கள் என்ன அடிமைகளா? இல்லை பிள்ளை பெறும் எந்திரங்களா? போதும் பதிநான்கு நூற்றாண்டுகள் பட்ட அவதி. எங்களுக்கு எல்லா தகுதிகளும் இருக்கின்றன. இனி நாங்கள் முன் நின்று தொழுகை நடத்துவோம், எங்களுக்குப் பின்னால் ஆண்கள் நிற்கட்டும் என வீறுகொண்டு வேங்கை என சீறி வரும் மாதர்குல மாணிக்கங்களை வருக! வருக!! வரவேற்போம்.
நடக்கவிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின்மூலம் உலக இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படப்போவதை நினைக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. மகிழ்ச்சியில் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன.
அதற்குமுன் சில வார்த்தைகள்....
எந்த ஒரு காரியத்தையும் சொல்வது சுலபம். அதை செய்யும்போதுதான் அதன் தன்மை, இடர்பாடு, பொருப்பு, சிரமம், பலன்கள் புரியும். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் எல்லோராலும் செய்ய முடியாது. அதற்கென்று சில தகுதியும் வலிமையும் வேண்டும். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணிற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதன் அடிப்படையில் பெண்களுக்கு இஸ்லாத்தில் சில காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 'இமாமத்' என்று அழைக்கப்படும் முன் நின்று தொழ வைப்பதுவும் ஒன்று.
ஆணும் பெண்ணும் ஐந்து நேரம் தொழவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை, ஒரு நேர தொழுகையை விட நேர்ந்தால் அடுத்த நேர தொழுகையின்போது விட்டத்தொழுகையை நிறைவேற்றவேண்டும் என்பது சட்டம். ஆனால் உபாதையுள்ள அந்த ஆறு நாட்களிலும், பிரசவ காலங்களிலும் விடுபடும் தொழுகையை பின்பு நிறைவேற்றவேண்டும் என்ற சட்டம் பெண்களுக்கு இல்லை. இத்தகைய இயற்கை அமைப்பு பெண்களுக்கு அமைந்திருப்பதாலும் இமாமத் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் மட்டும்தானா? மற்ற மதங்களில் இல்லையா....?
இஸ்லாத்தில் மட்டும் இந்த தடையா? மற்ற மதங்களில்... ஏன் இந்து மதத்தில் அர்ச்சகர்களாகவோ பூசாரிகளாகவோ பெண்கள் எந்த கோவிலிலாவது இருக்கிறார்களா? ஏன், கற்பகிரஹத்துக்குள் பெண்கள் செல்ல முடியுமா? அங்கு செல்ல அனுமதி கிடையாதே! பெண் தெய்வமாகிய மீனாட்சி அம்மனாக இருந்தாலும் சரி அல்லது மாரியம்மனாக இருந்தாலும் சரி அபிஷேகம் செய்யவும் அலங்காரம் செய்யவும் ஆண்களுக்கே அனுமதி உண்டு. பெண் தெய்வம், நாங்கள்தான் செய்வோம் என்று எந்த பெண்ணும் குரல் எழுப்ப முடியாது.
இந்து மதத்தில் இப்படி என்றால் கிருஸ்துவ மதத்தில் ஒரு பெண் பாதிரியாரையோ, ஒரு பெண் பிஷப்பையோ காட்டமுடியுமா? அது எவாஞ்சலிக்களாகட்டும் பெந்தகொஸ்தேயாகட்டும் அல்லது மார்த்தோமாவாகட்டும், ஜாக்கோபைட்டாகட்டும் அல்லது ரோமன் கத்தோலிக்காகட்டும் சிரியன் கத்தோலிக்காகட்டும் எந்த பிரிவிலாவது காட்டமுடியுமா?
அப்படியானால் இந்து மதத்திலும் கிருஸ்துவ மதத்திலும் பால் வேற்றுமை காட்டப்படுகிறதா? இல்லை பெண்கள் அடக்கியாளப்பட்டு ஆணாதிக்கம் ஓங்கி நிற்கிறதா? இல்லை பெண்கள் அடிமைப் படுத்தப்படுகிறார்களா? இல்லையில்லை, அங்கேயெல்லாம் கிடையாது இஸ்லாத்தில் மட்டும்தான் பெண்கள் வேற்றுமைப் படுத்தப்படுகிறார்கள்.
அறிவின் ஆணவம் ஆஸ்ரா நொமானியின் கண்ணை மறைத்திருக்கிறது, பட்ட பிறகுதான் ஞானம் பிறக்கும். யாராவது எங்கேயாவது இஸ்லாத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் போதும் திரு. ஆசாரகீனனுக்கு அல்வா தின்பதுபோலாகிவிடும். உடனே வஹாபியையும் இடது சாரியையும் கூடவே மவுண்ட் ரோடு மா(ஒ)வையும் மென்று துப்புவது பழக்கமாகிவிட்டது. இதில் அவருக்கு சந்தோஷம் இருக்குமென்றால் அதை கெடுக்க நான் விரும்பவில்லை. நன்றாகவே மென்று துப்பட்டும். இதிலாவது அவரது மனம் அமைதி பெறட்டும், வாழ்த்துக்கள்!
இவண்,
ஹமீது ஜாஃபர்.
Friday March 11, 2005 திண்ணை
திருமதி ஆஸ்ரா நொமானி அவர்கள் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு எழுதியதை தமிழாக்கம் செய்தமைக்கும் நிகழும் மார்ச் திங்கள் 18 நாள் நடக்கவிருக்கும் முஸ்லிம் பெண்கள் தலமையில் நடக்கவுள்ள தொழுகை செய்தியையும் திண்ணையின் மூலம் வெளியிட்ட திரு ஆசாரகீனன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்களை ஓரங்கட்டும் போக்கையும், ஆணாதிக்கத்தன்மையையும், வஹாபியிஸ அடிப்படை வாதத்தின் பாதிப்பையும் எதிர்த்து புரட்சி செய்துக்கொண்டிருக்கும் திருமதி ஆஸரா நொமானி பங்கேற்கும் 16 மற்றும் 18 தேதி நிகழ்ச்சிகளை வரவேற்காமல் இருக்கமுடியாது.
எத்தனை காலத்திற்கு ஆண்கள் பின்னால் தனி இடத்தில் நின்று தொழுவது? நாங்கள் என்ன அடிமைகளா? இல்லை பிள்ளை பெறும் எந்திரங்களா? போதும் பதிநான்கு நூற்றாண்டுகள் பட்ட அவதி. எங்களுக்கு எல்லா தகுதிகளும் இருக்கின்றன. இனி நாங்கள் முன் நின்று தொழுகை நடத்துவோம், எங்களுக்குப் பின்னால் ஆண்கள் நிற்கட்டும் என வீறுகொண்டு வேங்கை என சீறி வரும் மாதர்குல மாணிக்கங்களை வருக! வருக!! வரவேற்போம்.
நடக்கவிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின்மூலம் உலக இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படப்போவதை நினைக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. மகிழ்ச்சியில் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன.
அதற்குமுன் சில வார்த்தைகள்....
எந்த ஒரு காரியத்தையும் சொல்வது சுலபம். அதை செய்யும்போதுதான் அதன் தன்மை, இடர்பாடு, பொருப்பு, சிரமம், பலன்கள் புரியும். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் எல்லோராலும் செய்ய முடியாது. அதற்கென்று சில தகுதியும் வலிமையும் வேண்டும். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணிற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதன் அடிப்படையில் பெண்களுக்கு இஸ்லாத்தில் சில காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 'இமாமத்' என்று அழைக்கப்படும் முன் நின்று தொழ வைப்பதுவும் ஒன்று.
ஆணும் பெண்ணும் ஐந்து நேரம் தொழவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை, ஒரு நேர தொழுகையை விட நேர்ந்தால் அடுத்த நேர தொழுகையின்போது விட்டத்தொழுகையை நிறைவேற்றவேண்டும் என்பது சட்டம். ஆனால் உபாதையுள்ள அந்த ஆறு நாட்களிலும், பிரசவ காலங்களிலும் விடுபடும் தொழுகையை பின்பு நிறைவேற்றவேண்டும் என்ற சட்டம் பெண்களுக்கு இல்லை. இத்தகைய இயற்கை அமைப்பு பெண்களுக்கு அமைந்திருப்பதாலும் இமாமத் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் மட்டும்தானா? மற்ற மதங்களில் இல்லையா....?
இஸ்லாத்தில் மட்டும் இந்த தடையா? மற்ற மதங்களில்... ஏன் இந்து மதத்தில் அர்ச்சகர்களாகவோ பூசாரிகளாகவோ பெண்கள் எந்த கோவிலிலாவது இருக்கிறார்களா? ஏன், கற்பகிரஹத்துக்குள் பெண்கள் செல்ல முடியுமா? அங்கு செல்ல அனுமதி கிடையாதே! பெண் தெய்வமாகிய மீனாட்சி அம்மனாக இருந்தாலும் சரி அல்லது மாரியம்மனாக இருந்தாலும் சரி அபிஷேகம் செய்யவும் அலங்காரம் செய்யவும் ஆண்களுக்கே அனுமதி உண்டு. பெண் தெய்வம், நாங்கள்தான் செய்வோம் என்று எந்த பெண்ணும் குரல் எழுப்ப முடியாது.
இந்து மதத்தில் இப்படி என்றால் கிருஸ்துவ மதத்தில் ஒரு பெண் பாதிரியாரையோ, ஒரு பெண் பிஷப்பையோ காட்டமுடியுமா? அது எவாஞ்சலிக்களாகட்டும் பெந்தகொஸ்தேயாகட்டும் அல்லது மார்த்தோமாவாகட்டும், ஜாக்கோபைட்டாகட்டும் அல்லது ரோமன் கத்தோலிக்காகட்டும் சிரியன் கத்தோலிக்காகட்டும் எந்த பிரிவிலாவது காட்டமுடியுமா?
அப்படியானால் இந்து மதத்திலும் கிருஸ்துவ மதத்திலும் பால் வேற்றுமை காட்டப்படுகிறதா? இல்லை பெண்கள் அடக்கியாளப்பட்டு ஆணாதிக்கம் ஓங்கி நிற்கிறதா? இல்லை பெண்கள் அடிமைப் படுத்தப்படுகிறார்களா? இல்லையில்லை, அங்கேயெல்லாம் கிடையாது இஸ்லாத்தில் மட்டும்தான் பெண்கள் வேற்றுமைப் படுத்தப்படுகிறார்கள்.
அறிவின் ஆணவம் ஆஸ்ரா நொமானியின் கண்ணை மறைத்திருக்கிறது, பட்ட பிறகுதான் ஞானம் பிறக்கும். யாராவது எங்கேயாவது இஸ்லாத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் போதும் திரு. ஆசாரகீனனுக்கு அல்வா தின்பதுபோலாகிவிடும். உடனே வஹாபியையும் இடது சாரியையும் கூடவே மவுண்ட் ரோடு மா(ஒ)வையும் மென்று துப்புவது பழக்கமாகிவிட்டது. இதில் அவருக்கு சந்தோஷம் இருக்குமென்றால் அதை கெடுக்க நான் விரும்பவில்லை. நன்றாகவே மென்று துப்பட்டும். இதிலாவது அவரது மனம் அமைதி பெறட்டும், வாழ்த்துக்கள்!
இவண்,
ஹமீது ஜாஃபர்.
Friday March 11, 2005 திண்ணை
அஸ்ரா நொமானி
அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை
ஹமீது ஜாஃபர்
இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார். இது மில்லினியத்தின் புரட்சி என்று சொன்னால் தகும். இந்த செய்தி இங்குள்ள பத்திரிக்கைகளிலும் வந்தன. இதில் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ திரு ஆசாரகீனனுக்கு மெத்த மகிழ்ச்சியை தந்திருக்கும். காரணம் எந்த பலனையும் எதிர்பாராமல் நியுயார்க் நகர சுற்றுவட்டார தமிழர்களை சாதிமத பேதமின்றி வருகை புரிந்து ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்தவராயிற்றே, நல்லவேலை மவுண்ட் ரோடு மா(ஓ) அருகில் இல்லை. இருந்திருந்தால் அவருக்கு ஷ்பெஷல் அழைப்பு விடுத்திருப்பார்.
இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துக்கொண்டுதானிருக்கின்றன. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகள் பழக்கமுள்ளது. தன்னை ஒரு நபியாக பிரகடனப்படுத்திக்கொண்ட மிர்ஜா குலாம் முஸ்தபா காதியானி ஒரு கூட்டத்தையே தன்பக்கம் இழுத்துவைத்திருந்தார். அவர்களுக்காக ரகசியமாக கஃபாவையும் (மக்காவிலுள்ள இறை ஆலையம்), சொர்க்க, நரகத்தையும் உருவாக்கி அதன் திறப்புவிழா தினத்தன்று டாய்லட்டில் விழுந்து மூச்சைவிட்டார். பாவம்! அவர் உருவாக்கியதை திறக்கக்கூடமுடியவில்ல, அத்துடன் அந்த சகாப்தம் முடிந்தது.
தமிழகத்தில், தனது நாவன்மையாலும் எழுத்தாலும் ஒரு பகுதி மக்களை தன்பக்கத்தில் வைத்திருந்து இஸ்லாத்திற்குள் மாயயை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியவர் பா. தாவுத் ஷா. அவருடைய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
மொகலாய மன்னர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றவராக வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்படும் பேரரசர் அக்பர், தான் கொண்டுவந்த 'தீனே இலாஹி' யில் அவருடன் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். அதுவும் அவருடன் அழிந்தது.
இப்படி வரலாற்றில் பலபேர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களைப் போல்தான் அவர்கள் செய்த சாதனைகள். அதனால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யார்யாரோ என்னென்னவோ செய்துக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் என்னவோ தெரியவில்ல அது தனக்குத் தானாக வளர்ந்துகொண்டே போகிறது. 1934 முதல் 1984 வரையிலான ஐம்பாதாண்டு கால கணக்குப்படி இஸ்லாம் 235 விழுக்காடு வளர்ந்திருப்பதாக Keith W. Stump என்பவர் கூறுகிறார்.
இறைவனாலும் இறைதூதராலும் வகுக்கப்பட்ட சட்டத்தை மாற்றவோ மீறவோ எவருக்கும் உரிமை கிடையாது. யுக முடிவு வரை ஒரே சட்டம் தான், அதைதான் பின்பற்றியாகவேண்டும். அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று தனக்குத்தானாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதனை மீறும்போது தட்டி கொடுக்கமாட்டார்கள். உண்மையை உணர்த்த தட்டிக்கேட்பார்கள். இதற்கு அடிப்படை வாதம் என்று சொல்வது அறியாமையின் முத்திரை. இப்படி மீறி நடந்து சாதனைப் படைத்தால் அது அவர்களைப் பொருத்தவரை வெற்றிதான். அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்குமா என்பதுதான் கேள்விகுறி!
இது ஒருபக்கம் இருந்தலும் தாம் நினைத்ததை சாதித்துவிட்டோம், சாதனைப் படைத்துவிட்டோம் என்ற வெற்றி பெருமிதத்தில் நீந்தி திளைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போது மூழ்குவார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியாது. இத்தகைய அறிவிலிகளுக்கு வேதனைகள் வரும்போது காரணம் தெரியாமல் உள்ளுக்குள் ஒப்பாரி வைப்பார்களே தவிர தன்வினைதான் காரணம் என்பது தெரியாது. வரம்பு மீறும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனசாட்சி சமயம் பார்த்து நிதானமாக கொல்ல ஆரம்பிக்கும். இது இயற்கை நியதி. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது.
எனவே அஸ்ரா நொமானியாக இருந்தாலும் சரி, ஆமினா வதூதாக இருந்தாலும் சரி, இர்ஷத் மன்ஜியாக இருந்தாலும் சரி, இல்லை Thank God I am an atheist என்று சொல்பவராக இருந்தாலும் சரி அவர்களின் விதி அவர்கள் கைகளிலேயே உள்ளது., சமுதாயம் அதற்கு பொருப்பல்ல. 'What they are today in the result of what they were yesterday'.
---o0o---
Friday April 8, 2005 திண்ணை
ஹமீது ஜாஃபர்
இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார். இது மில்லினியத்தின் புரட்சி என்று சொன்னால் தகும். இந்த செய்தி இங்குள்ள பத்திரிக்கைகளிலும் வந்தன. இதில் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ திரு ஆசாரகீனனுக்கு மெத்த மகிழ்ச்சியை தந்திருக்கும். காரணம் எந்த பலனையும் எதிர்பாராமல் நியுயார்க் நகர சுற்றுவட்டார தமிழர்களை சாதிமத பேதமின்றி வருகை புரிந்து ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்தவராயிற்றே, நல்லவேலை மவுண்ட் ரோடு மா(ஓ) அருகில் இல்லை. இருந்திருந்தால் அவருக்கு ஷ்பெஷல் அழைப்பு விடுத்திருப்பார்.
இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துக்கொண்டுதானிருக்கின்றன. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகள் பழக்கமுள்ளது. தன்னை ஒரு நபியாக பிரகடனப்படுத்திக்கொண்ட மிர்ஜா குலாம் முஸ்தபா காதியானி ஒரு கூட்டத்தையே தன்பக்கம் இழுத்துவைத்திருந்தார். அவர்களுக்காக ரகசியமாக கஃபாவையும் (மக்காவிலுள்ள இறை ஆலையம்), சொர்க்க, நரகத்தையும் உருவாக்கி அதன் திறப்புவிழா தினத்தன்று டாய்லட்டில் விழுந்து மூச்சைவிட்டார். பாவம்! அவர் உருவாக்கியதை திறக்கக்கூடமுடியவில்ல, அத்துடன் அந்த சகாப்தம் முடிந்தது.
தமிழகத்தில், தனது நாவன்மையாலும் எழுத்தாலும் ஒரு பகுதி மக்களை தன்பக்கத்தில் வைத்திருந்து இஸ்லாத்திற்குள் மாயயை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியவர் பா. தாவுத் ஷா. அவருடைய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
மொகலாய மன்னர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றவராக வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்படும் பேரரசர் அக்பர், தான் கொண்டுவந்த 'தீனே இலாஹி' யில் அவருடன் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். அதுவும் அவருடன் அழிந்தது.
இப்படி வரலாற்றில் பலபேர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களைப் போல்தான் அவர்கள் செய்த சாதனைகள். அதனால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யார்யாரோ என்னென்னவோ செய்துக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் என்னவோ தெரியவில்ல அது தனக்குத் தானாக வளர்ந்துகொண்டே போகிறது. 1934 முதல் 1984 வரையிலான ஐம்பாதாண்டு கால கணக்குப்படி இஸ்லாம் 235 விழுக்காடு வளர்ந்திருப்பதாக Keith W. Stump என்பவர் கூறுகிறார்.
இறைவனாலும் இறைதூதராலும் வகுக்கப்பட்ட சட்டத்தை மாற்றவோ மீறவோ எவருக்கும் உரிமை கிடையாது. யுக முடிவு வரை ஒரே சட்டம் தான், அதைதான் பின்பற்றியாகவேண்டும். அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று தனக்குத்தானாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதனை மீறும்போது தட்டி கொடுக்கமாட்டார்கள். உண்மையை உணர்த்த தட்டிக்கேட்பார்கள். இதற்கு அடிப்படை வாதம் என்று சொல்வது அறியாமையின் முத்திரை. இப்படி மீறி நடந்து சாதனைப் படைத்தால் அது அவர்களைப் பொருத்தவரை வெற்றிதான். அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்குமா என்பதுதான் கேள்விகுறி!
இது ஒருபக்கம் இருந்தலும் தாம் நினைத்ததை சாதித்துவிட்டோம், சாதனைப் படைத்துவிட்டோம் என்ற வெற்றி பெருமிதத்தில் நீந்தி திளைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போது மூழ்குவார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியாது. இத்தகைய அறிவிலிகளுக்கு வேதனைகள் வரும்போது காரணம் தெரியாமல் உள்ளுக்குள் ஒப்பாரி வைப்பார்களே தவிர தன்வினைதான் காரணம் என்பது தெரியாது. வரம்பு மீறும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனசாட்சி சமயம் பார்த்து நிதானமாக கொல்ல ஆரம்பிக்கும். இது இயற்கை நியதி. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது.
எனவே அஸ்ரா நொமானியாக இருந்தாலும் சரி, ஆமினா வதூதாக இருந்தாலும் சரி, இர்ஷத் மன்ஜியாக இருந்தாலும் சரி, இல்லை Thank God I am an atheist என்று சொல்பவராக இருந்தாலும் சரி அவர்களின் விதி அவர்கள் கைகளிலேயே உள்ளது., சமுதாயம் அதற்கு பொருப்பல்ல. 'What they are today in the result of what they were yesterday'.
---o0o---
Friday April 8, 2005 திண்ணை
Sunday, August 30, 2009
கஅபா
கஅபா ஒரு சிறுவிளக்கம்
ஹமீது ஜா·பர்
ஒன்றைப் பற்றிய கருத்து அல்லது பொருள் அல்லது அபிப்பிராயம் கொள்வது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். யார் எதைப் பற்றியும் எந்த கருத்தையும் கொள்ளலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும்போதுதான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆழ்ந்து ஆராயாமல் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போனால் அது பாமர மக்களை சென்றடையும்போது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படி பலர்; அறிஞர்கள் என்று தங்களைத் தாங்களே பறைச் சாற்றிக்கொள்பவர்கள் சிலர் செய்ததின் விளைவாக இன்று இஸ்லாம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு வருகிறது. "இஸ்லாம் தறாகப் புரிந்துக்கொள்ளப்பட்ட மிக உயர்வான மார்க்கம்" என்று பெர்னார்ட் ஷா சொன்ன கூற்றை இன்று இஸ்லாமியர்களே நிரூபித்து வருகின்றனர்.
இஸ்லாமிய வணக்க வழிபாடு மாற்று மதத்தவருள் சிலருக்கு ஒரு வித சிலை வணக்கமாகத்தான் தோன்றும், இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பற்றி புரியாமல் வளர்ந்து அல்லது புரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே இல்லாத அழகிய முஸ்லிம் பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கின்ற இஸ்லாமியனுக்கும் அப்படி தோன்றுவது வேதனைக்குரியது. உடல் வளர்ந்திருக்கும் அளவுக்கு உள்ளம் வளரவில்லை என்று சொல்லலாம். அத்தகையவர்கள் பத்து வயது சிறுவனின் நிலையில் இருக்கிறார்கள் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.
மார்க்க அறிஞர் ஒருவரிடம் ஏழு வயது நிறம்பாத சிறுவன் ஒரு கேள்வி கேட்டான். அவன் கேட்ட கேள்வி இதுதான்: எல்லோரையும்போல் நானும் இறைவனை வணங்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனவே 'இறைவன் எங்கே இருக்கிறான்? என்று சொல்லுங்கள். 'மேலே இருக்கிறான், வானத்தில் இருக்கிறான்' என்று அந்த அறிஞர் பதிலைச் சொன்னவுடன், எந்தவிதத் தடையுமில்லாமல், 'என் தாய் தந்தையர் சொல்வதுபோல்தான் நீங்களும் சொல்கிறீர்கள், அவன் வானத்தில் இருந்தால் நாம் வானத்தைப் பார்த்துத்தானே வணங்கவேண்டும்? தரையில் தலையை வைத்து வணங்குகிறீர்களே, அது ஏன்? என்று அடுத்தக் கேள்வி அந்த சிறுவனிடமிருந்து வந்தது.
"மக்களிடம் உரையாடும்போது அவர்களின் பகுத்தறிவுக்குத் தகுந்தவாறு பேசுங்கள்" என்ற நபிக் கருத்தை மறவாத அந்த அறிஞர் சொன்னார், 'மகனே! இறைவன் வானத்தில் இருக்கிறான் என்பது உண்மை, ஆனால் அவன் கால்கள் மண்ணில் எங்கும் இருக்கின்றன. நாம் கண்ணால் அவற்றைப் பார்க்கமுடியாது. நாம் தரையில் தலையை வைத்து வணங்கும்போது நம் முகத்தை அவன் கால்களில் வைக்கிறோம்.'
ஏழு வயது நிறம்பாத சிறுவனுடைய நிலையில் ஐம்பதும் அறுபதும் வயது நிறம்பிய சிறுவர்கள் பலரை மக்களிடையே இன்றும் காணமுடிகிறது. 'உடல் வளர்கிற அதே வேகத்தில் உள்ளமும் வளர்கிறது' என்று உறுதியாகக் கூறமுடியாது. அப்படி வளர்ந்தால் முதியோர் அனைவரும் ஞானிகளாகவும் சிறியோர் அனைவரும் பேதைகளாகவும் இருப்பர்.
ஆரம்பமும் முடிவுமற்ற இறைவனைத் தவிர படைக்கப்பட்ட எந்த ஒன்றும், மனிதனால் வணங்கப்படும் தகுதியற்றது. மலையைப் போன்ற உறுதி வாய்ந்தப் பொருள்; காற்றைப் போன்ற அருவுருவப் பொருள்; தண்ணீரைப் போல் குறைந்த சடத் தன்மைப் பெற்ற பொருள்; மண்ணகத்தைப் போல் தன்னகத்தே ஒளியற்ற பொருள்; சூரியனைப் போல் ஒளிமிக்கப் பொருள்; சந்திரனைப் போல் ஒளியைப் பிரதிபலிக்கும் பொருள்; "அர்ஷை"ப் போல் அதி சிறப்புமிக்கப் பொருள்; அணுவைப் போல் சக்தி வாய்ந்தப் பொருள்; மனிதனைப் போல், மிருகத்தைப் போல் உயிருள்ளப் பொருள் இப்படி கோடிக்கணக்காக உள்ள எந்த பொருளையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் சட்டம். ஏனெனில் அவை அனைத்தும் படைக்கப்பட்டவை. படைக்கப்பட்ட எந்த ஒன்றையும் படைத்தவன் நிலைக்கு உயர்த்துவது இறைவனின் பிரதிநிதி என்று சிறப்பிக்கப்பட்ட மனிதனின் கீழ்த்தரமான செயலாகும்.
கஅபாவை நோக்கி முஸ்லிம்கள் வணங்குவதை சிலை வணக்கத்துடன் ஒப்பிடுவதை முஸ்லிம் அல்லாதவர்களிடம் குறிப்பாக மேற்கத்திய நாட்டவர்களிடம் இந்த சிந்தனை உள்ளது. இது இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாகவே இருந்துவருகிறது. இதற்கு பதிலலிக்கும் வகையில் பேரறிஞர் மௌலானா அஷ்ர·ப் அலி தஹ்னவி அவர்கள் தமது 'அஷ்ரா·புல் ஜவாப்' என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
கஅபவின்முன் நின்று வணங்குவதும், க·பாவை முன்நோக்கி வணங்குவதும், கஅபா என்று சொல்லப்படும் 60 அடி நீளம், 60 அடி அகலம், 60 அடி உயரம் கொண்ட சதுர வடிவான கட்டிடத்தையோ அல்லது பிறப்பும் இறப்புமற்ற இறைவனின் சமாதி? யை(யோ) அல்ல. தவிர அங்கு யாருடைய சமாதியும் இல்லை. கஅபா என்ற அந்த கட்டிடம் இருந்தாலும் அல்லது அழிந்தாலும் அல்லது இடிக்கப்பட்டாலும் அல்லது சேதப்படுத்தப்பட்டாலும் அல்லது வெறும் நிலமாக இருந்தாலும் கஅபா என்று சொல்லப்படும் அந்த இடத்தை நோக்கியே முஸ்லிம்கள் தொழவேண்டும் என்பது இறைக் கட்டளை.

கஃபா வரைபடம்(KA'BAA PLAN)

கஃபா உள்அமைப்பு(Cross section of Ka'baa)
தொழுகை என்று சொல்லப்படும் இறை வணக்கத்தில் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். உலகின் எப்பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்களது தொழுகையிலும் அந்த ஒழுங்கு ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படவேண்டும். எனவே அத்தகைய ஒழுங்கு இறைவனால் வகுக்கப்பட்டது. எல்லோரும் ஒன்றாக ஒரே ஒழுங்கில் இறைவனை வணங்கும்போது தனி மனிதன் உள்ளத்திலிருந்து வெளிப்படும் சக்தியைவிட பலபேர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் Collective Mental Force மிக சக்தி வாய்ந்தது. இதை அடிப்படையாக வைத்துதான் ஜமாஅத் தொழுகை என்று சொல்லப்படும் கூட்டுத் தொழுகை, கூட்டாக பிரார்த்தனைக் (துஆ) கேட்பது, ஹஜ் போன்றவை கடமையாக்கப்பட்டன. இது மட்டும் காரணம் அல்ல இன்னும் பல வலுவானக் காரணங்கள் உள்ளன. எனவே, இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அனைத்து செயல்களுக்கும் காரணம் இல்லாமலில்லை. அவற்றில் சில நமக்குத் தெரிகின்றன, பல தெரியவில்லை. தெரியாதது நம்முடைய குற்றம்.

கஃபா
நபிகள் நாயகம் அவர்கள் மதினா வந்தபின் அவர்களும் நபி தோழர்களும் பைத்துல் முகத்தஸி(ஜெரூஸலத்தி)லுள்ள மஸ்ஜித் அக்ஸாவை நோக்கியே 16 மாதங்கள் தொழுது வந்தார்கள். ஒரு நாள் மாலை நேரத்தொழுகை(அஸர் தொழுகை)யின்போது இறை உத்திரவு வரவே மக்காவை நோக்கித் தொழத் தொடங்கினார்கள்.
"(நபியே!) உம்முடைய முகம், அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் 'கிப்லா' (வாகிய மக்கா) வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) 'மஸ்ஜிதுல் ஹராமி'ன் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக!...." (அல் குர்ஆன் 2: 144)
ஹஜ்ருல் அஸ்வத் - இது கஅபாவின் கிழக்கு மூலையில் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் கஅபாவை ஏழு முறை வலம் வரவேண்டும். இது சொர்க்கத்திலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது, உறுதியான ஆதாரம் கிடையாது. இதை முத்தமிடுவது நபி வழி, ஆனால் இதை இறவனாக நினைத்து வணங்கும் வணக்கமல்ல.
ஒரு முறை கலி·பா உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள். பிறகு கூறினார்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். இருப்பினும், நான் நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால், நான் உன்னை முத்தமிடமாட்டேன்.' (ஆதாரம்:- நூல்: முஸ்லிம்)

ஹஜ்ருல் அஸ்வத்
தமிழ் எப்படி தொன்மைவாய்ந்த மொழியோ அதுபோல் சமஸ்கிருதம் மட்டுமல்ல அரபியும் தொன்மைவாய்ந்த மெழி. ஏறக்குறைய தமிழும் அரபியும் ஒத்த வயதுடைய மொழிகள் என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மொழியின் சில சொல் அதன் ஓசை வேறொரு மொழியில் இருக்கலாம், அதற்காக அந்த சொல்லின் மூலம் இந்த மொழியிலிருந்து வந்தது என்றோ அங்கிருந்து இங்கு போனது என்றோ சொல்லமுடியாது. அதேபோல் ஒரு மொழியில் ஆளப்படும் சொல் வேறொரு மொழியில் விகாரமானப் பொருளைத் தரக்கூடும், அதற்காக இது வளமில்லாத மொழி என்று தீர்மானிக்கமுடியாது. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென்று தனித்தன்மை உள்ளது. எனவே கஅபாவும் கர்ப்பகிரஹமும் ஒன்றல்ல; ஹஜ்ருல் அஸ்வத் என்ற கருப்புக் கல்லும் அஷ்வேத என்ற கருப்பல்லாத (any color) சிவ லிங்கமும் ஒன்றல்ல. எனவே ஒன்றை மற்றொன்றுடன் உரசிப்பார்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
---o0o---
குறிப்பு: இது திண்ணை 29-6-06 இதழில் திரு. சூபிமுகமது எழுதிய கட்டுரைக்குப் பதில்
Friday July 14, 2006 திண்ணையில் வெளிவந்தது.
ஹமீது ஜா·பர்
ஒன்றைப் பற்றிய கருத்து அல்லது பொருள் அல்லது அபிப்பிராயம் கொள்வது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். யார் எதைப் பற்றியும் எந்த கருத்தையும் கொள்ளலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும்போதுதான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆழ்ந்து ஆராயாமல் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போனால் அது பாமர மக்களை சென்றடையும்போது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படி பலர்; அறிஞர்கள் என்று தங்களைத் தாங்களே பறைச் சாற்றிக்கொள்பவர்கள் சிலர் செய்ததின் விளைவாக இன்று இஸ்லாம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு வருகிறது. "இஸ்லாம் தறாகப் புரிந்துக்கொள்ளப்பட்ட மிக உயர்வான மார்க்கம்" என்று பெர்னார்ட் ஷா சொன்ன கூற்றை இன்று இஸ்லாமியர்களே நிரூபித்து வருகின்றனர்.
இஸ்லாமிய வணக்க வழிபாடு மாற்று மதத்தவருள் சிலருக்கு ஒரு வித சிலை வணக்கமாகத்தான் தோன்றும், இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பற்றி புரியாமல் வளர்ந்து அல்லது புரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே இல்லாத அழகிய முஸ்லிம் பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கின்ற இஸ்லாமியனுக்கும் அப்படி தோன்றுவது வேதனைக்குரியது. உடல் வளர்ந்திருக்கும் அளவுக்கு உள்ளம் வளரவில்லை என்று சொல்லலாம். அத்தகையவர்கள் பத்து வயது சிறுவனின் நிலையில் இருக்கிறார்கள் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.
மார்க்க அறிஞர் ஒருவரிடம் ஏழு வயது நிறம்பாத சிறுவன் ஒரு கேள்வி கேட்டான். அவன் கேட்ட கேள்வி இதுதான்: எல்லோரையும்போல் நானும் இறைவனை வணங்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனவே 'இறைவன் எங்கே இருக்கிறான்? என்று சொல்லுங்கள். 'மேலே இருக்கிறான், வானத்தில் இருக்கிறான்' என்று அந்த அறிஞர் பதிலைச் சொன்னவுடன், எந்தவிதத் தடையுமில்லாமல், 'என் தாய் தந்தையர் சொல்வதுபோல்தான் நீங்களும் சொல்கிறீர்கள், அவன் வானத்தில் இருந்தால் நாம் வானத்தைப் பார்த்துத்தானே வணங்கவேண்டும்? தரையில் தலையை வைத்து வணங்குகிறீர்களே, அது ஏன்? என்று அடுத்தக் கேள்வி அந்த சிறுவனிடமிருந்து வந்தது.
"மக்களிடம் உரையாடும்போது அவர்களின் பகுத்தறிவுக்குத் தகுந்தவாறு பேசுங்கள்" என்ற நபிக் கருத்தை மறவாத அந்த அறிஞர் சொன்னார், 'மகனே! இறைவன் வானத்தில் இருக்கிறான் என்பது உண்மை, ஆனால் அவன் கால்கள் மண்ணில் எங்கும் இருக்கின்றன. நாம் கண்ணால் அவற்றைப் பார்க்கமுடியாது. நாம் தரையில் தலையை வைத்து வணங்கும்போது நம் முகத்தை அவன் கால்களில் வைக்கிறோம்.'
ஏழு வயது நிறம்பாத சிறுவனுடைய நிலையில் ஐம்பதும் அறுபதும் வயது நிறம்பிய சிறுவர்கள் பலரை மக்களிடையே இன்றும் காணமுடிகிறது. 'உடல் வளர்கிற அதே வேகத்தில் உள்ளமும் வளர்கிறது' என்று உறுதியாகக் கூறமுடியாது. அப்படி வளர்ந்தால் முதியோர் அனைவரும் ஞானிகளாகவும் சிறியோர் அனைவரும் பேதைகளாகவும் இருப்பர்.
ஆரம்பமும் முடிவுமற்ற இறைவனைத் தவிர படைக்கப்பட்ட எந்த ஒன்றும், மனிதனால் வணங்கப்படும் தகுதியற்றது. மலையைப் போன்ற உறுதி வாய்ந்தப் பொருள்; காற்றைப் போன்ற அருவுருவப் பொருள்; தண்ணீரைப் போல் குறைந்த சடத் தன்மைப் பெற்ற பொருள்; மண்ணகத்தைப் போல் தன்னகத்தே ஒளியற்ற பொருள்; சூரியனைப் போல் ஒளிமிக்கப் பொருள்; சந்திரனைப் போல் ஒளியைப் பிரதிபலிக்கும் பொருள்; "அர்ஷை"ப் போல் அதி சிறப்புமிக்கப் பொருள்; அணுவைப் போல் சக்தி வாய்ந்தப் பொருள்; மனிதனைப் போல், மிருகத்தைப் போல் உயிருள்ளப் பொருள் இப்படி கோடிக்கணக்காக உள்ள எந்த பொருளையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் சட்டம். ஏனெனில் அவை அனைத்தும் படைக்கப்பட்டவை. படைக்கப்பட்ட எந்த ஒன்றையும் படைத்தவன் நிலைக்கு உயர்த்துவது இறைவனின் பிரதிநிதி என்று சிறப்பிக்கப்பட்ட மனிதனின் கீழ்த்தரமான செயலாகும்.
கஅபாவை நோக்கி முஸ்லிம்கள் வணங்குவதை சிலை வணக்கத்துடன் ஒப்பிடுவதை முஸ்லிம் அல்லாதவர்களிடம் குறிப்பாக மேற்கத்திய நாட்டவர்களிடம் இந்த சிந்தனை உள்ளது. இது இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாகவே இருந்துவருகிறது. இதற்கு பதிலலிக்கும் வகையில் பேரறிஞர் மௌலானா அஷ்ர·ப் அலி தஹ்னவி அவர்கள் தமது 'அஷ்ரா·புல் ஜவாப்' என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
கஅபவின்முன் நின்று வணங்குவதும், க·பாவை முன்நோக்கி வணங்குவதும், கஅபா என்று சொல்லப்படும் 60 அடி நீளம், 60 அடி அகலம், 60 அடி உயரம் கொண்ட சதுர வடிவான கட்டிடத்தையோ அல்லது பிறப்பும் இறப்புமற்ற இறைவனின் சமாதி? யை(யோ) அல்ல. தவிர அங்கு யாருடைய சமாதியும் இல்லை. கஅபா என்ற அந்த கட்டிடம் இருந்தாலும் அல்லது அழிந்தாலும் அல்லது இடிக்கப்பட்டாலும் அல்லது சேதப்படுத்தப்பட்டாலும் அல்லது வெறும் நிலமாக இருந்தாலும் கஅபா என்று சொல்லப்படும் அந்த இடத்தை நோக்கியே முஸ்லிம்கள் தொழவேண்டும் என்பது இறைக் கட்டளை.

கஃபா வரைபடம்(KA'BAA PLAN)

கஃபா உள்அமைப்பு(Cross section of Ka'baa)
தொழுகை என்று சொல்லப்படும் இறை வணக்கத்தில் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். உலகின் எப்பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்களது தொழுகையிலும் அந்த ஒழுங்கு ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படவேண்டும். எனவே அத்தகைய ஒழுங்கு இறைவனால் வகுக்கப்பட்டது. எல்லோரும் ஒன்றாக ஒரே ஒழுங்கில் இறைவனை வணங்கும்போது தனி மனிதன் உள்ளத்திலிருந்து வெளிப்படும் சக்தியைவிட பலபேர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் Collective Mental Force மிக சக்தி வாய்ந்தது. இதை அடிப்படையாக வைத்துதான் ஜமாஅத் தொழுகை என்று சொல்லப்படும் கூட்டுத் தொழுகை, கூட்டாக பிரார்த்தனைக் (துஆ) கேட்பது, ஹஜ் போன்றவை கடமையாக்கப்பட்டன. இது மட்டும் காரணம் அல்ல இன்னும் பல வலுவானக் காரணங்கள் உள்ளன. எனவே, இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அனைத்து செயல்களுக்கும் காரணம் இல்லாமலில்லை. அவற்றில் சில நமக்குத் தெரிகின்றன, பல தெரியவில்லை. தெரியாதது நம்முடைய குற்றம்.

கஃபா
நபிகள் நாயகம் அவர்கள் மதினா வந்தபின் அவர்களும் நபி தோழர்களும் பைத்துல் முகத்தஸி(ஜெரூஸலத்தி)லுள்ள மஸ்ஜித் அக்ஸாவை நோக்கியே 16 மாதங்கள் தொழுது வந்தார்கள். ஒரு நாள் மாலை நேரத்தொழுகை(அஸர் தொழுகை)யின்போது இறை உத்திரவு வரவே மக்காவை நோக்கித் தொழத் தொடங்கினார்கள்.
"(நபியே!) உம்முடைய முகம், அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் 'கிப்லா' (வாகிய மக்கா) வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) 'மஸ்ஜிதுல் ஹராமி'ன் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக!...." (அல் குர்ஆன் 2: 144)
ஹஜ்ருல் அஸ்வத் - இது கஅபாவின் கிழக்கு மூலையில் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் கஅபாவை ஏழு முறை வலம் வரவேண்டும். இது சொர்க்கத்திலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது, உறுதியான ஆதாரம் கிடையாது. இதை முத்தமிடுவது நபி வழி, ஆனால் இதை இறவனாக நினைத்து வணங்கும் வணக்கமல்ல.
ஒரு முறை கலி·பா உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள். பிறகு கூறினார்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். இருப்பினும், நான் நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால், நான் உன்னை முத்தமிடமாட்டேன்.' (ஆதாரம்:- நூல்: முஸ்லிம்)

ஹஜ்ருல் அஸ்வத்
தமிழ் எப்படி தொன்மைவாய்ந்த மொழியோ அதுபோல் சமஸ்கிருதம் மட்டுமல்ல அரபியும் தொன்மைவாய்ந்த மெழி. ஏறக்குறைய தமிழும் அரபியும் ஒத்த வயதுடைய மொழிகள் என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மொழியின் சில சொல் அதன் ஓசை வேறொரு மொழியில் இருக்கலாம், அதற்காக அந்த சொல்லின் மூலம் இந்த மொழியிலிருந்து வந்தது என்றோ அங்கிருந்து இங்கு போனது என்றோ சொல்லமுடியாது. அதேபோல் ஒரு மொழியில் ஆளப்படும் சொல் வேறொரு மொழியில் விகாரமானப் பொருளைத் தரக்கூடும், அதற்காக இது வளமில்லாத மொழி என்று தீர்மானிக்கமுடியாது. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென்று தனித்தன்மை உள்ளது. எனவே கஅபாவும் கர்ப்பகிரஹமும் ஒன்றல்ல; ஹஜ்ருல் அஸ்வத் என்ற கருப்புக் கல்லும் அஷ்வேத என்ற கருப்பல்லாத (any color) சிவ லிங்கமும் ஒன்றல்ல. எனவே ஒன்றை மற்றொன்றுடன் உரசிப்பார்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
---o0o---
குறிப்பு: இது திண்ணை 29-6-06 இதழில் திரு. சூபிமுகமது எழுதிய கட்டுரைக்குப் பதில்
Friday July 14, 2006 திண்ணையில் வெளிவந்தது.
குடி கலச்சாரம்?
ஹமீது ஜாஃபர்
கடந்த இரண்டு வாரங்களாக ஹெச். ஜி. ரசூலின் பிரச்சினைக் குறித்து திண்ணையில் வந்த செய்திகள் என்னை அதிரவைத்தது. அவரை காஃபிர் என்று அங்குள்ள உலமாக்கள் சபையால் தீர்ப்பளித்திருப்பதும், அந்த ஊர் சமுதாயம்(ஜமாஅத்) அவரை குடும்பத்தோடு ஊர் விலக்கி வைத்திருப்பதையும் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவர்மீது இத்தகைய தீர்ப்பளிப்பதற்கு அவர் என்ன குற்றம் செய்தார் என்று நண்பர்கள் வட்டத்தில் விசாரித்தபோது இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் என்ற ஒரு கட்டுரை உயிர்மை என்ற பத்திரிக்கையில் எழுதியிருப்பதாக சொன்னார்கள். நேரமின்மை காரணமாக திண்ணையில் வரும் ஒரு சில எழுத்தாளர்களின் படைப்பைத் தவிர வேறு எந்த பத்திரிக்கைகளையும் படிப்பதில்லை. எனவே என்னைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை.
பிரச்சினைக்குரிய அந்த கட்டுரையைப் படிக்கவேண்டுமென்று நண்பர் ஒருவரிடம் சொன்னபோது எங்கெங்கோ தேடி கிடைக்காமல் கடைசியில் ஊரிலிருந்து வரவழைத்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் தந்தார். நான்கு மாத வயதான பழைய இதழ்.
படித்துப் பார்த்தபோது, அவர் தன்னுடைய நுணுக்க அறிவினால் மிக சாதுர்யமாக, மிகத் திறமையாக விஷத்தை கக்கி வைத்திருக்கிறார். இது அவருக்கு இயல்பாகிவிட்டது.
ஹெச். ஜி. ரசூல் நல்ல சிந்தனையாளர், நல்ல எழுத்தாளர். அவருடைய கருத்துக்கள், அவற்றை சொல்லும் முறை, எழுத்தின் நடை இவைகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தது; அவர்மீது தனி மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் சமீப காலமாக முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் அவர் தடம் மாறிப் போவதைப் பார்க்கும்போது அவர்மீது பரிதாப உணர்வே ஏற்படுகிறது.
அந்த கட்டுரையில் அவர் மூன்று விதமான கருத்தாக்கத்தை முன் வைக்கிறார். (1) மதுவின் நன்மை தீமைகளின் மதிப்பீடு, (2) சுத்தம் அசுத்தம் என்பதான கருத்தியல், (3) மதுவை குற்றவியலாகக் கருதாமல் அறிவுரை சார்ந்த அம்சம்.
இந்த மூன்றையும் வைத்து அல்லாஹ்வை வணங்கும்போது அதாவது தொழும்போது குடிபோதையில் இருக்கக்கூடாது, மற்ற நேரங்களில் இருக்கலாம்; தவிர , குடித்தாலும் - நிதானமாக இருக்கும்பட்சத்தில் - தொழலாம் என்று குர்ஆன் மறைமுகமாக அனுமதிக்கிறது என்பதுபோல் ஒரு மாயை கருத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நபிகள் கோமான் தோன்றிய காலகட்டத்தையும் சூழலையும் முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். நாகரீகம் வளர்ச்சி பெற்ற இந்திய துணை கண்டத்திலோ அல்லது எகிப்திலோ அல்லது மெஸபடோமியோவிலோ தோன்றாமல் அறிவீனர்களாக மதுவுக்கும் மங்கைக்கும் அடிமைப் பட்டு பல குழுக்களாக ஒற்றுமையற்று ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக்கொண்டு ஏறக்குறைய காட்டுமிராண்டிகளைப் போலிருந்த பாலைப் பிரதேச சமூகத்தில் தோன்றி சொல்லனா பல இன்னல்கள்பட்டு அம் மக்களை ஒற்றுமைப் படுத்தி ஒரு சமூக, அரசியல் அமைப்பை உருவாக்கி அதை உலகு முழுவதும் பரப்பி வெற்றி கண்டவர் பெருமானார் அவர்கள்.
அடிமைப்பட்டிருக்கும் எந்த செயலையும் உடனே நிறுத்த முடியாது. அப்படி இருக்கையில் புத்தியை பிறழச் செய்து இனம்புரியாத இன்பம் போன்ற மயக்க நிலையை உருவாக்கும் மதுப்பழக்கத்தை எப்படி உடனே தடை செய்யமுடியும்? எனவே குடித்தால்கூட தொழலாம்; தொழும்போது மட்டும் குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்திய மார்க்கம் ஒரு நிலை வந்தவுடன் முற்றிலும் குடிக்கக்கூடாது என்று தடை விதித்தது என்ற செய்தி உலகறிந்தது.
அதே நேரம், இஸ்லாத்தில் எதற்கும் நிர்ப்பந்தம் இல்லை. மதுபானம் போன்று எத்தனையோ பொருட்களை இஸ்லாம் தடைவிதித்துள்ளது என்றாலும் தவிர்க்கமுடியாத நிலையில் அந்த தடை செய்யப்பட்டவைகளும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக சளி, இருமல் போன்ற நோய்களுக்கான மருந்தில், இதை உட்கொள்பவர்கள் வாகனம் ஓட்டுவதையோ இயந்திரங்களை இயக்குவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதியிருப்பார்கள். ஏன்? அவற்றில் குறிப்பிட்ட அளவு போதையூட்டும் சக்தி இருக்கிறது என்பதால். வேறு வார்த்தையில் சொன்னால் அவற்றில் ஆல்கஹால் கலந்திருக்கிறது. நோய் நீங்கும் என்பதால் அவற்றை அருந்த அனுமதி உண்டு. நோயே இல்லாமல் வெறும் போதைக்காக பருகினால் அது ஹறாம். அதுமட்டுமல்ல போதை தரும் என்பதற்காக சில குளிர்பானத்தில் சில குறிப்பிட்ட மாத்திரையை கலந்து பருகினாலும் ஹறாம்தான். எனவே இங்கு செயலைவிட அதன் விளைவை கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய விளைவை கருத்தில் கொண்டுதான் மது அருந்துவதில் நன்மையைவிட தீமை அதிகம் இருக்கிறது என்று இறைவசனம் கூறுகிறது.
"சொர்க்கத்தில் மது ஆறுகள் ஓடுகிறதெனில் ஏன் இந்த உலத்தில் அந்த ஆறுகள் ஓடக்கூடாது?" என்று கேட்கிறார் ஹெச் ஜி ஆர்.
சொர்க்கத்தின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அவரால் வரையறுத்து காண்பிக்கமுடியுமா? இல்லை இப்படி இருக்கும் என்று உதாரணம் இல்லாமல் சொல்லமுடியுமா? இல்லை அவருக்கு தெரியுமா? நிச்சயமாக எனக்கும் தெரியாது; வேறு யாருக்கும் தெரியாது. அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும்.
விண்ணகத்தின் கதவுகளெல்லாம் திறக்கப்படும்போது.... என்று இறைவசனம் உள்ளது. அதற்காக விண்ணகத்தில் கதவு இருக்கிறது அது பூட்டி போட்டு பூட்டியிருக்கிறது என்று அர்த்தம் கொள்ளமுடியுமா? மனிதனாகிய உனக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள திரைகளெல்லாம் கிழித்தெறியப் படும்போது என்று பொருள் கொண்டால் அது ஓரளவுக்குப் பொருந்தும்! குர்ஆன் என்பது நீண்ட நாவல் அல்ல அல்லது கதை சொல்லும் புராணம் அல்ல. அது ஒரு பேரிலக்கியம் என்று மேற்கத்திய கிழக்கத்திய ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட திருமறை வசனங்களுக்கு literary meaning கொடுத்தால் அதன் இலக்கியத் தன்மை கெடுவதோடு அதனைக் கேலி செய்வதுபோல் ஆகிவிடும். இதனைக் கருத்தில் கொண்டுதான் குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய அறிஞர்கள் இப்படி சொல்கிறார்கள்: "எங்கள் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த புனித குர்ஆனுக்கு விரிவுரை செய்துள்ளோம், இதுதான் இறுதியான கருத்து என்று சொல்லமுடியாது, நாளை மேலும் சிறப்பான விளக்கம் வரலாம்..."
மேலும் அவர் (1) அரபு நாடுகளில் மது அருந்துவதற்கு அனுமதித்திருப்பது பற்றியும், (2) முஸ்லிம்கள் மதுவை வெறுப்பதற்குக் காரணம் மேற்கை வெறுப்பதே என்றும் , (3) அமெரிக்க முஸ்லிம்கள் இங்குள்ள பிறர் அனுபவிக்கும் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியவில்லை என்றும் அங்காலாய்த்துள்ளார்.
(1) ஒரு நாட்டில் மது தடை விதித்திருப்பதும் விதிக்காமலிருப்பதும் அந்த நாட்டின் சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்தது. பெட்ரோல் வளமிக்க அரபு நாடுகளில் தங்களது சுய வலுவைவிட ஏகாதிபத்தியங்களின் அழுத்தம் அதிகம். இவர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மைகள்.
(2) தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறிகட்டியதுபோல் இருக்கிறது இவரது கருத்து. இறைசொல், நபிசொல், இஸ்லாத்தின் சட்டம் எல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய்; மேற்குதான் எல்லாம். அப்படியானால் மது அருந்தும் முஸ்லிம்களுக்கு மேற்கு என்ன அள்ளி கொடுக்கிறது?
(3) அமெரிக்காவிற்கென்று என்ன கலாச்சாரம் இருக்கிறது? அவர்களின் free sex; single parent; இன்னும் சொல்லமுடியாத வாழ்க்கை முறை அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு வேண்டும் என்கிறீர்களா? ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களின் மன உளைச்சளை அதே இதழில் இளைய அப்துல்லா எழுதியுள்ளாரே! அது சுதந்திரமான வாழ்க்கை என்கிறீர்களா?
ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது முற்போக்கான அறிவு என்ற போர்வையில் தவறிழைத்துவிட்டு அந்த தவறை நியாயப்படுத்த பன்முகங்களில் சமாதானப் படுத்த முயற்சி செய்துக்கொண்டிருக்கிறதைப் பார்க்கும்போது "தவறுக்குத் தவறான தவறை செய்துவிட்டு தறிகெட்டுப் போனேனே ஞானப் பெண்ணே!" என்ற அடி நினைவுக்கு வருகிறது.
---o0o---
Friday Sep 20, 2007 திண்ணை
கடந்த இரண்டு வாரங்களாக ஹெச். ஜி. ரசூலின் பிரச்சினைக் குறித்து திண்ணையில் வந்த செய்திகள் என்னை அதிரவைத்தது. அவரை காஃபிர் என்று அங்குள்ள உலமாக்கள் சபையால் தீர்ப்பளித்திருப்பதும், அந்த ஊர் சமுதாயம்(ஜமாஅத்) அவரை குடும்பத்தோடு ஊர் விலக்கி வைத்திருப்பதையும் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவர்மீது இத்தகைய தீர்ப்பளிப்பதற்கு அவர் என்ன குற்றம் செய்தார் என்று நண்பர்கள் வட்டத்தில் விசாரித்தபோது இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் என்ற ஒரு கட்டுரை உயிர்மை என்ற பத்திரிக்கையில் எழுதியிருப்பதாக சொன்னார்கள். நேரமின்மை காரணமாக திண்ணையில் வரும் ஒரு சில எழுத்தாளர்களின் படைப்பைத் தவிர வேறு எந்த பத்திரிக்கைகளையும் படிப்பதில்லை. எனவே என்னைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை.
பிரச்சினைக்குரிய அந்த கட்டுரையைப் படிக்கவேண்டுமென்று நண்பர் ஒருவரிடம் சொன்னபோது எங்கெங்கோ தேடி கிடைக்காமல் கடைசியில் ஊரிலிருந்து வரவழைத்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் தந்தார். நான்கு மாத வயதான பழைய இதழ்.
படித்துப் பார்த்தபோது, அவர் தன்னுடைய நுணுக்க அறிவினால் மிக சாதுர்யமாக, மிகத் திறமையாக விஷத்தை கக்கி வைத்திருக்கிறார். இது அவருக்கு இயல்பாகிவிட்டது.
ஹெச். ஜி. ரசூல் நல்ல சிந்தனையாளர், நல்ல எழுத்தாளர். அவருடைய கருத்துக்கள், அவற்றை சொல்லும் முறை, எழுத்தின் நடை இவைகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தது; அவர்மீது தனி மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் சமீப காலமாக முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் அவர் தடம் மாறிப் போவதைப் பார்க்கும்போது அவர்மீது பரிதாப உணர்வே ஏற்படுகிறது.
அந்த கட்டுரையில் அவர் மூன்று விதமான கருத்தாக்கத்தை முன் வைக்கிறார். (1) மதுவின் நன்மை தீமைகளின் மதிப்பீடு, (2) சுத்தம் அசுத்தம் என்பதான கருத்தியல், (3) மதுவை குற்றவியலாகக் கருதாமல் அறிவுரை சார்ந்த அம்சம்.
இந்த மூன்றையும் வைத்து அல்லாஹ்வை வணங்கும்போது அதாவது தொழும்போது குடிபோதையில் இருக்கக்கூடாது, மற்ற நேரங்களில் இருக்கலாம்; தவிர , குடித்தாலும் - நிதானமாக இருக்கும்பட்சத்தில் - தொழலாம் என்று குர்ஆன் மறைமுகமாக அனுமதிக்கிறது என்பதுபோல் ஒரு மாயை கருத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நபிகள் கோமான் தோன்றிய காலகட்டத்தையும் சூழலையும் முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். நாகரீகம் வளர்ச்சி பெற்ற இந்திய துணை கண்டத்திலோ அல்லது எகிப்திலோ அல்லது மெஸபடோமியோவிலோ தோன்றாமல் அறிவீனர்களாக மதுவுக்கும் மங்கைக்கும் அடிமைப் பட்டு பல குழுக்களாக ஒற்றுமையற்று ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக்கொண்டு ஏறக்குறைய காட்டுமிராண்டிகளைப் போலிருந்த பாலைப் பிரதேச சமூகத்தில் தோன்றி சொல்லனா பல இன்னல்கள்பட்டு அம் மக்களை ஒற்றுமைப் படுத்தி ஒரு சமூக, அரசியல் அமைப்பை உருவாக்கி அதை உலகு முழுவதும் பரப்பி வெற்றி கண்டவர் பெருமானார் அவர்கள்.
அடிமைப்பட்டிருக்கும் எந்த செயலையும் உடனே நிறுத்த முடியாது. அப்படி இருக்கையில் புத்தியை பிறழச் செய்து இனம்புரியாத இன்பம் போன்ற மயக்க நிலையை உருவாக்கும் மதுப்பழக்கத்தை எப்படி உடனே தடை செய்யமுடியும்? எனவே குடித்தால்கூட தொழலாம்; தொழும்போது மட்டும் குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்திய மார்க்கம் ஒரு நிலை வந்தவுடன் முற்றிலும் குடிக்கக்கூடாது என்று தடை விதித்தது என்ற செய்தி உலகறிந்தது.
அதே நேரம், இஸ்லாத்தில் எதற்கும் நிர்ப்பந்தம் இல்லை. மதுபானம் போன்று எத்தனையோ பொருட்களை இஸ்லாம் தடைவிதித்துள்ளது என்றாலும் தவிர்க்கமுடியாத நிலையில் அந்த தடை செய்யப்பட்டவைகளும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக சளி, இருமல் போன்ற நோய்களுக்கான மருந்தில், இதை உட்கொள்பவர்கள் வாகனம் ஓட்டுவதையோ இயந்திரங்களை இயக்குவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதியிருப்பார்கள். ஏன்? அவற்றில் குறிப்பிட்ட அளவு போதையூட்டும் சக்தி இருக்கிறது என்பதால். வேறு வார்த்தையில் சொன்னால் அவற்றில் ஆல்கஹால் கலந்திருக்கிறது. நோய் நீங்கும் என்பதால் அவற்றை அருந்த அனுமதி உண்டு. நோயே இல்லாமல் வெறும் போதைக்காக பருகினால் அது ஹறாம். அதுமட்டுமல்ல போதை தரும் என்பதற்காக சில குளிர்பானத்தில் சில குறிப்பிட்ட மாத்திரையை கலந்து பருகினாலும் ஹறாம்தான். எனவே இங்கு செயலைவிட அதன் விளைவை கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய விளைவை கருத்தில் கொண்டுதான் மது அருந்துவதில் நன்மையைவிட தீமை அதிகம் இருக்கிறது என்று இறைவசனம் கூறுகிறது.
"சொர்க்கத்தில் மது ஆறுகள் ஓடுகிறதெனில் ஏன் இந்த உலத்தில் அந்த ஆறுகள் ஓடக்கூடாது?" என்று கேட்கிறார் ஹெச் ஜி ஆர்.
சொர்க்கத்தின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அவரால் வரையறுத்து காண்பிக்கமுடியுமா? இல்லை இப்படி இருக்கும் என்று உதாரணம் இல்லாமல் சொல்லமுடியுமா? இல்லை அவருக்கு தெரியுமா? நிச்சயமாக எனக்கும் தெரியாது; வேறு யாருக்கும் தெரியாது. அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும்.
விண்ணகத்தின் கதவுகளெல்லாம் திறக்கப்படும்போது.... என்று இறைவசனம் உள்ளது. அதற்காக விண்ணகத்தில் கதவு இருக்கிறது அது பூட்டி போட்டு பூட்டியிருக்கிறது என்று அர்த்தம் கொள்ளமுடியுமா? மனிதனாகிய உனக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள திரைகளெல்லாம் கிழித்தெறியப் படும்போது என்று பொருள் கொண்டால் அது ஓரளவுக்குப் பொருந்தும்! குர்ஆன் என்பது நீண்ட நாவல் அல்ல அல்லது கதை சொல்லும் புராணம் அல்ல. அது ஒரு பேரிலக்கியம் என்று மேற்கத்திய கிழக்கத்திய ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட திருமறை வசனங்களுக்கு literary meaning கொடுத்தால் அதன் இலக்கியத் தன்மை கெடுவதோடு அதனைக் கேலி செய்வதுபோல் ஆகிவிடும். இதனைக் கருத்தில் கொண்டுதான் குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய அறிஞர்கள் இப்படி சொல்கிறார்கள்: "எங்கள் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த புனித குர்ஆனுக்கு விரிவுரை செய்துள்ளோம், இதுதான் இறுதியான கருத்து என்று சொல்லமுடியாது, நாளை மேலும் சிறப்பான விளக்கம் வரலாம்..."
மேலும் அவர் (1) அரபு நாடுகளில் மது அருந்துவதற்கு அனுமதித்திருப்பது பற்றியும், (2) முஸ்லிம்கள் மதுவை வெறுப்பதற்குக் காரணம் மேற்கை வெறுப்பதே என்றும் , (3) அமெரிக்க முஸ்லிம்கள் இங்குள்ள பிறர் அனுபவிக்கும் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியவில்லை என்றும் அங்காலாய்த்துள்ளார்.
(1) ஒரு நாட்டில் மது தடை விதித்திருப்பதும் விதிக்காமலிருப்பதும் அந்த நாட்டின் சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்தது. பெட்ரோல் வளமிக்க அரபு நாடுகளில் தங்களது சுய வலுவைவிட ஏகாதிபத்தியங்களின் அழுத்தம் அதிகம். இவர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மைகள்.
(2) தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறிகட்டியதுபோல் இருக்கிறது இவரது கருத்து. இறைசொல், நபிசொல், இஸ்லாத்தின் சட்டம் எல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய்; மேற்குதான் எல்லாம். அப்படியானால் மது அருந்தும் முஸ்லிம்களுக்கு மேற்கு என்ன அள்ளி கொடுக்கிறது?
(3) அமெரிக்காவிற்கென்று என்ன கலாச்சாரம் இருக்கிறது? அவர்களின் free sex; single parent; இன்னும் சொல்லமுடியாத வாழ்க்கை முறை அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு வேண்டும் என்கிறீர்களா? ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களின் மன உளைச்சளை அதே இதழில் இளைய அப்துல்லா எழுதியுள்ளாரே! அது சுதந்திரமான வாழ்க்கை என்கிறீர்களா?
ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது முற்போக்கான அறிவு என்ற போர்வையில் தவறிழைத்துவிட்டு அந்த தவறை நியாயப்படுத்த பன்முகங்களில் சமாதானப் படுத்த முயற்சி செய்துக்கொண்டிருக்கிறதைப் பார்க்கும்போது "தவறுக்குத் தவறான தவறை செய்துவிட்டு தறிகெட்டுப் போனேனே ஞானப் பெண்ணே!" என்ற அடி நினைவுக்கு வருகிறது.
---o0o---
Friday Sep 20, 2007 திண்ணை
குர்ஆன்
திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா............?
ஹமீது ஜாஃபர்
அது உயர்நிலைப் பள்ளி, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் திறந்த மறு நாள் அல்லது இரண்டாம் நாள், முதல் ஆங்கில வகுப்பு, ஆசிரியர் வந்தார், முதல் பாடத்தைத் தொடங்கினார். I - நான் என்று தன்னைச் கட்டை விரலால் சுட்டிக்காட்டிக் காட்டிக்கொண்டார், YOU - நீ என்று ஒரு மாணவனை தன் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார். இப்படி பாடம் நடத்திவிட்டு, அந்த மாணவனைக் கூப்பிட்டு எங்கே நான் கேட்பதற்கு பதில் சொல் என்று சொல்லிவிட்டு I என்றால் யார்? என்றார். உடனே அந்த மாணவன் எந்த தடையுமில்லாமல் I என்றால் நீங்கள், YOU என்றால் நான் என்றான். வகுப்பில் 'கொல்'லென்ற சிரிப்பு. அந்த மாணவன் சற்றும் தளரவில்லை தொடார்ந்தான், 'சார், I என்று உங்களைத்தானே காண்பித்துக்கொண்டீர்கள், அப்பொ அது நீங்கள் தானே! YOU என்று என்னைத்தானே காண்பித்தீர்கள், அப்பொ அது நான்தானே! இதில் என்ன தப்பு இருக்கிறது?' இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? என்றான்.
அந்த மாணவனுக்கு அவனைப் பொருத்தவரை சரியான பதில்தான். ஆனால் புரிந்துக் கொண்டதில் தவறு நடந்திருக்கிறது. அதுபோல்தான் ரசூல்ஜியும் அவர் குறிப்பிடுகிறவர்களும் சூரா ஃபாத்திஹா என்று சொல்லப்படும் அல்ஹம்து சூராவைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
திருக்குர்ஆன், அல்லாஹ் தனக்காக ஏற்படுத்திக்கொண்டதல்ல. மனித சமுதாயம் உயர்வுப் பெருவதற்காக, நற்பயன் பெறுவதற்காக, மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காக அருளப்பட்டது. மற்ற படைப்பினங்கள் போலலல்லாமல் இவனுக்கு மிகப் பெரிய பொறுப்புக்கள் இருப்பதால் ஓவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் இறைவன்
கவனமாக இருக்கிறான். மனிதன் மனிதனைப் புகழ்வதற்கும், மனிதன் ஆண்டவனைப் புகழ்வதற்கும் பாரதூரமான வித்தியாசம் உள்ளது; இவனுக்கு ஆண்டவனை எப்படி புகழவேண்டும் என்று தெரியாது. எதாவது ஒரு சங்கடம் வந்தால் ஆண்டவனுக்கு கண்ணில்லை; மூக்கில்லை என்று இகழத்தெரியுமே தவிர சங்கடத்துக்கு காரணம் தாம் தானென்று தெரியாமல் ஆண்டவன் மீது பழியைப் போடுவான். அப்படிப்பட்ட மனிதன் ஆண்டவனை எப்படி புகழவேண்டும்; எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை சூரா ஃபாத்திஹா மூலம் சொல்லிக்கொடுக்கிறான்.
எனவே ரசூல்ஜி சொல்வதுபோல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உள்ளத்திலிருந்தோ அல்லது அடிமனத்திலிருந்தோ வந்த வானவேடிக்கை அல்ல. சூரா ·பாத்திஹா, இறைவன் நமக்களித்த வரப்பிரசாதம்; நோய் தீர்க்கும் மா மருந்து. அதனால்தான் ஒவ்வொரு தொழுகையிலும் அதிகமாக ஓதப்படுகிறது. “(நபியே) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை(உடைய சூரா ஃபாத்திஹாவை) யும், இந்த மகத்தான குர்ஆனையும் கொடுத்துள்ளோம்.” (அல் குர்ஆன். 15:87)
ஒரு மனிதன் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்று துறைகளில் சிறந்து விளங்க முடியும். ஒரே துறையைச் சேர்ந்த பலரில் ஒருசிலர் மட்டுமே முன்னிலை வகுக்கின்றனர். அப்படி ஒரு சிலரில்கூட ஒருவர் மட்டுமே போற்றப்படுகிறார், புகழப்படுகிறார். அது அவரது thought force ன் வலிமையாகும். உழைப்பு; தொலைநோக்குப் பார்வை; ஒருங்கிணைந்த செயல்பாடு என்பதல்லாம் இரண்டாம் காரணங்கள். அந்த thought force அடிமனத்தில் இறங்கி தேடுவதால் “இல்ஹாம்” என்ற உதிப்பாக தேடிய செய்திகள்; பிரச்சினைக்குரிய விடைகள் கிடைக்கின்றன. இது மனிதனுக்கு இறைவன் அளித்த அருட்கொடை. அவன் எந்த துறையைச் சார்ந்திருக்கிறானோ அல்லது எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதற்குரிய விடைதான் கிடைக்குமே தவிர மாற்றமான ஒன்றும் கிடக்காது.
ஒருவர் என்ஜினியர் என்றால் அவருக்கு accurate thought இருக்குமேயானால் உலகில் எங்கெல்லாம் என்ஜினியரிங் அறிவு இருக்கிறதோ அதை தேடி கொண்டுவந்து கொடுக்கும். மாறாக உடற்கூறைப் பற்றிய செய்தி கிடைக்காது. அப்படியே சிந்தித்தாலும் 'அடப்போடா! வானவியல் படிச்சுட்டு அணு சக்தியைப் பற்றி ஆராயப்போறானாம், போய் வேலையெப் பாருடா!' என்று உள்மனம் சொல்லும். ஒரு மனிதன் எந்த அறிவும் பெறாமல், படிப்பறிவே இல்லாமல் உண்மையைச் சொல்வதானால், அது குறி சொல்வதல்ல, அல்லது weather forecast அல்ல.
உள்மனத்தூண்டலின் வெளிப்பாடா ?
பல கோடி ஆண்டுகளுக்கு முன், ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒன்றாக இருந்தது (Primary Nebula) அதன்பின் அங்கு Big Bang என்று சொல்லப்படும் ஒரு வெடித்தல் (Secondary Seperation) ஏற்பட்டது. அதன் விளைவாக Galaxies உருவாயின. அவற்றிலிருந்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் உருவாகின என்று கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கூறுகின்றனர், ....before the galaxies in the universe were formed, celestial matter was initially in the form of gaseous matter. In short, huge gaseous matter or clouds were present before the
formation of galaxies.
A new Star forming out of a cloud of gas and dust(nebula) Which is one of the ramnants of the 'SMOKE' that was the Orgin of whole universe.(The Space Atlas, Heather and Henbest, p.50.)
“(ஆரம்பத்தில்) ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்.......”(அல் குர்ஆன் 21:30)
“பின்னர், புகை(மண்டலம்) ஆக இருந்த வானத்தளவில் திரும்பி(அதனைப் படைத்து)...”(அல் குர்ஆன் 41:11)
கடந்த நூற்றாண்டின் இந்த கண்டுபிடிப்பை ஒன்றுமில்லாத பாலைவனத்தில் இருந்துக்கொண்டு எந்த கல்வி அறிவும் இல்லாத ஒரு மனிதரின் உள்மனத்தூண்டலில் வருவதற்கு சாத்தியம் உண்டா?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான கேப்டன் ஜாஜ் குஸ்ஸோ என்பவர் மத்திய தரைக்கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார். அவர் கடல் அடிக்கு சென்று ஆராய்ந்துக்கொண்டிருந்த போது, அவர் அணிந்திருந்த diving mask சற்று விலகி வாய்க்குள் தண்ணீர் சென்றுவிட்டது. தற்செயலாக நடந்த அந்த நிகழ்ச்சி விஞ்ஞான உலகில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அவர் வாயினுள் சென்ற தண்ணீர் உப்பு கரிக்கவில்லை மாறாக சுவையுள்ளதாக இருந்தது. கடலுக்கடியில் எப்படி நல்ல நீர் வரமுடியும் என்ற குழப்பத்துடன் மேல் மட்டத்துக்கு வந்து கடல் நீரை அருந்தியபோது அது உப்பு கரிப்பு உள்ளதாக இருந்தது. அவருடைய ஆய்வு மனப்பான்மை மேலும் சில இடங்களில் ஆய்வு செய்தபோது, இரண்டு விதமான நீர்கள் இருப்பதையும் அவை ஒன்றோடு ஒன்று கலக்காமலிருப்பதையும் கண்டறிந்தார். இதை பற்றி இன்னும் தெளிவு பெறுவதற்காக மத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டாக்டர் மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille)டம் கலந்தபோது. இதுபற்றிய செய்தி குர்ஆனில் இருப்பதாக தெளிவுப்படுத்தினார்.
Longitudinal section showing salinity(parts per thousand) in an estuary. We can see here the partition(Zone of seperation) between the freshwater and salt water.(Introductory Oceanography, Thurman. P.301
“(ஆறு, கடல் ஆகிய) இரு நீர் பரப்புகளும் சமமாகிவிடமாட்டா - ஒன்று குடிப்பதற்கு இன்பமான நீர்; மற்றொன்று உப்பும் கசப்பும்(உடைய நீர். இவ்வாறு இவ்விரண்டிலும் வேற்றுமை இருந்தபோதிலும்) இவ்விரண்டிலுமிருந்தே....” (அல் குர்ஆன் 35: 12)
The Mediterranean sea water as it enters the Atlantic over the Gibraltar sill with its own warm, saline, and less dense characteristics, because of the barrier that distingushes beween them. Temperatures are in degrees Celsius. (Marine Geology, Kuenen, p. 43)
“ஒன்று சேரும் இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான். ஆயினும் அவைகளுக்கிடையில் ஒரு தடுப்புண்டு, (அத் தடுப்பை) அவை இரண்டும் மீறா” (அல் குர்ஆன் 55: 18,19)
இவை, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகளாரின் உள்மனத் தூண்டலிலிருந்து வந்திருக்கமுடியுமா? அவர்கள் என்ன oceanography யா படித்துவந்தார்கள்?
மொழி
மனித இனம் ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களிடமிருந்து உருவாகிப் பல்கிப் பெருகி இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. ஆதியில் மனித இனம் பெருகப் பெருக பல பாகங்களிலும் பெருகினர். இடம், காலம், தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப அவர்கள் தங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள் மாறி ஒவ்வொரு விதமான நாகரீகத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதுபோல் மொழியும் ஒன்றிலிருந்து தோன்றி சிறுகச் சிறுக மாறி இன்று பல்வேறு மொழிகளாகப் பரவிக்கிடக்கின்றன. ஆகவே ஒரு மொழியிலுள்ள வார்த்தை வேறொரு மொழியில் இருப்பதற்கு வாய்ப்புண்டு. தவிர ஒருவருக்கொருவர் வாணிபத் தொடர்பு இருந்ததால் ஒரு மொழி இன்னொரு மொழியில் ஊடுருவ வாய்ப்புண்டு. மேலும் புதிய பொருட்கள் எல்லா பகுதிகளை சென்றடையும்போது அதன் பெயரும் சேர்ந்தே அடைகிறது. இப்படி பல நிலைகளில் வரும் வேற்று மொழி சொற்கள், அது அடைந்த இடத்தின் மொழியாக அமைந்து விடுகிறது.
உதாரணமாக தமிழ் மொழி, தொன்மை வாய்ந்த மொழியாகும். தற்போது “செம்மொழி” என்ற அங்கீகாரத்தையும் அரசியல் ரீதியாகப் பெற்றுள்ளது. அப்படிப்பட்டத் தமிழ் மொழியில் “வக்கீல், வக்காலத்து, ஜாமீன், பாக்கி, அசல், நகல்” போன்ற சொற்கள்
தமிழுக்குரியதல்லவே. அவை அரபு சொற்களாயிற்றே! அதனால் தமிழ், கலப்பு மொழி ஆகிவிடுமா? அதுமட்டுமல்ல Admiral, Alcohol, என்பன அமீர் அல் பஹர், அல் கஹூல் என்ற அரபி சொற்களிலிருந்து அங்கு சென்று அந்த மொழிக்குரியதாகவே ஆகிவிட்டது; கட்டுமரம் என்ற தமிழ் சொல்தானே Catamaran ஆக ஆங்கிலத்தில் உள்ளது. ஆகவே ஜிப்ரீல், சூரா, ஜப்பார் இவைகள் ஹீப்ரு மொழிச் சொற்கள் அதனால் அல்லாஹ்வின் அரபு மொழி தூய்மைக் கெட்டு அதன் ஆளுமையைக் குறைவு படுத்துகிறது என்பதல்லாம் வீன் விவாதம். தவிர அல்லாஹ்வுக்கு மொழி ஏது? அவன் அரபு மொழியிலா பேசுகிறான்? அவன் எண்ணத்தைப் பார்க்கிறவானாயிற்றே! “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை; உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறான்.” என்று நபி மொழி இருக்கிறதே! எனவே மொழியை வைத்து ஆண்டவனைக் கட்டுப்படுத்துவது அறியாமை. மொழியை வைத்துமட்டுமல்ல எதனைக் கொண்டும் ஆண்டவனைக் கட்டுப்படுத்த முடியாது.
கடவுள் என்றாலே காலம், எல்லை, பரிமாணங்களைக் கடந்த ஓர் உள்ளமை. வேறு வார்த்தையில் சொன்னால் படைக்கப்பட்ட எந்த ஒன்றினாலும் கட்டுப்படுத்த முடியாதது எதுவோ அது இறைவன். வேண்டுமானல் நீங்கள் சொல்லலாம் “என்னை யாரும்
கட்டுப்படுத்த முடியாது; நான் எதற்கும் கட்டுப்படாதவன்” என்று. வாயையும் மூக்கையும் பொத்தி ஒரு இரண்டு நிமிடம் இருந்துப் பாருங்கள், எதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்; ஒரு நாளைக்கு சிறுநீர் கழிக்காமல் இருந்து பாருங்கள், எதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்.
ஆகவே உருவமற்ற அல்லாஹ் என்ற கருத்தாக்கம் காலத்துக்கும், இடத்துக்கும். மொழிக்கும், பண்பாட்டுச் சூழலுக்கும் மாறுபாட்டை அடைகிறது என்பதும், இதன் வெளிப்பாடாகத்தான் தமிழில் அல்லாஹ்வை ஆண் தன்மையோடு குறிப்பிடுவதாலும் கருத்தியல் மாற்றம் ஏற்படுகிறது என்ன்பதெல்லாம் விதண்டாவாதங்கள். தமிழில் அவர் என்ற
வார்த்தைக்குத்தான் பன்மை உண்டு. அவன், அவள் என்ற வார்த்தைள் ஒருமை; அவைகளுக்குப் பன்மை கிடையாது. அவை இரண்டும் உயர்திணை, ஆண் எல்லா நிலைகளிலும் உயர் நிலைப் படுத்துவதால் இறைவனை ஆண் தன்மையோடு குறிப்பிடப்படுகிறது. இது மொழியின் வளம் (richness of language). இது எல்லா மொழிகளிலும் உண்டு. ஹுவ என்ற அரபி சொல்லுக்கு அவன், என்று பொருள். “குல் ஹுவல்லாஹு அகது.....” Sey: He is Allah, The One; இதில் He என்ன்பதை எப்படி
எடுத்துக்கொள்வது? இதில் கருத்தியல் மாற்றம் என்றால் எப்படி? அல்லாஹ்வை எப்படி குறிப்பிடுவது?
திருக்குர்ஆனில் அகர, உகரக்குறிகள் பிற்காலத்தில் ஏற்பட்டதுதான். இதை ஏன் ஏற்படுத்தினார்கள்? அரபியில் ஐன், லாம், மீம் இந்த மூன்று எழுத்துக்களை சேர்த்து வாசித்தால் இல்ம் என்றும் வாசிக்கலாம், அலம் என்றும் வாசிக்கலாம். இல்ம் என்றால்
அறிவு; அலம் என்றால் கொடி(flag). இது வேறு வார்த்தைகளுடன் சேர்ந்து வரும்போது, அரபியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும், அரபியில் பாண்டித்தியம் பெற்ற மற்றவர்களுக்கும் இது இன்னப் பொருளைக் கொடுக்கிறது என்று புரியும். சாதாரண பொருள் தெரியாதவர்களுக்கு எப்படி புரியும்? இந்த குழப்பத்தை நீக்குவதற்காகத்தான் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தனர்.
திருக்குர்ஆன், பெருமானார் காலத்தில் பல்பொருட்களில் எழுதப்பட்டிருந்ததை, அவர்கள் மறைவுக்குப் பின் ஒன்று திரட்ட ஹஜ்ரத் அபுபக்கர்(ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பெருமானார் அவர்கள் செய்யாத வேலையை நான் செய்யமாட்டேன் என்றார்கள். ஆனால் ஹஜ்ரத் ஒமர்(ரலி) அவர்கள் பலமுறை வற்புறுத்தியதின்பேரில் அதை ஒன்று திரட்டி ஒரு வடிவமாக ஆக்கினார்கள்.
அஜர்பைஜானுக்கும் சிரியாவுக்கும் நடந்த சண்டையின்போது அங்கு சென்றிருந்த நபித்தோழர்கள், அங்கு மாற்றமாக குர்ஆன் ஓதப்படுவதை செவியுற்ற அவர்கள் ஏன்ன் இப்படி ஓதுகிறீர்கள் என்று கேட்டபோது, இப்படித்தான் எங்களிடம் குர்ஆன் இருக்கிறது என்றார்கள். இது அப்போதிருந்த கலிஃபா ஹஜ்ரத் உதுமான்(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையைத் தீர்க்க அவர்கள்தான் இப்போதிருக்கும் குர்ஆன் வடிவில் எழுதி மற்றதெல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.
ஏன் அழிக்கப்பட்டது?
நம்முடையத் தமிழ், எத்தனை வகையில் பேசப்படுகிறது சென்னையில் ஒரு மாதிரி; பாண்டிச்சேரியில் ஒரு மாதிரி; தஞ்சாவூர் தமிழ் வேறுமாதிரி; திருநெல்வேலி தமிழ்; கன்யாக்குமரித் தமிழ் வேறு; மதுரைத் தமிழ் வேறு. மெட்ராஸ் தமிழ் தென்னார்க்கடிலிருந்து புரியாது. இது பேச்சுத் தமிழ், ஆனால் எழுதும் இலக்கியத் தமிழ் எல்லோருக்கும் புரியும். இது ஒருவகை; மற்றொன்று தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்குமுள்ள தொடர்பு. சில வார்த்தைகள் இரண்டு நாட்டுக்கும் முற்றிலுமாக மாறுபடுகிறது. உதாரணமாக டாக்டர்(Ph,D) பட்டம் பெற்றவர்களை நம் நாட்டைப் பொருத்தவரை முனைவர் என்று தமிழ்படுத்துகிறோம், ஆனால் இலங்கையில் கலாநிதி என்கிறார்கள், நாம் புகை வண்டி என்கிறோம்; அவர்கள் புகை ரதம் என்கிறார்கள், நான் என்ன சொல்கிறீர்கள் என்பதை அவர்கள் என்ன கதைக்கிறீர்கள் என்கிறார்கள். இப்படி சில வார்த்தைகள் இருக்கின்றன. இத்தகைய பிரச்சினை தமிழிலும் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் உன்ண்டு.
குர்ஆனை ஏழு விதமாக ஓதலாம். அனுமதி உண்டு. “மாலிக்கி யவ்மித்தீன்” இது குர்ஆனிலுள்ள வார்த்தை. இதை மலிக்கி யவ்மித்தீன் என்றும் ஓதலாம்; மல்லாக்கி யவ்மித்தீன் என்றும் ஓதலாம், எப்படி ஓதினாலும் பொருள் மாறாது. எழுத்தாக்கத்தில் மாலிக்கி யவ்மித்தீன் என்றுதான் இருக்கும். ஓதுகிற முறை ஏழையும் எழுத்துருவில் கொண்டுவந்தால் ஏழு விதமான குர்ஆனாகப் போய்விடும். காலப்போக்கில் குர்ஆன், அதன் தனித்தன்மையை இழந்து புனிதம் கெட்டுவிடும். இத்தகைய குளறுபடிகள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக மற்ற முறைகளில் இருந்ததை அழித்துவிட்டு இப்போதிருக்கும்
முறைபடி அமைத்தார்கள்.
விரிஉரைகள்
குர்ஆன் வெறும் வேதநூல் மட்டுமல்ல. அது அறிவுக் கருவூலம்; அருள் சுரக்கும் பெட்டகம்; வழிபட்டோருக்கு நற்செய்தியும் வழிகெட்டோருக்கு எச்சரிக்கையும் செய்யும் நூல். அதில் மண்டிக்கிடக்கும் கருத்துக்களை மனித அறிவினால் முழுமையாகத் தெரிந்துக்கொள்ள முடியாது. யார் எத்தகைய அறிவுடன் அதை நெருங்குகிறார்களோ அத்தகைய அறிவு கிடைக்கும். ஆகவே அதற்கு தஃப்ஸீர் என்று சொல்லப்படும் விரிஉரைகள் நிறைய வந்துள்ளன. அவற்றில் அரபி விரிவுரைகளான தஃப்ஸீர் ஜலாலைன்; தஃப்ஸீர் இப்னு கஸீர்; தஃப்ஸீர் அல்தன்தாவி; தஃப்ஸீ அல் தப்ராணி போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.
தஃப்ஸீர் ஜலாலைன் என்ற விரிவுரையை எழுதிய ஜலாலுதீன் சுயூத்தி, ஜலாலுதீன் மஹல்லி ஆகியவர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள், எங்களால் இயன்றவரை புனித குர்ஆனுக்கு விரிவுரை எழுதிவிட்டோம். இதுதான் முடிவான கருத்து என்று சொல்லமுடியாது; இதைவிட மோலான கருத்துக்கள் வரலாம். ஆனால் இப்போதைக்கு இது போதுமானது' என்று சொல்கிறார்கள்.
விரிவுரைகளும், தர்ஜுமா என்று சொல்லப்படும் உரைநூல்களும் பல வந்திருக்கின்றனவேயொழிய குர்ஆன் உலகமெங்கும் ஒன்றே ஒன்றுதான். திருக்குறள் ஒன்றுதான், அதற்கு எத்தனை உரைநடைகள். பரிமேலழகர் உரை; மு. வரதராசனார் உரை;
கலைஞரின் உரை இப்படி பல உரைகள் இல்லையா?
நபிகள் நாயகம் தம் கைப்பட குர்ஆன் எழுதினார்களா?
“மர்வான் இப்னு அல்ஹக்கம் ஆட்சிக்கு வந்ததும் அவர் செய்தது, நபி முஹம்மது கைப்பட எழுதியிருந்த திருக்குர்ஆன் பிரதியை அழித்துவிட்டதாகும்.” (ரசூல்ஜியின் கண்டுபிடிப்பு)
இதுவரை வரலாற்றில் முஹம்மது(ஸல்) அவர்கள் உம்மி நபி அதாவது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்றுதான் இருக்கிறது. ஆனால் ரசூல்ஜிக்கு மட்டுமே தெரிகிறது நபிகள் நாயகம் படித்திருக்கிறார்கள் என்று. எந்த ஸ்கூலில் படித்தார்கள் என்று தெரிவித்தால் முஸ்லிம் சமுதாயத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும்.
குர்ஆன் மட்டும் போதுமா?
குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸும் தேவை இல்லை, ரசூலும் தேவை இல்லை என்று சொல்லும் அஹ்ல குர்ஆனிகள் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வை வழிபட்டு நடங்கள்; அவனது ரசூலையும் வழிபட்டு நடங்கள் என்று பொருள் தொனிக்கும் ரீதியில் “அத்தீயுல்லாஹு வ அத்தீயுர்ரசூல்” என்ற வார்த்தை குர்ஆனில் இருப்பது இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. “அழகிய முன்மாதிரி” என்று ரசூலை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அப்படியென்றால் அழகிய முன்மாதிரியாக உள்ள அவர்களைப் பின்பற்று என்பதுதானே பொருள். அது என்ன ரசூல் வேண்டாம் அல்லாஹ் மட்டும் போதும் என்பது? ஒரு கவிஞன் சொன்னான்:
“அல்லாஹ்வை யாருக்குத் தெரியும் அந்த ரசூல் இல்லாவிட்டால்,
ரசூலை யாருக்குத் தெரியும் அந்த அல்லாஹ் இல்லாவிட்டால்..” என்று.
அறிஞர்கள்
ரசூல்ஜி சொல்லும் அறிஞர்களை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது.
வயல்வெளியில் நெற்பயிர்கள் வளர்ந்து வரும்போது இடையிடையே பச்சைப்பசேலென்று பயிர்கள் சில இருப்பதைப் பார்க்கலாம். அவை பார்ப்பதற்கு பச்சையாகமட்டுமல்ல அடர்த்தியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும். ஆனால் அவை பயிர் அல்ல களைகள். அவைகளை எடுத்தெறியவேண்டும் இல்லாவிட்டால் சுற்றிலுமுள்ள பயிர்கள் அடையவேண்டிய சத்தை இவை எடுத்துக்கொண்டு அவற்றிற்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். அதுபோல்தான் இந்த அறிஞர்களான, அறிஞர் டாக்டர் ராஷித் கலிஃபா, அறிஞர் குலாம் அலி மிர்ஸா, அறிஞர் பா. தாவுத்ஷா, அறிஞர் P.J.
குர் ஆன் எதையும் எதிர்கொள்ளவில்லை
பெருமானார் அவார்கள் மறைவுக்குப் பின் ஏற்பட்ட குழப்பங்கள், ஹஜ்ரத் உமர்(ரலி, ஹஜ்ரத் உதுமான்(ரலி), ஹஜ்ரத் அலி(ரலி) ஆகியோரின் படுகொலைகள், ஹஜ்ரது முஆவியா(ரலி) அவர்களின் வருகை, யஜீதுடைய ஆட்சி எல்லாம் அதிகாரத்தின் மீது ஆசைக்கொண்ட அரசியல் ரீதியான காரணமே தவிர இஸ்லாத்தின் கொள்கையோ சட்டத்திட்டங்களோ அல்ல. தனி நபர்களின் அபிலாசை, ஆதிக்கங்களை இஸ்லாத்தின் மீது சுமத்துவது இழிச்செயலாகும்.
பெருமானார் காலத்திற்குப் பின் பலவற்றில் எழுதப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களை ஒன்றாகத் திரட்டி அமைக்கப்பட்டது என்றாலும் அதில், அதன் வசனங்களை கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ, மறைக்கவோ இல்லை. அதை செய்யும் அதிகாரமோ தகுதியோ எவருக்கும் இல்லை. எனவே இதில் அதிகாரத் தலையீடு, ஆதிக்கம், சார்பு நிலை, முரண்பாடு இப்படி எதையும் இது எதிர்கொள்ள வில்லை. அப்படி எதிர்கொள்வதாக சொல்வது இஸ்லாத்தின் போர்வையில் இருக்கும் அறிஞர்கள் என்று தங்களைத்தானே நினைத்துக்கொண்டிருக்கும் மகா புத்திசாலிகளின் வேலை.
---o0o---
Friday Nov 17, 2006 திண்ணை
திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா............?
ஹமீது ஜாஃபர்
அது உயர்நிலைப் பள்ளி, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் திறந்த மறு நாள் அல்லது இரண்டாம் நாள், முதல் ஆங்கில வகுப்பு, ஆசிரியர் வந்தார், முதல் பாடத்தைத் தொடங்கினார். I - நான் என்று தன்னைச் கட்டை விரலால் சுட்டிக்காட்டிக் காட்டிக்கொண்டார், YOU - நீ என்று ஒரு மாணவனை தன் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார். இப்படி பாடம் நடத்திவிட்டு, அந்த மாணவனைக் கூப்பிட்டு எங்கே நான் கேட்பதற்கு பதில் சொல் என்று சொல்லிவிட்டு I என்றால் யார்? என்றார். உடனே அந்த மாணவன் எந்த தடையுமில்லாமல் I என்றால் நீங்கள், YOU என்றால் நான் என்றான். வகுப்பில் 'கொல்'லென்ற சிரிப்பு. அந்த மாணவன் சற்றும் தளரவில்லை தொடார்ந்தான், 'சார், I என்று உங்களைத்தானே காண்பித்துக்கொண்டீர்கள், அப்பொ அது நீங்கள் தானே! YOU என்று என்னைத்தானே காண்பித்தீர்கள், அப்பொ அது நான்தானே! இதில் என்ன தப்பு இருக்கிறது?' இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? என்றான்.
அந்த மாணவனுக்கு அவனைப் பொருத்தவரை சரியான பதில்தான். ஆனால் புரிந்துக் கொண்டதில் தவறு நடந்திருக்கிறது. அதுபோல்தான் ரசூல்ஜியும் அவர் குறிப்பிடுகிறவர்களும் சூரா ஃபாத்திஹா என்று சொல்லப்படும் அல்ஹம்து சூராவைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
திருக்குர்ஆன், அல்லாஹ் தனக்காக ஏற்படுத்திக்கொண்டதல்ல. மனித சமுதாயம் உயர்வுப் பெருவதற்காக, நற்பயன் பெறுவதற்காக, மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காக அருளப்பட்டது. மற்ற படைப்பினங்கள் போலலல்லாமல் இவனுக்கு மிகப் பெரிய பொறுப்புக்கள் இருப்பதால் ஓவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் இறைவன்
கவனமாக இருக்கிறான். மனிதன் மனிதனைப் புகழ்வதற்கும், மனிதன் ஆண்டவனைப் புகழ்வதற்கும் பாரதூரமான வித்தியாசம் உள்ளது; இவனுக்கு ஆண்டவனை எப்படி புகழவேண்டும் என்று தெரியாது. எதாவது ஒரு சங்கடம் வந்தால் ஆண்டவனுக்கு கண்ணில்லை; மூக்கில்லை என்று இகழத்தெரியுமே தவிர சங்கடத்துக்கு காரணம் தாம் தானென்று தெரியாமல் ஆண்டவன் மீது பழியைப் போடுவான். அப்படிப்பட்ட மனிதன் ஆண்டவனை எப்படி புகழவேண்டும்; எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை சூரா ஃபாத்திஹா மூலம் சொல்லிக்கொடுக்கிறான்.
எனவே ரசூல்ஜி சொல்வதுபோல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உள்ளத்திலிருந்தோ அல்லது அடிமனத்திலிருந்தோ வந்த வானவேடிக்கை அல்ல. சூரா ·பாத்திஹா, இறைவன் நமக்களித்த வரப்பிரசாதம்; நோய் தீர்க்கும் மா மருந்து. அதனால்தான் ஒவ்வொரு தொழுகையிலும் அதிகமாக ஓதப்படுகிறது. “(நபியே) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை(உடைய சூரா ஃபாத்திஹாவை) யும், இந்த மகத்தான குர்ஆனையும் கொடுத்துள்ளோம்.” (அல் குர்ஆன். 15:87)
ஒரு மனிதன் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்று துறைகளில் சிறந்து விளங்க முடியும். ஒரே துறையைச் சேர்ந்த பலரில் ஒருசிலர் மட்டுமே முன்னிலை வகுக்கின்றனர். அப்படி ஒரு சிலரில்கூட ஒருவர் மட்டுமே போற்றப்படுகிறார், புகழப்படுகிறார். அது அவரது thought force ன் வலிமையாகும். உழைப்பு; தொலைநோக்குப் பார்வை; ஒருங்கிணைந்த செயல்பாடு என்பதல்லாம் இரண்டாம் காரணங்கள். அந்த thought force அடிமனத்தில் இறங்கி தேடுவதால் “இல்ஹாம்” என்ற உதிப்பாக தேடிய செய்திகள்; பிரச்சினைக்குரிய விடைகள் கிடைக்கின்றன. இது மனிதனுக்கு இறைவன் அளித்த அருட்கொடை. அவன் எந்த துறையைச் சார்ந்திருக்கிறானோ அல்லது எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதற்குரிய விடைதான் கிடைக்குமே தவிர மாற்றமான ஒன்றும் கிடக்காது.
ஒருவர் என்ஜினியர் என்றால் அவருக்கு accurate thought இருக்குமேயானால் உலகில் எங்கெல்லாம் என்ஜினியரிங் அறிவு இருக்கிறதோ அதை தேடி கொண்டுவந்து கொடுக்கும். மாறாக உடற்கூறைப் பற்றிய செய்தி கிடைக்காது. அப்படியே சிந்தித்தாலும் 'அடப்போடா! வானவியல் படிச்சுட்டு அணு சக்தியைப் பற்றி ஆராயப்போறானாம், போய் வேலையெப் பாருடா!' என்று உள்மனம் சொல்லும். ஒரு மனிதன் எந்த அறிவும் பெறாமல், படிப்பறிவே இல்லாமல் உண்மையைச் சொல்வதானால், அது குறி சொல்வதல்ல, அல்லது weather forecast அல்ல.
உள்மனத்தூண்டலின் வெளிப்பாடா ?
பல கோடி ஆண்டுகளுக்கு முன், ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒன்றாக இருந்தது (Primary Nebula) அதன்பின் அங்கு Big Bang என்று சொல்லப்படும் ஒரு வெடித்தல் (Secondary Seperation) ஏற்பட்டது. அதன் விளைவாக Galaxies உருவாயின. அவற்றிலிருந்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் உருவாகின என்று கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கூறுகின்றனர், ....before the galaxies in the universe were formed, celestial matter was initially in the form of gaseous matter. In short, huge gaseous matter or clouds were present before the
formation of galaxies.
A new Star forming out of a cloud of gas and dust(nebula) Which is one of the ramnants of the 'SMOKE' that was the Orgin of whole universe.(The Space Atlas, Heather and Henbest, p.50.)
“(ஆரம்பத்தில்) ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்.......”(அல் குர்ஆன் 21:30)
“பின்னர், புகை(மண்டலம்) ஆக இருந்த வானத்தளவில் திரும்பி(அதனைப் படைத்து)...”(அல் குர்ஆன் 41:11)
கடந்த நூற்றாண்டின் இந்த கண்டுபிடிப்பை ஒன்றுமில்லாத பாலைவனத்தில் இருந்துக்கொண்டு எந்த கல்வி அறிவும் இல்லாத ஒரு மனிதரின் உள்மனத்தூண்டலில் வருவதற்கு சாத்தியம் உண்டா?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான கேப்டன் ஜாஜ் குஸ்ஸோ என்பவர் மத்திய தரைக்கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார். அவர் கடல் அடிக்கு சென்று ஆராய்ந்துக்கொண்டிருந்த போது, அவர் அணிந்திருந்த diving mask சற்று விலகி வாய்க்குள் தண்ணீர் சென்றுவிட்டது. தற்செயலாக நடந்த அந்த நிகழ்ச்சி விஞ்ஞான உலகில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அவர் வாயினுள் சென்ற தண்ணீர் உப்பு கரிக்கவில்லை மாறாக சுவையுள்ளதாக இருந்தது. கடலுக்கடியில் எப்படி நல்ல நீர் வரமுடியும் என்ற குழப்பத்துடன் மேல் மட்டத்துக்கு வந்து கடல் நீரை அருந்தியபோது அது உப்பு கரிப்பு உள்ளதாக இருந்தது. அவருடைய ஆய்வு மனப்பான்மை மேலும் சில இடங்களில் ஆய்வு செய்தபோது, இரண்டு விதமான நீர்கள் இருப்பதையும் அவை ஒன்றோடு ஒன்று கலக்காமலிருப்பதையும் கண்டறிந்தார். இதை பற்றி இன்னும் தெளிவு பெறுவதற்காக மத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டாக்டர் மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille)டம் கலந்தபோது. இதுபற்றிய செய்தி குர்ஆனில் இருப்பதாக தெளிவுப்படுத்தினார்.
Longitudinal section showing salinity(parts per thousand) in an estuary. We can see here the partition(Zone of seperation) between the freshwater and salt water.(Introductory Oceanography, Thurman. P.301
“(ஆறு, கடல் ஆகிய) இரு நீர் பரப்புகளும் சமமாகிவிடமாட்டா - ஒன்று குடிப்பதற்கு இன்பமான நீர்; மற்றொன்று உப்பும் கசப்பும்(உடைய நீர். இவ்வாறு இவ்விரண்டிலும் வேற்றுமை இருந்தபோதிலும்) இவ்விரண்டிலுமிருந்தே....” (அல் குர்ஆன் 35: 12)
The Mediterranean sea water as it enters the Atlantic over the Gibraltar sill with its own warm, saline, and less dense characteristics, because of the barrier that distingushes beween them. Temperatures are in degrees Celsius. (Marine Geology, Kuenen, p. 43)
“ஒன்று சேரும் இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான். ஆயினும் அவைகளுக்கிடையில் ஒரு தடுப்புண்டு, (அத் தடுப்பை) அவை இரண்டும் மீறா” (அல் குர்ஆன் 55: 18,19)
இவை, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகளாரின் உள்மனத் தூண்டலிலிருந்து வந்திருக்கமுடியுமா? அவர்கள் என்ன oceanography யா படித்துவந்தார்கள்?
மொழி
மனித இனம் ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களிடமிருந்து உருவாகிப் பல்கிப் பெருகி இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. ஆதியில் மனித இனம் பெருகப் பெருக பல பாகங்களிலும் பெருகினர். இடம், காலம், தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப அவர்கள் தங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள் மாறி ஒவ்வொரு விதமான நாகரீகத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதுபோல் மொழியும் ஒன்றிலிருந்து தோன்றி சிறுகச் சிறுக மாறி இன்று பல்வேறு மொழிகளாகப் பரவிக்கிடக்கின்றன. ஆகவே ஒரு மொழியிலுள்ள வார்த்தை வேறொரு மொழியில் இருப்பதற்கு வாய்ப்புண்டு. தவிர ஒருவருக்கொருவர் வாணிபத் தொடர்பு இருந்ததால் ஒரு மொழி இன்னொரு மொழியில் ஊடுருவ வாய்ப்புண்டு. மேலும் புதிய பொருட்கள் எல்லா பகுதிகளை சென்றடையும்போது அதன் பெயரும் சேர்ந்தே அடைகிறது. இப்படி பல நிலைகளில் வரும் வேற்று மொழி சொற்கள், அது அடைந்த இடத்தின் மொழியாக அமைந்து விடுகிறது.
உதாரணமாக தமிழ் மொழி, தொன்மை வாய்ந்த மொழியாகும். தற்போது “செம்மொழி” என்ற அங்கீகாரத்தையும் அரசியல் ரீதியாகப் பெற்றுள்ளது. அப்படிப்பட்டத் தமிழ் மொழியில் “வக்கீல், வக்காலத்து, ஜாமீன், பாக்கி, அசல், நகல்” போன்ற சொற்கள்
தமிழுக்குரியதல்லவே. அவை அரபு சொற்களாயிற்றே! அதனால் தமிழ், கலப்பு மொழி ஆகிவிடுமா? அதுமட்டுமல்ல Admiral, Alcohol, என்பன அமீர் அல் பஹர், அல் கஹூல் என்ற அரபி சொற்களிலிருந்து அங்கு சென்று அந்த மொழிக்குரியதாகவே ஆகிவிட்டது; கட்டுமரம் என்ற தமிழ் சொல்தானே Catamaran ஆக ஆங்கிலத்தில் உள்ளது. ஆகவே ஜிப்ரீல், சூரா, ஜப்பார் இவைகள் ஹீப்ரு மொழிச் சொற்கள் அதனால் அல்லாஹ்வின் அரபு மொழி தூய்மைக் கெட்டு அதன் ஆளுமையைக் குறைவு படுத்துகிறது என்பதல்லாம் வீன் விவாதம். தவிர அல்லாஹ்வுக்கு மொழி ஏது? அவன் அரபு மொழியிலா பேசுகிறான்? அவன் எண்ணத்தைப் பார்க்கிறவானாயிற்றே! “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை; உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறான்.” என்று நபி மொழி இருக்கிறதே! எனவே மொழியை வைத்து ஆண்டவனைக் கட்டுப்படுத்துவது அறியாமை. மொழியை வைத்துமட்டுமல்ல எதனைக் கொண்டும் ஆண்டவனைக் கட்டுப்படுத்த முடியாது.
கடவுள் என்றாலே காலம், எல்லை, பரிமாணங்களைக் கடந்த ஓர் உள்ளமை. வேறு வார்த்தையில் சொன்னால் படைக்கப்பட்ட எந்த ஒன்றினாலும் கட்டுப்படுத்த முடியாதது எதுவோ அது இறைவன். வேண்டுமானல் நீங்கள் சொல்லலாம் “என்னை யாரும்
கட்டுப்படுத்த முடியாது; நான் எதற்கும் கட்டுப்படாதவன்” என்று. வாயையும் மூக்கையும் பொத்தி ஒரு இரண்டு நிமிடம் இருந்துப் பாருங்கள், எதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்; ஒரு நாளைக்கு சிறுநீர் கழிக்காமல் இருந்து பாருங்கள், எதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்.
ஆகவே உருவமற்ற அல்லாஹ் என்ற கருத்தாக்கம் காலத்துக்கும், இடத்துக்கும். மொழிக்கும், பண்பாட்டுச் சூழலுக்கும் மாறுபாட்டை அடைகிறது என்பதும், இதன் வெளிப்பாடாகத்தான் தமிழில் அல்லாஹ்வை ஆண் தன்மையோடு குறிப்பிடுவதாலும் கருத்தியல் மாற்றம் ஏற்படுகிறது என்ன்பதெல்லாம் விதண்டாவாதங்கள். தமிழில் அவர் என்ற
வார்த்தைக்குத்தான் பன்மை உண்டு. அவன், அவள் என்ற வார்த்தைள் ஒருமை; அவைகளுக்குப் பன்மை கிடையாது. அவை இரண்டும் உயர்திணை, ஆண் எல்லா நிலைகளிலும் உயர் நிலைப் படுத்துவதால் இறைவனை ஆண் தன்மையோடு குறிப்பிடப்படுகிறது. இது மொழியின் வளம் (richness of language). இது எல்லா மொழிகளிலும் உண்டு. ஹுவ என்ற அரபி சொல்லுக்கு அவன், என்று பொருள். “குல் ஹுவல்லாஹு அகது.....” Sey: He is Allah, The One; இதில் He என்ன்பதை எப்படி
எடுத்துக்கொள்வது? இதில் கருத்தியல் மாற்றம் என்றால் எப்படி? அல்லாஹ்வை எப்படி குறிப்பிடுவது?
திருக்குர்ஆனில் அகர, உகரக்குறிகள் பிற்காலத்தில் ஏற்பட்டதுதான். இதை ஏன் ஏற்படுத்தினார்கள்? அரபியில் ஐன், லாம், மீம் இந்த மூன்று எழுத்துக்களை சேர்த்து வாசித்தால் இல்ம் என்றும் வாசிக்கலாம், அலம் என்றும் வாசிக்கலாம். இல்ம் என்றால்
அறிவு; அலம் என்றால் கொடி(flag). இது வேறு வார்த்தைகளுடன் சேர்ந்து வரும்போது, அரபியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும், அரபியில் பாண்டித்தியம் பெற்ற மற்றவர்களுக்கும் இது இன்னப் பொருளைக் கொடுக்கிறது என்று புரியும். சாதாரண பொருள் தெரியாதவர்களுக்கு எப்படி புரியும்? இந்த குழப்பத்தை நீக்குவதற்காகத்தான் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தனர்.
திருக்குர்ஆன், பெருமானார் காலத்தில் பல்பொருட்களில் எழுதப்பட்டிருந்ததை, அவர்கள் மறைவுக்குப் பின் ஒன்று திரட்ட ஹஜ்ரத் அபுபக்கர்(ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பெருமானார் அவர்கள் செய்யாத வேலையை நான் செய்யமாட்டேன் என்றார்கள். ஆனால் ஹஜ்ரத் ஒமர்(ரலி) அவர்கள் பலமுறை வற்புறுத்தியதின்பேரில் அதை ஒன்று திரட்டி ஒரு வடிவமாக ஆக்கினார்கள்.
அஜர்பைஜானுக்கும் சிரியாவுக்கும் நடந்த சண்டையின்போது அங்கு சென்றிருந்த நபித்தோழர்கள், அங்கு மாற்றமாக குர்ஆன் ஓதப்படுவதை செவியுற்ற அவர்கள் ஏன்ன் இப்படி ஓதுகிறீர்கள் என்று கேட்டபோது, இப்படித்தான் எங்களிடம் குர்ஆன் இருக்கிறது என்றார்கள். இது அப்போதிருந்த கலிஃபா ஹஜ்ரத் உதுமான்(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையைத் தீர்க்க அவர்கள்தான் இப்போதிருக்கும் குர்ஆன் வடிவில் எழுதி மற்றதெல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.
ஏன் அழிக்கப்பட்டது?
நம்முடையத் தமிழ், எத்தனை வகையில் பேசப்படுகிறது சென்னையில் ஒரு மாதிரி; பாண்டிச்சேரியில் ஒரு மாதிரி; தஞ்சாவூர் தமிழ் வேறுமாதிரி; திருநெல்வேலி தமிழ்; கன்யாக்குமரித் தமிழ் வேறு; மதுரைத் தமிழ் வேறு. மெட்ராஸ் தமிழ் தென்னார்க்கடிலிருந்து புரியாது. இது பேச்சுத் தமிழ், ஆனால் எழுதும் இலக்கியத் தமிழ் எல்லோருக்கும் புரியும். இது ஒருவகை; மற்றொன்று தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்குமுள்ள தொடர்பு. சில வார்த்தைகள் இரண்டு நாட்டுக்கும் முற்றிலுமாக மாறுபடுகிறது. உதாரணமாக டாக்டர்(Ph,D) பட்டம் பெற்றவர்களை நம் நாட்டைப் பொருத்தவரை முனைவர் என்று தமிழ்படுத்துகிறோம், ஆனால் இலங்கையில் கலாநிதி என்கிறார்கள், நாம் புகை வண்டி என்கிறோம்; அவர்கள் புகை ரதம் என்கிறார்கள், நான் என்ன சொல்கிறீர்கள் என்பதை அவர்கள் என்ன கதைக்கிறீர்கள் என்கிறார்கள். இப்படி சில வார்த்தைகள் இருக்கின்றன. இத்தகைய பிரச்சினை தமிழிலும் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் உன்ண்டு.
குர்ஆனை ஏழு விதமாக ஓதலாம். அனுமதி உண்டு. “மாலிக்கி யவ்மித்தீன்” இது குர்ஆனிலுள்ள வார்த்தை. இதை மலிக்கி யவ்மித்தீன் என்றும் ஓதலாம்; மல்லாக்கி யவ்மித்தீன் என்றும் ஓதலாம், எப்படி ஓதினாலும் பொருள் மாறாது. எழுத்தாக்கத்தில் மாலிக்கி யவ்மித்தீன் என்றுதான் இருக்கும். ஓதுகிற முறை ஏழையும் எழுத்துருவில் கொண்டுவந்தால் ஏழு விதமான குர்ஆனாகப் போய்விடும். காலப்போக்கில் குர்ஆன், அதன் தனித்தன்மையை இழந்து புனிதம் கெட்டுவிடும். இத்தகைய குளறுபடிகள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக மற்ற முறைகளில் இருந்ததை அழித்துவிட்டு இப்போதிருக்கும்
முறைபடி அமைத்தார்கள்.
விரிஉரைகள்
குர்ஆன் வெறும் வேதநூல் மட்டுமல்ல. அது அறிவுக் கருவூலம்; அருள் சுரக்கும் பெட்டகம்; வழிபட்டோருக்கு நற்செய்தியும் வழிகெட்டோருக்கு எச்சரிக்கையும் செய்யும் நூல். அதில் மண்டிக்கிடக்கும் கருத்துக்களை மனித அறிவினால் முழுமையாகத் தெரிந்துக்கொள்ள முடியாது. யார் எத்தகைய அறிவுடன் அதை நெருங்குகிறார்களோ அத்தகைய அறிவு கிடைக்கும். ஆகவே அதற்கு தஃப்ஸீர் என்று சொல்லப்படும் விரிஉரைகள் நிறைய வந்துள்ளன. அவற்றில் அரபி விரிவுரைகளான தஃப்ஸீர் ஜலாலைன்; தஃப்ஸீர் இப்னு கஸீர்; தஃப்ஸீர் அல்தன்தாவி; தஃப்ஸீ அல் தப்ராணி போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.
தஃப்ஸீர் ஜலாலைன் என்ற விரிவுரையை எழுதிய ஜலாலுதீன் சுயூத்தி, ஜலாலுதீன் மஹல்லி ஆகியவர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள், எங்களால் இயன்றவரை புனித குர்ஆனுக்கு விரிவுரை எழுதிவிட்டோம். இதுதான் முடிவான கருத்து என்று சொல்லமுடியாது; இதைவிட மோலான கருத்துக்கள் வரலாம். ஆனால் இப்போதைக்கு இது போதுமானது' என்று சொல்கிறார்கள்.
விரிவுரைகளும், தர்ஜுமா என்று சொல்லப்படும் உரைநூல்களும் பல வந்திருக்கின்றனவேயொழிய குர்ஆன் உலகமெங்கும் ஒன்றே ஒன்றுதான். திருக்குறள் ஒன்றுதான், அதற்கு எத்தனை உரைநடைகள். பரிமேலழகர் உரை; மு. வரதராசனார் உரை;
கலைஞரின் உரை இப்படி பல உரைகள் இல்லையா?
நபிகள் நாயகம் தம் கைப்பட குர்ஆன் எழுதினார்களா?
“மர்வான் இப்னு அல்ஹக்கம் ஆட்சிக்கு வந்ததும் அவர் செய்தது, நபி முஹம்மது கைப்பட எழுதியிருந்த திருக்குர்ஆன் பிரதியை அழித்துவிட்டதாகும்.” (ரசூல்ஜியின் கண்டுபிடிப்பு)
இதுவரை வரலாற்றில் முஹம்மது(ஸல்) அவர்கள் உம்மி நபி அதாவது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்றுதான் இருக்கிறது. ஆனால் ரசூல்ஜிக்கு மட்டுமே தெரிகிறது நபிகள் நாயகம் படித்திருக்கிறார்கள் என்று. எந்த ஸ்கூலில் படித்தார்கள் என்று தெரிவித்தால் முஸ்லிம் சமுதாயத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும்.
குர்ஆன் மட்டும் போதுமா?
குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸும் தேவை இல்லை, ரசூலும் தேவை இல்லை என்று சொல்லும் அஹ்ல குர்ஆனிகள் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வை வழிபட்டு நடங்கள்; அவனது ரசூலையும் வழிபட்டு நடங்கள் என்று பொருள் தொனிக்கும் ரீதியில் “அத்தீயுல்லாஹு வ அத்தீயுர்ரசூல்” என்ற வார்த்தை குர்ஆனில் இருப்பது இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. “அழகிய முன்மாதிரி” என்று ரசூலை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அப்படியென்றால் அழகிய முன்மாதிரியாக உள்ள அவர்களைப் பின்பற்று என்பதுதானே பொருள். அது என்ன ரசூல் வேண்டாம் அல்லாஹ் மட்டும் போதும் என்பது? ஒரு கவிஞன் சொன்னான்:
“அல்லாஹ்வை யாருக்குத் தெரியும் அந்த ரசூல் இல்லாவிட்டால்,
ரசூலை யாருக்குத் தெரியும் அந்த அல்லாஹ் இல்லாவிட்டால்..” என்று.
அறிஞர்கள்
ரசூல்ஜி சொல்லும் அறிஞர்களை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது.
வயல்வெளியில் நெற்பயிர்கள் வளர்ந்து வரும்போது இடையிடையே பச்சைப்பசேலென்று பயிர்கள் சில இருப்பதைப் பார்க்கலாம். அவை பார்ப்பதற்கு பச்சையாகமட்டுமல்ல அடர்த்தியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும். ஆனால் அவை பயிர் அல்ல களைகள். அவைகளை எடுத்தெறியவேண்டும் இல்லாவிட்டால் சுற்றிலுமுள்ள பயிர்கள் அடையவேண்டிய சத்தை இவை எடுத்துக்கொண்டு அவற்றிற்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். அதுபோல்தான் இந்த அறிஞர்களான, அறிஞர் டாக்டர் ராஷித் கலிஃபா, அறிஞர் குலாம் அலி மிர்ஸா, அறிஞர் பா. தாவுத்ஷா, அறிஞர் P.J.
குர் ஆன் எதையும் எதிர்கொள்ளவில்லை
பெருமானார் அவார்கள் மறைவுக்குப் பின் ஏற்பட்ட குழப்பங்கள், ஹஜ்ரத் உமர்(ரலி, ஹஜ்ரத் உதுமான்(ரலி), ஹஜ்ரத் அலி(ரலி) ஆகியோரின் படுகொலைகள், ஹஜ்ரது முஆவியா(ரலி) அவர்களின் வருகை, யஜீதுடைய ஆட்சி எல்லாம் அதிகாரத்தின் மீது ஆசைக்கொண்ட அரசியல் ரீதியான காரணமே தவிர இஸ்லாத்தின் கொள்கையோ சட்டத்திட்டங்களோ அல்ல. தனி நபர்களின் அபிலாசை, ஆதிக்கங்களை இஸ்லாத்தின் மீது சுமத்துவது இழிச்செயலாகும்.
பெருமானார் காலத்திற்குப் பின் பலவற்றில் எழுதப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களை ஒன்றாகத் திரட்டி அமைக்கப்பட்டது என்றாலும் அதில், அதன் வசனங்களை கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ, மறைக்கவோ இல்லை. அதை செய்யும் அதிகாரமோ தகுதியோ எவருக்கும் இல்லை. எனவே இதில் அதிகாரத் தலையீடு, ஆதிக்கம், சார்பு நிலை, முரண்பாடு இப்படி எதையும் இது எதிர்கொள்ள வில்லை. அப்படி எதிர்கொள்வதாக சொல்வது இஸ்லாத்தின் போர்வையில் இருக்கும் அறிஞர்கள் என்று தங்களைத்தானே நினைத்துக்கொண்டிருக்கும் மகா புத்திசாலிகளின் வேலை.
---o0o---
Friday Nov 17, 2006 திண்ணை
குழந்தை
ஹமீது ஜாஃபர்
மனிதர்களில் பெரும்பாலோர் நடுநிலை சிந்தனையாளர்களாக இருந்தாலும் ஒரு சிலரின் தடுமாற்ற சிந்தனையினால் ஏற்படும் தாக்கம் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன்வைப்பதில் தவறு கிடையாது, அது அவரவரது கருத்து சுதந்திரம். ஆனால் தாம் சொல்வதுதான் சரியானது என்று வாதிடும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பாக மத ரீதியாக முன்வைக்கப்படும் கருத்தாக்கம் உள ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் மிக பெரிய பாதிப்பை உருவாக்குகிறது.
இத்தகைய கருத்தாக்கங்களை உருவாக்குபவர்கள் இரண்டு வகையினர். முதல் வகையினர் தான் சார்ந்திருக்கும் மதம், சமூகத்தைப் பற்றிய தீவிர சிந்தை உள்ளவர்கள். மற்றொரு வகையினர் மற்ற மதம் சமுதாயத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள். இந்த இருவரும் தாங்கள் முன்வைக்கும் செய்தி சரியானதுதானா என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இல்லை. ஒரு விரல் முன்னுள்ளவனை சுட்டிக்காட்டும்போது மற்ற மூன்று விரல்கள் தன்னை சுட்டிக்காட்டுகின்றன என்று உணருவதுமில்லை. ஒருவர் மற்றவர்மீது சேற்றை வாரி பூசுவது மெகா சீரியல் மாதிரி நடந்துக்கொண்டே இருக்கிறது. நல்ல செய்தியைவிட கெட்ட செய்திக்கு வலிமை அதிகம். ஒரு துளி விஷம் போதும் ஒரு குடம் பாலை வீணாக்க என்ற உண்மை புதிதல்ல.
உலகில் எந்த குழந்தையும் முஸ்லிமாகவோ, கிறுஸ்துவமாகவோ, இந்துவாகவோ அல்லது வேறு எந்த மதத்தை சார்ந்ததாகவோ அல்லது நாத்திகனாகவோ பிறக்கவில்லை. அதற்கு மதம், சாதி, இனம், மொழி என்று எதுவுமே இல்லை. "எல்லா மகவுகளும் இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன" என்று நபி மொழி இருக்கிறதென்றால் குழந்தை, குழந்தையாகவே பிறக்கிறது என்றுதான்தான் பொருள் கொள்ளவேண்டும். அங்கே இஸ்லாத்தைப் புகுத்தினால் அது இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக ஆகிவிடும்.
குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அது வளர்கிற சூழலைப் பொருத்தே மதம், மொழி, கலாச்சாரம் மாறுகிறது. மதப்பற்று மிக்க ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தை அதே மதப்பற்றுடன் வளரும் என்று சொல்லமுடியாது.
இங்கர்சால் கடவுள் நம்பிக்கையற்றவன், நாத்திகன். அவனது மகன் எதிர்பாரதவிதமாக மாடியிலிருந்து கீழே விழுவதைப் பார்த்த அவன், "கடவுளே என் மகனை காப்பாற்று" என்று தன்னை அறியாமலே கத்திவிட்டான். மயக்கம் தெளிந்த மகன் கேட்டான், "அப்பா, உனக்குதான் கடவுள் நம்பிக்கை கிடையாதே நான் விழும்போது "கடவுளே...." என்று ஏன் கத்தினாய்?" என்று. அதற்கு அவன், "மகனே! நான் வளர்ந்த விதம் அப்படி அதனால் கத்தினேன். ஆனால் நீ அப்படி கத்தமாட்டாய், நீ வளரும்விதம் வேறு" என்றானாம்.
பிறந்த குழந்தைக்கு அதன் தாய், பால்கொடுக்கும்போது சப்பி சூப்பி குடிக்கிறது, அந்த அறிவை கொடுத்தது யார்? தனக்கு விரும்பாத உணவைக் கொடுத்தால் வாயை மூடிக்கொள்கிறது. கட்டாயப்படுத்தி கொடுத்தால் துப்பிவிடுகிறது. துப்பவும் வாயை மூடிக்கொள்ளவும் யார் சொல்லிக்கொடுத்தது? அதற்கு விளக்கம்? பிறக்கும்போதே கொண்டுவந்த பழைய அறிவு.
மீன் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் நீந்தும். வண்டு கூட்டைவிட்டு தத்தித் தத்தி வெளிவரும், வந்தவுடன் குப்பென்று முழுமையாக வளர்ச்சிப் பெற்ற வண்டுபோல் பறக்கும். அவைகளின் வாழ்க்கை முறை என்பது மிக மிக சாதாரணமானது. ஆனால் மனிதனுடைய நிலை அப்படியல்ல. அவனுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன, வாழ்க்கைமுறை கடுமையானது. அதனால் அவன் ஒவ்வொரு அசைவையும் படித்தாகவேண்டும். உட்காருவது முதல் எழுந்து நடக்கிற முறை வரை படிக்கவேண்டும்; ஏன் சுவாசிப்பது உள்பட படித்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை அங்கு இருக்கிறது. ஆகவே அங்கிருந்து வந்தவுடன் இந்த சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்கிறான். பார்ப்பதற்கு விழிகளை அசைத்து பயிற்சி எடுத்துக்கொள்கிறான்; நடப்பதற்கு கை கால்களை ஆட்டி வலுவேற்றிக்கொள்கிறான். அதில் மகிழ்ச்சி வரும்போது சிரிக்கிறான், அதிர்ச்சி வரும்போது அழுகிறான்.
சாதாரணமாக நடைமுறையில் இதை பார்க்கலாம், உறவினர் வீட்டிற்கோ அல்லது நண்பர்கள் வீட்டிற்கோ செல்கிறோம் அங்கு அறிமுகம் இல்லாத குழந்தையை தூக்கும்போது சில குழந்தை நம்மையே பார்க்கும், சில வீல் என்று கத்தும். அது ஏன்? பெரும்பாலும் காரணம் தெரியாது அல்லது அதை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால் காரணம் இல்லாமலில்லை. நமது உலகத்தில் தராதரம், ஏற்றத்தாழ்வு, repelling force, attractive force இருக்கிற மாதிரி அவர்கள் உலகத்திலும் உண்டு. அந்த குழந்தை பார்க்கிறது, இவன் நம் இனத்தவன்தானா இல்லையா என்று. தன் இனத்தவன் என்றால் பார்த்துக்கொண்டே இருக்கும்; தன் இனத்தவனில்லை என்றால் முகத்தை திருப்பிக்கொள்ளும்; தன் பகைவன் என்றால் 'வீ..ல்'லென்று கத்தும். அப்பொ குழந்தை என்பது நம்மிடமுள்ள அறிவைவிட மிகப்பெரிய அறிவை பெற்று வந்திருக்கிறது. இந்த உலகத்தினுடைய குளிர்ந்த காற்று பட்டவுடன் தான் பெற்றுவந்த அறிவை கொஞ்சங் கொஞ்சமாக மறக்கிறது. வளர வளர பெற்றோர் கொடுத்த அறிவு, ஆசிரியர் கொடுத்த அறிவு, சமுதாயம் கொடுத்த அறிவு, இன்னும் உலக அறிவு இப்படி பல அறிவுகள் உள்ளே புகுந்து பழய அறிவை மூடி மறைத்துவிடுகிறது. அது நீறு பூத்த நெருப்பாக ஆகிவிடுகிறது. உலக அறிவு அதிகமாக அதிகமாக தன்னிடம் ஓர் அறிவு இருப்பதையே மறந்துவிட்டு பெர்னாட்ஷா சொன்னது, ஷேக்ஸ்பியர் சொன்னது, இன்னும் யார் யாரோ சொன்னதையெல்லாம் உள்வாங்கி பெருமை பட்டுக்கொண்டிருக்கிறது.
இதை தெளிவாக உணர்ந்த ஞானிகள், தாம் பெற்ற உலக அறிவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நீறு பூத்திருந்த 'அந்த' அறிவை தோண்டி எடுத்தார்கள். அதில் தெளிவு இருப்பதை உணர்ந்தார்கள், அதில் மகிழ்ச்சி கண்டார்கள், மதங்களுக்கு அப்பால் நின்றார்கள், தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற ஆசை கொண்டார்கள், மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல முயன்றார்கள், அடுத்த சமுதாயம் எப்படி வாழவேண்டும், இன்னும் நூறு வருடங்களுக்கு பின்பு மக்களுக்கு என்ன தேவை இருக்கும் அதற்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். நமக்கு அது பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது. இன்றுள்ள அரிசி விலையைப் பற்றி நினைக்காமல் நாளை பெய்யும் மழை நீரை தேக்க திட்டம் தீட்டுகிறேனே என்று அவர்களை கல்லால் அடித்தோம். அவர்கள் விதி, அடிபட்டுக்கொண்டே வாழ்ந்து காட்டினார்கள். இன்றும் நாம் அவர்களை திட்டி தீர்த்துக்கொண்டுத்தானே இருக்கிறோம். அவர்களோடு அது நில்லாமல் அவர்களை நினைவு கூறுபவர்களையும் சேர்த்து வசை பாடுகிறோம்.
---o0o---
Friday April 4, 2008 திண்ணை
மனிதர்களில் பெரும்பாலோர் நடுநிலை சிந்தனையாளர்களாக இருந்தாலும் ஒரு சிலரின் தடுமாற்ற சிந்தனையினால் ஏற்படும் தாக்கம் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன்வைப்பதில் தவறு கிடையாது, அது அவரவரது கருத்து சுதந்திரம். ஆனால் தாம் சொல்வதுதான் சரியானது என்று வாதிடும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பாக மத ரீதியாக முன்வைக்கப்படும் கருத்தாக்கம் உள ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் மிக பெரிய பாதிப்பை உருவாக்குகிறது.
இத்தகைய கருத்தாக்கங்களை உருவாக்குபவர்கள் இரண்டு வகையினர். முதல் வகையினர் தான் சார்ந்திருக்கும் மதம், சமூகத்தைப் பற்றிய தீவிர சிந்தை உள்ளவர்கள். மற்றொரு வகையினர் மற்ற மதம் சமுதாயத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள். இந்த இருவரும் தாங்கள் முன்வைக்கும் செய்தி சரியானதுதானா என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இல்லை. ஒரு விரல் முன்னுள்ளவனை சுட்டிக்காட்டும்போது மற்ற மூன்று விரல்கள் தன்னை சுட்டிக்காட்டுகின்றன என்று உணருவதுமில்லை. ஒருவர் மற்றவர்மீது சேற்றை வாரி பூசுவது மெகா சீரியல் மாதிரி நடந்துக்கொண்டே இருக்கிறது. நல்ல செய்தியைவிட கெட்ட செய்திக்கு வலிமை அதிகம். ஒரு துளி விஷம் போதும் ஒரு குடம் பாலை வீணாக்க என்ற உண்மை புதிதல்ல.
உலகில் எந்த குழந்தையும் முஸ்லிமாகவோ, கிறுஸ்துவமாகவோ, இந்துவாகவோ அல்லது வேறு எந்த மதத்தை சார்ந்ததாகவோ அல்லது நாத்திகனாகவோ பிறக்கவில்லை. அதற்கு மதம், சாதி, இனம், மொழி என்று எதுவுமே இல்லை. "எல்லா மகவுகளும் இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன" என்று நபி மொழி இருக்கிறதென்றால் குழந்தை, குழந்தையாகவே பிறக்கிறது என்றுதான்தான் பொருள் கொள்ளவேண்டும். அங்கே இஸ்லாத்தைப் புகுத்தினால் அது இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக ஆகிவிடும்.
குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அது வளர்கிற சூழலைப் பொருத்தே மதம், மொழி, கலாச்சாரம் மாறுகிறது. மதப்பற்று மிக்க ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தை அதே மதப்பற்றுடன் வளரும் என்று சொல்லமுடியாது.
இங்கர்சால் கடவுள் நம்பிக்கையற்றவன், நாத்திகன். அவனது மகன் எதிர்பாரதவிதமாக மாடியிலிருந்து கீழே விழுவதைப் பார்த்த அவன், "கடவுளே என் மகனை காப்பாற்று" என்று தன்னை அறியாமலே கத்திவிட்டான். மயக்கம் தெளிந்த மகன் கேட்டான், "அப்பா, உனக்குதான் கடவுள் நம்பிக்கை கிடையாதே நான் விழும்போது "கடவுளே...." என்று ஏன் கத்தினாய்?" என்று. அதற்கு அவன், "மகனே! நான் வளர்ந்த விதம் அப்படி அதனால் கத்தினேன். ஆனால் நீ அப்படி கத்தமாட்டாய், நீ வளரும்விதம் வேறு" என்றானாம்.
பிறந்த குழந்தைக்கு அதன் தாய், பால்கொடுக்கும்போது சப்பி சூப்பி குடிக்கிறது, அந்த அறிவை கொடுத்தது யார்? தனக்கு விரும்பாத உணவைக் கொடுத்தால் வாயை மூடிக்கொள்கிறது. கட்டாயப்படுத்தி கொடுத்தால் துப்பிவிடுகிறது. துப்பவும் வாயை மூடிக்கொள்ளவும் யார் சொல்லிக்கொடுத்தது? அதற்கு விளக்கம்? பிறக்கும்போதே கொண்டுவந்த பழைய அறிவு.
மீன் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் நீந்தும். வண்டு கூட்டைவிட்டு தத்தித் தத்தி வெளிவரும், வந்தவுடன் குப்பென்று முழுமையாக வளர்ச்சிப் பெற்ற வண்டுபோல் பறக்கும். அவைகளின் வாழ்க்கை முறை என்பது மிக மிக சாதாரணமானது. ஆனால் மனிதனுடைய நிலை அப்படியல்ல. அவனுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன, வாழ்க்கைமுறை கடுமையானது. அதனால் அவன் ஒவ்வொரு அசைவையும் படித்தாகவேண்டும். உட்காருவது முதல் எழுந்து நடக்கிற முறை வரை படிக்கவேண்டும்; ஏன் சுவாசிப்பது உள்பட படித்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை அங்கு இருக்கிறது. ஆகவே அங்கிருந்து வந்தவுடன் இந்த சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்கிறான். பார்ப்பதற்கு விழிகளை அசைத்து பயிற்சி எடுத்துக்கொள்கிறான்; நடப்பதற்கு கை கால்களை ஆட்டி வலுவேற்றிக்கொள்கிறான். அதில் மகிழ்ச்சி வரும்போது சிரிக்கிறான், அதிர்ச்சி வரும்போது அழுகிறான்.
சாதாரணமாக நடைமுறையில் இதை பார்க்கலாம், உறவினர் வீட்டிற்கோ அல்லது நண்பர்கள் வீட்டிற்கோ செல்கிறோம் அங்கு அறிமுகம் இல்லாத குழந்தையை தூக்கும்போது சில குழந்தை நம்மையே பார்க்கும், சில வீல் என்று கத்தும். அது ஏன்? பெரும்பாலும் காரணம் தெரியாது அல்லது அதை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால் காரணம் இல்லாமலில்லை. நமது உலகத்தில் தராதரம், ஏற்றத்தாழ்வு, repelling force, attractive force இருக்கிற மாதிரி அவர்கள் உலகத்திலும் உண்டு. அந்த குழந்தை பார்க்கிறது, இவன் நம் இனத்தவன்தானா இல்லையா என்று. தன் இனத்தவன் என்றால் பார்த்துக்கொண்டே இருக்கும்; தன் இனத்தவனில்லை என்றால் முகத்தை திருப்பிக்கொள்ளும்; தன் பகைவன் என்றால் 'வீ..ல்'லென்று கத்தும். அப்பொ குழந்தை என்பது நம்மிடமுள்ள அறிவைவிட மிகப்பெரிய அறிவை பெற்று வந்திருக்கிறது. இந்த உலகத்தினுடைய குளிர்ந்த காற்று பட்டவுடன் தான் பெற்றுவந்த அறிவை கொஞ்சங் கொஞ்சமாக மறக்கிறது. வளர வளர பெற்றோர் கொடுத்த அறிவு, ஆசிரியர் கொடுத்த அறிவு, சமுதாயம் கொடுத்த அறிவு, இன்னும் உலக அறிவு இப்படி பல அறிவுகள் உள்ளே புகுந்து பழய அறிவை மூடி மறைத்துவிடுகிறது. அது நீறு பூத்த நெருப்பாக ஆகிவிடுகிறது. உலக அறிவு அதிகமாக அதிகமாக தன்னிடம் ஓர் அறிவு இருப்பதையே மறந்துவிட்டு பெர்னாட்ஷா சொன்னது, ஷேக்ஸ்பியர் சொன்னது, இன்னும் யார் யாரோ சொன்னதையெல்லாம் உள்வாங்கி பெருமை பட்டுக்கொண்டிருக்கிறது.
இதை தெளிவாக உணர்ந்த ஞானிகள், தாம் பெற்ற உலக அறிவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நீறு பூத்திருந்த 'அந்த' அறிவை தோண்டி எடுத்தார்கள். அதில் தெளிவு இருப்பதை உணர்ந்தார்கள், அதில் மகிழ்ச்சி கண்டார்கள், மதங்களுக்கு அப்பால் நின்றார்கள், தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற ஆசை கொண்டார்கள், மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல முயன்றார்கள், அடுத்த சமுதாயம் எப்படி வாழவேண்டும், இன்னும் நூறு வருடங்களுக்கு பின்பு மக்களுக்கு என்ன தேவை இருக்கும் அதற்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். நமக்கு அது பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது. இன்றுள்ள அரிசி விலையைப் பற்றி நினைக்காமல் நாளை பெய்யும் மழை நீரை தேக்க திட்டம் தீட்டுகிறேனே என்று அவர்களை கல்லால் அடித்தோம். அவர்கள் விதி, அடிபட்டுக்கொண்டே வாழ்ந்து காட்டினார்கள். இன்றும் நாம் அவர்களை திட்டி தீர்த்துக்கொண்டுத்தானே இருக்கிறோம். அவர்களோடு அது நில்லாமல் அவர்களை நினைவு கூறுபவர்களையும் சேர்த்து வசை பாடுகிறோம்.
---o0o---
Friday April 4, 2008 திண்ணை
Wednesday, August 26, 2009
கயமை வேண்டாம்
ஹமீத் ஜாஃபர்
எவருடைய இதயங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள், அதில் குழப்பத்தை உண்டுபண்ணக் கருதி - (இத்தகைய வசனங்களில் தவறான) பல அர்த்தங்களையே தேடிப் பின்பற்றுவார்கள்.... -அல் குர்ஆன் 3:7
நேசக்குமார் என்பவர். தனக்கு எல்லாம் தெரிந்தது போல், இஸ்லாத்தை கரைத்துக்குடித்ததுபோல் இஸ்லாத்தையும், அதன் இறுதி தூதரையும், அதன் சட்ட திட்டங்களையும் தரம்தாழ்த்தி விமரிசித்து வருகிறார். ஒருவர் மற்றவரைப்பற்றி குறை கூறுமுன் அல்லது விமரிசிக்குமுன் தான் சரியாக இருக்கின்றோமா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் அதில் பொருள் இருக்கும். நோய் தீர்க்கும் டாக்டர் நோயாளியாக இருக்கக்கூடாது, தீர்ப்பு வழங்கும் நீதிபதி சித்த பிரமை உள்ளவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அங்கு எல்லாமே குளறுபடிதான். நோயும் தீராது, நிரபராதியும் இருக்கமாட்டான்.
முதலில் இந்த நேசக்குமார் தனது மதத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும், அதன் சட்டத் திட்டங்கள் சரியானதுதானா என்று புரிந்துக்கொள்ள வேண்டும். சிலர் இருக்கிறார்கள் அவர்கள், மற்றவர்கள் என்னென்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை தோண்டித்துருவி தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் தான் என்ன செய்கிறோம் என்று மட்டும் தெரியாது. இந்த வகையை சேர்ந்தவர்தான் இவர்.
இவர் சொல்கிறார்: 'நான் கூடுமான வரையில் முஹம்மது நபி அவர்களை கண்ணியத்தோடும் மரியாதையுடனுமே குறிப்பிட்டு வருகிறேன். முஸ்லிம் அல்லாதவனாகிய என்னுடைய பார்வையில் நபிகள் செய்தவையெல்லாம் குற்றங்களாகவே தென்படுகின்றன.' ராமாயணம்தான் படித்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் இடிப்பது என்னவோ பெருமாள்
கோயிலாகப்போய்விடுகிறது என்பதுபோலிருக்கிறது. காமாலைக் கண்ணுடையானுக்கு காண்பது என்ன வெள்ளையாகவா தெரியும்? யாருக்கு காது குத்துகிறீர்? ஒரு மனிதர் மீது கண்ணியமும் மரியாதையும் செலுத்துவதென்றால், அவரது சொல் அல்லது செயல் அல்லது நடைமுறையில் மதிப்பு இருக்கவேண்டும். அவற்றின்மீது மதிப்பில்லாதபோது, தவறாக தெரியும்போது எந்த அடிப்படையில் அதற்குரியவரை மதிக்க முடியும்? அவரின் அழகைப் பார்த்தா இல்லை அவரிடமுள்ள செல்வத்தைப் பார்த்தா? இங்கு அந்தஸ்த்துக்கு பேச்சில்லை, அது சொல்லிலும் செயலிலிமிருந்து வெளிப்படுவது.
தான் ஒரு ஹிந்து ஆனால் பிராமணன் அல்ல என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய திரு நேச குமார், சங்கராச்சாரியார் ஜெயில் வாசம் போயிருப்பதால் ஹிந்து மக்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது, இப்போதுதான் உறுதியாக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒரு மதத் தலைவர் உள்ளே போனது எங்களுக்கும் வருத்தம்தான், ஆனால் என்ன செய்வது? தினை விதைத்தால் வினை கிடைக்காதல்லவா?! அம்பு திசை மாறி வராது, நீங்கள் விட்ட பானம் உங்களிடமே வந்து சேருகிறது.
கடவுள் என்ற வார்த்தைக்கு காலம், எல்லை, பரிணாமம், பரிமாணம், அறிவு, சிந்தனை, கற்பனை இவைகள் எல்லாவற்றையும் கடந்த ஓர் உள்ளமை என்ற விளக்கம் ஓரளவுக்குதான் பொருந்தும். முழுமையான விளக்கம் அளிக்க எந்த மனிதனுக்கு அறிவும் போதாது வார்த்தையும் கிடைக்காது. அத்தகைய கடவுளை நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? பலவாக பிரித்தீர்கள், அவைகள் தனியாக இருக்கக்கூடாதென்று கல்யாணம் செய்து மனைவியை ஏற்படுத்தினீர்கள், மனைவி வந்தபிறகு குழந்தை வேண்டுமே! அவைகளையும் கொடுத்தீர்கள். ஒரு மனைவி பத்தாதென்று பல மனைவிகளை கொடுத்தீர்கள். (ஒரு முஸ்லிம் நான்கு திருமணம் வரை செய்துக்கொள்ள அனுமதி இருப்பதை சகிக்கமுடியாமல் "ஹா! முஸல்மான்லுக் ச்சார் ச்சார் ஷா தியான் கரேகா அவுர் தஸ்தஸ் பச்சா ஜனம் கரேகா" என்ற சிங்கால்களின் ஒப்பாரி இன்னும் ஓயவில்லை. இந்திய திருநாட்டில் எத்தனை முஸ்லிம் நான்கு திருமணம் செய்து டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெற்றுள்ளார்கள்.?)
'சிவ' என்றால் 'குற்றமில்லாத சர்வ வல்லமையும் பொருந்திய அநாதியானது' என்று பொருள். சிவம் என்பதற்கு சத்து, சித்து, ஆனந்தம் அடங்கிய சச்சிதானந்தம் என்று பொருள். அதாவது அங்கிங்கெனாது எங்கும் நிரைந்து ஆதியாய், அருவமாய், தன்னிலே தானாய், தனக்கு ஒப்புவமை இல்லாத ஏகனாகிய இறைவனாம் சிவபெருமானுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை....?
சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையே சக்தி இல்லை என்று மூலத்தை(சிவம்) பின்னுக்கு தள்ளி, வல்லமையை(சக்தி) முன்னிலைப்படுத்தினீர்கள். நீ பாதி நான் பாதி என்று ஆண் பாதி பெண் பாதியாக ஆக்கியுள்ளீர்கள். மலமில்லாத அநாதிக்கு ஒரு கடவுளியை (பார்வதி) திருமணம் செய்து வைத்து இரண்டு பிள்ளைகளை கொடுத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி அதையும் இரண்டாகப் பிரித்தீர்கள். தந்தையை உள்ளே செல்ல அனுமதிக்காத மூத்தவனின் தலையை சீவி எந்தவகையிலும் பொருந்தாத யானை தலையை பொருத்தி குளக்கரையில் (பெண்கள் குளிக்குமிடத்தில்) உட்கார வைத்துள்ளீர்கள். ஐயா! நான் கேட்கிறேன் சர்வ வல்லமையுடைய கடவுளுக்குத் தன் மகனை தெரியவில்லை, கடவுளுக்கும் கடவுளிக்கும் பிறந்த கடவுள் குழந்தைக்கு தன் தந்தையை தெரியவில்லை. அப்படியானால் அந்த கடவுள்களுக்கு சக்தியே கிடையாதா? தெய்வத்தன்மை இல்லாத கடவுளா?
ராமாயண நாயகன் ஸ்ரீராம பெருமான் தன் மனைவி காணாமல் போனபோது அவரை கண்டுபிடிக்க ஹனுமான் என்ற விமானப்படை தேவைப்பட்டது. ஏன் ஸ்ரீராமர் கடவுள் என்றால் அல்லது கடவுள் அவதாரம் என்றால் கடவுள் சக்தி எங்கே போய்விட்டது? சீதை பிராட்டியார் கண்டுபிடிக்கப்பட்டபின் அவர் கற்புடன் இருக்கிறாரா இல்லையா என்பது ராம கடவுளுக்கு தெரியவில்லையா? அவருக்கு ஒரு ACID TEST. அதில் அவர் வேகவில்லை காரணம் கடவுளித்தன்மை. சீதா பிராட்டியாரை கண்டுபிடிக்கவும் அவர் கற்புடையவர்தானா என்பதை அறியவும் ஸ்ரீராம பெருமானுக்கு வல்லமை கிடையாதா? நீங்களே உங்கள்
வரலாற்று நாயகனை தரம் தாழ்த்தி வைத்துள்ளீர்கள். எங்களைப் பொருத்தவரை ஸ்ரீராம பிரானும் ஸ்ரீகிருஷ்ண பகவானும் வறலாற்று நாயகர்கள். ஏன் தீர்க்கதரிசியாகக்கூட இருந்திருக்கலாம்.
'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பினரும் (பூமியில்) இருக்கவில்லை' - அல் குர்ஆன் 35:24
'ஒவ்வொரு தூதரும் (தன் மக்களுக்குத்) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனைப் புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம்' - அல் குர்ஆன் 14:4
'நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைதான் நாம் உமக்கு கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்கு கூறவில்லை' - அல் குர் ஆன் 40:78
பெண் என்பவள் தன் கணவனுக்காக, தன் குழந்தைக்காக, தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கும் குணம் கொண்டவள். தாய்மை என்ற அந்த பண்பு அவர்களுக்கே உரியது. உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுகிற பெண்ணை கோயில்களில் கொங்கையை வெளிப்படுத்தி அரை நிர்வாணமாக்கி (சிற்ப) கலை என்ற பெயரில் அவமதித்துள்ளீர்கள். சிந்தையை சிதரடிக்கும் காம உணர்வை தூண்டும் சிற்பங்களுக்கு பஞ்சமில்லை. புராணமே அப்படித்தானே இருக்கிறது. அழகான பெண் இருந்திடக்கூடாது! இந்திரன், தனக்கு காமம் வந்தால் பிரம்மாவிடம் சொன்னால் அழகான பெண்ணை படைத்து கொடுத்திருப்பார். ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றால் சற்று மனம் அதிகமாகத்தானே இருக்கும் அதனால்
விஸ்வாமித்திரரின் உடைமையை கைவைத்தார் ஆயிரம் யோனிகளை அவார்டாக வாங்கினார். எப்படி உடம்பில் அமைந்தது என்று கற்பனைக்கே எட்டவில்லை. இந்திரனுக்கும் சந்திரனுக்கும் ஆசை இருக்கும்போது சங்கராச்சாரியாருக்கு இருப்பதில் தவறில்லை.
இந்திரப் புராணம் இப்படியென்றால் மகாபாரதமோ ஒரு படி மேல். பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே ஒரு திரெளபதி!? இருந்தாலும் அந்த பாரம்பரியத்தை விடாமல் இன்னும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்காக பெருமைப் படவேண்டும். இல்லையில்லை ஜிந்தாபாத் போடவேண்டும்.
ஆசையை துறக்க இந்து மதத்தின் அத்துவைதம் போதிக்கிறது. ஆனால் ஆடையை துறந்துவிட்டு அங்கே(ஆண் உறுபில்) ஒரு பூட்டையும் மாட்டி விட்டுக்கொண்டு காசி வீதிகளில் சுற்றுலா வரும் நிர்வாண சாமிகள் முற்றும் துறந்தவர்கள். The world
Highly polluted rever உங்களுக்கு புனித கங்கை.
கடவுள் கொள்கை:-
ஐயா கிருஸ்துவ மதத்திற்கென்று 'பிதா, சுதா, பரிசுத்த ஆவி' என்ற trinity கொள்கை உண்டு, இஸ்லாத்திற்கென்று ஒரு கொள்கை உள்ளது. அல்லாஹ்வை தவிர வேறு இறைவனில்லை. முஹம்மது (நபி) அவனது இறுதி தூதர்' என்று. அதுபோல்
உங்களுக்கென்று இந்து மதத்தின் கொள்கை என்ன? ((அதைதான் குழி தோண்டி புதைத்துவிட்டார்களே!))
சுமார் 15 வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம், இந்து மதத்தில் சுமார் 26 உட்பிரிவுகள் உள்ளன. அவைகளில் உயர்வானது சைவ சித்தாந்தம், அந்த சைவ சித்தாந்தத்திலும் தென்னிந்திய சைவ சித்தாந்தம் மிக உயர்வானது என்று டாக்டர் லஷ்மணன் என்பவர் தனது இந்திய தத்துவ ஞானம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது சென்னை அரசாலும் இலங்கை அரசாலும் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய சைவ சித்தாந்தத்தை மெய் நிலை கண்ட ஞானி வள்ளலார் ஐயா அவர்கள் தூக்கி எறிகிறார்கள். 'வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப்போட்டு மறைத்துவிட்டார்கள். அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். 'தெய்வத்துக்குக் கை கால் முதலியன் இருக்குமா?' என்று கேட்பவருக்கு பதில் சொல்லத்தெரியாது விழிக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக்கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.'
'இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றி புறங்கவியச் சொல்லவில்லை. இவைகளுக்கெல்லாம் சாட்சியாக நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது
இவ்வளவு வென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும்.' என்று மேட்டுக்குப்பம் சித்திவிளாகத்தில் விளக்கி உரையாற்றியுள்ளார்கள். ((-ஆதாரம்: திரு அருட்பா உரைநடைப் பகுதி))
'நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும்
நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்
நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்
நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்
நினைவின்றி நிற்பதுவே சகசமாகும்
நினைவின்றி நிற்பதுவே பிர்மமாகும்
நினைவின்றி நிற்பதுவே சிவவுமாகும்
நினைவணுவு மில்லை யெலாம் பிர்மந்தானே.'
என்று 'ரிபு கீதை'யும் விளக்குகிறது. ஆனால் இப்போது ரிபு கீதையுமில்லை, ஐயா அவர்கள் சொன்ன விளக்கங்களும் குப்பைக்குப் போய்விட்டன. மாறாக இப்போது இருப்பதெல்லாம் 'Enything is God, Everything is God.' என்ற பழயக்கடவுள்.
பாம்பு கடவுள்(பரமசிவன் கழுத்தில் இருப்பது), பசு கடவுள்(எனவே அதன் மூத்திரத்தை குடிக்கலாம்) ஆனால் படைப்பினங்களிலேயே உயர்ந்த படைப்பான மனிதன் கடவுள் இல்லை, மரித்துவிட்டால் தெய்வமாகிவிடுகிறான்.
மனிதன் படைக்கப்பட்ட விதமும் பூசப்பட்ட வர்ணமும்:-
'நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். (அவனுடைய துர் நடத்தையின் காரணமாகப்) பின்னர் அவனை தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக நாம் ஆக்கிவிடுகிறோம்.' - அல் குர்ஆன் 95: 4,5
'ஆதமுடைய சந்ததியை, நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்), கடலில் (கப்பல்கள் மீதும்), நாம் தாம் அவர்களை சுமந்து செல்(லும்படி செய்)கிறோம். நல்ல ஆகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் சிருஷ்டித்த (மற்ற ஜீவராசிகளில்) அநேகவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம்.' - அல் குர்ஆன் 17: 70
'அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். அவரிலிருந்து அவரின் மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து அநேக ஆண் பெண்களை (வெளிப்படுத்தி) பரவச்செய்தான்.' - அல் குர்ஆன் 4:1
'அவனே ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். பின்னர் ஓர் அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை(உருவாக்கி) உண்டாக்கினான்.' - அல் குர்ஆன் 21:7,8
இப்படி மனிதன் படைக்கப்பட்ட விதத்தையும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்தையும் பல இடங்களில் விளக்கும் குர்ஆன், தவறு செய்பவனுக்கு தண்டனையும் உண்டு என்று கண்டிப்புடன் எச்சரிக்கிறது, ஆனால் இந்துக்களின் சாஸ்திர நூல்களில் ஒன்றான மனு சாஸ்திரம் மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு விதமாகப் படைத்து, அந்த நான்கு வகைக்கும் நான்கு விதமான பெயிண்டுகளை அடிக்கிறது.
'எல்லா வல்லமையும் பெற்ற இறைவன், உலக நன்மைக்காக பிராமணர்களை தன் வாயிலிருந்து படைத்தான். இவர்கள் உயர் வகுப்பினர். இவர்கள் வேதம் கற்றுக் கொடுத்தல், யாகங்கள் புரிதல், கோவில் அர்ச்சகர்களாக இருத்தல், தர்மங்கள் வினியோகித்தல். அடுத்து ஷத்திரியர்களை தன் கைகளிலிருந்து படைத்தான். இவர்கள் போர் புரிதல், வேதங்களை ஓதுதல், ஆசைகளை அடக்குதல் ஆகிய கடமைகளை வகுத்தான். மூன்றாவதாக வைசியர்களை தன் தொடை யிலிருந்து படைத்தான். இவர்கள் உழவும் வாணிபமும் செய்யவேண்டும், ஆடு மாடுகள் மேய்க்க வேண்டும். கடைசியாக சூத்திரர்களை தன்
பாதங்களிலிருந்து படைத்தான். இவர்கள் மற்ற மூன்று சாதியினருக்கும் அடிமையாயிருந்து ஊழியம் செய்யவேண்டும்.'
'இம் மனு சாஸ்திரம் உயர் ஜாதியான பிராமண வகுப்பினருக்கு, கடவுளர்களுக்குக் கொடுக்கப்படும் பெருமதிப்பைத்தரும் தனி உரிமைகளையும், தனிச்சலுகைகளையும் வழங்குகிறது. பிராமணர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; படைப்புகளிலேயே
மிக உயர்ந்தவர்கள்; உலகத்தின் எல்லா உடைமைகளும் அவர்களுடைய சொத்துக்கள்; அவர்கள்தான் உலகத்து எஜமானர்கள்; பிராமணர்கள் தங்கள் அடிமைகளாகிய சூத்திரர்களிடமிருந்து தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் பறித்துக்கொள்ளலாம்; சூத்திரர்கள் எத்தகைய குற்றம் செய்யாதிருந்த போதிலும் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் உரிமை பிராமணர்களுக்கு உண்டு. அடிமைகளாகிய சூத்திரர்களுக்கு எந்த உரிமையும் உடைமையும் கிடையாது; அவன் பெற்றுள்ள எல்லாப் பொருள்களும் அவனுடைய தலைவருக்குச் சொந்தமானவை. ரிக் வேதத்தை மனப்பாடம் செய்த ஒரு பிராமணன், உலகையே
அழித்துவிடக்கூடிய பெருங்குற்றங்கள் செய்தாலும், பாவங்களை புரிந்தாலும் அவன் குற்றங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். (ஆகவே சங்கராச்சாரியர் போன்றோர் எதுவும் செய்யலாம்). மிக அவசியமான நேரத்திலுங்கூட, ஒரு பிராமணன்மீது எத்தகைய வரி விதிக்கவோ, கப்பத்தொகை விதிக்கவோ எந்த மன்னனுக்கும் அதிகாரமில்லை (ஆனதால் ஜெயேந்திரரை வெளியே விடவேண்டும், மன்னராட்சியானாலும் மக்களாட்சியானாலும் மனு சாஸ்திரப்படி நடப்பதுதான் தர்மம்).'
'ஷத்திரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களுக்கும் மேலானவர்களாகக் கருதப்பட்டாலும், பிராமணர்களுக்கு மிக மிகக் கீழானவர்களே. பத்து வயது பிராமணச் சிறுவன் நூறு வயது ஷத்திரியனைவிட உயர்ந்தவன்.' 'தீண்டத்தகாதவர்' என்று எனக்கூறப்படும் இந்த சூத்திரர்கள், மிருகங்களில் தாழ்ந்தோராகக் கருதப்படுகின்றனர் 'பிராமணன் ஒருவருக்குத் தொண்டு செய்வதை ஒரு சூத்திரன் தனக்கு கிடைத்த புண்ணியமாகக் கருதி மகிழவேண்டும்; அதற்காக அவன் எத்தகைய கூலியோ சன்மானமோ பெறவேண்டியதில்லை. சூத்திரர்கள் செல்வம் ஈட்டவோ அதனைச் சேர்த்துப் பாதுகாத்து வைக்கவோ கூடாது; ஏனென்றால் அது பிராமணர்களின் உள்ளத்தைப் புண்படுத்தும். ஒரு சூத்திரன், பிராமணனை அடிக்கக் கையையோ கம்பையோ நீட்டுவானாகில், அவன் கை வெட்டப்படவேண்டும்; அவனைக் கோபத்தோடு உதைப்பானாகில், அவன் கால்கள் துண்டிக்கப்படவேண்டும்; தீண்டத்தகாத ஒருவன் ஒரு பிராமணனோடு சரிசமமாக உட்கார முயன்றால் அவன் முதுகில் சூடு
போடவேண்டும், அல்லது அவனை நாடு கடத்தவேண்டும்; ஒரு சூத்திரன் ஒரு பிராமணனைப் பழிப்பானாகில் அவன் நாக்கு பிடுங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு தீண்டத்தகாதவன் கொல்லப்பட்டால், அந்த கொலைக்குப் பகரமாக செலுத்தவேண்டிய பரிகாரத் தொகை, நாய், பூனை, தவளை, பல்லி, காகம், ஆந்தை ஆகியவற்றில் ஒன்றை கொன்றால் என்ன பரிகாரத் தொகை கொடுக்கவேண்டுமோ அந்த அளவேயாகும்.' என்று உங்கள் சட்ட நூலாகிய இந்த மனு சாஸ்திரம் கூறுகிறது.
இப்படி மனிதனுக்குப் பெருமை அளிக்கும் நீங்கள், இஸ்லாத்தையும், அதன் வேதத்தையும், அதன் தூதரையும், அதன் சட்டத்தையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுற்றிவளைத்தும் குறை கூறும் திரு நேசக்குமாரிடம் ஒன்று கேட்கிறேன்.
இஸ்லாத்திலும், கிருஸ்துவத்திலும் நடக்கும் திருமணங்களுக்கு அது எத்தனை வருடத்திற்கு முன்பானதாக இருந்தாலும் சரி ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருப்பதுபோல் உங்கள் மதத் திருமணங்களுக்கு அக்கினி சாட்சியும், முப்பத்தி மூவாயிரம் கோடி தேவர்கள் சாட்சியல்லாது ஒரு மனித சாட்சியுள்ள எழுத்துப்பூர்வமான ஆதாரம் காட்டமுடியுமா?
இஸ்லாமியர்கள் எவரும் எந்த காலத்திலும் யாரும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவுமில்லை, மனதால் நினைக்கவுமில்லை. முஹம்மது நபி (சல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக(ரசூல்), முத்திரை நபியாக (காத்தமன்நபி. - கத்தம் என்றால் முத்திரை. முத்திரை வைப்பது என்றால் எல்லாம் முடிந்தபிறகு வைக்கப்படும் சீல், Finalized, Finished forever) உறுதியுடன் ஏற்றுகொண்டுள்ளனர். ஆனால் நீங்கள்தான், உங்களுடைய கோணல் புத்தியுடன் 'இஸ்லாமிய வரலாறு காட்டும் முஹம்மது நபி அவர்களுக்கும் இஸ்லாமியர்கள் மனதில் கடவுளாக இன்று உருவகப்படுத்தப்பட்டிருக்கும் நபிகள் நாயகத்திற்கும்.... என்று உங்களது 'இந்துத்துவா'வை திணிக்கிறீர்கள்.
'எனது உம்மத்துக்கள்(நபி வழியை பின்பற்றுபவர்கள்) எழுபது பிரிவுகளாகப் பிரிவார்கள்...' என்று அப்போதே நபிகள் நாயகம்(சல்) அவர்கள் சொல்லி விட்டார்கள். இஸ்லாத்தில் பல பிரிவுகள் இருப்பது உண்மைதான். ஆனால் எந்த பிரிவினரும் 'லாயிலாக இல்லல்லாஹ்' என்ற மந்திரத்தை தூக்கி எறியவில்லை. மிர்ஜா குலாம் முஹம்மது ஒரு இறைதூதர் என்று அஹமதிகள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், அது அந்த பிரிவினரின் நம்பிக்கை. உலக முஸ்லிம்களின் நம்பிக்கையல்லவே? அதை வேண்டாதவர்கள் மீது திணித்ததால்தானே துன்பம் அனுபவிக்கின்றனர். அதனால் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தது? நீங்கள் எதற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஷியா சுன்னா சண்டை நடக்கிறதென்றால் அந்த சமூகத்து லோக்கல் தலைவர்கள் சும்மா இருக்காமல் உங்களைப்போல் குசும்பு செய்திருப்பார்கள். அது சண்டையாக பரிமணத்திருக்கும். ஏன் தமிழ் நாட்டில் நடப்பதில்லையா? ஒரு லோக்கல் தலைவரைப் பற்றி தவறாக சொன்னால் அங்கு கலவரம் வெடிப்பதில்லையா? ஒரே
சமூகத்தின் இரண்டு பிரிவுகள் கத்தியை தூக்கிக்கொண்டு நிற்பதில்லையா? எதோ புதிதாக கண்டுபிடித்ததுபோல் சொல்கிறீர்களே?
எப்படி ஐயா உமது சமுதாயம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தாலும், கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது? எந்த இஸ்லாமிய அமைப்பாவது உங்கள் கோயிலை இடித்ததா? இல்லை எந்த மன்னராவது இஸ்லாமிய சட்டத்தை உங்கள் சமுதாயத்தின்மீது திணித்தனரா? அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை உங்கள்மீது திணித்தனரா? மாறாக இஸ்லாமிய
மன்னர்கள் இந்துக்களுக்கும் இந்து கோயில்களுக்கும் பாதுகாப்பு அளித்து வந்தனர். நீங்கள் காறி உமிழ்கிறீர்களே ஒளரங்கசீப்., அவர், சோமேஸ்வரநாத் ஆலயம், ஜகதாம்புரி ஷத்ரன்ஜே ஆலயங்களுக்கு மானியம் வழங்கியுள்ளார். திருப்பனந்தாள் சைவ மடத்தைச் சார்ந்த குமர குருபரர் 'சகலகலா வல்லி மாலை'யை ஒளரங்கசீப், தன் அவையில் அரங்கேற்றச் செய்துள்ளார். காசி மாநகர் ஆலயத்திற்கு அளித்துள்ள அறக்கட்டளை ஒன்றில் அதே ஒளரங்கசீப் 'பிற சமயத்தாரின் வணக்கஸ்தலங்களைப் பாதுகாப்பதில் உயிர்தியாகமும் செய்ய முஸ்லிம்கள் தயாராக இருக்கவேண்டும்.' எனக்குறிப்பிட்டிருப்பது உங்கள் சிந்தைக்கு எங்கே வரப்போகிறது?
இஸ்லாமிய சட்டம் என்பது வேறு, வாழ்க்கை முறை என்பது வேறு. சரீஅத் சட்டம் உலக முஸ்லிம்கள் அளவில் ஒன்றுதான். ஆனால் வாழ்க்கைமுறை என்பது அந்தந்த நாட்டின் அல்லது அந்தந்தப் பகுதியில் நடைமுறையில் இருக்கும் கலாச்சாரத்தைப் பொருத்திருக்கிறது. அப்படித்தான் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்து முஸ்லிம்களின் பழக்கவழக்கம் வட இந்தியாவில் காணமுடியாது. ஏன், மற்ற மானிலங்களில் காண்பது அரிது. இது முஸ்லிம்களுக்கு மட்டும் பொருந்தாது எல்லா வகுப்பினருக்கும் பொருந்தும்.
இஸ்லாத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாக விதண்டாவாதம் செய்பவரே! ஒன்றை கேளுங்கள், ஒளரங்கசீப்பும் மற்ற மன்னர்களும் மானியம் அளித்ததுபோல் திப்பு சுல்தானும் ஆற்காட்டு நவாபுகள், கோயில்களுக்கு கொடுத்த கொடைகள் ஏறாளம். அதேபோன்று கூன் பாண்டிய விஜயரங்க சொக்கநாதர், அவரது மனைவி ராணி மங்கம்மாள், மராட்டிய மன்னர் பிரதாப் சிங் முதலானோர் இஸ்லாமியர்களது தர்காக்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் வாரி வழங்கிய கொடைகளும் ஏறாளம். மன்னர்கள் மட்டுமல்ல இன்று வாழ்ந்துவரும் மக்களும் மத மாறுபாடின்றி ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் இருந்துவருவது தமிழ் மண்ணுக்கே உரிய பண்பாடு. இதை கெடுத்துவிட உங்கள் கூட்டணி உட்பட எந்த சக்தியாலும் முடியாது .
ஒன்றை இறுதியாக சொல்கிறேன். இஸ்லாமிய மக்கள், அதன் சட்டத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்துக்கொண்டுவிட்டார்கள். அதை யாராலும் எப்போதும் மாற்றமுடியாது. அதில் வரும் கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்கள் அந்த மக்களைப் பொருத்தது. அதில் தலையிட மாற்று மதத்தவர் எவருக்கும் உரிமை கிடையாது. அதேபோல் உங்கள் மதத்தில் சொல்லப்பட்ட அல்லது நம்பப்படுகிற விஷயத்தில் தலையிட மற்றவருக்கு உரிமை கிடையாது. எனவே நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்: முதலில் உங்களை நீங்கள் தூய்மைப் படுத்திக்கொள்ளுங்கள் பிறகு மற்றவர்கள் முதுகை சொறியலாம். ஆனால் இஸ்லாத்தின் மீது நேசக் கரம் நீட்ட நீங்கள் நினைக்கும்போது நாங்கள் பாசக் கயிறு வீச தயாராக இல்லாமலாயிருப்போம்?
'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.'
---o0o----
Friday Dec 23, 2004 திண்ணை
ஹமீத் ஜாஃபர்
எவருடைய இதயங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள், அதில் குழப்பத்தை உண்டுபண்ணக் கருதி - (இத்தகைய வசனங்களில் தவறான) பல அர்த்தங்களையே தேடிப் பின்பற்றுவார்கள்.... -அல் குர்ஆன் 3:7
நேசக்குமார் என்பவர். தனக்கு எல்லாம் தெரிந்தது போல், இஸ்லாத்தை கரைத்துக்குடித்ததுபோல் இஸ்லாத்தையும், அதன் இறுதி தூதரையும், அதன் சட்ட திட்டங்களையும் தரம்தாழ்த்தி விமரிசித்து வருகிறார். ஒருவர் மற்றவரைப்பற்றி குறை கூறுமுன் அல்லது விமரிசிக்குமுன் தான் சரியாக இருக்கின்றோமா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் அதில் பொருள் இருக்கும். நோய் தீர்க்கும் டாக்டர் நோயாளியாக இருக்கக்கூடாது, தீர்ப்பு வழங்கும் நீதிபதி சித்த பிரமை உள்ளவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அங்கு எல்லாமே குளறுபடிதான். நோயும் தீராது, நிரபராதியும் இருக்கமாட்டான்.
முதலில் இந்த நேசக்குமார் தனது மதத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும், அதன் சட்டத் திட்டங்கள் சரியானதுதானா என்று புரிந்துக்கொள்ள வேண்டும். சிலர் இருக்கிறார்கள் அவர்கள், மற்றவர்கள் என்னென்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை தோண்டித்துருவி தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் தான் என்ன செய்கிறோம் என்று மட்டும் தெரியாது. இந்த வகையை சேர்ந்தவர்தான் இவர்.
இவர் சொல்கிறார்: 'நான் கூடுமான வரையில் முஹம்மது நபி அவர்களை கண்ணியத்தோடும் மரியாதையுடனுமே குறிப்பிட்டு வருகிறேன். முஸ்லிம் அல்லாதவனாகிய என்னுடைய பார்வையில் நபிகள் செய்தவையெல்லாம் குற்றங்களாகவே தென்படுகின்றன.' ராமாயணம்தான் படித்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் இடிப்பது என்னவோ பெருமாள்
கோயிலாகப்போய்விடுகிறது என்பதுபோலிருக்கிறது. காமாலைக் கண்ணுடையானுக்கு காண்பது என்ன வெள்ளையாகவா தெரியும்? யாருக்கு காது குத்துகிறீர்? ஒரு மனிதர் மீது கண்ணியமும் மரியாதையும் செலுத்துவதென்றால், அவரது சொல் அல்லது செயல் அல்லது நடைமுறையில் மதிப்பு இருக்கவேண்டும். அவற்றின்மீது மதிப்பில்லாதபோது, தவறாக தெரியும்போது எந்த அடிப்படையில் அதற்குரியவரை மதிக்க முடியும்? அவரின் அழகைப் பார்த்தா இல்லை அவரிடமுள்ள செல்வத்தைப் பார்த்தா? இங்கு அந்தஸ்த்துக்கு பேச்சில்லை, அது சொல்லிலும் செயலிலிமிருந்து வெளிப்படுவது.
தான் ஒரு ஹிந்து ஆனால் பிராமணன் அல்ல என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய திரு நேச குமார், சங்கராச்சாரியார் ஜெயில் வாசம் போயிருப்பதால் ஹிந்து மக்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது, இப்போதுதான் உறுதியாக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒரு மதத் தலைவர் உள்ளே போனது எங்களுக்கும் வருத்தம்தான், ஆனால் என்ன செய்வது? தினை விதைத்தால் வினை கிடைக்காதல்லவா?! அம்பு திசை மாறி வராது, நீங்கள் விட்ட பானம் உங்களிடமே வந்து சேருகிறது.
கடவுள் என்ற வார்த்தைக்கு காலம், எல்லை, பரிணாமம், பரிமாணம், அறிவு, சிந்தனை, கற்பனை இவைகள் எல்லாவற்றையும் கடந்த ஓர் உள்ளமை என்ற விளக்கம் ஓரளவுக்குதான் பொருந்தும். முழுமையான விளக்கம் அளிக்க எந்த மனிதனுக்கு அறிவும் போதாது வார்த்தையும் கிடைக்காது. அத்தகைய கடவுளை நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? பலவாக பிரித்தீர்கள், அவைகள் தனியாக இருக்கக்கூடாதென்று கல்யாணம் செய்து மனைவியை ஏற்படுத்தினீர்கள், மனைவி வந்தபிறகு குழந்தை வேண்டுமே! அவைகளையும் கொடுத்தீர்கள். ஒரு மனைவி பத்தாதென்று பல மனைவிகளை கொடுத்தீர்கள். (ஒரு முஸ்லிம் நான்கு திருமணம் வரை செய்துக்கொள்ள அனுமதி இருப்பதை சகிக்கமுடியாமல் "ஹா! முஸல்மான்லுக் ச்சார் ச்சார் ஷா தியான் கரேகா அவுர் தஸ்தஸ் பச்சா ஜனம் கரேகா" என்ற சிங்கால்களின் ஒப்பாரி இன்னும் ஓயவில்லை. இந்திய திருநாட்டில் எத்தனை முஸ்லிம் நான்கு திருமணம் செய்து டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெற்றுள்ளார்கள்.?)
'சிவ' என்றால் 'குற்றமில்லாத சர்வ வல்லமையும் பொருந்திய அநாதியானது' என்று பொருள். சிவம் என்பதற்கு சத்து, சித்து, ஆனந்தம் அடங்கிய சச்சிதானந்தம் என்று பொருள். அதாவது அங்கிங்கெனாது எங்கும் நிரைந்து ஆதியாய், அருவமாய், தன்னிலே தானாய், தனக்கு ஒப்புவமை இல்லாத ஏகனாகிய இறைவனாம் சிவபெருமானுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை....?
சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையே சக்தி இல்லை என்று மூலத்தை(சிவம்) பின்னுக்கு தள்ளி, வல்லமையை(சக்தி) முன்னிலைப்படுத்தினீர்கள். நீ பாதி நான் பாதி என்று ஆண் பாதி பெண் பாதியாக ஆக்கியுள்ளீர்கள். மலமில்லாத அநாதிக்கு ஒரு கடவுளியை (பார்வதி) திருமணம் செய்து வைத்து இரண்டு பிள்ளைகளை கொடுத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி அதையும் இரண்டாகப் பிரித்தீர்கள். தந்தையை உள்ளே செல்ல அனுமதிக்காத மூத்தவனின் தலையை சீவி எந்தவகையிலும் பொருந்தாத யானை தலையை பொருத்தி குளக்கரையில் (பெண்கள் குளிக்குமிடத்தில்) உட்கார வைத்துள்ளீர்கள். ஐயா! நான் கேட்கிறேன் சர்வ வல்லமையுடைய கடவுளுக்குத் தன் மகனை தெரியவில்லை, கடவுளுக்கும் கடவுளிக்கும் பிறந்த கடவுள் குழந்தைக்கு தன் தந்தையை தெரியவில்லை. அப்படியானால் அந்த கடவுள்களுக்கு சக்தியே கிடையாதா? தெய்வத்தன்மை இல்லாத கடவுளா?
ராமாயண நாயகன் ஸ்ரீராம பெருமான் தன் மனைவி காணாமல் போனபோது அவரை கண்டுபிடிக்க ஹனுமான் என்ற விமானப்படை தேவைப்பட்டது. ஏன் ஸ்ரீராமர் கடவுள் என்றால் அல்லது கடவுள் அவதாரம் என்றால் கடவுள் சக்தி எங்கே போய்விட்டது? சீதை பிராட்டியார் கண்டுபிடிக்கப்பட்டபின் அவர் கற்புடன் இருக்கிறாரா இல்லையா என்பது ராம கடவுளுக்கு தெரியவில்லையா? அவருக்கு ஒரு ACID TEST. அதில் அவர் வேகவில்லை காரணம் கடவுளித்தன்மை. சீதா பிராட்டியாரை கண்டுபிடிக்கவும் அவர் கற்புடையவர்தானா என்பதை அறியவும் ஸ்ரீராம பெருமானுக்கு வல்லமை கிடையாதா? நீங்களே உங்கள்
வரலாற்று நாயகனை தரம் தாழ்த்தி வைத்துள்ளீர்கள். எங்களைப் பொருத்தவரை ஸ்ரீராம பிரானும் ஸ்ரீகிருஷ்ண பகவானும் வறலாற்று நாயகர்கள். ஏன் தீர்க்கதரிசியாகக்கூட இருந்திருக்கலாம்.
'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பினரும் (பூமியில்) இருக்கவில்லை' - அல் குர்ஆன் 35:24
'ஒவ்வொரு தூதரும் (தன் மக்களுக்குத்) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனைப் புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம்' - அல் குர்ஆன் 14:4
'நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைதான் நாம் உமக்கு கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்கு கூறவில்லை' - அல் குர் ஆன் 40:78
பெண் என்பவள் தன் கணவனுக்காக, தன் குழந்தைக்காக, தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கும் குணம் கொண்டவள். தாய்மை என்ற அந்த பண்பு அவர்களுக்கே உரியது. உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுகிற பெண்ணை கோயில்களில் கொங்கையை வெளிப்படுத்தி அரை நிர்வாணமாக்கி (சிற்ப) கலை என்ற பெயரில் அவமதித்துள்ளீர்கள். சிந்தையை சிதரடிக்கும் காம உணர்வை தூண்டும் சிற்பங்களுக்கு பஞ்சமில்லை. புராணமே அப்படித்தானே இருக்கிறது. அழகான பெண் இருந்திடக்கூடாது! இந்திரன், தனக்கு காமம் வந்தால் பிரம்மாவிடம் சொன்னால் அழகான பெண்ணை படைத்து கொடுத்திருப்பார். ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றால் சற்று மனம் அதிகமாகத்தானே இருக்கும் அதனால்
விஸ்வாமித்திரரின் உடைமையை கைவைத்தார் ஆயிரம் யோனிகளை அவார்டாக வாங்கினார். எப்படி உடம்பில் அமைந்தது என்று கற்பனைக்கே எட்டவில்லை. இந்திரனுக்கும் சந்திரனுக்கும் ஆசை இருக்கும்போது சங்கராச்சாரியாருக்கு இருப்பதில் தவறில்லை.
இந்திரப் புராணம் இப்படியென்றால் மகாபாரதமோ ஒரு படி மேல். பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே ஒரு திரெளபதி!? இருந்தாலும் அந்த பாரம்பரியத்தை விடாமல் இன்னும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்காக பெருமைப் படவேண்டும். இல்லையில்லை ஜிந்தாபாத் போடவேண்டும்.
ஆசையை துறக்க இந்து மதத்தின் அத்துவைதம் போதிக்கிறது. ஆனால் ஆடையை துறந்துவிட்டு அங்கே(ஆண் உறுபில்) ஒரு பூட்டையும் மாட்டி விட்டுக்கொண்டு காசி வீதிகளில் சுற்றுலா வரும் நிர்வாண சாமிகள் முற்றும் துறந்தவர்கள். The world
Highly polluted rever உங்களுக்கு புனித கங்கை.
கடவுள் கொள்கை:-
ஐயா கிருஸ்துவ மதத்திற்கென்று 'பிதா, சுதா, பரிசுத்த ஆவி' என்ற trinity கொள்கை உண்டு, இஸ்லாத்திற்கென்று ஒரு கொள்கை உள்ளது. அல்லாஹ்வை தவிர வேறு இறைவனில்லை. முஹம்மது (நபி) அவனது இறுதி தூதர்' என்று. அதுபோல்
உங்களுக்கென்று இந்து மதத்தின் கொள்கை என்ன? ((அதைதான் குழி தோண்டி புதைத்துவிட்டார்களே!))
சுமார் 15 வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம், இந்து மதத்தில் சுமார் 26 உட்பிரிவுகள் உள்ளன. அவைகளில் உயர்வானது சைவ சித்தாந்தம், அந்த சைவ சித்தாந்தத்திலும் தென்னிந்திய சைவ சித்தாந்தம் மிக உயர்வானது என்று டாக்டர் லஷ்மணன் என்பவர் தனது இந்திய தத்துவ ஞானம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது சென்னை அரசாலும் இலங்கை அரசாலும் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய சைவ சித்தாந்தத்தை மெய் நிலை கண்ட ஞானி வள்ளலார் ஐயா அவர்கள் தூக்கி எறிகிறார்கள். 'வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப்போட்டு மறைத்துவிட்டார்கள். அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். 'தெய்வத்துக்குக் கை கால் முதலியன் இருக்குமா?' என்று கேட்பவருக்கு பதில் சொல்லத்தெரியாது விழிக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக்கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.'
'இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றி புறங்கவியச் சொல்லவில்லை. இவைகளுக்கெல்லாம் சாட்சியாக நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது
இவ்வளவு வென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும்.' என்று மேட்டுக்குப்பம் சித்திவிளாகத்தில் விளக்கி உரையாற்றியுள்ளார்கள். ((-ஆதாரம்: திரு அருட்பா உரைநடைப் பகுதி))
'நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும்
நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்
நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்
நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்
நினைவின்றி நிற்பதுவே சகசமாகும்
நினைவின்றி நிற்பதுவே பிர்மமாகும்
நினைவின்றி நிற்பதுவே சிவவுமாகும்
நினைவணுவு மில்லை யெலாம் பிர்மந்தானே.'
என்று 'ரிபு கீதை'யும் விளக்குகிறது. ஆனால் இப்போது ரிபு கீதையுமில்லை, ஐயா அவர்கள் சொன்ன விளக்கங்களும் குப்பைக்குப் போய்விட்டன. மாறாக இப்போது இருப்பதெல்லாம் 'Enything is God, Everything is God.' என்ற பழயக்கடவுள்.
பாம்பு கடவுள்(பரமசிவன் கழுத்தில் இருப்பது), பசு கடவுள்(எனவே அதன் மூத்திரத்தை குடிக்கலாம்) ஆனால் படைப்பினங்களிலேயே உயர்ந்த படைப்பான மனிதன் கடவுள் இல்லை, மரித்துவிட்டால் தெய்வமாகிவிடுகிறான்.
மனிதன் படைக்கப்பட்ட விதமும் பூசப்பட்ட வர்ணமும்:-
'நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். (அவனுடைய துர் நடத்தையின் காரணமாகப்) பின்னர் அவனை தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக நாம் ஆக்கிவிடுகிறோம்.' - அல் குர்ஆன் 95: 4,5
'ஆதமுடைய சந்ததியை, நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்), கடலில் (கப்பல்கள் மீதும்), நாம் தாம் அவர்களை சுமந்து செல்(லும்படி செய்)கிறோம். நல்ல ஆகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் சிருஷ்டித்த (மற்ற ஜீவராசிகளில்) அநேகவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம்.' - அல் குர்ஆன் 17: 70
'அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். அவரிலிருந்து அவரின் மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து அநேக ஆண் பெண்களை (வெளிப்படுத்தி) பரவச்செய்தான்.' - அல் குர்ஆன் 4:1
'அவனே ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். பின்னர் ஓர் அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை(உருவாக்கி) உண்டாக்கினான்.' - அல் குர்ஆன் 21:7,8
இப்படி மனிதன் படைக்கப்பட்ட விதத்தையும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்தையும் பல இடங்களில் விளக்கும் குர்ஆன், தவறு செய்பவனுக்கு தண்டனையும் உண்டு என்று கண்டிப்புடன் எச்சரிக்கிறது, ஆனால் இந்துக்களின் சாஸ்திர நூல்களில் ஒன்றான மனு சாஸ்திரம் மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு விதமாகப் படைத்து, அந்த நான்கு வகைக்கும் நான்கு விதமான பெயிண்டுகளை அடிக்கிறது.
'எல்லா வல்லமையும் பெற்ற இறைவன், உலக நன்மைக்காக பிராமணர்களை தன் வாயிலிருந்து படைத்தான். இவர்கள் உயர் வகுப்பினர். இவர்கள் வேதம் கற்றுக் கொடுத்தல், யாகங்கள் புரிதல், கோவில் அர்ச்சகர்களாக இருத்தல், தர்மங்கள் வினியோகித்தல். அடுத்து ஷத்திரியர்களை தன் கைகளிலிருந்து படைத்தான். இவர்கள் போர் புரிதல், வேதங்களை ஓதுதல், ஆசைகளை அடக்குதல் ஆகிய கடமைகளை வகுத்தான். மூன்றாவதாக வைசியர்களை தன் தொடை யிலிருந்து படைத்தான். இவர்கள் உழவும் வாணிபமும் செய்யவேண்டும், ஆடு மாடுகள் மேய்க்க வேண்டும். கடைசியாக சூத்திரர்களை தன்
பாதங்களிலிருந்து படைத்தான். இவர்கள் மற்ற மூன்று சாதியினருக்கும் அடிமையாயிருந்து ஊழியம் செய்யவேண்டும்.'
'இம் மனு சாஸ்திரம் உயர் ஜாதியான பிராமண வகுப்பினருக்கு, கடவுளர்களுக்குக் கொடுக்கப்படும் பெருமதிப்பைத்தரும் தனி உரிமைகளையும், தனிச்சலுகைகளையும் வழங்குகிறது. பிராமணர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; படைப்புகளிலேயே
மிக உயர்ந்தவர்கள்; உலகத்தின் எல்லா உடைமைகளும் அவர்களுடைய சொத்துக்கள்; அவர்கள்தான் உலகத்து எஜமானர்கள்; பிராமணர்கள் தங்கள் அடிமைகளாகிய சூத்திரர்களிடமிருந்து தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் பறித்துக்கொள்ளலாம்; சூத்திரர்கள் எத்தகைய குற்றம் செய்யாதிருந்த போதிலும் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் உரிமை பிராமணர்களுக்கு உண்டு. அடிமைகளாகிய சூத்திரர்களுக்கு எந்த உரிமையும் உடைமையும் கிடையாது; அவன் பெற்றுள்ள எல்லாப் பொருள்களும் அவனுடைய தலைவருக்குச் சொந்தமானவை. ரிக் வேதத்தை மனப்பாடம் செய்த ஒரு பிராமணன், உலகையே
அழித்துவிடக்கூடிய பெருங்குற்றங்கள் செய்தாலும், பாவங்களை புரிந்தாலும் அவன் குற்றங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். (ஆகவே சங்கராச்சாரியர் போன்றோர் எதுவும் செய்யலாம்). மிக அவசியமான நேரத்திலுங்கூட, ஒரு பிராமணன்மீது எத்தகைய வரி விதிக்கவோ, கப்பத்தொகை விதிக்கவோ எந்த மன்னனுக்கும் அதிகாரமில்லை (ஆனதால் ஜெயேந்திரரை வெளியே விடவேண்டும், மன்னராட்சியானாலும் மக்களாட்சியானாலும் மனு சாஸ்திரப்படி நடப்பதுதான் தர்மம்).'
'ஷத்திரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களுக்கும் மேலானவர்களாகக் கருதப்பட்டாலும், பிராமணர்களுக்கு மிக மிகக் கீழானவர்களே. பத்து வயது பிராமணச் சிறுவன் நூறு வயது ஷத்திரியனைவிட உயர்ந்தவன்.' 'தீண்டத்தகாதவர்' என்று எனக்கூறப்படும் இந்த சூத்திரர்கள், மிருகங்களில் தாழ்ந்தோராகக் கருதப்படுகின்றனர் 'பிராமணன் ஒருவருக்குத் தொண்டு செய்வதை ஒரு சூத்திரன் தனக்கு கிடைத்த புண்ணியமாகக் கருதி மகிழவேண்டும்; அதற்காக அவன் எத்தகைய கூலியோ சன்மானமோ பெறவேண்டியதில்லை. சூத்திரர்கள் செல்வம் ஈட்டவோ அதனைச் சேர்த்துப் பாதுகாத்து வைக்கவோ கூடாது; ஏனென்றால் அது பிராமணர்களின் உள்ளத்தைப் புண்படுத்தும். ஒரு சூத்திரன், பிராமணனை அடிக்கக் கையையோ கம்பையோ நீட்டுவானாகில், அவன் கை வெட்டப்படவேண்டும்; அவனைக் கோபத்தோடு உதைப்பானாகில், அவன் கால்கள் துண்டிக்கப்படவேண்டும்; தீண்டத்தகாத ஒருவன் ஒரு பிராமணனோடு சரிசமமாக உட்கார முயன்றால் அவன் முதுகில் சூடு
போடவேண்டும், அல்லது அவனை நாடு கடத்தவேண்டும்; ஒரு சூத்திரன் ஒரு பிராமணனைப் பழிப்பானாகில் அவன் நாக்கு பிடுங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு தீண்டத்தகாதவன் கொல்லப்பட்டால், அந்த கொலைக்குப் பகரமாக செலுத்தவேண்டிய பரிகாரத் தொகை, நாய், பூனை, தவளை, பல்லி, காகம், ஆந்தை ஆகியவற்றில் ஒன்றை கொன்றால் என்ன பரிகாரத் தொகை கொடுக்கவேண்டுமோ அந்த அளவேயாகும்.' என்று உங்கள் சட்ட நூலாகிய இந்த மனு சாஸ்திரம் கூறுகிறது.
இப்படி மனிதனுக்குப் பெருமை அளிக்கும் நீங்கள், இஸ்லாத்தையும், அதன் வேதத்தையும், அதன் தூதரையும், அதன் சட்டத்தையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுற்றிவளைத்தும் குறை கூறும் திரு நேசக்குமாரிடம் ஒன்று கேட்கிறேன்.
இஸ்லாத்திலும், கிருஸ்துவத்திலும் நடக்கும் திருமணங்களுக்கு அது எத்தனை வருடத்திற்கு முன்பானதாக இருந்தாலும் சரி ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருப்பதுபோல் உங்கள் மதத் திருமணங்களுக்கு அக்கினி சாட்சியும், முப்பத்தி மூவாயிரம் கோடி தேவர்கள் சாட்சியல்லாது ஒரு மனித சாட்சியுள்ள எழுத்துப்பூர்வமான ஆதாரம் காட்டமுடியுமா?
இஸ்லாமியர்கள் எவரும் எந்த காலத்திலும் யாரும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவுமில்லை, மனதால் நினைக்கவுமில்லை. முஹம்மது நபி (சல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக(ரசூல்), முத்திரை நபியாக (காத்தமன்நபி. - கத்தம் என்றால் முத்திரை. முத்திரை வைப்பது என்றால் எல்லாம் முடிந்தபிறகு வைக்கப்படும் சீல், Finalized, Finished forever) உறுதியுடன் ஏற்றுகொண்டுள்ளனர். ஆனால் நீங்கள்தான், உங்களுடைய கோணல் புத்தியுடன் 'இஸ்லாமிய வரலாறு காட்டும் முஹம்மது நபி அவர்களுக்கும் இஸ்லாமியர்கள் மனதில் கடவுளாக இன்று உருவகப்படுத்தப்பட்டிருக்கும் நபிகள் நாயகத்திற்கும்.... என்று உங்களது 'இந்துத்துவா'வை திணிக்கிறீர்கள்.
'எனது உம்மத்துக்கள்(நபி வழியை பின்பற்றுபவர்கள்) எழுபது பிரிவுகளாகப் பிரிவார்கள்...' என்று அப்போதே நபிகள் நாயகம்(சல்) அவர்கள் சொல்லி விட்டார்கள். இஸ்லாத்தில் பல பிரிவுகள் இருப்பது உண்மைதான். ஆனால் எந்த பிரிவினரும் 'லாயிலாக இல்லல்லாஹ்' என்ற மந்திரத்தை தூக்கி எறியவில்லை. மிர்ஜா குலாம் முஹம்மது ஒரு இறைதூதர் என்று அஹமதிகள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், அது அந்த பிரிவினரின் நம்பிக்கை. உலக முஸ்லிம்களின் நம்பிக்கையல்லவே? அதை வேண்டாதவர்கள் மீது திணித்ததால்தானே துன்பம் அனுபவிக்கின்றனர். அதனால் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தது? நீங்கள் எதற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஷியா சுன்னா சண்டை நடக்கிறதென்றால் அந்த சமூகத்து லோக்கல் தலைவர்கள் சும்மா இருக்காமல் உங்களைப்போல் குசும்பு செய்திருப்பார்கள். அது சண்டையாக பரிமணத்திருக்கும். ஏன் தமிழ் நாட்டில் நடப்பதில்லையா? ஒரு லோக்கல் தலைவரைப் பற்றி தவறாக சொன்னால் அங்கு கலவரம் வெடிப்பதில்லையா? ஒரே
சமூகத்தின் இரண்டு பிரிவுகள் கத்தியை தூக்கிக்கொண்டு நிற்பதில்லையா? எதோ புதிதாக கண்டுபிடித்ததுபோல் சொல்கிறீர்களே?
எப்படி ஐயா உமது சமுதாயம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தாலும், கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது? எந்த இஸ்லாமிய அமைப்பாவது உங்கள் கோயிலை இடித்ததா? இல்லை எந்த மன்னராவது இஸ்லாமிய சட்டத்தை உங்கள் சமுதாயத்தின்மீது திணித்தனரா? அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை உங்கள்மீது திணித்தனரா? மாறாக இஸ்லாமிய
மன்னர்கள் இந்துக்களுக்கும் இந்து கோயில்களுக்கும் பாதுகாப்பு அளித்து வந்தனர். நீங்கள் காறி உமிழ்கிறீர்களே ஒளரங்கசீப்., அவர், சோமேஸ்வரநாத் ஆலயம், ஜகதாம்புரி ஷத்ரன்ஜே ஆலயங்களுக்கு மானியம் வழங்கியுள்ளார். திருப்பனந்தாள் சைவ மடத்தைச் சார்ந்த குமர குருபரர் 'சகலகலா வல்லி மாலை'யை ஒளரங்கசீப், தன் அவையில் அரங்கேற்றச் செய்துள்ளார். காசி மாநகர் ஆலயத்திற்கு அளித்துள்ள அறக்கட்டளை ஒன்றில் அதே ஒளரங்கசீப் 'பிற சமயத்தாரின் வணக்கஸ்தலங்களைப் பாதுகாப்பதில் உயிர்தியாகமும் செய்ய முஸ்லிம்கள் தயாராக இருக்கவேண்டும்.' எனக்குறிப்பிட்டிருப்பது உங்கள் சிந்தைக்கு எங்கே வரப்போகிறது?
இஸ்லாமிய சட்டம் என்பது வேறு, வாழ்க்கை முறை என்பது வேறு. சரீஅத் சட்டம் உலக முஸ்லிம்கள் அளவில் ஒன்றுதான். ஆனால் வாழ்க்கைமுறை என்பது அந்தந்த நாட்டின் அல்லது அந்தந்தப் பகுதியில் நடைமுறையில் இருக்கும் கலாச்சாரத்தைப் பொருத்திருக்கிறது. அப்படித்தான் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்து முஸ்லிம்களின் பழக்கவழக்கம் வட இந்தியாவில் காணமுடியாது. ஏன், மற்ற மானிலங்களில் காண்பது அரிது. இது முஸ்லிம்களுக்கு மட்டும் பொருந்தாது எல்லா வகுப்பினருக்கும் பொருந்தும்.
இஸ்லாத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாக விதண்டாவாதம் செய்பவரே! ஒன்றை கேளுங்கள், ஒளரங்கசீப்பும் மற்ற மன்னர்களும் மானியம் அளித்ததுபோல் திப்பு சுல்தானும் ஆற்காட்டு நவாபுகள், கோயில்களுக்கு கொடுத்த கொடைகள் ஏறாளம். அதேபோன்று கூன் பாண்டிய விஜயரங்க சொக்கநாதர், அவரது மனைவி ராணி மங்கம்மாள், மராட்டிய மன்னர் பிரதாப் சிங் முதலானோர் இஸ்லாமியர்களது தர்காக்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் வாரி வழங்கிய கொடைகளும் ஏறாளம். மன்னர்கள் மட்டுமல்ல இன்று வாழ்ந்துவரும் மக்களும் மத மாறுபாடின்றி ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் இருந்துவருவது தமிழ் மண்ணுக்கே உரிய பண்பாடு. இதை கெடுத்துவிட உங்கள் கூட்டணி உட்பட எந்த சக்தியாலும் முடியாது .
ஒன்றை இறுதியாக சொல்கிறேன். இஸ்லாமிய மக்கள், அதன் சட்டத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்துக்கொண்டுவிட்டார்கள். அதை யாராலும் எப்போதும் மாற்றமுடியாது. அதில் வரும் கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்கள் அந்த மக்களைப் பொருத்தது. அதில் தலையிட மாற்று மதத்தவர் எவருக்கும் உரிமை கிடையாது. அதேபோல் உங்கள் மதத்தில் சொல்லப்பட்ட அல்லது நம்பப்படுகிற விஷயத்தில் தலையிட மற்றவருக்கு உரிமை கிடையாது. எனவே நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்: முதலில் உங்களை நீங்கள் தூய்மைப் படுத்திக்கொள்ளுங்கள் பிறகு மற்றவர்கள் முதுகை சொறியலாம். ஆனால் இஸ்லாத்தின் மீது நேசக் கரம் நீட்ட நீங்கள் நினைக்கும்போது நாங்கள் பாசக் கயிறு வீச தயாராக இல்லாமலாயிருப்போம்?
'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.'
---o0o----
Friday Dec 23, 2004 திண்ணை
Subscribe to:
Posts (Atom)